Jump to content

எனது நியூசிலாந்துப்பயணம்


Recommended Posts

இப்புகையிரதப்பயணத்தின் முடிவில் (கிட்டத்தட்ட 10 நிமிடப் பயணம்) தங்கத்தினை வடித்தெடுக்கும் இடத்தினை அடைந்தோம். அங்கே சிறு பாத்திரத்தில் மண்களைத் தந்தார்கள். நாங்கள் தண்ணீரில் வடித்துக் கழுவும் போது சிறு சிறு தங்கங்களை பாத்திரத்தில் கண்டோம். அவற்றை சிறிய போத்தலில் அடைத்து எங்களுக்கு தந்தார்கள்

id9038pic2np9.png

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply

Shanty Townல் இருந்து வெளிக்கிட்டு 6 மணியளவில் அன்று இரவு தங்க உள்ள Hokitika என்ற இடத்தை அடைந்தேன். விடுதியில் உடமைகளை வைத்து விட்டு Hokitika நகரைப் பார்க்க விரும்பினேன். விடுதியில் இரவு உணவை உண்ணுவதை விட வெளியிடங்களில் நல்ல சுவையான உணவை குறைந்த விலையில் உண்ணலாம். Hokitika நகரத்தில் 3,4 வீதிகள் மட்டுமே காணப்பட்டது. பொதுவாக தென் நியூசிலாந்தில் christchurch த் தவிர பெரும்பாலன இடங்களில் 3,4 வீதிகளே இருக்கிறது. கடைகளும் குறைவு. சனத்தொகையும் குறைவு. Hokitikaல் இரவில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. உணவகத்தில் உண்டபின்பு கடற்கரையில் பொழுதினைப் போக்கலாம் என நினைத்தேன். தென் நியூசிலாந்தில் முக்கிய நகரங்களைத் தவிர இரவில் வீதிகளில் பிரயாணிக்கும் போது மின்சார ஒளியினைக் காணமுடியாது.

p9260070co5.jpg

Link to comment
Share on other sites

ஆங்கிலேயர்கள் விரும்பி உண்ணும் உணவகங்களே இங்கு பெரும்பாலும் காணப்பட்டன. ஒரிடத்தில் ஒரு இந்தியா உணவகமும் இருந்தது. அங்கு அன்றைய உணவை உண்டபின் அருகில் உள்ள கடற்கரையில் பொழுதைக் கழிக்கச் சென்றேன்.

hokitikaep9.jpg

westcoastdriftpicsk2.jpg

Link to comment
Share on other sites

2ம் நாள் மொத்தப் பிரயாண நேரம் 2 மணித்தியாலம்

Hokitika ல் இருந்து Franz Josef செல்ல 1.45 மணித்தியாலம் எடுக்கும்

i997353so9.gif

Franz Josef ல் இருந்து Fox Glacier செல்ல 0.15 நிமிடங்களே எடுக்கும்

r804873hb9.gif

Link to comment
Share on other sites

நியூசிலாந்தில் உள்ள அழகான இயற்க்கை காட்டிகளை

எங்களுக்கு தந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!

அழகாக உள்ளது!!! :)

Link to comment
Share on other sites

நியூசிலாந்தில் உள்ள அழகான இயற்க்கை காட்டிகளை

எங்களுக்கு தந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!

அழகாக உள்ளது!!! :lol:

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

பெரிய, மெதுவாக ஒடும் குளிர்க்கட்டிகளைக் கொண்ட ஆற்றில் இருந்து உருவாகுவதினை Glacier என்று அழைக்கிறார்கள். பனிக்கட்டிகளினால் சூழப்பட்ட இவ் Glacier பூவியீர்ப்புக்கு ஏற்றவிதத்தில் ஒடும். Franz Josef , Fox Glacier அமைந்துள்ள இடத்தை West Coast glaciers என்று அழைக்கிறார்கள். 2600 மீட்டர் உயரத்திலிருந்து விழும் Fox Glacier 13 கிலோ மிட்டர் தூரத்துக்கு நீராக ஓடுகிறது. தற்பொழுது 85ம் ஆண்டுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 1 மீட்டர் தூரத்தைக் குறைக்கிறது.

glacierfactpy6.gif

Link to comment
Share on other sites

காலை உணவை Hokitikaவில் உள்ள உணவகம் ஒன்றில் முடித்தபின்பு, Franz Josefக்கு செல்லும் 1.30 மணித்தியாலப் பிரயாணத்தில் என்னால் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சில.

p9260071sn1.jpg

p9260072ie4.jpg

p9260073lx9.jpg

p9260074aw7.jpg

p9260076ag8.jpg

p9260077lf8.jpg

Link to comment
Share on other sites

Hokitika வில் தங்கியிருந்த விடுதி உரிமையாளரிடம் உரையாடிய போது ஒரு நாளில் இரண்டையும்(Franz Josef , Fox Glacier) பார்க்க முடியாது. ஒன்றைப் பார்த்தால் மற்றதைப் பார்க்கத் தேவையில்லை. இரண்டிலும் Fox Glacier வே சிறந்தது. சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவைக் காண்பிக்கும் உதவியாளரின் உதவியுடன் Glacierல் சில பகுதிக்கு ஏறிச் சென்று பார்க்கலாம். உதவி இன்றி போக முடியாது. எனென்றால் பிரயாணம் ஆபத்தாக முடியும். ஆனால் விடுதி உரிமையாளார் இப்பிரயாணத்தில் நடக்க 2 மணித்தியாலம் எடுக்கும் என்றும், கால் வலிக்கும் என்றார். 2 மணித்தியாலம் என்பது Glacier இருக்கும் மலையின் அடிவாரத்துக்கு செல்ல 1 மணித்தியாலம் (இதற்கு சுற்றுலா காண்பிக்கும் உதவியாளர்கள் தேவையில்லை), ஏறுவதற்கு 1 மணித்தியாலம்( இதற்கு தேவை). அடிவாரம் வரை நடந்து செல்லுங்கள் என்றார். இதற்கு கட்டணமுமில்லை என்றார். ஏறுவதற்கு பதிலாக உலங்கு வானூர்தி அல்லது சிறிய விமானத்தில் ஏறி வானிலிருந்து இரண்டையும்(Franz Josef , Fox Glacier) பார்க்கலாம். வேறு மலைகளையும் பார்க்கலாம் .அத்துடன் ஒரு மலையின் ஒரு பகுதியில் 10 - 15 நிமிடத்துக்கு இறக்கிவிடுவார்கள் என்றும் சொன்னார். இதனால் Franz Josef நான் பார்க்கவில்லை.ஆனால்Fox Glacierக்கு செல்ல Franz Josef இன் ஊடாகப் பிரயாணிக்க வேண்டும். வீதியில் பிரயாணிக்கும் போது Franz Josef Glacier தெரியவில்லை.

Franz Josef உள்ள நகர விதியில் பிரயாணிக்கும் போது எடுத்த புகைப்படம்.

p9260078yn0.jpg

Franz Josef தொடர்ந்து Fox Glacier நோக்கி பிரயாணிக்கும் போது எடுத்த புகைப்படம்.

p9260079kl5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறுவதற்கு பதிலாக உலங்கு வானூர்தி அல்லது சிறிய விமானத்தில் ஏறி வானிலிருந்து இரண்டையும்(Franz Josef , Fox Glacier) பார்க்கலாம்.

இதனை வாசிக்க உலங்கு வானூர்தியைக் கண்டு பதுங்கு குழியில் ஒழித்த யாபகம் தான் இப்பொழுது வருகிறது.

Link to comment
Share on other sites

அருகில் உள்ள பாறைகளின் அடியில் உள்ள துவாரத்தின்( Blowhole) வழியாக நீர் வந்து மேலே சென்று கீழ் விழுவதைக் காணலாம்.

punakaki2bi3.jpg

இப்படி ஓரிடம் இலங்கையில் திக்வெல என்னும் இடத்தில்[தென் மாகாணம் அம்பாந்தோட்டைக்கு அருகில்] இருகின்றது பாடசாலை சுற்றுலா நேரம் சென்ற ஜாபகம்

Sri_Lanka_Rundreisen_Blow_Whole_Ostküste.jpg

Link to comment
Share on other sites

இப்படி ஓரிடம் இலங்கையில் திக்வெல என்னும் இடத்தில்[தென் மாகாணம் அம்பாந்தோட்டைக்கு அருகில்] இருகின்றது பாடசாலை சுற்றுலா நேரம் சென்ற ஜாபகம்

தகவலுக்கு நன்றிகள் ஈழவன். இப்படியான Blow hole பல நாடுகளில் இருக்கிறது. சிட்னியில் இருந்து 2 மணித்தியாலம் தெற்கே சென்றால் வரும் கயாமா(Kiama) என்ற இடத்தில் எனது புகைப்படத்தினால் எடுக்கப் பட்ட Blowhole கீழே உள்ள படத்தில் காணலாம். அவுஸ்திரெலியாவில் பார்த்தவற்றை பிற்காலத்தில் எழுதும் போது மேலதிக விபரங்களை தருகிறேன்.

p3200037kp4.jpg

Link to comment
Share on other sites

Fox Glacier இல் உலங்கு வானூர்தியில் பறப்பது பற்றி முன்பே நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் நியூசிலாந்துப் பயணத்தின் 6 வது நாளில் Mount Cook என்ற இடத்தில் தான் உலங்கு வானூர்தியில் பறக்கவே விரும்பி இருந்தேன். Fox Glacierல் உதவியாளர்களின் உதவியுடன் நடக்கவே விரும்பி இருந்தேன். ஆனால் உலங்கு வானூர்திப் பிரயாணம் காலநிலை சீராற்ற காலத்தில் , மழைக்காலத்தில் நடைபெறுவதில்லை( முதல் நாள் மழை என்பதினால் நடைபெறவில்லை என்றும் சொல்லி இருந்தார்கள்) என்று சொன்னதனால், அன்று நல்ல காலநிலை என்பதினால் அன்று பறக்க முன்பதிவு செய்யச் சென்றேன்.

அன்று பயணிப்பவர்கள் அதிகமென்பதினால் மாலை 3 மணிக்கு பறக்கும் உலங்குவானூர்தியில் தான் இடம் கிடைத்தது. அப்பொழுது நேரம் 11 மணி. ஆனால் உதவியாளர்களின் உதவியுடன் Glacier இல் நடக்கும் நேரமும், உலங்குவானூர்திப் பயணமும் ஒரே நேரத்துக்குள் வருவதினால் நடப்பதைக் கைவிட்டேன். ஆனால் உதவியாளர்கள் இல்லாது Glacier மலையின் அடி வரை செல்ல கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் நடக்கும் பயணத்தை உலங்குவானூர்திப் பயணம் முடிய நடந்து செல்ல விரும்பினேன். உலங்கு வானுர்திப் பயணம் செல்ல இன்னும் 4 மணித்தியாலம் இருப்பதினால் மதிய உணவின் பின்பு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று பார்வையிட்டேன். பூங்காவுக்கு சென்று பார்வையிட்டு வர கிட்டத்தட்ட அரை மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுத்தது.

0476kl5.jpg

minnehaha5kx4.jpg

மதிய உணவு உண்ட உணவகத்தின் படத்தினை நீங்கள் காண்கிறீர்கள்.

p9260083yw3.jpg

Fox Glacierல் 2,3 உணவகங்களே இருக்கிறது. கடைகள் மிகக்குறைவு.

Link to comment
Share on other sites

பிரயாணித்த உலங்குவானுர்தி

p9260084mr3.jpg

உலங்கு வானூர்தி வந்த பின்பு, அதில் பிரயாணிக்கும் போது வானிலிருந்து என்னால் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்.

p9260086jb7.jpg

p9260087np5.jpg

Link to comment
Share on other sites

மலை அடிவாரத்தில் தெரியும் Glacier

p9260089zs4.jpg

Glacier க்கு மேலாகப் பறக்கும் போது பார்த்தவை.

p9260090df7.jpg

p9260091yd2.jpg

Link to comment
Share on other sites

மலைகளுக்கு மேலாகப் பறக்கும் போது பார்த்த முகில்களும், மலையில் படிந்த பனிக்கட்டிகளும் Glacierயும் நான் இணைத்த புகைப்படங்களில் இருந்து காணலாம்.

p9260092eu7.jpg

p9260093nk9.jpg

p9260094pj7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் அருமை கலை உணர்வுடன் படைக்கபட்ட படைப்பு. :P

Link to comment
Share on other sites

தொடர்ந்து உலங்கு வானூர்தியில் பயணிக்கும் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள்.

p9260095vg6.jpg

p9260096bn7.jpg

Link to comment
Share on other sites

புகைப்படத்தில் பார்ப்பதை விட நேரில் அழகாக மலைகள் காட்சியளித்தன. வேறு ஒரு உலகத்தில் இருந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

p9260100gj6.jpg

p9260101dn2.jpg

p9260102ts4.jpg

Link to comment
Share on other sites

நான் பயணித்த உலங்குவானூர்தியில் விமானியுடன், அவருக்கு துணையாக இன்னொருவரும் பயணித்தார்கள். இவ்வுலங்குவானூர்தியில் விமானி உட்பட 6 பேர் பயணிக்கலாம். பயணத்தின் போது விமானியும், துணையாக வந்தவரும் நாங்கள் பார்த்த மலைகள், நீர் வீழ்ச்சிகள் பற்றிய விளக்கங்களைத் தந்தார்கள். தென் நியூசிலாந்தின் மேற்குப்பகுதியில் உள்ள பெரும்பாலான மலைகளையும் காண்பித்தார்கள். பயணத்தின் போது மலையின் ஒருபகுதியில் உலங்கு வானூர்தி வந்து இறங்கியது. மலையின் எல்லா இடங்களிலும் நடப்பது ஆபத்தைத் தரும். எனென்றால் நாங்கள் நடக்கும் போது பனிக்கட்டிக்குள் புதைந்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. அவர்கள் சொன்ன இடத்தில் நடந்து பார்த்தோம்.

p9260107iy5.jpg

செப்டம்பர் மாத இறுதிக் கிழமைகளில் தான் நான் நியூசிலாந்து சென்றேன். அக்காலத்தில் நியூசிலாந்தில் குளிர் அதிகம். மலைப் பிரதேசம் என்பதினால் இன்னும் குளிர் கூட. ஆனால் உலங்குவானூர்தியில் இருந்து மலையில் இறக்கிய பகுதிக்கு சூரிய வெளிச்சம் காரணமாக குளிர் இருக்கவில்லை. உலங்குவானூர்திப் பயணத்தை பதிவு செய்யும் போது, மலை உச்சியில் இருக்கும் போது குளிர்ச்சியான கண்ணாடியை அணிந்து வந்தால் நல்லது என்று சொன்னார்கள். சூரியகதிர்கள் மலையில் உள்ள பனிக்கட்டியில் விழுவதினால் கண்கள் சிலவேளை கூசும் என்பதினால் அவ்வாறு சொன்னார்கள்.

franzjosef02nk6.jpg

Link to comment
Share on other sites

நாங்கள் நடக்கும் போது இன்னுமொரு உலங்குவானூர்தியில் இருந்தும் பயணிகள் வந்தார்கள்.

p9260110be8.jpg

Link to comment
Share on other sites

அருமையான படங்கள்..உங்களுக்கு நன்றாக புகைப்படமும் எடுக்க வருகின்றது. எனக்கு நியீசிலாந்தில் வெலிங்க்டனை விட ஓக்லாந்தே பிடிக்கும்... :lol:

Link to comment
Share on other sites

அருமையான படங்கள்..உங்களுக்கு நன்றாக புகைப்படமும் எடுக்க வருகின்றது. எனக்கு நியீசிலாந்தில் வெலிங்க்டனை விட ஓக்லாந்தே பிடிக்கும்... :rolleyes:

உங்களின் கருத்துக்கு நன்றிகள் தூயா. நீங்கள் சொன்ன ஒக்லாண்ட், வெலிங்டன் வட நியூசிலாந்தில் அமைந்துள்ளது. ஆனால் சுற்றுலாப்பயணிகளில் 90 வீதமானவர்கள் விரும்பிச்செல்லும் இடம் தென் நியூசிலாந்து. தென் நியூசிலாந்தில் அதிகம் பேர் செல்லும் முக்கிய இடங்களுக்குத் தான் நான் சென்றிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.