Jump to content

எனது நியூசிலாந்துப்பயணம்


Recommended Posts

நியூசிலாந்து தொடர் முடிந்து விட்டதே என்ற சோகம் இருந்தாலும்...புதிய தொடர் ஆரம்பிக்க போவதையிட்டு சந்தோசம்.. எப்போது ஆரம்பம்??

நியூசிலாந்து தொடரின் 2ம் பாகம் வேறு தொடர்கள் முடிய மீண்டும் இப்பகுதியில் வரும். அவுஸ்திரெலியாத்தொடர் - பிரிஸ்பனும் சூழவுள்ள இடங்களும் மிக விரைவில் வரவுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply

.புதிய தொடர் ஆரம்பிக்க போவதையிட்டு சந்தோசம்.. எப்போது ஆரம்பம்??

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42452

Link to comment
Share on other sites

  • 6 years later...

மிக நல்ல பதிவு , நன்றி அரவிந்தன் (இன்னமும் முழுமையாக படிக்கவில்லை) இத்திரியிலுள்ள படங்களை தற்போது பார்க்க முடியவில்லை, அவற்றை எவ்வாறு பார்க்கலாம், 

Link to comment
Share on other sites

  • 1 year later...

நியூசிலாந்து 1 - பயணம் ஆரம்பம்

 

newzealandmap2po6.jpg

2005ல் என்னிடம் கிட்டத்தட்ட 40000 Kris flyer புள்ளிகள்(points) வைத்திருந்தேன்.சிட்னியில் இருந்து கிட்டத்தட்ட 40000 புள்ளிகளுக்கு பயணிக்கத் தேவையான வெளினாடு நியூசிலாந்தாகும். 25000 புள்ளிகள் இருந்தால் சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு இலவசமாக விமானப்பயணம்(Return Tickets) சென்று வரலாம். இலவச வீமானச்சீட்டுக்காக உபயோகிக்கும் புள்ளிகளினைக் கொண்டு transit வீமானச் சீட்டுக்களை பெற முடியாது. 'Star Alliance' மூலம் சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு செல்லக்கூடிய ஒரே ஒரு விமானம் 'Air Newzealand'.

இவ்விமானம் சிட்னியில் இருந்து வட நியூசிலாந்தின் ஒக்லாண்ட், வெலிங்டன், ரொட்டுறுவா போன்ற நகரங்களுக்கும், தென் நியூசிலாந்தின் கிரைஸ் சேர்ச், குவிங்ஸ் டவுனுக்கும் பறக்கிறது. ஈழத்தமிழர்கள் உட்பட பெரும்பாலான மக்கள், வட நியூசிலாந்திலே வாழ்கிறார்கள். தென் நியூசிலாந்தில் சனத்தொகை மிகவும் குறைவு.இங்கு வாழும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை மிகக்,மிக குறைவு. ஆனால் நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்பவர்களில் 10ல் 9 வீதத்தினர் தென் நியூசிலாந்துக்கே விரும்பிப் பயணிப்பார்கள். தென் நியூசிலாந்து, வட நியூசிலாந்தை விட இயற்கை அழகு கூடியது. இதனால் நான் தென் நியூசிலாந்துக்கே பிரயாணம் செய்ய விரும்பினேன். அதிலும் தென் நியூசிலாந்தின் மேற்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகள் மிகவும் அழகான இயற்கைக் காட்சிகள் கொண்டவை என்பதினால் கிரைஸ் சேர்ச்சுக்கே பயணிக்க விரும்பி விமானச் சீட்டினை பெற முனைந்தேன். கொஞ்சம் பிந்தி வீமானச்சீட்டினைப் பதிந்ததினால், நான் விரும்பிய நேரந்தில் பிரயாணிக்க முடியவில்லை. அதனால் 7 முழுநாட்களுக்கும், 2 அரை நாட்களுக்கும் நியூசிலாந்தில் தங்கவே எனக்கு வீமானச் சீட்டு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணித்தியாலம் மகிழுந்தில் பிரயாணம் செய்து தென் நியூசிலாந்தின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளுக்கு செல்வது என்று முடி வெடுத்தேன். 

நியூசிலாந்துக்கு பயணிக்க முன்பே 8 இரவும் எங்கே தங்குவது என்று முடிவெடுத்து இணையத்தின் மூலம் விடுதிகளைப் தெரிவு செய்து பணத்தையும் கட்டிவிட்டேன். நியூசிலாந்தில் பெரும்பாலான எல்லா விடுதிகளிலும் காலை உணவுகளுக்கு தனியாகக்கட்டணம் செலுத்த வேண்டும். மிகக்குறைவான விடுதிகளில் வாடகைப்பணத்தில் காலை உணவுகள் தரப்படுகின்றன. கிரைஸ் சேர்சில் உள்ள சில விடுதிகள், விமான நிலையத்தில் இருந்து விடுதிகளுக்கு சென்று வர இலவசச் சேவைகளினை வழங்குகின்றன.
வட நியூசிலாந்தை விட தென் நியூசிலாந்தில் மகிழுந்து வாடகைக்கு குறைந்த விலையில் எடுக்கலாம். தங்குமிட விடுதிகளும் தென் நியூசிலாந்தில் தான் குறைந்த விலையில் இருக்கும். பொதுவாக நியூசிலாந்தில் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான குளிர்காலத்தில் இன்னும் மலிவான விலையில் விடுதிகளைப் பெற முடியும். 

ஒரு நிறுவனத்தின் மகிழுந்தினை வாடகைக்கு உபயோகித்தபின்பு, அதே நிறுவனத்தின் வேறு கிளையில் மகிழுந்தினைத் திருப்பிக் கொடுக்கிற வசதி நியூசிலாந்தில் இருக்கிறது. நான் கிரைஸ் சேர்ச் விமான நிலையத்தில் மகிழுந்தினை 7 நாட்களுக்கு வாடகைக்கு பெற்றேன். 6 நாட்கள் மகிழுந்தினை வாடகைக்கு பெறுவதினால் 7 வது நாள் எனக்கு இலவசமாக உபயோகிக்க கூடிய வசதி இருந்தது. 

தெற்கு நியூசிலாந்தின் பிரதான வீதிகளின் வரைபடம் ஒரே ஒரு பக்கமுடைய காகிதத்தில் பெறக்கூடியதாக இருக்கிறது. முக்கிய நகரங்களுக்கு செல்லும் போது அங்கே உள்ள சுற்றுலா நிறுவனங்களில் அந்நகரங்களில் உள்ள வீதிகளின் வரைபடங்களை கேட்டுப் பெறலாம். தென் நியூசிலாந்தின் பெரும்பாலான நகரங்களில் 4,5 வீதிகள் தான் இருக்கின்றன. ஆனால் கிரைஸ் சேர்ச்சில் அதிக வீதிகளைக் காணலாம்.
mapcx1.gif
நான் நியூசிலாந்துக்குப் பயணிக்க முன்பே சிட்னியில் இருக்கும் போது நியூசிலாந்தில் என்ன பார்ப்பது என்பவற்றை முடிவு செய்திருந்தேன். எனினும் நியூசிலாந்தில் சுற்றுலா மையங்களில் கிடைக்கும் மேலதிக விபரங்களின் மூலம் சில புதிய பயணங்களைச் சேர்த்துக் கொள்வதாக முடிவெடுத்திருந்தேன்.

முதல் நாள் பயணம் - இல் Christchurch இருந்து மேற்காக Arthur's Pass வழியாக Greymouth அடைந்து வடக்கு நோக்கி Punakaiki சென்று மறுபடியும் Greymouth வழியாக Hokitika .

2ம் நாள் இல் Hokitika இருந்து Franz Josepf ஊடாக சென்று அருகில் உள்ள Fox Glazier 

3ம் நாள் Fox Glazier இல் இருந்து Haast வழியாக Wanaka அடைந்து மேலும் தெற்கு நோக்கி சென்று Queenstown 

4 ம் நாள் Queenstownல் இருந்து தெற்கு நோக்கி Te Anau

5ம் நாள் Te Anauஇல் இருந்து வட மேற்கே உள்ள Milford Sound அடைந்து மறு படியும் Te Anauக்கு வந்து மீண்டும் Queenstown .

6ம் நாள் Queenstownல் இருந்து Cromwell,Omarama வழியாக Twizel 

7ம் நாள் Twizelஇல் இருந்து Mount Cook சென்று Lake Takapo வழியாக Christchurch . 

கிரைஸ் சேர்ச் விடுதியினை அடைந்ததும் மறுநாள் பிரயாணம் பற்றி, எங்கே செல்வது எவற்றைப்பார்ப்பது என்பது பற்றி விமான நிலைய சுற்றுலா மையத்தில் கிடைத்த தகவல்கள், புத்தகங்களில் மூழ்கிவிட்டேன்.

http://aravinthan29.blogspot.ch/2010/05/1.html

நியூசிலாந்து 2 -ஆர்தர்பாசை(Arthur's Pass) நோக்கிப் பயணம்

u648803ja4.gif
நான் தங்கி இருந்த விடுதி கிரைஸ் சேர்ச்(Christchurch) விமான நிலையத்துக்கு அருகாமையில் இருந்தது. விடுதிக்கு கிழக்குப் பகுதியில் தான் கிரைஸ் சேர்ச் நகரின் 95 வீதமான நிலப்பரப்பு அமைந்துள்ளது. கிரைஸ் சேர்ச்சில் தான் தென் நியூசிலாந்தில் அதிக மக்கள் வசிக்கிறார்கள். இங்குதான் அதிக நிறுவனங்கள், உணவகங்கள் எல்லாம் இருக்கின்றன. காலைக் கோப்பியினை மட்டும் அருந்தி விட்டு, போகும் வழியில் உணவகம் எதாவதில் சாப்பிடலாம் என்று நினைத்து அதிகாலை 8 மணிக்கே ஆர்தர்பாசை நோக்கி பிரயாணித்தேன்.
ஆர்தர்பாஸ் எனது விடுதியில் இருந்து மேற்குப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரைஸ் சேர்ச் நகரத்துக்குள் செல்லாமல் ஆர்தர்பாசை(Arthur's Pass) நோக்கிப் பயணித்தேன்.கிரைஸ் சேர்ச்சில் இருந்து கிட்டத்தட்ட ஒன்று அரை மணித்தியாலம் பிரயாணம் சென்றால் தான் ஆர்தர்பாஸ் வரும். 

nzrd026wz4.jpg

Christchurchல் இருந்து Arthur's Pass வழியாக Greymouthற்கு புகையிரதப் பயணத்தினை பல சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்வார்கள்.இயற்கை அழகான மலைகளினை இப்பயணத்தின் போது பார்க்க முடியும். எனினும் நான் மகிழுந்தில் பிரயாணம் சென்று இயற்கை அழகினைப் பார்க்க விரும்பினேன்.


P9250001.JPG
போகும் வழியில் வாகனங்களைக் காண்பது மிகவும் அரிதாக இருந்தது. உணவகங்களையும் காணவில்லை. தேநீர்ச் சாலைகள் இருந்தன. ஆனால் அவையும் மூடப்பட்டிருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை.பனிக்கட்டிகளினால் சோடிக்கப்பட்ட மலைத்தொடரின் அழகை இரசித்துக் கொண்டு செப்டம்பர் மாதத்தில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன். குளிரும் அதிகமாக இருந்தது.மழையும் வரப்போவது போலத் தோன்றியது.

 

P9250003.JPG

P9250005.JPG


P9250007.JPG


P9250010.JPG
பயணத்தின் போது மலைகளின் மேல் இருக்கும் வீதியினுடாகச் செல்ல வேண்டும். கால நிலை சரியில்லை என்றால் இவ்வீதிகளில் செல்வது ஆபத்தானது. இதனால் அந்நேரங்களில் இவ்வீதியில் பிரயாணிக்க அனுமதி தரமாட்டார்கள். மலையினூடாக கிட்டத்தட்ட 1 - 2 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்ய வேண்டும். இச்சமயத்தில் எரிபொருள் நிலையங்கள் ஒன்றையும் காண முடியாது. விமான நிலையத்தில் பெற்ற வாடகை மகிழுந்தில் தேவையான அளவு எரிபொருள் இருந்ததினால், எரிபொருள் பற்றிப் பயப்படத்தேவை இருக்கவில்லை. பசிக்கத்தொடங்கியதினால் மலைத் தொடருக்கு முன்பு இருந்த கடைசி எரிபொருள் நிலையமொன்றில் விசுக்கோத்து, சிப்ஸ் வாங்கி உண்டபின்பு தொடர்ந்து பயணித்தேன்.
P9250011.JPG
P9250012.JPG


P9250016.JPG
 

http://aravinthan29.blogspot.ch/2010/05/2-arthurs-pass.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.