Jump to content

எனது நியூசிலாந்துப்பயணம்


Recommended Posts

எனது நியூசிலாந்துப்பயணம்

2005ல் நான் நியூசிலாந்து நாட்டுக்கு இலவச விமானக் கட்டணத்தில் பிரயாணம் செய்தேன். பலர் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உறவினர்களின் திருமணத்திற்கோ, யாராவது வேண்டியவர்கள் இறக்கும் போதோ, வேலை விசயமாகவோ, சுற்றுலாவுக்கோ , தாயகத்துக்கோ அல்லது வேறு விசயமாகவோ பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பயணம் செய்யும் போது குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்தால் எமக்கு புள்ளிகள்(Points) கிடைக்கும். அப்புள்ளிகளை குறிப்பிட்ட புள்ளிகளை அடைந்ததும் எமக்கு இலவச விமானச்சீட்டுக் கிடைக்கும். நான் சிங்கப்பூர் (Singapore Airlines) விமானத்தில் தான் அதிகம் பிரயாணம் செய்வதினால் எனக்கு அப்பிரயாண புள்ளிகள் கிடைக்க Kris Flyerல் இணைந்தேன். சிங்கப்பூர் எயர்லான்ஸில் பிரயாணம் செய்வதினாலும் அல்லது அதன் சக விமானங்களில்( Star Alliance Partners - Air Canada, Air Newzealand, ANA, Asiana Airlines, United Airlines,Thai Airlines, Lufthansa,SAS, BMI, Austrian Airlines, South African Airlines, Swiss, US Airways, Tap Portugal, SpanAir, other airlines - Delta, Virgin Atlantic, Mexicana, Silk Airlines) பிரயாணம் செய்வதினாலும், பிரயாணிக்கும் மைல்களில் அளவுக்கு சரினிகராக புள்ளிகள் கிடைக்கும். (Business, First Classல் பயணிக்கும் போது கூடபுள்ளிகள்)

குறிப்பிட்ட தங்குமிடங்களில் இருப்பதினாலும் (உ+ம் Accor ,Hilton ,Taj Hotels )புள்ளிகள் பெறலாம்

Avis,Hertz போன்ற மகிழுந்துகளை வாடகைக்கு பெறுவதினாலும் புள்ளிகள் பெறலாம்

சிங்கப்பூரில் Shell பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் அடிக்கும் போதும், சிங்கப்பூர் எயர்லைன்ஸில் பிரயாணம் செய்யும் போது பொருட்களை வாங்கும் போதும் புள்ளிகள் பெறலாம்

இன்னும் பலவழிகளில் புள்ளிகள் பெறலாம். மேலதிக விபரங்களுக்கு http://www.singaporeair.com/saa/en_UK/cont...miles/index.jsp

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply

தகவல்களுக்கு நன்றி உங்கள் நியுசிலாந்து அனுபவங்களை படத்துடன் வன அற்று பற்றி எழுதியது போல எழுதுவீர்கள் என நினைகின்ரேன்

Link to comment
Share on other sites

அரவிந்தன் நியுசீலாந்து பயணம் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பயண அனுபவங்களை உங்களுடன் சேர்ந்து நாமும் அறிய ஆவல்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிட்னியில் இருந்து அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணத்துக்கு சென்று திரும்ப கிட்டத்தட்ட 20000 புள்ளிகள் கிடைக்கிறது. இலங்கைக்கு சென்று திரும்ப கிட்டத்தட்ட 11000 புள்ளிகள் கிடைக்கும். அதாவது பயணிக்கும் மைல்களின் அளவுக்கு சமமாக புள்ளிகள் கிடைக்கும். 25000 புள்ளிகள் கிடைக்கும் போது நியூசிலாந்துக்கு சென்று வர இலவச வீமானச் சீட்டினைப் பெறலாம். ஆனால் சேர்க்கும் இப்புள்ளிகள் 3 வருடத்தில் முடிவடைந்து விடும். முடியமுன்பு இப்புள்ளிகளுக்கு ஏற்ப வீமானச் சீட்டுக்கள் வாங்க வேண்டும். 2005ல் எனக்கு கிட்டத்தட்ட 40000 புள்ளிகள் இருந்தது. இலவச வீமானச் சீட்டு தானே, ஏன் வீணாக்க வேண்டும் என்று, எங்கு செல்லலாம் என்று யோசிக்கும் போது நியூசிலாந்து நாடு யாபகத்துக்கு வந்தது.

நான் சிங்கப்பூர் எயர்லைன்சில் பிரயாணம் செய்வதினால் 'KrisFlyer ' பெறுவது போல, நீங்களும் வேறு சில விமானங்களின் மூலம் புள்ளிகள் பெறலாம். (Frequent Flyer points - Qantas,British Airways,American Airlines,Cathay Pacific,Japan Airlines...... ( http://www.qantas.com.au/fflyer/dyn/partners/airline) ,

Virgin Blue மூலம் பெறப்படும் புள்ளிகள் ஆயூள் வரைக்கும் பாவிக்கலாம்.

Link to comment
Share on other sites

நியூசிலாந்தில் 10 நாட்கள் பிரயாணம் செய்வது என்று முடிவெடுத்தேன் . கிட்டத்தட்ட 4 கிழமைகளில் நியூசிலாந்தை முழுவதுமாகப் பார்க்க முடியும். நியூசிலாந்து வட நியூசிலாந்து, தென் நியூசிலாந்து என இரு பெரிய தீவுகளைக் கொண்ட நிலப்பரப்பு. 2 கிழமைகளில் வட நியூசிலாந்தையும், 2 கிழமைகளில் தென் நியூசிலாந்தையும் பார்க்கலாம். இலவச வீமானச்சீட்டுக்காக உபயோகிக்கும் புள்ளிகளினைக் கொண்டு transit வீமானச் சீட்டுக்களை பெற முடியாது. சிட்னியில் இருந்து 'Kris Flyer ' ல் உள்ள விமானங்களில் வேறு இடங்களில் நிற்காமல் நியூசிலாந்துக்கு செல்லும் ஒரே ஒரு விமானம் ' Air Newzealand' . இவ்விமானம் சிட்னியில் இருந்து வட நியூசிலாந்தின் ஒக்லாண்ட், வெலிங்டன் போன்ற நகரங்களுக்கும், தென் நியூசிலாந்தின் கிரைஸ் சேர்ச், குவிங்ஸ் டவுனுக்கு பறக்கிறது. ஈழத்தமிழர்கள் உட்பட பெரும்பாலன மக்கள், வட நியூசிலாந்திலே வாழ்கிறார்கள். தென் நியூசிலாந்தில் சனத்தொகை குறைவு. ஈழத்தமிழர்களும் மிக ,மிக குறைவு. ஆனால் நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்பவர்களில் 10ல் 9 வீதத்தினர் தென் நியூசிலாந்துக்கே விரும்பிப் பயணிப்பார்கள். தென் நியூசிலாந்து, வட நியூசிலாந்தை விட இயற்கை அழகு கூடியது. இதனால் நான் தென் நியூசிலாந்துக்கே பிரயாணம் செய்ய விரும்பினேன். அதிலும் தென் நியூசிலாந்தின் மேற்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகள் மிகவும் அழகான இயற்கைக் காட்சிகள் கொண்டவை என்பதினால் கிரைஸ் சேர்ச்சுக்கே பயணிக்க விரும்பி விமானச் சீட்டினை பெற முனைந்தேன். கொஞ்சம் பிந்தி வீமானச்சீட்டினைப் பதிந்ததினால், நான் விரும்பிய நேரந்தில் பிரயாணிக்க முடியவில்லை. அதனால் 7 முழுனாளும், 2 அரை நாட்களுக்கு நியூசிலாந்தில் தங்கவே எனக்கு வீமானச் சீட்டு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணித்தியாலம் மகிழுந்தில் பிரயாணம் செய்து தென் நியூசிலாந்தின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளுக்கு செல்வது என்று முடி வெடுத்தேன்.

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா தேசியக் கொடிக்கும் நியூசிலாந்தின் தேசியக் கொடிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் கொடிகளில் உள்ள நட்சத்திரங்களே.

அவுஸ்திரெலியா தேசியக் கொடி

australianflagfc1.jpg

நியூசிலாந்து தேசியக் கொடி

newzealandflagsk7.jpg

Link to comment
Share on other sites

நியூசிலாந்தின் வரைபடம். வடக்கு தெற்கு என இரு பெரிய நிலப்பரப்பினைக் கொண்டது நியூசிலாந்து.

newzealandmap2po6.jpg

Link to comment
Share on other sites

எனக்கும், நியூசிலாந்தில், யாரும் இல்லா கடற்கரையில், அம்மணமாய் கஞ்சா அடித்த ஞபாகம் வருகுது. தொடருங்கோ.

Link to comment
Share on other sites

நியூசிலாந்தில் வாகனத்தில் பிரயாணிப்பது மிகவும் இலகு. நான் சென்ற தெற்கு நியூசிலாந்தின் பிரதான வீதியை நீங்கள் சிவப்பு நிறத்தில் கீழே இணைத்துள்ள படத்தில் பார்க்கலாம்.

southislandmapct4.jpg

Link to comment
Share on other sites

வட நியூசிலாந்தை விட தென் நியூசிலாந்தில் மகிழுந்து வாடகைக்கு குறைந்த விலையில் எடுக்கலாம். தங்குமிட விடுதிகளும் இங்கே மலிவு. பொதுவாக நியூசிலாந்தில் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலத்தில் இன்னும் மலிவாக விடுதிகளைப் பெற முடியும்.

mapcx1.gif

முதல் நாள் பயணம் - இல் Christchurch இருந்து மேற்காக Arthur's Pass வழியாக Greymouth அடைந்து வடக்கு நோக்கி Punakaiki சென்று மறுபடியும் Greymouth வழியாக Hokitika அடைந்தேன்.

2ம் நாள் இல் Hokitika இருந்து Franz Josepf ஊடாக சென்று அருகில் உள்ள Fox Glazier அடைந்தேன்

3ம் நாள் Fox Glazier இல் இருந்து Haast வழியாக Wanaka அடைந்து மேலும் தெற்கு நோக்கி சென்று Queenstown அடைந்தேன்

4 ம் நாள் Queenstownல் இருந்து தெற்கு நோக்கி Te Anauக்கு பிரயாணம் செய்தேன்

5ம் நாள் Te Anauஇல் இருந்து வட மேற்கே உள்ள Milford Sound அடைந்து மறு படியும் Te Anauக்கு வந்து மீண்டும் Queenstown சென்றேன்.

6ம் நாள் Queenstownல் இருந்து Cromwell,Omarama வழியாக Twizel அடைந்தேன்

7ம் நாள் Twizelஇல் இருந்து Mount Cook சென்று Lake Takapo வழியாக Christchurch அடைந்தேன்.

மேலே உள்ள இரு படங்களில் இருந்து நான் சென்ற இடங்கள் எங்கே உள்ளது என்பதை அறியலாம்.

Link to comment
Share on other sites

ஒரு நிறுவனத்தின் மகிழுந்தினை வாடகைக்கு உபயோகித்தபின்பு, அதே நிறுவனத்தின் வேறு கிளையில் மகிழுந்தினைத் திருப்பிக் கொடுக்கிற வசதி நியூசிலாந்தில் இருக்கிறது. நான் கிரைஸ் சேர்ச் விமான நிலையத்தில் மகிழுந்தினை 7 நாட்களுக்கு வாடகைக்கு பெற்றேன். 6 நாட்கள் மகிழுந்தினை வாடகைக்கு பெறுவதினால் 7 வது நாள் எனக்கு இலவசமாக உபயோகிக்க கூடிய வசதி இருந்தது.

அவுஸ்திரெலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீதிகளைப்பற்றிய வரைபடங்கள் புத்தகங்களாகவே உள்ளது. ஆனால் தெற்கு நியூசிலாந்தின் பிரதான வீதிகளின் வரைபடம் ஒரே ஒரு பக்கமுடைய காகிதத்தில் பெறக்கூடியதாக இருக்கிறது. முக்கிய நகரங்களுக்கு செல்லும் போது அங்கே உள்ள சுற்றுலா நிறுவனங்களில் அன் நகரங்களில் உள்ள வீதிகளின் வரைபடங்களை கேட்டுப் பெறலாம். பெரும்பாலான நகரங்களில் 4,5 வீதிகள் தான் இருக்கிறது. ஆனால் கிரைஸ் சேர்ச்சில் அதிக வீதிகளைக் காணலாம்.

நியூசிலாந்தில் பெரும்பாலான எல்லா விடுதிகளிலும் உணவுகளுக்கு தனியாகக்கட்டணம் செலுத்த வேண்டும். மிகக்குறைவான விடுதிகளில் வாடகைப்பணத்தில் காலை உணவுகள் தரப்படுகின்றன. கிரைஸ் சேர்சில் உள்ள சில விடுதிகள், விமான நிலையத்தில் இருந்து விடுதிகளுக்கு பிரயாணிக்க இலவசச் சேவைகளினை வழங்குகின்றது.

கிரைஸ் சேர்ச் விடுதியினை அடைந்ததும் மறுனாள் பிரயாணம் பற்றி, எங்கே செல்வது எவற்றைப்பார்ப்பது என்பது பற்றி விமான நிலைய சுற்றுலா மையத்தில் கிடைத்த தகவல்கள், புத்தகங்களில் மூழ்கிவிட்டேன். அடுத்தடுத்த நாட்கள் எங்கே தங்குவது என்பதை நியூசிலாந்துக்கு பயணிக்கும் முன் இணையத்தளங்களின் ஊடாக விடுதிகளுக்கு பணத்தினைச் செலுத்தினேன். முதல் நாள் கிரைஸ் சேர்ச்சில் இருந்து 3 மணித்தியாலப்பிரயாணத்தின் பின்பு Greymouthல் தங்குவதாக முடிவெடுத்திருந்தாலும், Greymouthல் நான் எதிர்ப்பார்த்த விடுதி கிடைக்காத காரணத்தினால் மேலும் அரை மணித்தியாலங்கள் பிரயாணம் சென்று Hokitika என்ற இடத்தில் உள்ள விடுதியினை (நியூசிலாந்துக்கு பயணிக்கும் முன்) இணையத்தளத்தினூடாக பதிவு செய்தேன். அன்று நேரம் கிடைத்தால் Greymouthஇலிருந்து வடக்கு நோக்கி அரை மணித்தியாலம் பயணம் சென்று Punakaiki என்ற இடத்தையும் பார்க்க முடிவு செய்து இருந்தேன்.

Link to comment
Share on other sites

முதல் நாள் மொத்த பிரயாண நேரம்

Christchurchல் இருந்து Arthur's Pass 1 1/2 மணித்தியாலங்கள்

u648803ja4.gif

Arthur's Pass ல்இருந்து Greymouth 1 1/2 மணித்தியாலம்.

e481003er4.gif

Greymouthல் இருந்து Punakaiki 1/2 மணித்தியாலம் ( போய் வர ஒரு மணித்தியாலம்)

z110303kg5.gif

Greymouthல் இருந்து Hokitika 1/2 மணித்தியாலம்.

s236493pf2.gif

முதல் நாள் மொத்த பிரயாண நேரம் - 4 1/2 மணித்தியாலங்கள்.

Link to comment
Share on other sites

Christchurchல் இருந்து Arthur's Pass வழியாக Greymouthற்கு புகையிரதப் பயணத்தினை பல சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்வார்கள்.

nzrd026wz4.jpg

இயற்கை அழகான மலைகளினை இப்பயணத்தின் போது பார்க்க முடியும். ஆனால் நான் மகிழுந்தில் பிரயாணம் சென்று இயற்கை அழகினைப் பார்க்க விரும்பினேன். நான் தங்கி இருந்த விடுதி விமான நிலையத்துக்கு அருகாமையில் இருக்கிறது. அதாவது விடுதிக்கு கிழக்குப் பகுதியில் தான் Christchurch நகரின் 95 வீதமான நிலப்பரப்பு அமைந்துள்ளது. கிரைஸ் சேர்ச்சில் தான் தென் நியூசிலாந்தில் அதிக மக்கள் வசிக்கிறார்கள். இங்குதான் அதிக நிறுவனங்கள், உணவகங்கள் எல்லாம் இருக்கிறது. அதிகாலை 8 மணிக்கு மகிழூர்ந்தில் விட்டு பிரயாணம் செய்யத் தொடங்கினேன். காலைக் கோப்பியினை மட்டும் அருந்தி விட்டு, போகும் வழியில் உணவகம் எதாவதில் சாப்பிடலாம் என்று நினைத்து நோக்கி பிரயாணித்தேன்.

Link to comment
Share on other sites

அத்துடன் Christchurchல் இருந்து Arthur's Pass செல்லும் வீதிகளில் உணவகங்கள் ஒன்றையும் காணமுடியாது. ஒன்றிரண்டு cafe மட்டும் இருக்கும். அன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் அந்த cafeகளும் மூடப்பட்டு இருக்கும். இது தெரியாமல் நான் நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறேன். போகும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். தூரத்தில் தெரியும் மலைகளில் பனிப்பாறைகள் சூழ்ந்து காணப்படுகிறது.

p9250001cn1.jpg

Link to comment
Share on other sites

ஒரு நிறுவனத்தின் மகிழூர்ந்தினை வாடகைக்கு உபயோகித்தபின்பு, அதே நிறுவனத்தின் வேறு கிளையில் மகிழூர்ந்தினைத் திருப்பிக் கொடுக்கிற வசதி நியூசிலாந்தில் இருக்கிறது. நான் கிரைஸ் சேர்ச் விமான

பயணம் நல்லா இருக்கு ஆனால் மகிழூர்த்தி என்றா என்ன உங்க பயணத்தை தொடருங்கோ

:P

Link to comment
Share on other sites

வீதிகளில் வாகனங்களைக் காண்பது குறைவாக இருந்தது. மழையும் வரப்போவது போல இருந்தது. இவ்வீதியில் செல்லும் போது மலைகளினூடாக உள்ள வீதிகளில் பிரயாணம் செய்யவேண்டும். கால நிலை சரியில்லை என்றால் இவ்வீதிகளில் செல்வது ஆபத்தானது என்பதினால் அன்னேரங்களில் இவ்வீதியில் பிரயாணிப்பது தடைசெய்யப்படும். மலையினூடாக கிட்டத்தட்ட 1 - 2 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்ய வேண்டும். இச்சமயத்தில் எரிபொருள் நிலையங்கள் ஒன்றையும் காண முடியாது. கிரைஸ் சேர்ச்சில் வெளிக்கிடும் போது மகிழூர்ந்திற்கு தேவையான எரிபொருளாப் பெற்று விட்டதினால் ஒரளவு பயப்படத்தேவை இருக்கவில்லை. பசிக்கத்தொடங்கியதினால் மலைத் தொடருக்கு முன்பு இருந்த கடைசி எரிபொருள் நிலையமொன்றில் பிஸ்கட் சிப்ஸ் வாங்கி உண்டபின்பு தொடர்ந்து பயணித்தேன்.

p9250011uc5.jpg

p9250012zl9.jpg

p9250013pd1.jpg

p9250014kx7.jpg

p9250015oo0.jpg

p9250016rv4.jpg

Link to comment
Share on other sites

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த ஈழவன், தூயா, கருப்பி, பொன்னி, யமுனா ஆகியோருக்கு நன்றிகள். மகிழுந்து என்றால் CAR.

Link to comment
Share on other sites

மலைகளினூடாகப் பயணிக்கும் போது அழகான இயற்கைக்காட்சிகள் பார்க்கக்கூடியதாக இருக்கும். எனது புகைப்படக் கருவியினால் எடுத்து இங்கே இணைக்கப்படும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு அவ் இயற்கைக்காட்சியின் அழகை வர்ணிக்க முடியாது. நேரில் இதைவிட அழகாக இருக்கும்.

p9250017ab1.jpg

p9250018ff8.jpg

p9250019wn2.jpg

p9250020tu7.jpg

p9250021za7.jpg

p9250022bf5.jpg

p9250023ug9.jpg

p9250024xn4.jpg

Link to comment
Share on other sites

இங்கு சில மலைகள், சில ஆறுகளின் நிறங்கள் வித்தியாசமாக காணக்கூடியதாக இருக்கிறது. புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட மேலதிகப்படங்கள்.

p9250025yz5.jpg

p9250026gq5.jpg

p9250027io2.jpg

சொக்கலேட்டினை மலையின் மீது பூசியது போல மலைகளில் சில காட்சியளித்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நியுசிலாந்துக்கு அடிக்கடி போறனான் அங்கே என்னுடைய மாமா இருக்கிறார் வன்டவுள் பிளேஸ்

;)

Link to comment
Share on other sites

புகைப்படக்கருவியினால் எடுக்கப் பட்ட மேலதிகப் படங்கள்

p9250028yy0.jpg

p9250029pc8.jpg

p9250030hh2.jpg

p9250031bh7.jpg

Link to comment
Share on other sites

Arthur's pass க்கு போகிற வழியில் Castle Hill basin என்ற இடத்தில் Cave Stream Scenic Reserve என்ற குகை இருக்கிறது. நாங்கள் போன நேரத்தில் காலனிலை சரியில்லை. நான் நியூசிலாந்துக்கு சென்ற நேரத்தில் இக்குகையைப்பற்றிய சுற்றுலா மையங்களும், இணையத்தளங்களும் பெரிதாகச் சொல்லவில்லை. ஆனால் தற்பொழுது 2006க்கு பிறகு இதனை , Christchurch க்கும் Arthurs Pass க்கும் இடையில் உள்ள பிரதேசங்களில் முக்கியமான இடங்களில் சேர்த்துள்ளார்கள். இணையத்தளத்தில் சுட்ட படத்தின் இங்கே இணைக்கிறேன்.

cavestreama223ij4.jpg

mednzcaveentranceqh9.jpg

Link to comment
Share on other sites

  • 1 month later...

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த சோனாவுக்கு நன்றிகள்

நானும் நியுசிலாந்துக்கு அடிக்கடி போறனான் அங்கே என்னுடைய மாமா இருக்கிறார் வன்டவுள் பிளேஸ்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.