Jump to content

வணக்கம்


Recommended Posts

எழுதுவது இல்லை பிரச்சினை. எழுதியதை யாழ் கருத்துக்களத்தில் இணைப்பதில் தான் பிரச்சினை.

அறிவுரை தே

Link to comment
Share on other sites

கொங்கொங்கிலிருந்து அக்கராயன். வணக்கம் நண்பரே.நீண்ட நாட்களுக்கு பின்னர் வருகின்றீர்கள் போல உள்ளது.களத்தில் நிறையவே உதவி செய்வார்கள்.உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம்!

அக்கராயனில் கறையான் இருப்பது உண்மைதான் ஆனால் "அக்கறையான்" என்பது பிளையான பதம்.

அக்கராயன் என்பதை பிரித்தெழுதினால் அக்கரை + ராயன் என்றே வரும்.

ராயன்இ ராசன் எனும் சொற்கள் அரசன் என்பதற்கு ஒத்தக்கருத்தாகும்.

Link to comment
Share on other sites

"வாருங்கள் அக்கராயன்இ இங்கு சென்று தமிழ் எழுதப் பழகுங்கள்."

நன்றி லிசான்

நான் இப்பொழுதுதான் இணுவில் பண்டிதர் பஞ்சாட்சரம் வீட்ட போய் தமிழ் கற்று திரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

"Akkarayan என்று ஆங்கிலத்தில் இருப்பதை தமிழிற்கு மாற்ற அக்கரயன் என வருகின்றது. எனவே, உங்கள் உண்மையான பெயரை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

akkaraayan என ஆங்கிலத்தில் எழுதினாலேயே அக்கராயன் என தமிழில் வரும்.

வணக்கம் கலைஞன்

இப்பொழுதுதான் தமிழ் கற்று திரும்புகிறேன். அதற்குள் ஆங்கிலத்திலும் குழப்புகிறீர்கள். :D

ஆங்கிலத்தில் (அநேகமாக) குறில் நெடில் இரண்டும் ஒரே மாதிரிதான் வரும். :D

உ+ம்: சமன், சாமான், செமன், மூன்று சொற்களுக்கும் ஆங்கிலத்தில் saman என்று தான் எழுதப்படுகின்றது.

Link to comment
Share on other sites

"உங்க பெயர் அக்கராஜனா? அல்லது அக்கறையனா? எதுவாக இருந்தாலும் உங்க வரவு நல்வரவாகட்டும்."

வணக்கம் வல்வை மைந்தா.

ஆனால் வரக்கூடாத சந்தேகம் அல்லோ வந்திருக்கிறது வல்வை மகிந்தனுக்கு.

ராஜன், ராஜா என்பதெல்லாம் வட இந்திய தழுவு சொற்களே.

அக்கறையான் என்பதும் பிளையான பதம்தான்.

அக்கராயன் என்பதை பிரித்து எழுதினால் அக்கரை + ராயன் என்று வரும் இதுவே சரியான பதமாகும்.

ராயன் என்பது ராசன், அரசன் என்பதற்கான ஒத்தக் கருத்து சொற்களேயாகும். ராஜா போன்ற கிரந்த மொழி கலப்பு சொற்களை தவிர்த்தே எம்மவர்கள் ராயன், ராசன் என்று பயன்படுத்துவதாகவும் கொள்ளலாம்.

சரி எனது பெயர் தொடர்பிலேயே உங்களுக்கு பல சந்தேகங்களும் கேள்விகளும் வந்துவிட்டது. பதில் சொல்லத்தானே வேண்டும்.

"அக்கராயன்" எனும் பெயர் வன்னியில் இருக்கும் பலக்கிராமங்களை நகரங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசப்பெயராகும்.அது எதிரியின் பெருமளவிலான ஆக்கிரமிப்பின் போதெல்லாம் வந்தாரை வாழவைத்த வன்னியின் வளமான மண். தமிழீழத்தின் இதயம் கிளிநொச்சி என்றால். இது இதயத்தின் இரத்த நாடி.

இங்கே அக்கராயன் குளம் என்று ஒன்று இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்த எனக்கு, எனது கேள்விகளுக்கும் பதிலளியுங்கள். :D:D

எனது கேள்வி இதுதான் :D:wub::lol:

அக்கராயன் என்பது அக்கரை + ராயன் என்று அறிவோம். இது மாதிரி எத்தனை "ராயன்கள்" வன்னி பெரு நிலப்பரப்பில் ஊர்களின் பெயர்களாகவும், குளங்களின் பெயர்களாகவும் இருக்கின்றன? :):(

பட்டியலிடுங்கள்.

அப்பெயர்களின் பின்னனிகள், அப்பெயர்கள் வழங்கப்பட்ட காலங்கள் இவற்றை உற்று நோக்கினால் மறைந்துகிடக்கும் வன்னி நிலப்பரப்பின் எமது மூதாதையர்களின் சுவடுகள் என நிறையவே தகவல்கள் வெளிப்படும்.

இன்றும் எத்தனை வன்னி (காடுகளில்) பெரு நிலப்பரப்பில் மக்கள் வாழா பகுதிகளில் பல ராயன்களது பெயர்களை தாங்கிய எத்தனையோ குளங்களும், கட்டிட இடிபாடுகளின் எச்சங்களும் சொச்சங்களாக இருப்பதை (காடு சென்றவர்கள் கண்டிருக்கலாம்) கண்டவர்கள் காணாதவர்களுக்கு அறியத்தாருங்கள்.

இவை எமது தமிழீழத்தின் தமிழர்களின் தொன்மையை பறைச்சாட்டும் முக்கிய விடயங்களில் ஒன்றாகும்.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பரே...அருமையான பெயர் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள். உங்களிடமிருந்து தெரியாத பல விடயங்களை அறியலாம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

தம்பி அக்கராயன் வணக்கம், வாங்கோ....சுவையான பெயர்!! :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.