Jump to content

'' அஞ்சி வாழேன்..''


Recommended Posts

:lol: '' அஞ்சி வாழேன்..''

சிங்கள கூட்டு வைத்து

சில காலம் வாழ வந்து

சேர்த்து வைத்த பணமதையும்

தெருவில் போட்ட கதை காணய்....

மாடாக இங்குழைத்து

மாளிகைகள் வேண்டிவிட்டு

தான் வாழ முடியாமல்

தவிக்கின்ற நிலை பாராய்.....

பகலிரவு தான் பாரா

பட்டினிகள் தான்கிடந்து

ஊன் உருகி உழைத்த பணம்

யாருக்கு போகுது காண்...

காட்டி கொடுப்பவர்கள்

கரியாராய் இவராக்கி- இவர்

வாய்க்கரிசியிட்டு - அவர்

வாழ்கின்ற காலம் காண்...

கொழும்பினில் வாழ்வதாய்

கொழுப்பாக பேசிநின்ற

எம் தமிழர் வாழ்வியலில்

எறி வந்த இன்னல் கேள்...

ஏறி வந்து வீதியிலே

ஏற்றமுடன் உலவிடதான்

முடியாமல் வீட்டுக்குள்ளே

முடங்கிய நிலை காணாய்..

முக மூடியணிந்தவர்கள்

முன்னாடி தலையாட்டி

சாம பொழுதினிலே- இவர்

சங்கறுந்து விழுகின்ற

சங்கதிகள் நீயறியாய்...

பாவயரை தாம் பிடித்து

பாலியலை ஆடிவிட்டு

கங்கை மீதினிலே

கன்னியுடல் போவதனை

செய்திகளில் நீயறியாய்...

உன் உரிமை நீயற்று

ஊரவன் கோடியுள்ளே

நின்மதி நீ இழந்து

நித்தமங்கு வாழ்வதுவோ...??

எங்களது தேசத்திலே

எவர்க்கு நாமடிமை...??

என் தலை நான் நிமிர்த்தி

எங்கினுமே போய் வருவேன்..

வல்லத் தலைவனவன்

வாழும் தேசமதில்

நெஞ்சை நிமிர்த்தி நான்

நெசமாக நடை பயில்வேன்...

அஞ்சி அஞ்சி ஒருபோதும்

அங்கு நான் வாழேன்

இதனை உணரமால்- தென்

இஙை;கையிலே எம்தமிழர் வாழ்வதுவோ...??

-வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

:rolleyes: '' அஞ்சி வாழேன்..''

உணர்ச்சி கவியே

உன் கவிவரிகள் அற்புதம்

இந்த கவிவரிகளை நானும் ரசிக்கின்றேன்

உன் உரிமை நீயற்று

ஊரவன் கோடியுள்ளே

நின்மதி நீ இழந்த

நித்தமங்கு வாழ்வதுவோ...??

இதைப்பேன்ற சமுசிந்தைக் கவிதைகள் தொடரட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.