Jump to content

`காதலனைக் கொல்லு! மகளைக் கட்டிக்கோ!'


SUNDHAL

Recommended Posts

இளைஞர். மும்பையைச் சேர்ந்த வினோத்குமார் சிங்கேஸ்வர் சிங்குக்கு இளம்பெண் சங்கீதா மீது பைத்தியமான காதல். `எனக்கு 24 உனக்கு 19' என்று காதல் வானில் சிறகடித்துத் திரிந்த இந்த ஜோடி, ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர்.

அதற்கு பெற்றோர்களின் சம்மதம் வேண்டுமே? வினோத்குமார் வீட்டுத் தரப்பில் பிரச்சினையில்லை. பெண்ணின் அம்மா சம்மதத்தைப் பெற்றால் போதும். வினோத்குமாரும் தைரியமாகச் சென்று சங்கீதாவின் அம்மா மீனா லாலு பஞ்சாபியிடம் பெண் கேட்டார். `நான் சொல்கிற `நிபந்தனைக்கு' சரி என்றால் எனக்குச் சம்மதம்' என்றார் மீனா. சந்தோஷத்துடன் தலையசைத்தார் வினோத்குமார். ஆனால் அடுத்து மீனா விதித்த நிபந்தனை திடுக்கிட வைத்தது அவரை. அதாவது,

``நான் சொல்லும் ஆளை நீ காலி செய்தால் போதும். என் மகளை தாராளமாக நீ கட்டிக்கலாம்!'' என்றார் மீனா.

முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் காதலுக்காக கொலை செய்யவும் தயாராகிவிட்டார் வினோத்குமார். மீனா, கைகாட்டிய நபர் சுனில் வசந்த தோப்கார் என்ற ஆட்டோ டிரைவர். மீனாவின் கள்ளக் காதலர் அவர். நீர்வாழ் பிராணி போல எப்போதும் `தண்ணீரில்' மிதப்பவர். குடிக்கக் காசு கேட்டு அடிக்கடி மீனாவை தொந்தரவு செய்து வந்தார். அதனாலேயே அவரது கதையை முடிக்க முடிவெடுத்துவிட்டார் மீனா. அதற்கு சரியான ஆளையும் பிடித்துவிட்டார்.

வினோத்குமார் தனது நண்பர்கள் அஷ்ரப், சந்தீப் சூர்யநாராயணன் சகானே ஆகியோருடன் சென்று ஆட்டோ டிரைவர் தோப்காரைச் சந்தித்தார். அவருடன் நைசாகப் பேசி மால்வானி தானா பாணி பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தோப்காருக்கு `தீர்த்த அபிஷேகம்' நடைபெற்றது. அவர் தெளியத் தெளிய மதுபானம் ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். தோப்காரும் வெகு குஷியாய் வாங்கி கவிழ்த்துக் கொண்டார். ஆனால் மதுபானத்தில் வினோத்குமார் அண்ட் கோ கலந்திருந்த தூக்க மாத்திரைகள் வேலை செய்தது. தூக்கத்தில் துவண்டார் தோப்கார்.

உடனே சற்றும் தாமதிக்காமல் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்த வினோத்குமார் கும்பல், உடலை ஒரு சிற்றோடையில் தள்ளிவிட்டு ஓடிவிட்டது.

இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று மோப்பம் பிடிக்க முடியாமல் சுவரில் முட்டிக் கொண்டு நின்றது மும்பை போலீஸ். இந்நிலையில் கான்ஸ்டபிள் பிரகாஷ் சங்கர் மொஹித்துக்கு ஓர் `இன்பார்மர்' மூலம் வினோத்குமார் கோஷ்டியைப் பற்றிய தகவல் கிடைத்தது. உடனே தேடுதல் வேட்டையை நடத்திய போலீசார், வினோத்குமார், நண்பர்களை சுற்றி வளைத்துப் பிடித்துவிட்டனர்.

அவர்களிடம் போலீசார் `முறைப்படி' விசாரித்ததில், அட்சரம் பிசகாமல் உண்மையை ஒப்பித்து விட்டனர். தோப்காரின் சடலத்தைப் போட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று, எப்படி கொன்றோம் என்பதை நடித்தும் காண்பித்து விட்டனர். அங்கிருந்து தோப்கார் உடல் பகுதிகளையும், எலும்புகளையும் மீட்டிருக்கிறது போலீஸ்.

காதலியைக் கரம் பற்றி மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடத் திட்டமிட்ட வினோத்குமார், இப்போது மாமியாருடனே `மாமியார் வீட்டில்' சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

Thanks to:Muthucharam

Link to comment
Share on other sites

சங்கீதா இப்போது, எங்கு, யாருடன் இருக்கிறார்? வினோத்குமாருக்கு தன் காதலி சங்கீதாவுக்கு பதிலால மாமி மீனாவுடன் வாழ வேண்டிவந்துவிட்டதே!

What a turning point! :huh::huh::huh::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு என்ன விடிஞ்சுட்டுதா? அல்லது தெளிஞ்சுட்டுதா? :huh::huh::huh: :P

Link to comment
Share on other sites

ஒய் மப்பு நோட் பன்னி வையிங்க..உங்க சீரியல்ல யூஸ் பன்னிக்கலாம்

Link to comment
Share on other sites

மாப்பு என்ன விடிஞ்சுட்டுதா? அல்லது தெளிஞ்சுட்டுதா? :huh::huh::huh: :P

ஒய் மப்பு நோட் பன்னி வையிங்க..உங்க சீரியல்ல யூஸ் பன்னிக்கலாம்

சிரிக்கப்படாது. உலகத்தில் இப்போது மகளை கட் பண்ணிவிட்டு மருமகனும், மாமியும் ஒன்றாக வாழும் சம்பவங்களும் நடைபெறவில்லையா?

அண்மையில் சிறீகாந்த் நடித்த ஒரு படத்தில் அண்ணிக்காரி புருசன் தம்பியை விரும்புவதாய் கதை காட்டவில்லையா?

ஆனால் பல பெரியவர்கள் பார்க்கும் நமது செல்வன் மெகாசீரியலில் இப்படியான குழப்பகரமான கதைகளையெல்லாம் நான் போடமாட்டேன்! We are decent people! :P

Link to comment
Share on other sites

சங்கீதா இப்போது, எங்கு, யாருடன் இருக்கிறார்? வினோத்குமாருக்கு தன் காதலி சங்கீதாவுக்கு பதிலால மாமி மீனாவுடன் வாழ வேண்டிவந்துவிட்டதே!

What a turning point! :blink::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

மாப்பிள்ளை என்ன இப்பவும் மாமியார் இருக்கிற வீட்டில பெண் எடுக்க போறா??????????????? களி தாண்டி உனக்கு :P

Link to comment
Share on other sites

ஹேஹே..இப்போதேல வாழ்க்கையில நடப்பதெல்லாமே சினிமா போல வருதே..நடிகைகள் பெயர் வேற. வினோத்குமாருக்கு பதில அஜித்குமார்..இன்னும் பொருத்தமான இருந்திருக்கும். :blink:

ஆனால் பல பெரியவர்கள் பார்க்கும் நமது செல்வன் மெகாசீரியலில் இப்படியான குழப்பகரமான கதைகளையெல்லாம் நான் போடமாட்டேன்! We are decent people! :P

அப்பிடி சொல்லுங்க!!!!

இப்போதேல புதுசு புதுசா கதை வேணும் எண்டதுக்காக..நல்ல உறவுகளை கொச்சப்படுத்தி படம் எடுக்கிறாங்க. :angry:

Link to comment
Share on other sites

ஹேஹே..இப்போதேல வாழ்க்கையில நடப்பதெல்லாமே சினிமா போல வருதே..நடிகைகள் பெயர் வேற. வினோத்குமாருக்கு பதில அஜித்குமார்..இன்னும் பொருத்தமான இருந்திருக்கும். :o

அப்பிடி சொல்லுங்க!!!!

இப்போதேல புதுசு புதுசா கதை வேணும் எண்டதுக்காக..நல்ல உறவுகளை கொச்சப்படுத்தி படம் எடுக்கிறாங்க. :angry:

என்ன நக்கலா? உதாரணம் சொல்ல எங்கட தலை தான் கிடைச்சிச்சா?

Link to comment
Share on other sites

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்.. :rolleyes::rolleyes: :P

தலை பெருத்தவன் எல்லாம் தலைவன் இல்லை

தகுதி இருப்பதக நினைப்பவனும் தலைவன் இல்லை

தலைக்குள் இருப்பவனால் மட்டுமே தலைவன் ஆக முடியும்................

Link to comment
Share on other sites

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்.. :rolleyes::blink: :P

எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

உங்களுக்கு இப்ப யாரையும் முடிஞ்சுவிடுறதயே வேலையா போச்சு,வயசு போக எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

போக இப்படிதான்

:rolleyes::blink:

Link to comment
Share on other sites

சுண்டலை சொல்லிட்டு..நீங்களும் அதையே தப்பாமல் செய்றீங்களே புத்தன் ஐயா...

நான் தல அண்ணா போட்ட அந்த வரிகளை பாவித்தேனே தவிர..அவரை நக்கல் பண்ணலப்பா...சுண்டலுக்கு இதே வேலையா போச்சு!!!!

Link to comment
Share on other sites

வீண் வம்புக்கு தலை போறது இல்லை

ஆனா வந்த வம்பை விடுறதும் இல்லை இப்ப பாருங்கள் வாங்கி கட்ட போறாங்கள் சகி அவர்கள்

தலை உங்கள் கோவம் நியாயமானது தான் அதுக்காக சகியை கண்ட படி பேச வேண்டாம் பாவம்............

ஏதொ தெரியா பிள்ளை அறியாமல் உங்களை இதுக்குள்ளே இழுத்துட்டா..........

தலை விடவேண்டாம் உங்களை தான் மீன் பன்னிட்டு இப்ப அஜித் (தலை) என்று சொல்லுவா..

Link to comment
Share on other sites

அடக் கடவுளே..எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்களா? :D எனக்கு யாரும் உதவி இல்லை..அனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :D:D

Link to comment
Share on other sites

ம்ம்...கேசரி செய்து சாப்பிட தான்.. :angry:

(இதுதான் சின்ன பிள்ளைகளை எல்லாம் கூட்டு சேர்க்க கூடது என்றது :D நய் நய் எண்டிக்கிட்டு இருப்பாங்க :angry: )

Link to comment
Share on other sites

ம்ம்...கேசரி செய்து சாப்பிட தான்.. :angry:

ம்ம் கூப்பிடுங்க அப்புறம் கேசரி சாப்பிட்ட ஈ சொல்ல பல்லிருக்காதுதனே :D:D:lol::lol: :P :P

Link to comment
Share on other sites

என்னப்பா எல்லாரும் சகிய கிண்டல் பண்ணுறீங்கள் ஆஆஆ.... :angry:

சகி சொன்னதில என்ன தப்பு இருக்கு

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்..

அதாவது குதிரை ஓட்டுவதில் நம்ம சகோதரம் தல ய ஜெயிக்கேலுமோ ஆரும் ? அது தான் சகி சொல்லிருக்கா சும்மா குதிரை ஓடத்தெரியும் எண்டு சொல்லுறவையெல்லாம் தலை இல்லை ... அதை செய்யத் தெரிந்தவரே தல எண்டு .... இப்ப விளங்கிச்சோ ...... ;) ;)

Link to comment
Share on other sites

என்னப்பா எல்லாரும் சகிய கிண்டல் பண்ணுறீங்கள் ஆஆஆ.... :angry:

சகி சொன்னதில என்ன தப்பு இருக்கு

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்..

அதாவது குதிரை ஓட்டுவதில் நம்ம சகோதரம் தல ய ஜெயிக்கேலுமோ ஆரும் ? அது தான் சகி சொல்லிருக்கா சும்மா குதிரை ஓடத்தெரியும் எண்டு சொல்லுறவையெல்லாம் தலை இல்லை ... அதை செய்யத் தெரிந்தவரே தல எண்டு .... இப்ப விளங்கிச்சோ ...... ;) ;)

அவக்கு வக்காளத்து வாங்க் இவ வந்திட்டா, உங்க 2பேருக்கும் தலதான் இருக்கு உள்ளே ஒன்டும் இல்லை

:P

Link to comment
Share on other sites

எங்களுக்கு தலயாவது இருக்கு..... உங்களுக்கு அதாவது இருக்கா :lol::D:D:D

சரி நான் போய்ட்டு வாறன்... இனும உங்க கூட சேர்ந்த்து அரட்டை அடிக்க நேரம் இல்லை :D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.