Jump to content

சாய்ந்த கோபுரங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் பல அருமையான பதிவுகளை தந்தமைக்கு நன்றிகள்,உங்களது சகல தொடர்களையும் வாசித்துள்ளேன்.

சாய்பாபாவின் கோபுரம் எம் போன்ற ஒரு சிலருக்கு தான் சாய்ந்த கோபுரம் ஆனால் எம்மவர்களிள் பலருக்கு அது சாயாத கோபுரமாக தான் விளங்க போகின்றது.முக்கியமாக புலத்தில் பொருள்,பதவி,பணம்,கல்வி வசதி படைத்த தமிழ் பெரும் குடிகளிடம்.

சமணம்,பெளத்தம் போன்றவை எல்லாம் எம் தேசியத்தில் இல்லாமல் போனது போல் இப்பொழுது நாம் கூறும் சைவமும்,இந்துவும் இல்லாமல் போய் இந்த சாய் மதம் தான் ஒரு 50 வருடங்களின் பின் நம்மவர்களிடையே ஆட்சி செலுத்தும் என்று நான் நினைக்கிறேன் அதை காண நாம் இருக்க மாட்டோம்.

தொடர்ந்து உங்களது ஆக்கங்கள் யாழில் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். <_<

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

அப்பிடி என்ன அவசரம் இளங்கோ?? உங்களுடைய சில பெரியார் பற்றிய சில விடயங்ளில் எனக்கு உடன்பாடு இருந்திருக்காவிட்டாலும் கூட உங்களது கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கின்றவன். இந்தத் தொடரை முடித்தாலும் வேறு விடயங்களை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்து நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி புத்தன். தொடர்ந்து படித்து அவ்வப்போது கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள்.

சமணம்,பெளத்தம் போன்றவை எல்லாம் எம் தேசியத்தில் இல்லாமல் போனது போல் இப்பொழுது நாம் கூறும் சைவமும்,இந்துவும் இல்லாமல் போய் இந்த சாய் மதம் தான் ஒரு 50 வருடங்களின் பின் நம்மவர்களிடையே ஆட்சி செலுத்தும் என்று நான் நினைக்கிறேன் அதை காண நாம் இருக்க மாட்டோம்.

சிந்திக்கத்தோன்றும் வரிகள் புத்தன்!

மற்றக் கோபுரங்களுக்கும் சாயி பாபா என்ற கோபுரத்திற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு உள்ளது. ஆம் எனக்கு இறை நம்பிக்கை சமய நம்பிக்கை இருந்த காலத்திலேயே அது சாய்ந்து விழுந்து விட்டது.

அப்பிடி என்ன அவசரம் இளங்கோ?? உங்களுடைய சில பெரியார் பற்றிய சில விடயங்ளில் எனக்கு உடன்பாடு இருந்திருக்காவிட்டாலும் கூட உங்களது கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கின்றவன். இந்தத் தொடரை முடித்தாலும் வேறு விடயங்களை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்து நன்றி வணக்கம்

நன்றி சாத்திரி!

கோபுரமாக உயர்ந்து நின்ற விடயங்கள் சாய்ந்து போனதைப் பற்றிய தொடர் தான் இது. எல்லாவற்றையும் எழுதிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். வேறு ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி தோழரே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.