Jump to content

பிள்ளையானின் மனுவை விசாரிக்க முடிவு.!


Recommended Posts

பிள்ளையானின் மனுவை விசாரிக்க முடிவு.!

 

 

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

Image result for பிள்ளையானின் மனு virakesari

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, இவர் குறித்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15758

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில் விடு விக்கப்படலாம்  எல்லாம் அரசியல் game

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.