Jump to content

''நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!'' - மெரினா வைரல் பெண் (Video)


Recommended Posts

''நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!'' - மெரினா வைரல் பெண் (Video)

girlsviral1_17090.jpg

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற போது, பரவலாக கவனம் ஈர்த்தார் ஒரு பெண். ’தடை செய்... தடை செய்... பீட்டாவை தடை செய்’ என உணர்வும் குறும்புமாக இவர் பேசிய வீடியோக்கள் சகல தளங்களிலும் பரவியது. ஆனால், முதல் நாள் ஆச்சரிய லைக்ஸ் குவித்தவர் குறித்து, மறுநாள் கட்சி சார்பானவர் என சர்ச்சை கிளம்பியது.  

’போராட்டத்தில் ஏன் அரசியல் தலைவர்களை விமர்சிக்கிறாய்..? 'உனக்கு ஏன் தேவையில்லாத வேலை? உடனடியாக மன்னிப்பு கேள்’ என்றும் மிரட்டல்கள் வந்ததாம். பத்தாததுக்கு, எதிர்தரப்பு கட்சிகள் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி, ‘இவர் எங்கள் கட்சியைச் சார்ந்தவர்.  எங்களுக்காகத்தான் கோஷம் எழுப்புகிறார்’ என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பினர்.  

ஆனால், அந்தப் பெண்ணோ, ''நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் அல்ல; நான் ஒரு தமிழ் பெண். என் இனத்துக்காகதான் அப்படி கோஷமிட்டேன். எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை. என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழினத்துக்காக போராடினேன் அவ்வளவுதான். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை'' என தெரிவித்துள்ளார். 

இப்போது சமூக வலைதளங்களில் இந்தப் பெண்ணைக் காணவில்லை என்றெல்லாம் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதோடு விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு இவர் புகைப்படத்தை இணைத்தும் வதந்தி பரவுகிறது. ’நலமாகத்தான் இருக்கிறாரா..?’ என்று விசாரித்தோம். மேலும் அவரிடம் கேட்க விரும்பிய கேள்விகளையும் கேட்டோம். அனைத்து விசாரணைகளுக்கும் பதிலாக ‘செல்ஃபி  வீடியோ’ அனுப்பி வைத்தார். 

பி.குறிப்பு: அவருடைய நலன் கருதி அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிடவில்லை!

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/78527-i-am-safe-and-am-not-in-any-political-party-says-viral-girl.art

Link to comment
Share on other sites

வைரல் பெண்ணுக்கு பேனர் வைத்தேன்.. போலீஸ் கலங்கடித்து விட்டது!’

DMK_Party_Family_1_17586.jpg

ஜல்லிக்கட்டு போராளி வீரத்தமிழச்சிக்கு பேனர் வைத்த தி.மு.க. பிரமுகரின் குடும்பத்தை விசாரணை என்ற பெயரில் போலீஸார் துளைத்தெடுத்து விட்டனர்.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அனைவரின் கவனத்தை ஈர்த்தார் ஒரு இளம் பெண். போராட்டத்தின் போது அந்த இளம்பெண்ணின் போராட்ட ஸ்டைல் அவருக்கு வீரத்தமிழச்சி, வைரல் பெண் என்ற அடைமொழியை பெற்றுக் கொடுத்தது. பெயர், ஊர் என எந்த விவரமும் தெரியாத பலர் அவரை தன்னுடைய மகளாக கருதினர். அந்த பெண்ணின் போராட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. லைக்ஸ்களை அள்ளி குவித்த அந்த வீடியோ வைரல் பெண்ணுக்கு அடுத்த நாளே மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவருக்கு அரசியல் சாயமும் பூசப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த அவர், 'தான் நலமாக இருப்பதாகவும், எந்த அரசியல் கட்சியிலும் இல்லை' என்று விளக்கமளித்து முகநூலில் ஒரு வீடியோவை பதிவு செய்தார்.

DMK_Party_Family_17202.jpgஇதன்பிறகே வைரல் பெண் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் 'வீரத்தமிழச்சி என் மகளுக்கு வாழ்த்துக்கள்' என்று திருவண்ணாமலை, மேற்கு ஆரணி தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயராணி ரவி என்பவர் ஆரணி டவுனில் 5 இடங்களில் பேனர் வைத்திருந்தார். தற்போது அந்த பேனர் விவகாரம் சூடுபிடித்துள்ளது. பேனர் வைத்த ஜெயராணி மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோரிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். வைரல் பெண் குறித்து பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தனர். அந்த பெண் குறித்த எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது என்று போலீஸாரிடம் பதில் அளித்த பிறகும், சென்னை வேளச்சேரியில் உள்ள ரவியின் மகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். 

இதுகுறித்து தி.மு.க.வில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவி கூறுகையில், "அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துடிப்புடனும், துணிவுடனும் செயல்பட்ட அந்த வீரத் தமிழச்சிக்கு பேனர் வைத்தோம். தற்போது அந்த பெண் குறித்த விவரங்களை கேட்டு போலீஸார் எங்களை நிம்மதி இழக்க வைத்து விட்டனர். சென்னையில் இருக்கும் என்னுடைய மகள் வீட்டுக்குச் சென்றும் போலீஸார் விசாரித்துள்ளனர். இதனால் அந்த 5 பேனர்களையும் அகற்றி விட்டோம்" என்றார். 

போலீஸ் வட்டாரத்தில் கேட்ட போது, "அந்த பெண் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின. இதனால் அந்த பெண் குறித்த விவரத்தை சேகரிக்க ரவியிடம் விசாரணை நடத்தினோம். தற்போது அவர் உயிரோடு இருக்கும் தகவல் கிடைத்து விட்டது. இதனால் பேனரை மட்டும் அகற்றும்படி தெரிவித்துள்ளோம்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/78642-police-questioned-about-marina-girl-as-banners-were-placed-in-aarani.art

Link to comment
Share on other sites

'சின்னம்மா சின்னம்மா... ஒபி.எஸ். எங்கம்மா','நேற்று வந்த ஆயாம்மா... நீயெல்லாம் சி.எம்மா? : 'இன உணர்வுடன் கோஷம் போட்ட என் மீது அரசியல் சாயம் பூசுகிறார்கள்'- மெரீனா ஆர்ப்பாட்டத்தில் உணர்வுபூர்வமாக கோஷமிட்ட மதுரை யுவதி கூறுகிறார்
2017-01-24 11:58:46

21972_22-1485099915-student3.jpgஜல்­லிக்­கட்டு மீதான தடைக்கு எதி­ராக சென்னை மெரீனா கடற்­க­ரையில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் ஒன்று திரண்டு நடத்­திய ஆர்ப்­பாட்­டத்தில் பல்­வேறு கோஷங்கள் ஒலித்­தன.

 

இவற்றில், 'சின்­னம்மா சின்­னம்மா ஒபிஎஸ் எங்­கம்மா', 'நேற்று வந்த ஆயாம்மா நீயெல்லாம் சி.எம்மா? வரச் சொல் வரச்சொல் ஓபி­எஸ்ஸை வரச்சொல், ஊரை சுத்­துற மோடி மதுரைப் பக்கம் வாடி' போன்ற கோஷங்­களை எழுப்­பிய ஒரு யுவதி பலரின் கவ­னத்­தையும் ஈர்த்தார்.

 

நாட்கள் செல்ல செல்ல அவர் கோஷ­மி­டு­வதைப் பார்ப்­ப­தற்­காக அவரைச் சூழ திரண்­ட­வர்­களின் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­தது. பல்­வேறு வகை­யான கோஷங்­களை அவர் எழுப்­பினார்.

 

இந்த இளம் பெண் உணர்­வு­பூர்­வ­மாக வீரா­வே­ச­மாக முழக்­க­மிடும் வீடி­யோக்கள்  இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளி­யாகி வேக­மாகப் பர­வின. இந்த யுவ­தி யின் துணிச்­சலைக் கண்டு பலரும் வியப்­ப­டைந்­தனர்.

 

21972_Metro-06-19.jpg

மிகப் பிர­ப­ல­மான ஒரு­வ­ரா­கி­விட்ட  அவர், தற்­போது பெரும் வேத­னையில் உள்ளார். காரணம், அவ­ருக்கு அர­சியல் முத்­திரை குத்தி குறிப்­பிட்ட கட்­சி­யினர் அவரை பேஸ்­புக்கில் மிகக் கடு­மை­யாக விமர்­சித்து வரு­வதே.

 

21972chennai-girl.jpg

 

சசி­கலா, மோடி முத­லா­னோரை குறிப்­பிடும் வித­மாக கோஷ­மிட்ட இந்த யுவ­தியின் பாது­காப்பு குறித்து பலர் கரி­சனை தெரி­வித்­துள்­ளனர். ஆனால் தன் மீதான அர­சியல் முத்­தி­ரையை முற்­றாக மறுத்­துள்ளார் மதுரை மாவட்­டத்தைச் சேர்ந்த இந்த யுவதி.

 

தான் மிக மிக சாதா­ரண பெண் என்றும், சாதா­ர­ண­மான முறையில் சென்­னையில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­யாற்றி வரு­வ­தா­கவும் கூறி­யுள்ள அவர், தனக்கும் ஜல்­லிக்­கட்­டுக்கும் உணர்­வு­பூர்­வ­மான நெருக்கம் இருப்­ப­தா­கவும் அதனடிப்­ப­டை­யில் தான் போராட்­டத்தில் கலந்து கொண்டேன் என்றும் கூறி­யுள்ளார்.

 

21972fds-fdff.jpgஇது தொடர்­பாக அவர் 'ஒன்­இந்­தியா' தமிழ் இணை­ய­த­ளத்­துக்கு அளித்த செவ்­வியில்  கூறி­யி­ருப்­ப­தா­வது,

நான் சாதா­ர­ண­மா­னவள்

 

எனக்கும் எந்தக் கட்­சி க்கும் தொடர்பு கிடை­யாது. அர­சி­ய­லுக்கும் எனக்கும் எந்த சம்­பந்­தமும் கிடை­யாது. நான் மிக மிக சாதா­ரண பெண்.

 

எந்தக் கட்­சி­யையும் எனக்குத் தெரி­யாது. நான் திமு­கவும் இல்லை, அதி­மு­கவும் இல்லை. தமிழ் உணர்ச்­சி­யோடு, தமிழ்­நாட்­டுக்­காக பேச வந்தேன்.

 

தனி ஆளாக மெரீனா போராட்­டத்தில் கலந்து கொண்டேன். என் பின்னால் நின்­றி­ருந்த நபர் எந்தக் கட்­சியைச் சேர்ந்­தவர் என்று எனக்குத் தெரி­யாது. அவர் தி.மு­.க.வைச் சேர்ந்­தவர் என்­றெல்லாம் எனக்குத் தெரி­யாது. அங்கு பலரும் கூடி­யி­ருந்­தனர். அனை­வ­ருமே கறுப்புச் சட்­டை தான் போட்­டி­ருந்­தனர்.

 

நான் பயப்­பட மாட்டேன்


எந்த விமர்­ச­னத்­திற்­கா­கவும் நான் பயப்­படப் போவ­தில்லை . சர்ச்­சை­களைக் கண்டு நான் பயப்­ப­ட­வில்லை. நான் சர்ச்­சைக்­கு­ரிய வகையில் பேசவும் இல்லை. எல்­லோ­ரையும் போலதான் கோஷ­மிட்டேன்.

 

வாடி­வா­ச­லுக்கு அருகில் என் வீடு

 

ஜல்­லிக்­கட்­டுடன் உணர்­வு­பூர்­வ­மாக நெருங்­கிய தொடர்பு கொண்­டவள் நான். ஜல்­லிக்­கட்டு நடக்கும் ஊர் தான் நானும். வாடி வாச­லுக்கு அரு­கில் தான் எனது வீடு. அந்த உணர்­வில் தான் நான் கலந்து கொண்டேன். அந்த உணர்வின் அடிப்­ப­டை­யில் தான் போராட்­டத்தில் பங்­கேற்றேன்.

 

21972fdf-df.jpg

 

யாரையும் அவ­மா­னப்­ப­டுத்­த­வில்லை.


அ.தி­.மு.க. பொதுச் செய­லாளர் சசி­கலா அம்­மாவை நான் குறிப்­பிட்டு விமர்­சித்துப் பேச­வில்லை. அதே­போ­லத் தான் பிர­தமர் மோடி­யையும் நான் திட்­ட­மிட்டு விமர்­சிக்­க­வில்லை.

 

அவ­மா­னப்­ப­டுத்தும் நோக்கில் நான் விமர்­சித்து கோஷ­மி­ட­வில்லை. அனை­வரும் எப்­படி முழக்­க­மிட்­டார்­களோ அதே­போ­லத் தான் நானும் கோஷ­மிட்டேன்.

 

என் தமிழ் இனத்­திற்­காக, ஜல்­லிக்­கட்­டுக்­கா­கத் தான் நான் போரா­டினேன். உயி­ருள்­ள­வரை போரா­டுவேன். போராட்­டத்­தின்­போது நான் கோஷ­மிட்டபோது தவ­று­த­லாக தவ­றான வார்த்­தைகள் வந்­தி­ருக்­கலாம்.

 

அது யாரையேனும் வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

21972asssss.jpg

 

முத்திரை குத்த வேண்டாம்


நான் கட்சி சார்பற்றவள், அரசியல் சார்பற்றவள். ஆனால் பலரும் எனக்கு முத்திரை குத்திப் பேசுவது வருத்தம் தருகிறது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அந்த யுவதி.

 

வீடியோக்கள் :

 

 

நேத்து வந்த ஆயாம்மா நீயெல்லாம் சி.எம்மா?:

 

 

 

நன்றி: ஒன் இந்தியா

 

21972_Metro-06-19-2-merina.jpg

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=21972#sthash.7o7k2ZG0.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.