Jump to content

தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தனது சுயலாபத்திற்காக பிரபாகரன் தட்டிக்கழித்து விட்டார் – என்கிறார் டக்ளஸ் தேவானந்தா:


Recommended Posts

தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தனது சுயலாபத்திற்காக பிரபாகரன் தட்டிக்கழித்து விட்டார் – என்கிறார் டக்ளஸ் தேவானந்தா: தேவானந்தா:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

prabha-doucklas.jpg

தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தனது சுயலாபத்திற்காக பிரபாகரன் தட்டிக்கழித்து விட்டார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 
யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்,  தமிழ் தலைமைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்காக பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்த வேளை எல்லாம் அதனை தமது சுயஇலாபத்திற்காக கைவிட்டனர்.
 
பிரபாகரனும் அவ்வாறே. இலங்கை இந்தியா ஒப்பந்தம், பிரேமதாஸா, சந்திரிக்கா, ரணில், மகிந்த ஆகியோரின் ஆட்சி காலத்தில் பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் கை கூடி வந்த வேளை எல்லாம் அதனை தனது சுயஇலாபத்திற்காக கைவிட்டனர்.
 
 
வடமாகாணத்திற்கு கொடுத்தது 32 பில்லியன். செலவழித்தது  1.2 பில்லியன்.
 
 
கடந்த வருடம் வடமாகாண சபைக்கு 32 பில்லியன் நிதி கொடுக்கப்பட்ட போதும் 1.2 பில்லியன் நிதியினையே செலவழித்து உள்ளனர். நிதியமைச்சர் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என பெருமளவான நிதியினை வடக்குக்கு ஒதுக்கும் போதும் , அதனை செலவு செய்யாமல் மாகாண சபையினர் செயற்படுகின்றனர்.
 
 
பொருத்து வீடு அரண்மனை. 
 
 
கிடைப்பதனை பெற்றுக்கொள்ள வேண்டும். முன் நிர்மாணிக்கப்பட்ட வீடு என்பது குடிசைகளிலும் , தகர கொட்டகைகளிலும் வாழும் எம் மக்களுக்கு அரண்மனை. அந்த அரன்மையில் 10 தொடக்கம் 15 வருடங்கள் ஆவது அந்த மக்கள் சந்தோசமாக வாழட்டும். கிடைப்பதனை ஏன் வேண்டாம் என கூற வேண்டும்.கிடைப்பதனை பெற்றுக்கொள்வோம்.
 
நீதி அமைச்சுக்கு சொந்தமான காணியை மக்களுக்கு வழங்க சம்மதம். 
 
 
யாழ்.குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணி ஒன்றினுள் 70 குடும்பங்கள் அத்துமீறி வீடமைத்து வாழ்வதாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்களை அங்கிருந்து எழும்பும் மாறு நீதிமன்று அறிவித்து இருந்தது.
 
இது தொடர்பில் நீதி அமைச்சருக்கு நான் தெரிய படுத்தியதை அடுத்து அந்த மக்கள் 91ம் ஆண்டு முதல் அக்காணியில் வாழ்வதனால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டாம் எனவும் ,
 
நீதி அமைச்சுக்கு வேறு இடத்தில் காணிகளை அடையாளம் காணுமாறு நீதி அமைச்சர் கடிதம் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதி , அரச அதிபர் , பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அறிவித்து உள்ளார்.
 
 
நாவற்குழியில் வாழும் தமிழ் மக்களுக்கு விரைவில் வீடு. 
 
 
நாவற்குழியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு மிக விரைவில் வீடமைந்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைத்து கொடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.
 
எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய்கிறோம்.
 
 
வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் தொடர்ந்து கட்சி தனது நிலைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/14747

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

பிரபாகரனும் அவ்வாறே. இலங்கை இந்தியா ஒப்பந்தம், பிரேமதாஸா, சந்திரிக்கா, ரணில், மகிந்த ஆகியோரின் ஆட்சி காலத்தில் பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் கை கூடி வந்த வேளை எல்லாம் அதனை தனது சுயஇலாபத்திற்காக கைவிட்டனர்.

பேரம் பேசுறதுக்கு இதென்ன மண்ணெண்ணை தகரமே?:grin:

இதுவொரு இனப்பிரச்சனை ஐயா.....2009க்கு பிறகு....இப்ப 20017லை வந்து வந்து நிக்கிறம்......ஏதாவது நல்ல செய்தி?????? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இன்னமும் சுவாசித்துகொண்டு இருக்கிறோம் 
என்பதை இத்தால் அறியத்தருகின்றோம் 

Link to comment
Share on other sites

தெருப் பிச்சைக்காரர்கள் கூட கிடைப்பதையெல்லாம் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.

டக்ளஸ் தெருப் பிச்சைக்காரர்களைவிடக் கேவலமான  தனது பிச்சைக்காரப் புத்தி மற்றவர்களுக்கு இல்லை என்று கூறுகிறார்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.