Jump to content

பிரதமரை சந்திக்க முடியாத அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்


Recommended Posts

 
பிரதமரை சந்திக்க முடியாத
அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
 
 
 

கடந்த வியாழனன்று, பிரதமரை சந்திக்க தீவிரமாக முயன்றும் முடியாமல், ஆறுதலுக் காக வெள்ளியன்று உள்துறை அமைச்சரை சந்தித்த, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கடைசியாக வெள்ளியன்று ஒரு திருப்திக்காக, ஜனாதிபதி யையும் சந்தித்து தமிழகம் திரும்பியுள்ளனர்.

 

Tamil_News_large_169509520170122003439_318_219.jpg

வறட்சி நிவாரண நிதி கோரிக்கைக்காக ஏற்கனவே கேட்டிருந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் வரச் சொன்னதால், முதல்வர் பன்னீர்செல்வம் டில்லிக்கு வந்திருந்தார்.இந்த சந்திப்பை, தமிழகத்தில் பற்றி எரியும் ஜல்லிக்கட்டு பிரச்னைக்காகவும் முதல்வர் பயன்படுத்தப்போகிறார் என்பதை அறிந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் உத்தரவுப்படி, பிரதமரை சந்திக்க துணை சபாநாயகர் தம்பிதுரை, டில்லிக்கு கிளம்பி வந்தார்.

அ.தி.மு.க., - எம்.பி.,க்களை திரட்டி தயார் நிலையில் இருந்தும், பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்க மறுக்கவே, துணை சபா நாயகரும், எம்.பி.,க்களும் ஏமாற்றம் அடைந்த னர்.ஆனால், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் திட்டமிட்டபடி பிரதமரை சந்தித்ததோடு மட்டுமல்லாது, அரை மணி நேர சந்திப்பை மாற்றி, 2 மணி நேரம் பிரதமருடன் பேசிக் கொண்டிருந்தார்.

முக்கிய பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசி முடித்த முதல்வர், பின், தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து, நேருக்கு நேர் பிரதமரு டன் விவாதித்ததாக தெரிகிறது. முக்கியத்துவம்

வாய்ந்த இந்த சந்திப்புக்கு பின், முதல்வர், முழுக்க முழுக்க மிகுந்த நம்பிக்கையுடன் தென்பட்டார்.

சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு, அன்றிரவு டில்லியில் தங்கி, அவசர சட்டம் தொடர் பான அனைத்து ஏற்பாடுகளையும், வழக்கறிஞர்கள் உதவியுடன் முதல்வரே முன்னின்று செய்து முடித்து, அதை அதிகாரி கள் மூலம், உள்துறை அமைச்கத்திற்கு அனுப்பிய பின், சென்னைக்கு கிளம்பினார்.

'அவசர சட்டத்திற்கான அனைத்துஏற்பாடுகளையும், முதல்வரே செய்து முடித்து விட்டு சென்றுவிட்ட நிலையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் இனி செய்வ தற்கு என்ன இருக்கிறது' என்ற கேள்வி எழுந்தது. அதை முறியடிக்கும் விதமாக, துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமை யில், பார்லிமென்ட் கட்சி அலுவலகத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வெள்ளியன்று காலை திரண்டனர்.

பிரதமர், நரேந்திர மோடிக்கு அளிப்பதற்காக தயார் செய்யப்பட்டிருந்த அதே மனுவை, அப்படியே விலாசத்தை மட்டும் மாற்றி, உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கிற்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, எம்.பி.,க்களிடம் மளமளவென கையெழுத்துகள் வாங்கப்பட்டன.பிரதமர் அலுவலகத்திற்கு சென்றது போல, ஊர்வலமாக செல்லலாமா என்று எழுந்த யோசனையை, கடும் குளிர் காரணமாக மாற்றிக் கொண்டு, அருகிலேயே சவுத்பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு விரைந்தனர்.

சில நிமிட சந்திப்புக்கு பிறகு, வெளியில் வந்து, நிருபர்களிடம் தம்பிதுரை பேசினார். அப்போது, காங்கிரஸ், தி.மு.க., ஆகிய கட்சிகளை குற்றஞ் சாட்டிவிட்டு, '2014ல் இருந்து ஆட்சியில் உள்ள பா.ஜ.,வும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தோற்றுப்போய்விட்டது' என கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 'அ.தி.மு.க., ராணுவ கட்டுக்கோப்பான இயக்கம்' என, அடிக்கடி கூறுவார். அந்த கூற்று, நேற்று பொய்யானது. ஆனால், தம்பிதுரை பேட்டி யளித்தபோது, அதே சவுத்பிளாக் வளாகம் முழுவதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், 10க்கும் மேற்பட்ட தனித்தனி

 

குழுக்களாக மீடியாக் களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது.

'முதல்வரே அனைத்து விஷயங்களையும் செய்து முடித்துவிட்டு, சென்னைக்கே சென்று விட்ட பிறகு, உள்துறை அமைச்சகமும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு, ஜனாதிபதி மாளிகைக்கும் அனுப்பிவிட்ட பிறகு, உள்துறை அமைச்சரிடம் மனு அளிக்கிறீர்களே' என்ற கேள்விக்கு தான், அங்கிருந்தவர்களிடம் பதில் பெற முடியவில்லை.

சனிக்கிழமை காலை, மீண்டும் கட்சி அலுவலகத்தில் கூடிய, எம்.பி.,க்கள், ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்தனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனுவை அளித்து, சில வார்த் தைகள் தம்பிதுரை விளக்கினார்.பின், 'தங்களு டன் சேர்ந்து, அனைவரும் போட்டோ எடுக்க விரும்புகின்றனர்' என கூற, 'தாராளமாக' என ஜனாதிபதியும் கூறினார். பல நிமிடங்களுக்கு முன்பே சென்று, ஜனாதிபதி மாளிகையில் அமர்ந்திருந்தாலும், ஜனாதிபதி வந்தவுடன், 'மனு அளிப்பு, போட்டோ' என எல்லாமே, ஐந்து நிமிடங்களில் முடிந்தன.

பின், ஜனாதிபதி உள்ளே திரும்பிச் சென்றவு டன், அனைவருக்கும் அவர் அலுவலகம் சார் பில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. பாதி பேர் அங்கிருக்க, மீதி பேர், அங்கிருந்தே விமான நிலையத்திற்கு பறந்து, சென்னைக்கு திரும்பியும் விட்டனர். - நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1695095

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.