Jump to content

வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன் நாளை கவனயீர்ப்பு போராட்டம்


Recommended Posts

கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு வடமாகாணக் கல்விப்பணிப்பாளரால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோத “பணித்தடை” உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பாகக் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறும்.

அத்துடன் இந்தக் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியான இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இப்போராட்டத்தில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/132705?ref=home

Link to comment
Share on other sites

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் வடக்கு மாகாணசபையில் கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு

எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள 83 ஆவது வடமாகாணசபை அமர்வில் எதிர்க்கட்சித்தலைவரும், ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினருமான சி.தவராசாவினால் வடமாகாணக் கல்விச் செயலரை ஆசிரியர்கள் அவமதித்தமையைக் கண்டித்து வடக்கு மாகாணசபையில் பிரேரணை கொண்டு வரவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வடமாகாணக் கல்விச் செயலாளரை ஆசிரியர்கள் அவமதித்ததாகவும், கல்வியமைச்சின் செயலாளரின் கொலரைப் பிடித்துள்ளனர் எனவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சித் தலைவர் சுமத்தியுள்ளமை வடமாகாணக் கல்வியமைச்சு மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கிய தவறான பணித்தடையினை நியாயப்படுத்தும் செயற்பாடாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று(29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவது,

வடமாகாணக் கல்வியமைச்சில் இடம்பெறும் அநீதிகள், பாரபட்சங்கள், இடமாற்ற முறைகேடுகள், ஆசிரியர்களுக்குரித்தான சம்பள ஏற்றங்கள், நிலுவைகள் வழங்கப்படாமை தொடர்பாக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் வடமாகாணக் கல்வியமைச்சின் சீர்கேடுகள் தொடர்பாகவுமே எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணை கொண்டுவந்திருக்க வேண்டும்.

அத்துடன், கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாகப் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இரண்டு பக்க நியாயங்களையும் அறிந்து செயற்பட்டிருக்க வேண்டும்.

மேலும், வடமாகாணக் கல்வியமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளால், ஆசிரியர்களின் ஜனநாயக உரிமை நசுக்கப்பட்டமை தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/statements/01/133625?ref=home

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.