Jump to content

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினா போராட்டம் தொடரும்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்; 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு


Recommended Posts

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினா போராட்டம் தொடரும்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்; 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு

 

 
ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர் சங்கர் மற்றும் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன்
ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர் சங்கர் மற்றும் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன்
 
 

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினாவில் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று அப்போராட்டத்தில் பங் கேற்று வரும் இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், சென்னை மெரினாவில் நடத்தி வரும் தொடர் அறப்போராட்டம் 5 வது நாளை எட்டியுள்ளது. நேற்றும் பல்லாயிரக்கணக்கான மாணவர் கள், இளைஞர்கள், பொதுமக்கள் என மெரினாவில் திரண்டு போராட் டம் நடத்தினர்.

விஜய், கார்த்தி, நயன் பங்கேற்பு

நடிகர் விஜய் நேற்று அதிகாலை 2 மணிக்கு மெரினா கடற்கரைக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். யாரும் அடையாளம் காண முடியாதபடி முகத்தில் கர்சீப் கட்டியபடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு போராட்டக் களத்தில் இருந்து வீடு திரும் பினார். இதேபோல் நடிகர் கார்த்தி, நடிகை நயன்தாரா ஆகியோரும் மெரினாவுக்கு வந்து ஜல்லிக் கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கோயம்பேடு மலர், காய், கனி அங்காடி வியாபாரி கள் நலச் சங்கம் சார்பில், சந்தையின் 5-வது எண் நுழைவு வாயிலில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் எம்.தியாக ராஜன் தலைமை வகித்தார். அதில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப் பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லா வரம், பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பெண்கள் மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக போராட்டங்களை நடத்தினர். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவமனை சார்பில் மருத்துவ கல்லூரி மாணவர்கள், எஸ்,ஆர்.எம் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் தொடரும்

இந்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்தது. அதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து, இந்த சட்டமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார்.

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களும், மாணவர்களும் இதுகுறித்து நிருபர்களிடம் கூறும்போது, “ஜல் லிக்கட்டு பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண வேண்டும். மத்திய வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும்.

அலங்காநல்லூரில் ஞாயிற்றுக் கிழமை யாரும் காளைகளை விடக்கூடாது. அதில் மாடு பிடி வீரர்கள் யாரும் பங்கேற்க கூடாது. 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை இதுவரை முதல்வர் வந்து சந்திக்கவில்லை. அதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைக்கக்கூடாது” என்றனர்.

போலீஸார் குவிப்பு

கடந்த 5 நாட்களாக மெரினாவில் பாதுகாப்பு பணியில், கூட்டத்துக்கு ஏற்ப 100 முதல் 3 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். போராட்டக் குழுவினர் போராட்டத்தை கைவிட மறுத்துள்ள நிலையில் நேற்று மாலை அங்கு 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜல்லிக்கட்டு-பிரச்சினைக்கு-நிரந்தர-தீர்வு-காணும்வரை-மெரினா-போராட்டம்-தொடரும்-இளைஞர்கள்-மாணவர்கள்-திட்டவட்டம்-5-ஆயிரம்-போலீஸார்-குவிப்பு/article9495885.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.