Jump to content

கூட்டம்! முதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...: பன்னீர் சொல்லுக்கு கட்டுப்படுமா ஆளுங்கட்சி?


Recommended Posts

கூட்டம்!
முதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...:
பன்னீர் சொல்லுக்கு கட்டுப்படுமா ஆளுங்கட்சி?
 
 
 

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், சட்டசபை கூட்டம், நாளை
துவங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கூடும் இந்த கூட்டத்திற்கு, அ.தி.மு.க.,
சசிகலாவின் அதிருப்தியாளர் என கருதப்படும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கப் போவதால், ஆளுங்கட்சி இவருக்கு கட்டுப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tamil_News_large_169484220170121231222_318_219.jpg

ஜெ., மறைவுக்கு பின், முதன்முறையாக, நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில், சட்டசபை குழுக்கள் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், குழுக் கள் அமைக்கப்படவில்லை. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை குழுக்கள் அமைக்க

வலியுறுத்தி, சபாநாயகர் அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.
 

மாணவர்கள் போராட்டம்


அதே போல், காங்., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்களும் மனு
கொடுத்தனர்; இதுவரை நடவடிக்கை இல்லை. அதன்பின், தமிழகத்தில் நிலவும் வறட்சி தொடர் பாக விவாதிக்க, சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத் தின; ஆனால், கூட்டப்படவில்லை. தற்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், நாளை சட்டசபையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றுகிறார்.அதை தொடர்ந்து, கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறும். விவாதத்தின் போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை எடுத்துரைக்க, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மேலும், சட்டசபை குழுக்கள் அமைக்கப் படாதது; வளர்ச்சி திட்டப் பணிகளில் தேக்கம்

 

ஏற்பட்டுள்ளது ஆகியவை குறித்து, எதிர்க்கட்சியினர் பேச உள்ளனர்.

எதிர்பார்ப்பு


தற்போது,ஆளுங்கட்சியில் ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. 'பன்னீர் பதவி விலக வேண்டும்; சசிகலா முதல்வராக வேண்டும்' என, வலியுறுத்தும் அமைச்சர்கள், முதல்வர் பேச்சுக்கு கட்டுப்படுவரா, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு, முறையாக பதிலளிப்பரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, நடை பெற உள்ளசட்டசபை கூட்டத்தொடரில், அனல் பறக்கும் விவாதமும், ஆளுங்கட்சியில் பரபரப்பும் இருக்கலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1694842

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.