Jump to content

முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி


Recommended Posts

முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்!
அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி
 
 
 

சசிகலா குடும்பத்தினர் உத்தரவு காரணமாக, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கவிருந்த, அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_169484320170121231311_318_219.jpg

ஜெ., மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை முதல்வராக பணியாற்றியவர் என்பதால், அவர் முதல்வரானதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஒட்டும் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.

எதிர்ப்பு கிளம்பியது


இச்சூழ்நிலையில், முதல்வர் பதவியையும், சசிகலா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கான பணிகளை, அவரது

குடும்பத்தினர் துவக்கினர்; இதற்கு, எதிர்ப்பு கிளம்பியது.

எனவே, முதல்வராகும் ஆசையை, தற்காலிக மாக சசிகலா ஒத்திவைத்துள்ளார். எனினும், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, முதல்வர் பதவியில், பன்னீர்செல்வம் இருப்பது பிடிக்க வில்லை. எனவே, அவருக்கு பல விதத்தில் குடைச் சல்கொடுத்து வருகின்றனர்.அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா தேர்வானதும், மாவட்ட நிர்வாகி களை, கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, அவரது வருகைக்காக, அமைச்சர்களுடன் பன்னீர் செல்வமும் காத்திருந்தார்.

கட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில், சசிகலா நிர்வாகிகளுடன் பேசிய போது, முதல்வர் அழைக் கப்படவில்லை. அனைவரும் கீழே கால் வலிக்க காத்திருந்தனர். முதல்வரை பார்த்த போது, மரியாதைக்கு வணக்கம் கூட செலுத்தவில்லை. இது, பன்னீர்செல்வத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜன., 12ல், முதல்வர் பன்னீர் செல்வம், 25 துறைகளின் சார்பில், வட மாவட்டங் களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் புதிய தொழிற்சாலைகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைக்க முடிவுசெய்தார். அந்த நிகழ்ச்சியை, சென்னை, தலைமை செயலகத்தில் நடத்த வேண்டாம் என, சசிகலா தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
 

மக்கள் ஆதரவு


அதைத் தொடர்ந்து, எழும்பூர் குழந்தைகள் நல

 

மருத்துவமனையில் நடத்த, ஏற்பாடு செய்யப் பட்டது. ஆனால், நள்ளிரவு திடீரென விழா ரத்துசெய்யப்பட்டது. இதற்கு, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சிலரே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது.

பன்னீர்செல்வத்திற்கு, நாளுக்கு நாள் மக்களி டம் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலை யில், அரசு கட்டடங்களை திறந்து வைத்து, அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றே, அந்த விழாவை ரத்து செய்ய வைத்துள்ளனர். புதிய கட்டடங்களை, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திறந்து வைக்கட்டும் என்றும் கூறி உள்ளனர்.

இதன் காரணமாக, அரசு விழா ரத்து செய்யப் பட்டுள்ள போதிலும், அந்த கட்டடங்கள் எப்போது திறக்கப்படும் என, அறிவிக்கப்பட வில்லை. சசிகலா குடும்பத்தினர், முதல்வரை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பது, அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிக ளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1694843

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.