Jump to content

நிதிநகரத்தை உருவாக்க கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கும் பணிகள் இவ்வருடத்தில் நிறைவு


Recommended Posts

நிதிநகரத்தை உருவாக்க கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கும் பணிகள் இவ்வருடத்தில் நிறைவு
 
 
நிதிநகரத்தை உருவாக்க கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கும் பணிகள் இவ்வருடத்தில் நிறைவு
கொழும்பு நிதி நகரத்தை உருவாக்குவதற்காக  மணல் அகழும் கப்பல்கள் மூலம் கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பா டுகள் இடம்பெற்று வருகின்றன.
 
இதற்காக கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கொழும்பு துறைமுக நகர திட்ட த்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது சீன அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியில், 28 வீதம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலப்பரப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்பட்டு விடும் எனவும் கூறியுள்ளார்.
 
இதன் பின்னர், அடுத்த ஆண்டு கொழும்பு நிதி நகர கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் சீன நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/22949

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.