Jump to content

யாழில் திரைமறைவில் காணி சுவீகரிப்பு..! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்


Recommended Posts

யாழ். நகரப்பகுதியில் பொலிஸாரின் தேவைக்காக திரைமறைவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நில அளவை திணைக்கள அதிகாரி கூறியதை அடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் யாழில் எந்த காணிகளும் சுவீகரிக்கப்படக் கூடாது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்மொழிவுகள் செய்யப்பட்டன.

இதன் போது யாழ். போதனா வைத்தியசாலைக்கான அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது. வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள 4 பரப்புக் காணி வைத்தியசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கை தொடர்பில் நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரி கருத்து தெரிவிக்கையில், வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள 4 பரப்பு காணியும் பொலிஸார் தமது தேவைக்காக சுவீகரித்து தருமாறு கோரப்பட்டுள்ளது.

இது தவிர யாழ். பிரதான வீதி நீதிமன்ற கட்டத் தொகுதிக்கு முன்பாக உள்ள 3 பரப்பு காணியும் பொலிஸ் தேவைக்காக சுவீகரித்து தருமாறு கோரப்பட்டுள்ளது.

அக்காணியில் யாழ். விஷேட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயம் அமைப்பதற்காகவே இக்காணி சுவீகரிப்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இருப்பினும் கூட்டத்தில் இருந்த யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணியை தாம் கோரவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஜனாதிபதி செயலகத்தினால் உடனடியாக குறித்த காணியை சுவீகரித்து வழங்குமாறு விடுவிக்கப்பட்ட கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாக அத்தாட்சிகளுடன் கூட்டத்தில் நிரூபிக்கப்பட்டது.

இருப்பினும் அச்சுவீகரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டு காணி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்க அதிபரோ அல்லது பிரதேச செயலரோ தன்னிச்சையாக காணிகளை கைமாற்ற முடியாது.

காணி கைமாற்றுதல் அல்லது சுவீகரித்தல் நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் நிச்சயம் பெறப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

http://www.tamilwin.com/community/01/132537?ref=morenews

Link to comment
Share on other sites

காங்கேசன்துறைப் பகுதிகளிலும் விடுவிக்கப்பட்ட வீடுகளில் தொடர்ந்தும் இருக்கும் போலீசார் இன்னும் வெளிக்கிடவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.