Jump to content

மாகாண சபைகளை பிராந்திய அரசாங்கங்கள் என அழைக்கவேண்டும்-சுமந்திரன்


Recommended Posts

மாகாண சபைகளை பிராந்திய அரசாங்கங்கள் என அழைக்கவேண்டும்-சுமந்திரன்
 
 
மாகாண சபைகளை பிராந்திய அரசாங்கங்கள் என  அழைக்கவேண்டும்-சுமந்திரன்
மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது அதைவிட பிராந்திய அரசா ங்கம் என்று சொல்லப்படவேண்டிய காலம் விரைவில் வரவேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
 
இன்றையதினம் நெடுந்தாரகை படகுச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
 
இந்த நெடுந்தாரகை படகினை தந்து உதவிய அனைவருக்கும் வடபகுதி மக்கள் சார்பில்  எனது  நன்றிகளை தெரிவித்துக்கொள்கி றேன்.நெடுந்தீவிற்கு போய் வருவதென்றால் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்லவேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்றால் கடற்படையின் அதிவேக படகிலேயே செல்லவேண்டும். அது இன்னும் பயங்கரமானதாக இருக்கும். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள முடியுமானதாக உள்ளது. 
 
மாகாணசபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசா ங்கம் என்று சொல்லப்படவேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும். அப்படியாக பிராந்திய அரசாங்கங்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இன்னொரு வித்தியாசமான நிரல் ஒண்டு உருவாக்கப்பட்டு அவர்களும் தங்களின் அதிகாரங்களை கவனிக்கத்தக்க மாதிரியான புதிய அரசியல் யாப்பு வர இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
 
போதிய அரசியல் யாப்பை உருவாக்குவதில் பல தடங்கல்கள் உருவாகிறது. அதனை முறியடிப்பதற்கு   சிறிலங்கா சுதந்திர கட்சி பல வழிகளை கையாண்டு வருகிறது. இங்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வருகை தந்து இருக்கிறார். வடக்கு கிழக்கு மக்களினுடைய உள்ள கிடக்கைகளை அறிந்து  தனது கட்சி உயர் பீடத்திடம் தெரிவிப்பார் என நம்புகிறேன். 
 
எங்களுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் பகிரப்பட்டு இந்த நாட்டிலே இருக்கின்ற 70வருட கால இனப்பிரச்சனையை தீர்ப்ப தற்கு எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/22920

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் : அண்ணே ! பூவை  . பூன்னு சொல்லலாம்  .. புய்ப்பமுனு சொல்லலாம் .. நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே ..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மாகாண அரசிற்கு நீங்களும் உங்கள் அல்லக்கைகளும் அதற்குரிய மரியாதையை முதலில் கொடுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.