Jump to content

தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர்


Recommended Posts

 
தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர் இன்று ஆரம்பம்
 

தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் செஞ்­சூ­ரியன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்ள போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

21907Untitled-5.jpg

இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸ் - தென் ஆபி­ரிக்­க­ அணித் தலைவர் பர்ஹான் புஹார்தீன்


 

இரண்டு அணி­களும் 2012 முதல் கடந்த வருடம் வரை விளை­யா­டி­யுள்ள 6 சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­களில் 4 – 2 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபி­ரிக்கா முன்­னி­லையில் இருக்­கின்­றது.

 

இதே­வேளை தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெள்­ளை­ய­டிப்புச் செய்­யப்­பட்ட இலங்கை, இரு­பது 20 தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் இறங்­க­வுள்­ளது.

 

தென் ஆபி­ரிக்க வேகப்­பந்­து­ வீச்­சா­ளர்­களை எதிர்­கொள்­வ­தற்கு இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் முதலில் மனதை திடப்­ப­டுத்­திக்­கொள்­வது அவ­சியம் என இலங்கை கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால  தெரி­வித்தார்.

 

தென் ஆபி­ரிக்­கா­வு­டனான டெஸ்ட் தொடர் தோல்­வியை அடுத்து அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸுடன் ஸ்கைப்  கலந்­து­ரை­யாடல் மூலம் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­ட­தா­கவும் அடுத்­து­வரும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் தொடர்­களில் இலங்கை அணியை பிர­கா­சிக்கச் செய்ய கடும் முயற்சி எடுக்­கப்­படும் என ஏஞ்­சலோ மெத்யூஸ் உறுதி வழங்­கி­ய­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

 

இன்­றைய போட்­டியில் தனுஷ்க குண­தி­லக்­க­வுடன் நிரோஷன் டிக்­வெல்ல ஆரம்ப வீர­ராக விளை­யா­டுவார் என எதிர்­பா­ர்க்­கப்­ப­டு­கின்­றது. இவர்­களைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ், தினேஷ் சந்­திமால், ஏஞ்­சலோ மெத்யூஸ், தனஞ்­செய டி சில்வா, சச்தித் பத்­தி­ரன, சீக்­குகே பிர­சன்ன அல்­லது லக்ஷான் சந்­தகான், நுவன் குல­சே­கர, சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் இடம்­பெ­றுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

பதி­னோ­றா­வது வீர­ராக நுவன் பிரதீப்,  தி­க்ஷிலா டி சில்வா, இசுரு உதான ஆகிய மூவரில் ஒருவர் இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­புள்­ளது.

 

தென் ஆபி­ரிக்­காவைப் பொறுத்­த­ மட்டில் 6 புதிய வீரர்­க­ளுடன் முத­லா­வது போட்­டியை எதிர்­கொள்­ள­வுள்­ளது. எனவே இப் போட்டி தென் ஆபி­ரிக்­கா­வுக்கு சவால் மிக்­க­தாக அமையும் என கருதப்படுகின்றது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21907#sthash.UXQjYIkV.dpuf

 

Link to comment
Share on other sites

மில்லர் அதிரடி ; இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா (வீடியோ இணைப்பு)

 

 

இலங்கை அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே மழைக்குறுக்கிட்டதன் காரணத்தால் அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

C2qktneW8AIQuE3.jpg

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் டேவிட் மில்லர் 18 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

258091.jpg

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவில்  6 விக்கட்டுகளை இழந்து 107  ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் டிக்வெல்ல 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

258090.jpg

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென்னாபிரிக்க அணி முன்னிலை வகிக்கின்றது.

C2qktiSXUAIjoOW.jpg

http://www.virakesari.lk/article/15636

Link to comment
Share on other sites

இரண்டாவது இருபதுக்கு20 ;தொடரை தக்கவைத்துக் கொள்ளுமா? இலங்கை

 

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான நடைபெறும் மூன்று இருபதுக்கு20  போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது இருபதுக்கு20 போட்டி இன்று ஜோகன்ஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது.

முதலாவது இருபதுக்கு20 போட்டியின் போது மழை குறுக்கிட்டமையால் பந்து ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு நடந்த போட்டியில்  தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் தொடரை தக்கவைத்துக் கொள்ள இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இன்று களம் இறங்குகிறது.

http://www.virakesari.lk/article/15676

Link to comment
Share on other sites

South Africa 113 (19.3/20 ov)
Sri Lanka 119/7 (19.4/20 ov)
Sri Lanka won by 3 wickets (with 2 balls remaining)
ஏஞ்சலோ மெத்யூஸ் அதிரடி: தென் ஆபிரிக்காவுடனான இருபது20 போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை அணி வெற்றி
2017-01-22 21:28:35

தென் ஆபிரிக்க அணியுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களால் வென்றது.

 

21933lanka-600.jpg


தென் ஆபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில்  இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 19.3 ஓவர்களில்  113 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் ஏஞ்சலே மெத்யூஸ் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21933#sthash.gCAjbKoB.dpuf
Link to comment
Share on other sites

இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

258228.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பாடி 19.3 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அறிமுகவீரரான சந்தகன் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் உதான 2.3 ஓவர்களில் 13 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கட்டுகளை பெற்றுக்கொண்டனர். 

258230.jpg

118 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரம்ப முதலே ஆட்டம் காணவைத்தனர்.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மெத்­தியூஸ் 50 பந்துகளில் 54 ஓட்டங்கள் பெற்று இலங்கை அணியினை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

258231.jpg

போட்டியின் ஆட்டநாயனாக மெத்­தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.மூன்று இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என இலங்கை அணி சமநிலை செய்துள்ளது.

http://www.virakesari.lk/article/15684

Link to comment
Share on other sites

நாடு திரும்புகிறார் அஞ்சலோ மெத்தியூஸ்

 

 

தென்னாபிரிக்க அணிக்கிடையில் இடம்பெற்றுவரும் இருபதுக்கு - 20 தொடரின் பாதியில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

mathews-m1.jpg

மெத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் தனது குடும்பத்துடன் இருப்பதற்கான தேவையுள்ளதாக கோரிக்கை விடுத்து அனுப்பிவைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவரது கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது. 

இதையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மிகமுக்கியமானதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டியில் அணித் தலைவராக டினேஷ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்ககெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் இன்று நாடு திரும்பவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அவர்கள் இருவரும் காயத்தில் இருந்து குணமாக ஓய்வு தேவையுள்ளதால் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15702

Link to comment
Share on other sites

தென் ஆபிரிக்காவுடனான இருபது20 இலங்கை வென்றது
2017-01-26 01:06:47

தென் ஆபிரிக்காவுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இதன்  மூலம் இத்தொடரின் வெற்றியையும் 2:1 விகிதத்தில் இலங்கை அணி தனதாக்கியது.

 

21998lanka-600.jpg


கேப்டவுன் நகரில் புதன் இரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  19.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.


நிரோஷன் டிக்வெல்ல 51 பந்துகளில் 68 ஓட்டங்களையும் சீக்குகே பிரசன்ன 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் குவித்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21998#sthash.hfOsEWXU.dpuf
Link to comment
Share on other sites

தென்னாபிரிக்க மண்ணில் சாதனைகள் படைத்த இலங்கை

 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 170 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்றுள்ளது.

sadd.jpg

இந்நிலையில் இலங்கை அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்ற அதிகூடிய ஓட்டங்களாக 170 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு நியுஸிலாந்து அணிக்கெதிராக 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமையே அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது.

இதேவேளை தென்னாபிரிக்க மண்ணில் முதற்தடவையாக  தொடரை கைப்பற்றியும் இலங்கை அணி சாதனைப்படைத்துள்ளது.

http://www.virakesari.lk/article/15878

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.