Jump to content

“வவுனியா-பிரம்டன்” ஒப்பந்த நடவடிக்கை இடம்பெறவில்லை. நற்பெயரை இழக்கும் ஆபத்தில் பிரம்டன் மேயர்!


Recommended Posts

வவுனியாவை பிரம்டன் நகருடன் சகோதர நகரமாக்குவது தொடர்பான தகவல்களில் உள்ள தவறுகளால் பிரம்டன் நகர முதல்வர் லிண்டா ஜெப்ரி அவர்கள் மிகவும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளதாக பத்திரிகைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரம்டன் நகர மேயரைச் சந்திக்கச் சென்ற அன்று முதல்வர் நகரசபையில் பிரசன்னம் தரமால், விடுமுறை எடுத்துச் சென்றத சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, அன்றைய தினம் கவுன்சில் கூட்டமும் இடம்பெறவில்லையென்ற போதும் “அடையாளத்திற்கான ஒரு சம்பிரதாய கூட்டமாக” சிலரைச் சந்தித்து விட்டு முதலமைச்சர் சென்ற நிகழ்வானது இந்த விவகாரத்தை ஏற்கனவே அடையாளம் காட்டியிருந்தது.

பிரம்டன் மேயர் தனது வவுனியாவை இணை நகரமாக்குவது தொடர்பான விவகாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார் என எழுதியுள்ள பிரம்டன் கார்டியன் பத்திரிகை அதற்கான காரணமாக டிசம்பர் 20ம் திகதி வெளியிடப்பட்ட முதல்வரின் அறிக்கையைச் சுட்டிக் காட்டியுள்ளது.

பிரம்டன் நகரம் அவ்வாறானதொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதனால் அதன் அதிகாரிகள் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஆராய்ந்து நகரசபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை நகரசபை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறான நிலைகள் ஏதும் ஏற்படததாலேயே பிரம்டன் மேயர் தன்னால் அழைக்கப்பட்ட விருந்தினரான விக்கினேஸ்வரன் வரும் போது தான் நகரசபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதேவேளை மார்க்கம் நகராட்சியுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒரு “நட்பு நகர ஒப்பந்தமேயாகும்”[Friendship Agreement]. இதனைத் தமிழ் ஊடகங்கள் “இரட்டை நகர ஒப்பந்தம்”, “சகோதர நகர ஒப்பந்தம்” [Sister city Agreement / Twin City Agreement]. எனத் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும்,

இது ஒரு வெறும் நட்பு நகர ஒப்பந்தமே என்பதும், இதனால் முல்லைத்தீவிற்கு பொருளாதார உதவிகளைச் செய்யவோ, அல்லது மனிதவள உதவிகளைச் செய்யவோ மார்க்கம் நகரம் முன்வராது [NO financial consideration / NO Human Resources Consideration] என்பதை கீழுள்ள அதன் ஒப்பந்த நகலில் காணலாம்.

கனடாவுக்கு வருகை தரும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இங்குள்ள இரண்டு நகரசபைகளோடு இரட்டை நகர் உடன்பாடு எழுதுவதற்கு வருவதாக பரப்புரை செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரமே அவர் இங்கு தங்கியிருக்கும் வரையும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதில் உண்மையில்லை என்ற விவகாரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தை வெளிக்கொணர்ந்திருக்கின்ற பிரம்ரன் நகரத்துக்கும் வவுனியா நகரத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ற விவகாரத்தில், விக்னேஸ்வரனைச் சந்திப்பைத் தவிர்ப்பதற்காக மேயர் இந்த நாட்டிலேயே இல்லை. அவர் சுற்றுலா போய்விட்டார்.

முதல்வர் தான் தமிழர்களிற்காக வெளியிட்ட செய்திக் குறிப்பை அவமானத்தால் தனது இணையத்தில் இருந்து நீக்கியிருந்தாலும், பிரம்ரனின் நல்லாட்சிக்கும், சிறந்த நிர்வாகத்திற்குமான அமைப்பு Citizens For Better Brampton அவரது நீக்கப்பட்ட அறிக்கையை படமாக்கி அவரது செயலிற்கு ஜனவரி முதல் வாரத்திலேயே ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

பிரம்ரன் நகர உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்த காரணத்தால் அந்த செய்தி அறிக்கை பிரம்ரன் நகரின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. இது மேயருக்கும் பிரம்ரன் நகரத்துக்கும் பெரிய சங்கடத்தை [embarrassment] உண்டாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈழத்தமிழர்களிற்கும், கனடியத் தமிழர்களிற்கும் கூட மயங்கந் தரும் செய்திகளை இந்த விவகாரத்தில் வெளியிட்டு வந்த முதலமைச்சர் தரப்பு பத்திரிகைகளிற்கு தந்த அறிக்கைகளில் சாதித்ததாகக் உண்மைக்குப் புறம்பாகக் குறிப்பிட்ட விடயங்களிற்கு மேலாக தமிழர்கள் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதே கீழேயுள்ள இணைப்புக்களும், படங்களும் தெரிவித்து நிற்கும் செய்தியாகும்.

பிரம்டன் நகர முதல்வரிடம் இந்த ஒப்பந்தந் தொடர்பாக இரண்டு கேள்விகளை மின்னஞ்சலினூடாக கனடாவில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர் கேட்டதையறிந்த தமிழர்கள் ஊடகவியலாளருக்கு இடைஞ்சல் கொடுத்த போது, முதல்வர் தானாகவே பொலிசாரைத் தொடர்பு கொண்டு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சலையறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியவர் என்பது அவர் ஒரு நல்ல நடுநிலையாளர் என்பதைக் காட்டி நின்றது.

Screen-Shot-2016-12-30-at-3_33_59-PM

Markham-page-001

 

 

 

http://www.canadamirror.com/canada/78825.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sister city agreement ஐயும் friendship agreement இரண்டையும் போட்டு குழப்பியடித்திருக்கிறார்கள். இணையத்தள பக்கத்தையும் வேறு கடிதத்தின் இரண்டாவது பக்கத்தையும் சேர்த்து இணைத்து ஒரே ஆவணம்போல காட்டி தாங்கள் சொல்லும் கருத்துக்கு வலச்சேர்க்கவும் முயன்றிருக்கிறார்கள். இணைப்பக்கத்தில் எங்குமே friendship agreement என்ற சொல் பாவிக்கப்படவில்லை அதேபோல் இரண்டாம் பக்கத்தில் sister city agreement என்ற சமாசாரம் குறிப்படப்படவில்லை.

விக்கிக்கு சேறுபூசுவதற்கும் பொறிவைப்பதற்கும் நடக்கும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஈழத்தமிழனுக்கு organisation பற்றிய அறிவு எப்பவுமே இப்படித்தான். Government ஐ அரசு என்பார்கள் Committee ஐ நிர்வாகம் என்பார்கள் இப்படி பல உதாரணங்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, vanangaamudi said:

sister city agreement ஐயும் friendship agreement இரண்டையும் போட்டு குழப்பியடித்திருக்கிறார்கள். இணையத்தள பக்கத்தையும் வேறு கடிதத்தின் இரண்டாவது பக்கத்தையும் சேர்த்து இணைத்து ஒரே ஆவணம்போல காட்டி தாங்கள் சொல்லும் கருத்துக்கு வலச்சேர்க்கவும் முயன்றிருக்கிறார்கள். இணைப்பக்கத்தில் எங்குமே friendship agreement என்ற சொல் பாவிக்கப்படவில்லை அதேபோல் இரண்டாம் பக்கத்தில் sister city agreement என்ற சமாசாரம் குறிப்படப்படவில்லை.

விக்கிக்கு சேறுபூசுவதற்கும் பொறிவைப்பதற்கும் நடக்கும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஈழத்தமிழனுக்கு organisation பற்றிய அறிவு எப்பவுமே இப்படித்தான். Government ஐ அரசு என்பார்கள் Committee ஐ நிர்வாகம் என்பார்கள் இப்படி பல உதாரணங்கள்.

இதில் என்ன தான் உண்மை!

உங்களுக்கு தெரிந்திருந்தால் நாங்களும் அறிந்துகொள்ளலாம்.

Link to comment
Share on other sites

கைச்சாத்திட்ட உடன்படிக்கைகள் குறித்து வடக்கு முதல்வர் விளக்கம்

முல்லைத்தீவு- மார்க்கம் மற்றும் பிளம்ரன்- வவுனியா உடன்படிக்கைகள் ஊடாக வடமாகாண மக்கள் அதிகளவான நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் வடமா காண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அந்த உடன்படிக்கை காத்திரமானது அல்ல என பலர் விமர்சிப்பதற்கு காரணம் அவை தற்போது தொடக்க நிலையில் இருப்பதேயாகும் எனவும் கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அண்மையில் வெளிநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற் கெண்டு முல்லைத்தீவு- மார்க்கம், மற்றும் வவுனியா- பிளம்ரன் ஆகிய நகரங்களுக்கிடையிலான இரு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தார்.

மேற்படி உடன்படிக்கைகள் தொடர்பாகவும், அதனால் வடக்கு மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

அண்மையில் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு மேற்படி இரு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருக்கின்றேன்.

இந்த உடன்படிக்கைகளை சகோதரி நகர் உடன்பாடு, நட்புறவு உடன்பாடு என வகைப்படுத்துவார்கள்.

இதில் முதற்கட்டமாக நட்புறவு உடன்பாட்டையே செய்வார்கள். அவ்வாறு நட்புறவு உடன்பாடு செய்யப்பட்டால் அது நடைமுறை ப்படுத்தப்பட்டே ஆகவேண்டும். அதன் பின்னர் சகோதரி நகர் உடன்பாடு கைச்சாத்திடப்படும்.

இந்நிலையில் நாங்கள் தற்போது பூர்வாங்க ஆய்வுகளை நடத்தி நட்புறவு உடன்பாட்டை செய்திருக்கின்றோம்.

அதன் பின்னர் அடுத்த கட்டம் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கூடிய வலுவுள்ளவற்றை செய்யாமல் இதை செய் கிறீர்களே? என சிலர் கேட்கிறார்கள். இந்த உடன்படிக்கை ஒரு பூர்வாங்க நடவடிக்கையாகவே செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கையில் ஒன்றுமே இல்லாமல் வெளிநா டு சென்ற ஒருவர் தற்போது வெளிநாட்டில் மிக நல்ல நிலையில் வாழ்கிறார். அவர் இங்கே பல திட்டங்க ளை செய்ய விரும்புகிறார்.

அதனடிப்படையில் தற்போது அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் செய்யப் படுகின்றது. அவர் நிச்சயமாக செய்வார். இப்படி பலர் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள்.

எனவே இந்த உடன்படிக்கைகள் ஊடாக வடமாகாண மக்களுக்கு பலன நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள் ளது. குறிப்பாக பாரிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கா ன செயற்றிட்டங்களை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு பல திட்டங்களை செய்யலாம். அதற்கான பூர்வாங்க ஆய்வுகளை செய்து வருகின்றோம்.

இந்நிலையில் இந்த உடன்படிக்கைகள் காத்திரமானது அல்ல என விமர்சிக்கப்படுவதற்கு காரணம் இவை தொடக்க நிலையில் இருப்பதேயாகும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/133278?ref=morenews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.