Jump to content

தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? - விவாத களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த ஜல்லிக்கட்டில் விருப்பம் இல்லை, இங்கு மிருகங்கள் துன்புறுத்தப்படுகின்றன. இதை ஒழிப்பதால் தமிழ் கலாச்சாரம் அழிந்து விடும் எனக்கூறுவது நகைப்புக்கிடமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2017 at 9:28 PM, கலைஞன் said:

கூட்டிக்கழித்துப்பார்த்தால் சந்தில் சிந்து பாடுபவர்கள்... போராட்டங்கள் மூலம் தமது சுயலாபங்களை சம்பாதிப்பவர்கள், அப்பாவி மக்களின் உணர்வுகளை ஏணியாக பயன்படுத்தி தாம் வானத்தின் உச்சியை தொட்டுவிடப்பார்ப்பவர்கள் வாழும் உலகம் இது.

பல்வேறு விடயங்களில் உலகில் தமிழ்நாடு மிகவும் சக்தி பொருந்திய பகுதி. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது நிச்சயம் வரவேற்கத்தக்கது. அதேசமயம், யதார்த்தம் புரியவேண்டும், தமது எல்லைகள் எவை என்பது தெரியவேண்டும். ஆழமறியாமல் காலை விடக்கூடாது. நாங்கள் பட்ட அல்லல்களை தமிழ்நாட்டு மக்களும் அடையக்கூடாது. இந்தவகையில் நிதானம் அவசியம். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கபடாதவண்ணம் கவனம் செலுத்தவேண்டும்.

 


அருமையான கருத்து கலைஞன்.

இன்று பார்த்த சில காணொலிகள் மனதை பாதித்து விட்டது.
பெண்களை எந்த வித இரக்கமும் இன்றி மாடுகள் போல் அடிக்கும் காட்சி. தமிழ் நாடு போலிஸ் மிகவும் கேவலமானது.

மேலும் தமிழன் வீர்ன், தமிழச்சி வீராங்கனை, அடங்காத்தமிழன், தமிழர்கள் அடக்கு முறைக்குள்ளானவர்கள், தமிழர் எழுச்சி, தமிழ் நாடு தனியாக பிரிய வேண்டும் போன்ற விசிலடிச்சான் குஞ்சுத்தனமான கோஷங்களை தவிர்க்கவேண்டும்.
இத்தகையா கோஷங்களினால் எதுவும் நடக்கப்போவதில்லை. 
போரழிவு எமக்குத்தான். கடந்த கால அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

PETA என்பது ஓர் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

https://www.consumerfreedom.com/2015/05/fbi-anti-terror-unit-investigated-peta/

http://www.greenisthenewred.com/blog/peta-terrorists-usda-form/2374/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பரிபூரண ஆதரவு .இது பல விடயங்களில்pலும் புறக்கணிக்கப்பட்ட தமிழக மக்களின் கேhபத்தின் வெளிப்பாடே இந்த ஏறுதழுவுதலுக்கு ஆதரவான போராட்டம். இந்தப் போராட்டம் பல விடயங்களுக்கு திறவு கோலாக அமைந்துள்ளது.அது மட்டுமல்ல பல அரசியல்வாதிகளின் வயிற்றிலும் இநடிகர்ளின் வயிற்றிலும் புளியைக் கரைத்து விட்டது.இனி தலைவனுக்காககவும்இநடிகனுக்காககவும்  தங்கள் சுய கருத்துக்களை மறுதலித்த தலைமுறை ஒழிந்து புதிய தலைமுறை தலையெடுத்து விட்டது. இந்த எழுச்சி தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சல்லிக் கட்டு-3

கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை
ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து.
கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை
வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள்
சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார்.
நல்ல சகுனமிது நாம்மகிழ, எம்மினத்தைப்
பொல்லார் அழிக்கவந்தால் பொங்கியெழ மக்களுண்டு
எல்லாரும் வந்து இனிமேல் குரல் கொடுப்பார்.

முற்றுகைகள் செய்து முடக்கித் தமிழ் நாட்டை
வெற்றிக் குரலெழுப்பி வீச்சாய்க் கவிசமைத்து
ஆகாகா எங்கள் அருந்தமிழர் வென்றிடுவார்.
வாகாகக் காளைதனை வதையாது பாய்ந்து பற்றும்
எம் தமிழர் பண்பாட்டை எம்மிளைஞர் மீட்டதுபோல்.
தாகமாம் தமிழரது தாயகத்தைக் காண்பதற்கு
ஆட்சியதிகாரம் அனைத்தையுமே மீட்டிடுவார்
சூட்சிப்பகை விரட்டிச் சுதந்திரத்தைக் கண்டிடுவார்

என்று மனம் மகிழ்ந்தோம் இனியெமக்கு என்ன குறை
நன்றே நடக்குமினி நம்மினத்திற் கானாலும்
கொன்று தமிழினத்தைக் குழிதோண்டிப் புதைக்கையிலே!
அன்றெம் இனத்துக்காய் அனைவரும் சேர்ந்திருந்தால்
இன்றெமக்கு இந்த இழிவு நிலை வந்திடுமா.
சென்றதினி மீளாது சிந்தை செய்து அத்துயரை
என்றும் கவல்வதனால் என்ன பலன் கண்டிடலாம்
ஒன்று மட்டும் உண்மை அதை உலகுக் குரைத்திடுவேன்

விழலுக் கிறைத்தது போல் வீரத்தை வீண்டித்து
பழம் படுபனையின் கிழங்கு பிளப்பதற்கு
ஆப்பு மொங்கான் கோடரியென்றத்தனையும் பாவித்தோர்
சட்டமறுப்பாலே தமிழ்நாடனைத்திலுமே
சல்லிக்கட்டை நிகழ்த்திச் சரித்திரத்தை மீட்டிருந்தால்
எம் தமிழர் ஓர்மத்தை இவ்வுலகு கண்டிருக்கும்
இந்தியத்துக் கோர் பாடம் இதனால் கிடைத்திருக்கும்.
விந்தியத்தின் தெற்கில் வர விசமிகளும் அஞ்சிடுவார்.

ஆனாலுமந்தோ! அகிம்சைவழிப் போரால்

சட்டமொன்றைக் கேட்டு தடியடிகள் பட்டுலைந்தோர்
விட்ட தவறென்ன வீணாயேன் நோதலுற்றார்.
என்ன பரிதாபம் எதற்காயிவ் வேதனைகள்?
மாட்டைப் பிடிப்பதற்கும் மண்ணில் தமிழரினம்
நாட்டைப் பிடிப்பதுபோல் நடந்து கொண்ட மாயமென்ன?
கோட்டை விழுந்துகொடுங் கோல்சரிந்து நாம் பட்ட
பாட்டுக்குக் கொஞ்சம் பலன் கிடைத்ததவ்வளவே!
ஆட்டம் முடிந்ததடா! அடுத்ததென்ன யாமறியோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.