Jump to content

பாய்சன்... பாயசம்... பன்னீர்!


Recommended Posts

பாய்சன்... பாயசம்... பன்னீர்!

முதல்வரின் கதைக்குப் பின்னால் கண்ணீர்

 

2p1.jpg

மிழகத்தின் ‘கூஜா’ முதல்வர் என்று இதுநாள்வரை விமர்சிக்கப்பட்டு வந்த பன்னீர்செல்வம், தமிழக அரசின் ராஜாவாக முடிசூட்டிக்கொள்ளத் துணிந்துவிட்டார்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள், மூன்று முறை முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை முதல்வர் நாற்காலி கிடைத்தது. அப்போது, தன்னை முதல்வராக நினைத்து அந்த நாற்காலியில் அவர் அமரவில்லை. ‘தான் எதற்காக அமர்த்தப்பட்டு இருக்கிறோம், யாரால் அமர்த்தப்பட்டு இருக்கிறோம்’ என்பதை உணர்ந்து, அஞ்சி அஞ்சி அதில் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தன்னை ‘முதல்வர் பன்னீர்செல்வம்’ என்று அழைப்பதைக்கூட அவர் விரும்பவில்லை. அப்போது பன்னீர்செல்வத்திடம் இருந்த அச்சம், அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் அப்பட்டமாக வெளிப்பட்டது.

 ஜெயலலிதா இறந்தபிறகு, மூன்றாவது முறையாக பன்னீர்செல்வத்தைத் தேடி வந்தது முதல்வர் நாற்காலி. இப்போது அதில் அமர்ந்துள்ள பன்னீர்செல்வத்திடம் ஏகப்பட்ட மாற்றங்கள். முதல்முறையாக அவர் தன்னை முதலமைச்சராக உணரத் தொடங்கி உள்ளார். பன்னீர்செல்வத்தின் இந்தப் புதிய சுதந்திர உணர்வு, அவருடைய பேச்சு, நடவடிக்கைகளில் மெல்லத் துளிர்விடத் தொடங்கி உள்ளது. கொஞ்சம் துணிவையும் அவருக்குக் கொண்டுவந்துள்ளது. அதன் தயவில், சசிகலாவைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார் பன்னீர்செல்வம். அவரின் கணக்கு சரியாக இருந்தால்... பன்னீருக்குப் பின்னால் உள்ளவர்கள் தொடர்ந்து அவருக்குப் பலமாக இருந்தால்... சசிகலா மற்றும் அவரின் மன்னார்குடி சொந்தங்களுடன் நேரடியாக பன்னீர்செல்வம் மோதப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதல்வர் பன்னீர்செல்வம், தனது அரசியல் யுத்த ஆயத்தங்களை லேசாக, ஆனால், கவனமாக வெளிப்படுத்தினார். அவர் ஆற்றிய உரை, நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ள வகையில் கவனமாகத் தயாரிக்கப்பட்டது. அதை நிதானமாகவும், ரசித்தும் படித்தார், பன்னீர்செல்வம். அதன் மூலம் தன் உள்கட்சி எதிரிகளுக்கான எச்சரிக்கை மணியை அடிக்கத் தொடங்கி உள்ளார். பன்னீர்செல்வம் பேச்சின் சாரம்...

அம்மா வழியில் ஆட்சி தொடரும்!

 “தமிழ் மொழியில் உள்ள அறநூல்கள் யாவற்றிலும் மிகச் சிறந்த நூல் திருக்குறள். இதனால்தான், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ்கொண்ட தமிழ்நாடு’ என்று போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார். ‘தெள்ளு தமிழ்நடை, சின்னஞ்சிறிய இரண்டு அடிகள், அள்ளுதொறுஞ் சுவை உள்ளு தொறு உணர்வாகும் வண்ணம், கொள்ளும் அறம், பொருள், இன்பம் அனைத்தும் கொடுத்த திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ‘தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கை நெறியை திருவள்ளுவர் தந்திருக்கிறார்’ என்று பேரறிஞர் அண்ணா கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் போற்றப்பட்ட சிறப்பு வாய்ந்த திருக்குறளை, நமக்குத் தந்த திருவள்ளுவரின் தினத்தில், தமிழ் அறிஞர்கள் மற்றும் பெரியோர்கள் பெயர்களினால் விருதுகள் வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன். ‘அரசியல் நெறி தவறாமல், குற்றமேதும் இழைக்காமல், வீரத்திலும் மானத்திலும் குறைவில்லாது ஆட்சி நடத்துபவரே சிறந்த ஆட்சியாளர்’ என்கிறார் திருவள்ளுவர். இதன்படி ஆட்சி நடத்திய பெருமை, அம்மா அவர்களேயே சாரும். அவர் காட்டிய வழியில், தமிழக அரசு தொடர்ந்து பயணிக்கும்.

ஆயிரத்தில் ஒருவன்!

 இந்த இனிய விழாவிலே, தமிழ் அறிஞர்களிடம் இருந்த நயம், சுவை, நகைச்சுவை, சொல்லாற்றல் ஆகியவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து நூறு பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் எழுத, மற்ற புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாடல் எழுதி சடையப்ப வள்ளலை புகழ்ந்தால் போதும் எனக் கூறப்பட்டது. இதைக் கம்பர் மறுக்கவில்லை. மாறாக, “சடையப்ப வள்ளல் 100-ல் ஒருவர்தான் என்று நினைத்தேன். ஆனால், நீங்களோ 1000-த்தில் ஒருவர் என்கிறீர்கள். அப்படியே செய்கிறேன்” என்று கூறி ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம், சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடினாராம் கம்பர். ஆக, வள்ளல் என்றாலே, ‘ஆயிரத்தில் ஒருவன்’தான் என்று இன்னும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

2p2.jpg

பாய்சன்... பாயசம்...

 தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவானான கி.வா.ஜ அவர்கள், ஒருமுறை தன் நண்பர் ஒருவருடன் விருந்து ஒன்றுக்குச் சென்றிருந்தார். விருந்து அளித்தவர், கி.வா.ஜ-வை அதிகமாக உபசாரம் செய்வதாக நினைத்து, பாயசத்தை மாற்றி மாற்றி ஊற்றிக்கொண்டே இருந்தார். அசந்துபோன கி.வா.ஜ அவர்கள், “ஒருவரைக் கொல்ல பாய்சன்தான் தேவை என நினைத்தேன். ஆனால், பாயசத்திலும் கொல்ல முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்” என்று நயம்படக் கூறினாராம். அதுபோல, கண்ணதாசன் ஒருமுறை காங்கிரஸில் சேர நினைக்கிறார். காமராஜரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார். அதை ஒரு சினிமா பாடலில், ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி... வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ (ஓ.பி.எஸ் இந்தப் பாடலை ராகத்துடன் பாடினார்) என்று பல்லவியாக்கி பாடல் எழுதினார். அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, ‘நலம்தானா? நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்ற பாடல் மூலம் அண்ணாவின் உடல்நலத்தை விசாரித்தார் கண்ணதாசன்.

 இப்படி எந்தக் காலத்திலும், எந்தச் சொல்லை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்ட தமிழ் அறிஞர்கள் உணர்ச்சிபூர்வமாக, அறிவுபூர்வமாக, நகைச்சுவையுடன் நல்ல பல கருத்துகளை நயம்படத் தமிழ் மொழி மூலம் பரப்பி வந்தனர். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களின் பெயர்களில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன” என்றார் பன்னீர்செல்வம்.

கதைக்குப் பின்னால் உள்ள கதை!

 அரசு விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் சொன்ன, ‘பாய்சன்... பாயசம்...’ கதைக்குப் பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா - தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் கதைகள்தான்.

 ஜெயலலிதா இறந்ததும், பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். ஆனால், அப்போதே சசிகலாவின் தேர்வு எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிதான் பன்னீர்செல்வம் பெயரைக் கட்டாயமாகப் பரிந்துரைத்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதன்பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, பன்னீர்செல்வம்தான் முதல் ஆளாக அமைச்சர்களோடு வந்து சசிகலாவிடம் கொடுத்தார். இதையடுத்து, சசிகலா - பன்னீர்செல்வத்துக்கு இடையே மோதல் என்ற கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதன்பிறகு ‘விரைவில் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்பார்’ என்று செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகின. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் வேகம் பிடிக்கவில்லை. இந்த நேரத்தில், ‘பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில் இருந்து விலக மறுக்கிறார்’ என்று சொல்லப்பட்டது. அப்படிச் சொல்லப்பட்டதை சசிகலா தரப்பு மறுக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலா ஆதரவு அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ‘சசிகலாதான் முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும்’ என்று ஆளுக்கொரு அறிக்கை கொடுத்தனர். உச்சகட்டமாக தம்பிதுரை, தன்னுடைய மக்களவைத் துணை சபாநாயகர் லெட்டர்பேடிலேயே அப்படி ஒரு கோரிக்கையை எழுதி அனுப்பினார். தன் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களும், தன் கட்சிக்குள் இருக்கும் சீனியர்களும், தனக்கு எதிராக இப்படித் தொடர்ந்து அறிக்கை விட்டதை பன்னீர்செல்வம் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். அவற்றை எதிர்க்கவும் இல்லை. ‘ஆமாம்’ என்று தலையசைக்கவும் இல்லை. இது ‘சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் உண்மையிலேயே மோதல் இருக்குமோ’ என்ற எண்ணத்தை வலுவாகக் கிளப்பியது.

 சசிகலா முதல்வர் ஆவதில் ஏற்படும் இழுபறி... பன்னீர்செல்வத்தின் புதிய உற்சாகம்... எல்லாம் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் பனிப்போரை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அ.தி.மு.க என்ற கட்சி சசிகலாவின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. அ.தி.மு.க-வின் தலைமையில் அமைந்த அரசாங்கத்தின் லகான், பன்னீர்செல்வம் கையில் கொடுக்கப்பட்டு உள்ளது. அது சசிகலாவிடம் கைமாறிவிடாமல், இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்து உள்ளார் பன்னீர்செல்வம். அவருடைய அந்த விருப்பம்தான், அவர் சொன்ன பாய்சன், பாயசம் கதையில் ஒளிந்திருந்தது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.