Jump to content

பாய்சன்... பாயசம்... பன்னீர்!


Recommended Posts

பாய்சன்... பாயசம்... பன்னீர்!

முதல்வரின் கதைக்குப் பின்னால் கண்ணீர்

 

2p1.jpg

மிழகத்தின் ‘கூஜா’ முதல்வர் என்று இதுநாள்வரை விமர்சிக்கப்பட்டு வந்த பன்னீர்செல்வம், தமிழக அரசின் ராஜாவாக முடிசூட்டிக்கொள்ளத் துணிந்துவிட்டார்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள், மூன்று முறை முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை முதல்வர் நாற்காலி கிடைத்தது. அப்போது, தன்னை முதல்வராக நினைத்து அந்த நாற்காலியில் அவர் அமரவில்லை. ‘தான் எதற்காக அமர்த்தப்பட்டு இருக்கிறோம், யாரால் அமர்த்தப்பட்டு இருக்கிறோம்’ என்பதை உணர்ந்து, அஞ்சி அஞ்சி அதில் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தன்னை ‘முதல்வர் பன்னீர்செல்வம்’ என்று அழைப்பதைக்கூட அவர் விரும்பவில்லை. அப்போது பன்னீர்செல்வத்திடம் இருந்த அச்சம், அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் அப்பட்டமாக வெளிப்பட்டது.

 ஜெயலலிதா இறந்தபிறகு, மூன்றாவது முறையாக பன்னீர்செல்வத்தைத் தேடி வந்தது முதல்வர் நாற்காலி. இப்போது அதில் அமர்ந்துள்ள பன்னீர்செல்வத்திடம் ஏகப்பட்ட மாற்றங்கள். முதல்முறையாக அவர் தன்னை முதலமைச்சராக உணரத் தொடங்கி உள்ளார். பன்னீர்செல்வத்தின் இந்தப் புதிய சுதந்திர உணர்வு, அவருடைய பேச்சு, நடவடிக்கைகளில் மெல்லத் துளிர்விடத் தொடங்கி உள்ளது. கொஞ்சம் துணிவையும் அவருக்குக் கொண்டுவந்துள்ளது. அதன் தயவில், சசிகலாவைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார் பன்னீர்செல்வம். அவரின் கணக்கு சரியாக இருந்தால்... பன்னீருக்குப் பின்னால் உள்ளவர்கள் தொடர்ந்து அவருக்குப் பலமாக இருந்தால்... சசிகலா மற்றும் அவரின் மன்னார்குடி சொந்தங்களுடன் நேரடியாக பன்னீர்செல்வம் மோதப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதல்வர் பன்னீர்செல்வம், தனது அரசியல் யுத்த ஆயத்தங்களை லேசாக, ஆனால், கவனமாக வெளிப்படுத்தினார். அவர் ஆற்றிய உரை, நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ள வகையில் கவனமாகத் தயாரிக்கப்பட்டது. அதை நிதானமாகவும், ரசித்தும் படித்தார், பன்னீர்செல்வம். அதன் மூலம் தன் உள்கட்சி எதிரிகளுக்கான எச்சரிக்கை மணியை அடிக்கத் தொடங்கி உள்ளார். பன்னீர்செல்வம் பேச்சின் சாரம்...

அம்மா வழியில் ஆட்சி தொடரும்!

 “தமிழ் மொழியில் உள்ள அறநூல்கள் யாவற்றிலும் மிகச் சிறந்த நூல் திருக்குறள். இதனால்தான், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ்கொண்ட தமிழ்நாடு’ என்று போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார். ‘தெள்ளு தமிழ்நடை, சின்னஞ்சிறிய இரண்டு அடிகள், அள்ளுதொறுஞ் சுவை உள்ளு தொறு உணர்வாகும் வண்ணம், கொள்ளும் அறம், பொருள், இன்பம் அனைத்தும் கொடுத்த திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ‘தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கை நெறியை திருவள்ளுவர் தந்திருக்கிறார்’ என்று பேரறிஞர் அண்ணா கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் போற்றப்பட்ட சிறப்பு வாய்ந்த திருக்குறளை, நமக்குத் தந்த திருவள்ளுவரின் தினத்தில், தமிழ் அறிஞர்கள் மற்றும் பெரியோர்கள் பெயர்களினால் விருதுகள் வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன். ‘அரசியல் நெறி தவறாமல், குற்றமேதும் இழைக்காமல், வீரத்திலும் மானத்திலும் குறைவில்லாது ஆட்சி நடத்துபவரே சிறந்த ஆட்சியாளர்’ என்கிறார் திருவள்ளுவர். இதன்படி ஆட்சி நடத்திய பெருமை, அம்மா அவர்களேயே சாரும். அவர் காட்டிய வழியில், தமிழக அரசு தொடர்ந்து பயணிக்கும்.

ஆயிரத்தில் ஒருவன்!

 இந்த இனிய விழாவிலே, தமிழ் அறிஞர்களிடம் இருந்த நயம், சுவை, நகைச்சுவை, சொல்லாற்றல் ஆகியவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து நூறு பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் எழுத, மற்ற புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாடல் எழுதி சடையப்ப வள்ளலை புகழ்ந்தால் போதும் எனக் கூறப்பட்டது. இதைக் கம்பர் மறுக்கவில்லை. மாறாக, “சடையப்ப வள்ளல் 100-ல் ஒருவர்தான் என்று நினைத்தேன். ஆனால், நீங்களோ 1000-த்தில் ஒருவர் என்கிறீர்கள். அப்படியே செய்கிறேன்” என்று கூறி ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம், சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடினாராம் கம்பர். ஆக, வள்ளல் என்றாலே, ‘ஆயிரத்தில் ஒருவன்’தான் என்று இன்னும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

2p2.jpg

பாய்சன்... பாயசம்...

 தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவானான கி.வா.ஜ அவர்கள், ஒருமுறை தன் நண்பர் ஒருவருடன் விருந்து ஒன்றுக்குச் சென்றிருந்தார். விருந்து அளித்தவர், கி.வா.ஜ-வை அதிகமாக உபசாரம் செய்வதாக நினைத்து, பாயசத்தை மாற்றி மாற்றி ஊற்றிக்கொண்டே இருந்தார். அசந்துபோன கி.வா.ஜ அவர்கள், “ஒருவரைக் கொல்ல பாய்சன்தான் தேவை என நினைத்தேன். ஆனால், பாயசத்திலும் கொல்ல முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்” என்று நயம்படக் கூறினாராம். அதுபோல, கண்ணதாசன் ஒருமுறை காங்கிரஸில் சேர நினைக்கிறார். காமராஜரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார். அதை ஒரு சினிமா பாடலில், ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி... வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ (ஓ.பி.எஸ் இந்தப் பாடலை ராகத்துடன் பாடினார்) என்று பல்லவியாக்கி பாடல் எழுதினார். அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, ‘நலம்தானா? நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்ற பாடல் மூலம் அண்ணாவின் உடல்நலத்தை விசாரித்தார் கண்ணதாசன்.

 இப்படி எந்தக் காலத்திலும், எந்தச் சொல்லை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்ட தமிழ் அறிஞர்கள் உணர்ச்சிபூர்வமாக, அறிவுபூர்வமாக, நகைச்சுவையுடன் நல்ல பல கருத்துகளை நயம்படத் தமிழ் மொழி மூலம் பரப்பி வந்தனர். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களின் பெயர்களில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன” என்றார் பன்னீர்செல்வம்.

கதைக்குப் பின்னால் உள்ள கதை!

 அரசு விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் சொன்ன, ‘பாய்சன்... பாயசம்...’ கதைக்குப் பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா - தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் கதைகள்தான்.

 ஜெயலலிதா இறந்ததும், பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். ஆனால், அப்போதே சசிகலாவின் தேர்வு எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிதான் பன்னீர்செல்வம் பெயரைக் கட்டாயமாகப் பரிந்துரைத்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதன்பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, பன்னீர்செல்வம்தான் முதல் ஆளாக அமைச்சர்களோடு வந்து சசிகலாவிடம் கொடுத்தார். இதையடுத்து, சசிகலா - பன்னீர்செல்வத்துக்கு இடையே மோதல் என்ற கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதன்பிறகு ‘விரைவில் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்பார்’ என்று செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகின. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் வேகம் பிடிக்கவில்லை. இந்த நேரத்தில், ‘பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில் இருந்து விலக மறுக்கிறார்’ என்று சொல்லப்பட்டது. அப்படிச் சொல்லப்பட்டதை சசிகலா தரப்பு மறுக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலா ஆதரவு அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ‘சசிகலாதான் முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும்’ என்று ஆளுக்கொரு அறிக்கை கொடுத்தனர். உச்சகட்டமாக தம்பிதுரை, தன்னுடைய மக்களவைத் துணை சபாநாயகர் லெட்டர்பேடிலேயே அப்படி ஒரு கோரிக்கையை எழுதி அனுப்பினார். தன் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களும், தன் கட்சிக்குள் இருக்கும் சீனியர்களும், தனக்கு எதிராக இப்படித் தொடர்ந்து அறிக்கை விட்டதை பன்னீர்செல்வம் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். அவற்றை எதிர்க்கவும் இல்லை. ‘ஆமாம்’ என்று தலையசைக்கவும் இல்லை. இது ‘சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் உண்மையிலேயே மோதல் இருக்குமோ’ என்ற எண்ணத்தை வலுவாகக் கிளப்பியது.

 சசிகலா முதல்வர் ஆவதில் ஏற்படும் இழுபறி... பன்னீர்செல்வத்தின் புதிய உற்சாகம்... எல்லாம் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் பனிப்போரை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அ.தி.மு.க என்ற கட்சி சசிகலாவின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. அ.தி.மு.க-வின் தலைமையில் அமைந்த அரசாங்கத்தின் லகான், பன்னீர்செல்வம் கையில் கொடுக்கப்பட்டு உள்ளது. அது சசிகலாவிடம் கைமாறிவிடாமல், இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்து உள்ளார் பன்னீர்செல்வம். அவருடைய அந்த விருப்பம்தான், அவர் சொன்ன பாய்சன், பாயசம் கதையில் ஒளிந்திருந்தது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.