Jump to content

“தயார் நிலையில் துணை ராணுவம்” - தமிழக அரசுக்கு செக் வைக்க துடிக்கும் மோடி அரசு!


Recommended Posts

“தயார் நிலையில் துணை ராணுவம்” - தமிழக அரசுக்கு செக் வைக்க துடிக்கும் மோடி அரசு!

ராணுவம்

 

லைவர்களே இல்லாமல்  ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக இளைஞர்கள் போராட்டக்களத்தில் இறங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்தப் போராட்டத்தைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாமல் தவித்து வருகிறது. எந்தவித வன்முறையும் இல்லாமல், அறவழியில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஆரம்பித்தபோது, அதை சாதாரணமாக நினைத்தது தமிழக காவல்துறை. அதன்பிறகு நாட்கள் செல்லச்செல்ல... அதன் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசைந்து நிற்கிறது. இந்த நிலையில், துணை ராணுவம்மூலம் பூச்சாண்டி காட்டத் தயாராகி வருகிறது மத்திய அரசு. 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு  மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் நாடவேண்டிய நிலையில் உள்ளது. போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று (18-1-17) இரவு அவசரமாக டெல்லி சென்றார்.இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஓ.பி.எஸ் டெல்லிக்கு பயணம் செய்யும் முன்னே, டெல்லியில் இருக்கும் தமிழக அதிகாரிகள், ''மத்திய அரசு இந்த விஷயத்தில் பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளாமல்தான் உள்ளது. நடப்பதை வேடிக்கை பார்க்கும் மனநிலையில்தான் உள்ளது'' என்ற கருத்தை முதல்வரின் காதில் போட்டுவிட்டார்கள். அவர்கள் கூறியது போன்றே முதல்வர் பன்னீர்செல்வத்திடம் பிரதமர் மோடி, “ மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, அதே நேரம் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உதவும்” என்று சாமர்த்தியமாகப் பேசி பன்னீரை அனுப்பிவிட்டார்.

“மத்திய அரசை நம்பி பயன் இல்லை, நாமே களத்தில் இறங்கவேண்டியதுதான்” என வருத்தப்பட்ட பன்னீர்செல்வம் சட்ட நிபுணர்களுடன் ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை உடைப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். அதனால்  இன்று மதியம் சென்னை திரும்பவேண்டிய அவர், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து  தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

ops_modi_17234.jpg


தமிழக அரசியல் மீது ஒரு கண்வைத்திருந்த மத்திய அரசு, இப்போது களத்தில் இறங்கத் தயாராகிவிட்டது என்ற அதிர்ச்சித் தகவல்கள் டெல்லியில் இப்போது வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து மத்திய உளவுத் துறை, தொடர்ந்து மத்திய அரசுக்கு குறிப்புகள் அனுப்பிவருகின்றன. அதில் “தமிழக காவல்துறை போராட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் அதற்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது” என சுட்டிக்காட்டியுள்ளது. இதைத்தான்  மோடியின் அரசு கூர்ந்து கவனித்துவருகிறது. மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசே போராட்டத்தைத் தூண்டிவிடுகிறதா என்ற சந்தேகம் மத்திய அரசுக்கு எழுந்துள்ளது. தமிழக காவல்துறையினர் செயல்படாமல் இருந்துவிட்டுப் போனால், அடுத்து நமது துணை ராணுவத்தை இறக்கவேண்டியதுதான் என்ற மனநிலைக்கு வந்துள்ளது மத்திய அரசு. இன்று காலையிலேயே, தமிழகத்தில் இருக்கும் துணை ராணுவப்படை மையங்களுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு ஒன்று வந்துள்ளது.“துணை ராணுவப் படையினரைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்”  என்று உத்தரவு வந்துள்ளதால், அனைத்து துணை ராணுவப் படையினரும்  தயார் நிலையில் இப்போது உள்ளார்கள்.

“தமிழகத்தில் மைதானம் மற்றும் சாலைகளில்  நடைபெற்று வந்த போராட்டங்கள், பிரதமர் கைவிரித்த பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களை நோக்கி போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்புகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆங்காங்கு ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெறத் தொடங்கியுள்ளன.இதையெல்லாம் பார்க்கும் மத்திய அரசு  சட்டம் - ஒழுங்கு மோசமாகிவிட்டது.தமிழகத்தில்  மத்திய அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை. அசாதாரணச் சூழ்நிலை நிலவுகிறது  என்று  அதிரடியாக மத்திய அரசு அறிவித்ததுடன், துணை ராணுவத்தையும் போராட்டக்களத்தில் இறக்கி போராட்டத்தை ஒடுக்கத் திட்டம் தீட்டுகிறது” என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள். இதே காரணத்தை வைத்து தமிழக அரசுக்கு மத்திய அரசு செக் வைக்கவும் வாய்ப்புள்ளது. தமிழக அரசுக்கும் இதுகுறித்த அச்சம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பிரதமர் சந்திப்புக்குப் பிறகு போராட்டத்தின் வீரியம் குறைந்து, நிலைமை சரியாகிவிடும் என்று எதிர்பார்த்தனர் காவல்துறை அதிகாரிகள். ''முடிவு தெரியாமல் நாங்கள் போராட்டத்தை கைவிட முடியாது'' என்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அறிவித்துவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் காவல் துறையினர். இதே நிலை, நாளை காலைவரை நீடித்தால் மத்தியதுணை ராணுவப் படை தமிழகத்துக்குள் நுழைந்துவிடும் என்கிற அச்சம் இப்போது அதிகாரிகள் மத்தியி்ல் ஏற்பட்டுள்ளது. 

கடைசிச் செய்தி - டெல்லியில் முகாமிட்டுள்ள ஓ.பி.எஸ்ஸுடன் மத்திய உள்துறை உயர் அதிகாரிகள் தொடர்புகொண்டு, நிமிடத்துக்கு நிமிடம்... 'தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களின் வாசல்களில் நடக்கும் போராட்டங்களைப் பற்றி விவரித்து, அதை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பாருங்கள்' என்று சூட்சமமாக சொல்லிவருகிறார்கள். இதற்கு ஒ.பி.எஸ்ஸின் உடனடி ரியாக்ஷனை மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/78177-jallikattu-issue--to-tackle-tn-government-central-government-may-send-para-military.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16114748_1223149121139685_46838162117285

1f4a5.png?1f4a5.png?எங்கள் வீர தமிழன் தலைவர் #பிராபாகன் ஒருவனையே நாற்ப்பது வருடமாக ஒண்ணும் புடுங்க முடியல .!
வாடா வா .....ஏழு கோடிபேர் .......சும்மாவா...1f602.png?1f602.png?1f602.png?

FB

Link to comment
Share on other sites

இந்தத் துணை இராணுவத்தை வைத்துதான் கடைசியில் அடக்குவார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.