Jump to content

சிலர் யுத்தம் செய்தபோது பலர் இங்கிருந்து படுகொலை செய்தனர் - இதுவே உண்மை நிலையாகும் என்கிறது அரசாங்கம்


Recommended Posts

சிலர் யுத்தம் செய்தபோது பலர் இங்கிருந்து படுகொலை செய்தனர் - இதுவே உண்மை நிலை­யாகும் என்­கி­றது அர­சாங்கம்  

01-bcb7ef33eaa561d92ffe88ed9fe6178d9c8e5290.jpg


இறு­திக்­கட்டப் போரில் இரா­ணுவம் படு­கொ­லை­களில் ஈடு­பட்­டி­ருந்தால் அதற்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். படு­கொ­லை­களை நியா­யப்­ப­டுத்­தவோ ஆள்கடத்­தல்­களை அங்­கீ­க­ரிப்­பதோ நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கொள்­கை­யில்லை. சிலர் போர் செய்யும் போது பலர் இங்­கி­ருந்து படு­கொலை செய்­தனர். இதுவே உண்மை நிலை­யாகும் என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும்  அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.  

நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் நிபந்­த­னை­க­ளுக்கு அடிப்­ப­ணிந்து ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி வரிச்­ச­லு­கையை மீண்டும் பெற்­றுக்­கொள்ள வில்லை. பிரி­வி­னை­வா­தி­களே புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­கின்­றனர் என்றால் முழு பாரா­ளு­மன்­றமும் பிரி­வி­னை­வா­தி­களின் கூடா­ராமா ? அடிப்­ப­டை­யற்ற பிர­சா­ரங்­களும் எதி­ரப்­பு­க­ளுமே ஜீ.எஸ்.பி விட­யத்தில் காணப்­ப­டு­கின்­றன எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்கள் அறி­விக்கும் ஊடக சந்­திப்பு நேற்று புதன் கிழமை அர­சாங்கம் தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ,

ஜன­நா­யகம் , மனித உரி­மைகள் மற்றும் நல்­லாட்சி இதுவே ஐரோப்­பிய ஒன்­னி­ற­யத்தின் பொது­வான சிபா­ரி­சுகள் . இதனை ஏற்றுக் கொள்ளும் நிலைப்­பாட்டில் கடந்த ஆட்சி இருக்க வில்லை . ஜன­நா­ய­கத்­தையோ மனித உரி­மை­க­ளையோ அல்­லது நல்­லாட்­சி­யையோ மஹிந்த ராஜ­பக்ஷ அன்று ஏற்றுக் கொள்ள முன்­வ­ரா­ததால் தான் ஜீ.எஸ்.பி சலுகை இல்­லாமல் போனது. ஆனால் இன்று வரிச்­ச­லு­கையை பெற்றுக் கொள்ள நாட்டை காட்டிக் கொடுத்து விட்­ட­தாக கூறி கோஷம் எழுப்­பு­கின்­றனர்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் 58 சிபா­ரி­களும் என்ன என்­பதை முதலில் ஆராய வேண்டும். பின்னர் அவற்றை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ளதா ? என்­பதை கண்­ட­றிய வேண்டும். அமைச்­ச­ர­வையில் ஏற்றுக் கொள்ள முடி­யாத பல விட­யங்­களை திருத்­தத்­திற்கு உட்­ப­டுத்தி ஓரங்­கட்­டி­யுள்ளோம். இதனை அறி­யாது வெளியில் இருந்து போலி கோஷ­மெ­ழுப்­பு­வதில் பல­னில்லை.

ஓரின சேர்க்கை

ஓரின சேர்க்­கையை அங்­கி­க­ரிக்க கோரப்­பட்ட விட­யத்தை நாம் ஏற்றுக் கொள்ள வில்லை. அர­சாங்கம் அதற்கு எதி­ரா­கவும் ஏற்றுக் கொள்­ளாத நிலைப்­பாட்­டி­லுமே உள்­ளது. ஆனால் குறு­கிய நோக்­கங்­க­ளுக்­காக பிர­சாரம் செய்­கின்­றனர்.

போர்­குற்றம்

இரா­ணுவம் உள் நாட்டு போரின் போது படு­கொ­லை­களில் ஈடுப்­பட்­டி­ருந்தால் அது ஏற்றுக் கொள்ள முடி­யாத தவ­றாகும் . அதன் உண்மை நிலை கண்­ட­றி­யப்­பட்டு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். ஊட­க­வி­ய­லாளர் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்டார் என்றால் அது தவ­றாகும். இவ்­வா­றா­ன­தொரு சூழல் காணப்­படும் பட்­சத்தில் பிறரை குறை கூறு­வதில் பல­னில்லை. சிலர் போர் செய்த அதே சமயம் பலர் இங்­கி­ருந்து கொலை செய்­தனர். இதுவே உண்மை நிலை­யாகும் .

மனித உரி­மை­களை பாது­காத்தல் , நல்­லாட்சி மற்றும் நிலை­யான அபி­வி­ருத்­திக்கு ஏற்­ற­வ­ரறே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சிபா­ரி­சுகள் காணப்­ப­டு­கின்­றன . இதனை எதிர்க்க வேண்­டிய தேவை இல்லை. நல்­லாட்சி அர­சாங்கம் மாற்று அர­சியல் கலா­சா­ரத்தை நோக்­கியே பய­ணித்­தது. ஆனால் கடந்த அர­சாங்கம் அபி­வி­ருத்தி என்ற வெறு­மைக்குள் அனைத்­தையும் மீறி­யது.

அது­ர­லியே ரதன தேரர்

அது­ர­லியே ரதன தேரரின் சுயா­தீன தன்மை எமக்கு விளங்க வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பை எதிர்க்­கின்றார். அதே போன்று பிரி­வி­னை­வா­தி­களை தொடர்­புப்­ப­டுத்­து­கின்றார். இது வரைக்­கா­லமும் அர­சாங்­கத்தில் இருந்து திடீ­ரென இவ்­வாறு கூறு­வது புரி­யாத ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் , ஜீ.எஸ்.பீ. வரிச்­ச­லுகை மற்றும் மனித உரி­மைகள் விவ­காரம் போன்ற விட­யங்­களை தவ­றாக விமர்­சிப்­பது ஏற்றுக் கொள்ள கூடிய விட­ய­மல்ல.

தேசிய சபை உரு­வாக்­கு­வ­தாக ரதன தேரர் கூறு­கின்றார். ஆனால் அவரால் அர­சி­ய­ல­மைப்பு சபையில் இருந்து கொண்டு இந்த விட­யங்கள் ஒன்றும் கூற முடி­யாமல் போனது ஏன் ? வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. அமைச்­ச­ர­வையில் எவ்­வி­த­மான ஒழிவு மறைவும் இல்லை.

தேசிய மனித உரி­மைகள்

 செயற்­பாட்­டுத்­திட்டம்

தேசிய மனித உரி­மைகள் (2017-2021) செயற்­பாட்­டுத்­திட்­டத்­தினை தயா­ரிப்­ப­தற்கு மற்றும் அதன் போது கவ­னத்திற் கொள்ள வேண்­டிய அனைத்து அம்­சங்­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தற்­காக அமைச்­சர்கள் சிலரின் இணை தலை­மைத்­து­வத்தின் கீழ் அமைச்­ச­ரவை குழு­வொன்றை நிய­மிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை கடந்த வருடம் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

அத­ன­டிப்­ப­டையில் குறித்த குழுவின் பூரண கருத்­துக்­களை பெற்று தயா­ரிக்­கப்­பட்ட ஐந்து வருட தேசிய மனித உரி­மைகள் செயற்­பாட்­டுத்­திட்டம் (2017 - 2021) மானது பதில் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்­வா­வினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. குறித்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹம்பந்தொட்டை துறைமுகம்

ஹம்பந்தொட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்றதாக மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அவரது காலத்தில் என்ன நடந்தது என்று கூற வேண்டியதில்லை. அனைவருக்கும் தெரியும் . அந்த திட்டத்தை முன்னெடுக்க விடால் போனால் செலுத்த வேண்டிய தொகையை எவ்வாறு செலுத்துவது . வரி விதிப்புக்களுக்கே வழிவகுக்கும் . இதனால் பொது மக்களே பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-19#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.