Jump to content

வடக்கில் 2,36,346 பேர் குடிநீரின்றி பரிதவிப்பு - நாடுமுழுவதும் 6,95,000 பேர் கடும் பாதிப்பு


Recommended Posts

வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை தொடர்ந்தும் அதி­க­ரித்து வரு­கின்­றது. இதன்­பி­ர­காரம் ஒரு இலட்­சத்து 71 ஆயி­ரத்து 407 குடும்­பங்­களைச் சேர்ந்த 6 இலட்­சத்து 95 ஆயிரம் பேர் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது. 

அதே­போன்று களுத்­துறை மாவட்­டத்­திலும் 1 இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். நாட்டில் நிலவும் வரட்சி கார­ண­மாக பொது மக்கள் தமது அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு போது­மான அள­விற்கு நீர் இன்­மை­யினால் தவித்து வரு­கின்­றனர். குறிப்­பாக வடக்கு,கிழக்கு, வட­மத்­திய, வடமேல், மேல் மாகா­ணங்­களில் பல பிர­தே­சங்­களில் குடிநீர் தட்­டுப்­பாடு நிலவி வரு­வ­தாக அர­சாங்க மட்­டத்­தி­லான தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

வடக்கு, கிழக்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் தக­வல்­களின் பிர­காரம் வரட்­சி­யினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் அதி­க­ளவில் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன. இதன்­பி­ர­காரம் வடக்கு மாகா­ணத்தில் 51 ,328 குடும்­பங்­களை சேர்ந்த 1 இலட்­சத்து 85ஆயி­ரத்து 382 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

யாழ்ப்­பா­ணத்­தி­லேயே பெரு­ம­ள­வி­லான மக்கள் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்­கி­ணங்க யாழ்ப்­பா­ணத்தில் 27,224 குடும்­பங்­களை சேர்ந்த 95 ஆயி­ரத்து 387 பேர் குடிநீர் இன்­றியும் விவ­சாயம் செய்­ய­மு­டி­யா­மலும் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு மன்னார் மாவட்­டத்தில் 16,348 குடும்­பங்­களை சேர்ந்த 55 ஆயி­ரத்து 245 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதே கணிப்பின் பிர­காரம் வவு­னியா, முல்­லை­தீவு, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­க­ளிலும் வரட்சி நிலவி வரு­கின்­றது.

அதே­போன்று நாட்டில் நிலவும் வரட்­சி­யினால் அதி­க­ள­வி­லான பாதிப்­புகள் கிழக்கு மாகா­ணத்­திலும் பதி­வா­கி­யுள்­ளன. இதன்­பி­ர­காரம் கிழக்கில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமே வரட்­சியின் கோர பிடியில் சிக்கி தவிக்­கின்­றது. மட்­டக்­க­ளப்பில் 60,401 குடும்­பங்­களை சேர்ந்த 3 இலட்­சத்து 2ஆயி­ரத்து ஐந்து பேர் வரட்­சி­யினால் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். அதே­போன்று திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை மாவட்­டத்­திலும் பாதிப்­புகள் ஏற்­பட்ட வண்­ண­முள்­ளன.

ஏனை­ய­மா­வட்­டங்­களின் நிலைமை

அத்­தோடு வரட்­சி­யினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தவிர வட­மத்­திய மாகா­ணத்தின் பொலன்­ன­றுவை , அநூ­ர­தா­புரம் மாவட்­டங்­களில் குளங்கள் வற்­றிப்­போ­யுள்­ளன. மேலும் மேல் மாகா­ணத்தில் களுத்­துறை மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 18 ஆயி­ரத்து 200 பேர் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். அதே­போன்று கொழும்பு, கம்­பஹா, அம்­பாந்­தோட்டை, மாத்­தறை, காலி,புத்­தளம், குரு­நாகல் ஆகிய மாவட்­டங்­க­ளிலும் அதி­யுச்ச வெப்­ப­நிலை நில­வு­கின்­றது.

குடி­நீர்­தட்­டுப்­பாடு

வரட்­சி­யான கால­நி­லை­யினால் வட­மத்­திய , மத்­திய மாகா­ணங்­க­ளி­லுள்ள நீர்­தேக்­கங்­களின் நிலைமை பெரும் மோச­மான நிலை­மைக்கு வந்­துள்­ளன. இதன்­படி நீர் தேக்­கங்­களின் நீர் மட்டம் 23 ஆக குறை­வ­டைந்­துள்­ளது. குறிப்­பாக இரா­ஜாங்­கனை, திஸ்ஸ வெவ, சேனா­நா­யக்க சமுத்­திரம், பராக்­கி­ரம சமுத்­திரம், நச்­சான்­துவ, ஹூறுலுவெவ,லுனுகம் வெகர, லக்ஷபான, விமலசுரேந்திர ஆகிய நீர்தேக்கங்களில் பெருமளவில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளன. அதேபோன்று குளங்கள் பலவும் வரட்சியினால் வற்றிப்போயுள்ளன. இதன்காரணமாக எதிர்வரும் காலங்களில் பெருமளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என்று நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-19#page-1

Link to comment
Share on other sites

இலங்கையில் வறட்சியால் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

இலங்கையில் வறட்சியான கால நிலை காரணமாக ஆறு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அனர்த்த முகாமைத்துவ மையம் கூறுகின்றது.

குடி நீர் விநியோகம்
குடி நீர் விநியோகம்

வடக்கு , கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாடு தழுவியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 6 லட்சத்து 5 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி மட்டக்களப்பு மாவட்டத்திலே பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகம் என தெரியவருகின்றது..

இம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் தேவையான குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் இயக்குநரான பிரதீப் கொடிப்புலி கூறுகின்றார்.

பருவ மழை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள வறட்சியால் நீர் நிலைகளிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டம் 23 - 27 சத வீதமாக குறைந்து காணப்படுவதாக நீர்ப்பாசன இலாகா கூறும் அதே வேளை குழாய் நீர் விநியோகம் எந் நேரத்திலும் மட்டுப்படுத்தப்படலாம் என தேசிய நீர் வழங்கல் வாரியம் தெரிவிக்கின்றது.

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வாரியம் குழாய் நீர் பாவனையாளர்களை கேட்டுள்ளது.

ஐ. நா மற்றும் அதன் துணை அமைப்புகள் உதவி

ஐ.நா மற்றும் துணை அமைப்புகளின் உதவியை ஜனாதிபதி நாடியுள்ளார்ஐ.நா மற்றும் துணை அமைப்புகளின் உதவியை ஜனாதிபதி நாடியுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வறட்சியை எதிர்கொள்வதற்கும் நிவாரண உதவிகள் தொடர்பாகவும் ஐ. நா மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளரும் , ஐ.நா அபிவிருத்தி திட்ட வதிவிட பிரதிநிதியும் உலக உணவு திட்ட பிரதிநிதியுமான பிரெண்டா பார்ட்டன் மற்றும் உலக உணவுத் திட்ட நிறைவேற்று இயக்குநரான ஏர்த்தரின் கசின் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இது தொடர்பான சந்திப்பொன்றும் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது முதற்கட்டமாக வறட்சி தொடர்பான பேச்சுவார்த்தை, மதிப்பீடு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளுக்கான நிபுணர்களை அனுப்புவது போன்ற உதவிகளை வழங்க ஐ.நா பிரதிநிதிகள் முன் வந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகின்றது.

வறட்சி காரணமாக தொழில்களை இழந்துள்ள கிராமிய மக்களுக்கு தொழில்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உணவு அல்லது பணத்தை தமது அமைப்பு ஊடாக வழங்க முடியும் என உலக உணவுத் திட்ட பிரதிநிதி குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வறட்சி காரணமாக எழுந்துள்ள குடிநீர் பிரச்சனை நீண்ட கால சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் வவுசர்கள் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri-lanka-38649326

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
    • இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.