Jump to content

சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லை- சுதந்திரக்கட்சி மீளவும் தெரிவிப்பு


Recommended Posts

சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லை- சுதந்திரக்கட்சி மீளவும் தெரிவிப்பு
 
 
சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லை- சுதந்திரக்கட்சி மீளவும் தெரிவிப்பு
சமஸ்டி மூலமாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற அழுத்தத்தை பிரயோகித்து அல்லது சர்வதேச தூண்டுதலை ஏற்படுத்தி அதனூடாக எவரேனும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அந்த பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் இணங்கப்போவதி ல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
 
சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசவும் வேண்டாம் என்று குறிப்பிட்ட விசேட வேலைத்திட்ட அமைச்சரும், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, சர்வசன வாக்கெடுப்பு இல்லாது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றி தீர்வுக்கான பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் கூறினார். 
 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
 
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சமஸ்டி தீர்மானம் தொடர்பாக நினைத்துக்கூடப் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
 
சமஸ்டி மட்டுமே அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என்ற அடிப்படியில் செயற்படுவது ஒருபோதும் தீர்வை ஏற்படுத்திக்கொ டுக்காது. ஆரம்பத்தில் 13ஆம் திருத்தம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்படும் நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறை மையின் கீழான அதிகாரங்கள் தான் வலியுறுத்தப்பட்டது. அதே நிலைப்பாட்டில் தான் நாம் எப்போதும் இருந்து வரு கின்றோம். அவ்வாறு இருக்கையில் சமஸ்டி மூலமாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற அழுத்தத்தை பிரயோகித்து அல்லது சர்வதேச தூண்டுதலை ஏற்படுத்தி அதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் எவரேனும் பேச்சு வார்த்தைக்கு வருவார்களாயின் அந்த பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் இடமில்லை.
 
நாம் ஒருபோதும் சமஸ்டி தீர்வு என்ற கருத்தை ஏற்றுகொள்ள தயாராக இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எப்போதும் ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளோம். அதேபோல்  ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின்  தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவேன் என குறிப்பிடவில்லை. ஆகவே அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்ற போதிலும் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதுவரையில் எந்த தீர்மானங்களும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் அதை விரைவில் முன்வைப்போம்.
 
மேலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நகர்வுகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் சர்வசன வாக்கெடுப்பு இல்லாது நாடாளுமன்றதின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலங்களை வைத்து தீர்வுகளை நோக்கி பயணிக்க முடியும். அதை பிரதான இரண்டு கட்சிகளும் முன்னெடுக்கும். அதேபோல் சர்வதேச தரப்பினருக்கு கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் சரியான முறையில் முன்னெடு க்கப்பட்டு  வருகின்றது. அத்துடன் எமது இராணுவத்தையும் ஐக்கிய நாட்டையும் காப்பாற்றும் தேசிய பாதுகாப்பு நகர்வு களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது” - என்றார்.

http://www.onlineuthayan.com/news/22895

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.