Jump to content

ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6


Recommended Posts

ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6

 

எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 
ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6
 
பீஜிங்:
 
எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் இன்று துவங்கிய முதல் பிளாஷ் விற்பனையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு நிமிடத்திலேயே விற்று தீர்ந்தது. முழுமையாக எத்தனை சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் வழங்கப்படவில்லை. எனினும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். 
 
நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ்,  குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 
 
6000 சீரிஸ் அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/19214525/1063123/Nokia-6-sold-out-in-a-minute-on-launch-day.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

விற்பனையில் அசத்தும் நோக்கியா 6... நிறை குறைகள் என்னென்ன? #GadgetScan #Nokia6

நோக்கியா 6

ந்திரன் - 2, பாகுபலி - 2...இந்த ரெண்டுல, எதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கு எனக் கேட்டால்,  நோக்கியா - 2 மேலதான் என்கிறார்கள் டெக்கீஸ். அப்படி ஒரு ரீ-என்ட்ரி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் நோக்கியா ரசிகர்கள். அவர்களை இந்த முறை ஏமாற்றவில்லை நோக்கியா. பிப்ரவரியில் நடைபெறவிருந்த MWC 2017- ல் மீண்டும் மொபைல் சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி இப்பொழுதே ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது. நோக்கியா தனது, நோக்கியா 6 என்ற ஸ்மார்ட்போனை கடந்த 13- ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்தது.

முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 5 லட்சத்தை தொட்ட முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, அடுத்த சில நாட்களில் 1 மில்லியனை தாண்டியது.19- ம் தேதி முதல் விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்தில், அனைத்து போன்களும் விற்றுத் தீர்ந்தன..ஒரு நிமிடத்தில் 1 லட்சம் போன்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது இந்த போன். 

நோக்கியா 6

இந்த வாரம் பிலிப்பைன்ஸில் விற்பனையைத் தொடங்கிய நோக்கியா விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும். நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், நீண்ட காலத்திற்கு பிறகு வெளியாகும் நோக்கியா மொபைல் என இதற்கு பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது தவிர வேறு வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன? நோக்கியா 6-ன் நிறை குறைகள் என்ன?

1. 5.5 இன்ஞ்  IPS FHD (1080 x 1920)  டிஸ்ப்ளே.

2. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.

3. 64 - பிட் ஸ்நாப்டிராகன் 430 MSM8937 ஆக்டாகோர் பிராஸசர்.

4. 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி இன்டர்னல் மெமரி.

5. மெமரி கார்டு மூலமாக மெமரியை 128 ஜி.பி வரை அதிகரித்து கொள்ளும் வசதி.

6. 16 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்புற கேமராவைக் கொண்டுள்ளது.

நோக்கியா

7. டூயல் சிம் மற்றும் 4G LTE வசதி இருக்கிறது.

8. ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்.

9. 3,000 mAh திறன் கொண்ட பேட்டரி.

10. ஆனால் USB 3.0 TYPE C ,NFC, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் மிஸ்ஸிங்.

11. நோக்கியாவின் அடையாளமான "இணைந்த கைகளை" சிறிய மாற்றத்தோடு அப்படியே இதிலும் பயன்படுத்துகிறது.

12. பழைய நோக்கியா ரிங்டோன் மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

நோக்கியா

13. நோக்கியாவின் கட்டுமான தரம் இதிலும் அப்படியே இருக்கிறது. வால்நட்களை நோக்கியா 6 போன் மூலம் உடைத்து சாப்பிடும் வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரல்.

இதன் இந்திய விலையை இன்னும் நோக்கியா அறிவிக்கவில்லை. ரூ 15000-18000 இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது,

முதல் போன் என்றாலும், ரசிகர்களை ஏமாற்றவில்லை நோக்கியா. தனது மொபைல் சந்தையை மீண்டும் பிடிக்க, முழு உத்வேகத்துடனேயே களம் இறங்கியுள்ளது. அடுத்த மாதம் 26- ம் தேதி பல ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது நோக்கியா.. அதில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான ஒரு மொபைலும் அடக்கம். அதிக நிறைகள் இருந்து, சில குறைகள் இருந்தாலும் இப்பொழுது அனைவரும் கூறுவது ஒன்றுதான் "வெல்கம் பேக் நோக்கியா".

 

http://www.vikatan.com/news/information-technology/79224-nokia-6-review.art

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நோக்கியா அதிரடி ஆரம்பம்: நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 அறிமுகம்

பதிவு: பிப்ரவரி 26, 2017 23:32

 
 

அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக நோக்கியா நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்ரோன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 
 
 
 
நோக்கியா அதிரடி ஆரம்பம்: நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 அறிமுகம்
 
பார்சிலோனா:
 
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நாளை முதல் துவங்க இருந்தாலும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இன்றே அறிமுக விழாக்களை நடத்த துவங்கியுள்ளன. பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா அறிமுக விழா ஏற்கனவே அறிவித்ததை போன்று நடத்தப்பட்டது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின் தொழில்நுட்ப சந்தையில் கால் பதிக்கும் நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. பின்லாந்தை சேர்ந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
நோக்கியா 3310:
 
909C9B39-BD01-4BD3-90CF-6B277933AF77_L_s
 
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஏற்கனவே சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நோக்கியா 3310 பீச்சர்போனினையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்படுத்தல்களுடன் காட்சியளிக்கும் நோக்கியா 3310 நான்கு கவர்ச்சிகர நிறங்களில் கிடைக்கிறது. ஒரு மாத கால பேட்டரி ஸ்டான்ட்பை, பழைய கிளாசிக் ஸ்நேக் கேம்  உள்ளிட்டவை கொண்டுள்ள புதிய நோக்கியா 3310 EUR49 அதாவது இந்திய மதிப்பில் ரூ.3448.62 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதிய மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பில் 2.4 இன்ச் வளைந்த திரை, சூரிய வெளிச்சத்திலும் திரையை துல்லியமாக பார்த்து இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய புஷ் பட்டன்கள், 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
 
இத்துடன் 2ஜி கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 16 எம்பி இன்டெர்னல் மெமரிஸ மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 3310 சிங்கில் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு வித மெமரிக்களில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
நோக்கியா 3310 உடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. அந்த வகையில் மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுவரவான நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். 
 
நோக்கியா 3:
 
7245D9BF-F534-49E8-865F-3F52D55DECE2_L_s
 
5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. 
 
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 2560 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நான்கு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 
 
நோக்கியா 5:
 
3B01C8BC-D566-48FD-9DAB-D9536B78F294_L_s
 
5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 
 
நோக்கியா 6:
 
1FFEA1F9-E635-4665-90E3-F0A5048D0884_L_s
 
5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/26233211/1070612/Nokia-3310-Reboot-Nokia-3-Nokia-5-Nokia-6-Art-Black.vpf

Link to comment
Share on other sites

நோக்கியா 3310 ஸ்மார்ட்ஃபோன் விலை என்ன தெரியுமா? #Nokia3310

Nokia 3310

2017-ம் ஆண்டுக்கான மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் பார்சிலானோவில் தொடங்கியது. இந்த விழாவில் சாம்சங் நிறுவனம் எஸ் 8 மாடல் மொபைலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நோக்கியா நிறுவனம் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3. நோக்கியா 3310  ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது. இந்திய மதிப்பில்  நோக்கியா 6 விலை தோராயமாக ரூ 16,100,  நோக்கியா 5-ன் விலை ரூ 13,300 , நோக்கியா 3 மாடலின் விலை ரூ9,700, நோக்கியா 3310 மாடலின் விலை ரூ 3,400 என நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.

http://www.vikatan.com/news/information-technology/82102-nokia-introduces-3310-smartphone-at-mobile-world-congress.html

Link to comment
Share on other sites

நோக்கியாவின் கிளாஸிக் 3310 இஸ் பேக்... ஸ்னேக் விளையாட தயாரா!? #Nokia3310

நோக்கியா

உலகம் முழுவதும் உள்ள மொபைல் போன் பிரியர்கள், குறிப்பாக நோக்கியாவின் பல்லாண்டுகால ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு மொபைல்கள், நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய மூன்றும் 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகம்செய்யப்பட்டு, விற்பனையில் சாதனைபடைத்த நோக்கியா 3310-ன் மேம்படுத்தப்பட்ட மொபைல், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

பொதுவாக கிரிக்கெட் மேட்சுகளையும், சில சமயங்களில் டென்னிஸ், பாட்மின்டன் போன்ற மற்ற சில விளையாட்டுகளின் நேரலைகளையும்  மட்டுமே பார்க்கும் பலர், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற 'மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்' என்னும் வருடாந்திர தொழில்நுட்பக் கண்காட்சியின் நேரலையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு ஒரே காரணம், நோக்கியா! ஆம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறி, தனது மொபைல் பிரிவை மைக்ரோசாஃப்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்ற அதே நோக்கியா, HMD Global என்னும் நிறுவனத்தின் மூலம் மீண்டும் மொபைல் போன் சந்தைக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாம் பெரிதும் எதிர்பார்த்துவந்த நோக்கியா 3310 மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் நோக்கியா 3, 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய 4 புதிய மொபைல்கள், நேற்று அறிமுகம்செய்யப்பட்டன. 

நோக்கியா 6

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தி 23 நொடிகளில் விற்றுத்தீர்ந்த அதே நோக்கியா 6-ன் சர்வதேச மாடல், நேற்று வெளியிடப்பட்டது. 5.5 இன்ச் முழு HD திரையுடன்கூடிய கொரில்லா கிளாஸ், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரோமையும் இது கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 8  மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைலில், இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறந்த ஒலியைக் கேட்க முடியும். மேலும், இதன் ஒலிபெருக்கிகள் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 3டி ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும்.  மேட் ப்ளாக், சில்வேர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 16,000 ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.

 

நோக்கியா 5

நோக்கியா 5, 5.2இன்ச் HD IPS திரையையும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் முறையே 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் பின்புற மற்றும் முன்புற கேமெராக்களைக்கொண்டுள்ளது. கூகுளின் பிரத்யேக அசிஸ்டன்ட் இதில் இயங்கும் என்பது சிறப்பு. மேட் ப்ளாக், சில்வர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 13,000 ரூபாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

 

 

நோக்கியா 3

நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல்களிலேயே குறைத்த திறன்கொண்ட மொபைல் இதுதான். பாலிகார்போனேட் மற்றும் அலுமினியத்திலான கட்டமைப்புடன்கூடிய  5இன்ச் திரையையும் மீடியாடேக் 6737 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற மற்றும் பின்புற  கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் விலை, தோராயமாக 9,500 ரூபாய்  இருக்குமென்று கருதப்படுகிறது.

 

 

நோக்கியா 3310

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த, 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி கோடிக்கணக்காக எண்ணிக்கையில் விற்பனையான, உலகின் பிரபலமான மொபைல் நோக்கியா 3310 மீண்டும் பல்வேறு புதிய வசதிகளுடன் 22 மணிநேர டாக்டைம் மற்றும் ஒரு மாதத்துக்கு ஸ்டாண்ட்-பையில் இருக்கும் பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. 2.4இன்ச் வண்ணத் திரையுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இது, 16 MB நினைவகத்தையும் மற்றும் 2MP கேமெராவையும் கொண்டுள்ளது. மேலும் பழைய நோக்கியா ரிங்டோனும், ஸ்னேக் கேமும் இதில் உள்ளன. வார்ம் ரெட், எல்லோ, டார்க் ப்ளூ மற்றும் கிரே ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 3,500 ரூபாய்  இருக்குமென்று கருதப்படுகிறது.

 

 

நோக்கியா 6,5 மற்றும் 3 ஆகிய மூன்று மொபைல்களும் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பான 7.1.1 நௌகட்டில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. நோக்கியா 6 மற்றும் 5,  3000 mAh பாட்டரியையும், நோக்கியா 3,  2650 mAh பாட்டரியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த நான்கு மொபைல்களும் இரண்டாவது காலாண்டில் அதாவது ஏப்ரல்-ஜூன் மாதத்துக்குள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய நிகழ்ச்சியில்... நோக்கியா, தான் உருவாக்கிய உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தின் முன்னோட்டத்தையும் அதன் வருங்கால இலக்குகளையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/information-technology/82122-nokia-is-back-with-classic-3310-model.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

 

 
 

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் தகவல்களும் கசிந்துள்ளது.

 
 
 
 
நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்
 
எல்சிங்கி:
 
அனைவரும் எதிர்பார்த்தை போன்று எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் நோக்கியாவின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பீச்சர் போனான 3310 மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 
 
பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா பீச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதே விழாவில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. 
 
EDEE00F6-A1DE-43CF-85C3-0DE68C4E58CE_L_s
 
இந்நிலையில் தற்சமயம் கிடைத்துள்ள புதிய தகவல்களில் இரண்டு வித அளவுகளில் நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.   
 
சீனாவில் இருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்களில் 4ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என இரு வித மெமரி கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இவை ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இவற்றில் யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும் இதன் டிஸ்ப்ளே அளவு குறித்து எவ்வித தகவலும் இல்லை.
 
புகைப்படங்களை எடுக்க 23 எம்பி பிரைமரி கேமராவும், இரு மாடல்களில் ஒன்றில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை சிறிய மாடல் CNY 4000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,600, பெரிய மாடல் CNY 4500 அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/08183443/1072591/Nokia-Flagship-Smartphone-With-Snapdragon-835-SoC.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.