Jump to content

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்


Recommended Posts

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

IMG_0968.jpg

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து  வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை.

2016 இல்  கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து  வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன்  பெற்று  தரம் ஆறுக்கு பெரிய பாடசாலைக்கு செல்ல போகும் அவாவுடன்  பாடசாலை செல்வதற்கான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு தை மாதம் இரண்டாம் திகதிக்காக காத்திருந்தாள்.

தந்தையும் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற கூலிப் பணத்தில் ஏனைய  இரண்டு பிள்ளைகளுக்கும் பாடசாலைக்குரிய கற்றல் உபகரணங்களை  வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில் பெற்றுக்கொடுத்துள்ளார். கனுசியா தான் பெரிய பள்ளிக் கூடத்திற்கு போகப்போறன் என்ற மகிழ்ச்சியை அயல்வர்களுடனும் பெற்றோர்களுடனும் சதோரர்களிடம் அடிக்கடி வெளிப்படுத்தியே அந்த நாளுக்காக காத்திருந்தாள். சில வேளை தாயுடன் ஏ9 வீதியால் சென்று வரும் போது தான் படிக்கப்போகும் பாடசாலையை காட்டி இதுதான் என்னுடைய பாடசாலை என பெருமிதத்துடனும் பல  தடவைகள் கூறியிருக்கின்றாள்.

விடுமுறை நாட்களில் தரம் ஆறுக்குரிய புதிய புத்தகங்கள் மற்றும் கொப்பிகளுக்கு   ஆசையோடு உறைகள் போட்டு அவற்றில் தனது பெயர் தரம் என்பவற்றையும் எழுதியதோடு பாடசாலையின் பெயரையும் கிளிநொச்சி மத்திய கலலூரி என எழுதி கனவுகளோடு இருந்திருக்கிறாள் கனுசியா.

அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது வழமைக்கு மாறாக கனுசியா நேரத்தோடு எழும்பி குளித்துவிட்டு புதிய சீருடையும் அணிந்து சுவாமி அறைக்குள் சென்று கடவுளை வணங்கி புதிய புத்தக பையை சுமந்தபடி தாயுடன் கிளிநொச்சி மத்திய கல்லூரி நோக்கி வெள்ளை பட்டாம் பூச்சியாய்  பறக்கிறாள். பாடசாலை முதலாம் தவணைக்காக 02-01-2017 இல் ஆரம்பித்தாலும் தரம் ஆறுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நாள் 06-01-2017 ஆக பாடசாலையால் அறிவிக்கப்பட்டிருந்ததால் கனுசியாவும் ஆறாம் திகதி ஆறாம்  ஆண்டில் காலடி வைக்க சென்றிருக்கிறாள்.
IMG_0970.jpg
கனுசியா போன்று பலரும் வந்திருக்கின்றார்கள். அதில் பலர் அவளுடன் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற நண்பர்களும் நண்பிகளும். ஒவ்வாருவராக அழைத்து பாடசாலை நிர்வாகம் அவர்களது விண்ணப்பங்களை பெற்று அனுமதி வழங்கி வகுப்பறைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் செல்லும் போது  சிலர் கனுசியாவை பார்த்து உனக்கும் கதிரை பிடிச்சி வைக்கிறன் கெதியா வாடி என்று அழைப்பும் விட்டிருக்கின்றார்கள். கனுசியாவும் வகுப்புக்குச் செல்லும் ஆவலோடு காத்திருக்கிறாள்.

இப்பொழுது பாடசாலை நிர்வாகம் கனுசியாவின் விண்ணப்பத்தை பரிசீலிக்கிறது. கனுசியா தாயின் அருகில் நிற்கிறாள். ஒரு சில நிமிடங்களில் அதிபர் கூறுகின்றார் இவவுக்கு இங்க அனுமதியில்லை  நீங்கள் வேறு பாடசாலையில் சேருங்கோ என்று.  தாய் ஏன் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் படித்த பிள்ளையை இங்கதானே சேர்க்கவேண்டும் என்கிறார். இல்லை  அப்படி எந்தச்  சட்டமுமில்லை இங்கு இடவசதியும் போதாது அதனைவிட இவவுக்கு தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் 62  புள்ளிகள் இங்கு சேர்ப்பது என்றால் 70 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் அதிபர். கனுசியா எதுவும் அறியாதவளாய் விழிகள் அகல விரிய தாயுக்கும் அதிபருக்கும் இடையே நடக்கும் உரையாடலில் இருவரது முகங்களையும் மாறி மாறி பார்க்கின்றாள்.

தொடர்ந்தும் தாய் இங்கு 27 புள்ளிகள் பெற்ற மகளுடன் படித்த  மாணவர்களையும் சேர்த்துள்ளீர்கள் என சுட்டிக்காட்ட, அவர்கள் எங்கள் பாடசாலையின் சூழலில் உள்ள மாணவர்கள் என அதிபர் பதிலளிக்கின்றார்.  கனுசியாவின் சகோதரியும் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில்  தரம் மூன்றில் கல்வி கற்கின்றார் எனவே  கனுசியாவை இங்கு சேர்த்தால்தான்  பாடசாலைக்கு பிள்ளைகளை ஏற்றி இறக்குவதிலும் வசதியாக இருக்கும் என கனுசியாவின் தாய் தன்னால் இயலுமானவரை காரணங்களையும் கூறிவிட்டார். ஆனால் அதிபர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

கனுசியாவின் தாய் தனது இருக்கையில் இருந்து எழுந்துவெளியே வர தன்னை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை புரிந்துகொண்டவளாய் வெளியேறுகிறாள். தன்னோடு படித்த பள்ளித்தோழிகள் வகுப்பறைக்குள் செல்ல கனுசியா தாயோடு வீதிக்கு வருகிறாள்  வீட்டுகுச் செல்ல.  கனுசியாவின் கனவுகள் உடைந்துபோகின்றன. அவளது ஆசைகள்  அழிக்கபடுகின்றதாய் உணர்கிறாள் காலையில் கடவுளிடம் நடந்த பிரார்த்தனை பொய்யாகிவிட்டது என அறிகிறாள். இப்படி அளவது உணர்வுகள் பலவிதமாய் காணப்படுகிறது. வீடு செல்லும் வரைக்கும் இருவரும் அமைதி. வீட்டைச் சென்றடைந்தும் தாயிடம் ஏன் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை? எப்பொழுது சேர்ப்பார்கள்?  எனக் கேள்விகளை கேட்கின்றாள் தாயும் நடந்தவற்றை பக்குவமாய் சொல்லி திங்கள் கிழமை கல்வித்திணைக்களத்திற்குச் சென்று அனுமதி பெற்று சேர்த்துவிடுகிறேன் கவலைப்படாதே என கூறி சமாதானப்படுகிறார். என்னை விட குறைவான மார்க்ஸ் எடுத்தவர்கள் சேர்கின்றார்கள் ஏன்  என்னை சேர்க்கவில்லை எனத் திரும்பவும் கேள்வி தாயிடம் பதில் இல்லை.

புதிய புத்தகபை, கொப்பிகள், எல்லாம் பக்குவமாய் மேசைகக்கு செல்கிறது. சீருடையை கழற்றும் போது மாத்திரம் கண்கள் பனித்தன என்கிறார்  தாய்.

திங்கள் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு செல்கின்றார்கள் அனுமதி வழங்குமாறு கடிதம்  வழங்கப்படுகிறது. மறுபடியும் பாடசாலைக்கு வருகின்றார்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. மீண்டும் வலயம் செல்கின்றனர் வேறுபாடசாலைகளில் சேர்க்குமாறு கடிதம்  வழங்க்கப்படுகிறது. இதனை தவிர கிராம அலுவலர் கடிதத்தை பெற்றுவருமாறு கூறப்படுகிறது. தாய் அதனையும் பெற்றுக்கொடுகின்றார் இருந்தும் எதுவும் நடக்கவில்லை. மகளுடன் வேறு இரண்டு பாடசாலைகளுக்கு செல்கின்றார்  அனுமதி தருமாறு மன்றாடுகின்றார் ஆனால் அங்கும் எதுவும் நடக்கவில்லை.

இப்படி பதினெட்டு நாட்களாக அழைந்து திரிகின்றார் கனுசியாவை பாடசாலையில் சேர்த்துவிடுவதற்கு ஆனால் எங்கும் எதவும் நடக்கவில்லை. பாடசாலைகளில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெறுகிறது. புதிய புத்தகங்களில் பல பாடங்கள் கற்பிக்கப்பட்டுவிட்;டன. ஆனால் 19-01-2016 வரை கனுசியாவுக்கு எந்தப் பாடசாலையிலும் அனுமதி கிடைக்கவில்லை.

என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்கமாட்டார்களா? நான் இனி படிக்க முடியாதா? பள்ளிக் கூடம் போகாத பிள்ளைகளை பிடித்து வந்து படிக்கச் சொல்கின்றார்கள் நான் பள்ளிக் கூடம் போயும் என்னை ஏன் எடுக்கினம் இல்லை என கேள்விகள் தொடர்கிறது பாவம் பதினொரு வயது சிறுமி பல விதமாய் யோசித்து யோசித்து விரக்தியாய் நிற்கின்றாள். அவளது கேள்விகளுக்கு தாயிடம் இருந்து இப்போது கண்ணீர் மாத்திரமே பதிலாக வருகிறது.

சிறுவர் உரிமைகள், கல்வி உரிமைகள், அடிப்படை உரிமைகள் என எல்லா உரிமைகளும் இருக்கிறது ஆனால் கனுசியாவுக்கு எதுவுமில்லை இதுவரைக்கும்.

http://globaltamilnews.net/archives/14401

Link to comment
Share on other sites

51 minutes ago, நவீனன் said:

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 

இப்படி நடந்ததற்கு என்ன ஆதாரம்? 

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

இப்படி நடந்ததற்கு என்ன ஆதாரம்? 

மீரா இங்கு ஏன் அல்லது ஆதாரம் என்று கேட்டால் பிரச்சனை
பேசாம இது உண்மை எண்டு ஒத்து கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமானால் அங்கிருக்கும் யாழ் உறவுகள் இச் செய்தி உண்மையா என விசாரிக்கலாம். அதன்பின் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கான உதவியைச் செய்யலாம். அவர்களின் படத்தைப்போட்டு செய்தியை சும்மா வெளியிட்டிருக்கலாம். செய்தியை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்வது தவறு. யாராவது செய்தி உண்மையா என்று அறிந்து கூறினால் பள்ளியில் சேர்க்கும் வேலையை நான் செய்யறேன். ஜீவன் சிவா அல்லது முனிவர் ஜீ உதவலாமே சரியான விடயத்தை அறிய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 

அனேகமானோர் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

கடனெடுத்து செய்த உறவுகள் அதிகம்.வட்டிக்கு வாங்கி உதவியவர்கள் இன்னும் அதிகம்.

இன்றும் செய்கின்றார்கள்....செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உங்களுக்கு இங்கு திரிகள் எரிய வேண்டும்.

ஆனால் எமக்கும் என்னைப்போன்றவர்களாலும் அங்கு  அடுப்பு எரிய வேண்டும்......... எரிகின்றது.tw_cookie:

பூவரசு.....அதன் அருமை தெரியுமா உங்களுக்கு.

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

சொல்ல வந்தது கோடி புண்ணியம் கு .சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடசாலை அதிபருக்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதில் இதுவரை இல்லை.

Link to comment
Share on other sites

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

Link to comment
Share on other sites

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன நடந்தது?...எதற்காக ஒரு பாடசாலையும் அந்த சிறுமியை சேர்க்க மாட்டேன் என்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

 

 

வாழ்த்துக்கள்.நீங்கள் படிப்பில் சாதிக்க வாழ்த்துக்கள்.

5 hours ago, நிழலி said:

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

தலைப்பில் சம்பந்தம் இல்லாமல் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.இது தான் எங்களுக்கு (மாகணம்)சில அதிகாரங்கள் கிடைத்தாலும் நடக்கப் போகுது.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உண்மையில் என்ன நடந்தது?...எதற்காக ஒரு பாடசாலையும் அந்த சிறுமியை சேர்க்க மாட்டேன் என்கிறார்கள்?

செல்வாக்கும் இருக்கவேணுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.நீங்கள் படிப்பில் சாதிக்க வாழ்த்துக்கள்.

தலைப்பில் சம்பந்தம் இல்லாமல் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.இது தான் எங்களுக்கு (மாகணம்)சில அதிகாரங்கள் கிடைத்தாலும் நடக்கப் போகுது.

ஏற்கனவே இது நடந்து கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நீங்கள் தந்த லிங்கில் இந்தச்சிறுமி பற்றி எதையும் காணவில்லையே.

Link to comment
Share on other sites

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் அதை லிங்காக தரவில்லை. யாழ் இந்து மகளிர் கல்லூரி உப அதிபரின் முகநூல் தகவலின்படி அந்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள அதே பாடசாலைக்கு திங்கள் முதல்  போகலாம் என்பதே செய்தி.

நான் அந்த தகவலை தந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மன்னித்து கொள்ளுங்கள்...

17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நவீனன் நீங்கள் தந்த லிங்கில் இந்தச்சிறுமி பற்றி எதையும் காணவில்லையே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நவீனன் said:

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் அதை லிங்காக தரவில்லை. யாழ் இந்து மகளிர் கல்லூரி உப அதிபரின் முகநூல் தகவலின்படி அந்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள அதே பாடசாலைக்கு திங்கள் முதல்  போகலாம் என்பதே செய்தி.

நான் அந்த தகவலை தந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மன்னித்து கொள்ளுங்கள்...

 

அந்த முகநூல் தகவலை இங்கு இணைத்திருக்கலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2017 at 3:22 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேண்டுமானால் அங்கிருக்கும் யாழ் உறவுகள் இச் செய்தி உண்மையா என விசாரிக்கலாம். அதன்பின் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கான உதவியைச் செய்யலாம். அவர்களின் படத்தைப்போட்டு செய்தியை சும்மா வெளியிட்டிருக்கலாம். செய்தியை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்வது தவறு. யாராவது செய்தி உண்மையா என்று அறிந்து கூறினால் பள்ளியில் சேர்க்கும் வேலையை நான் செய்யறேன். ஜீவன் சிவா அல்லது முனிவர் ஜீ உதவலாமே சரியான விடயத்தை அறிய.

செய்தி  கிளிநொச்சி என்பதால் என்னால் உறுதி  படுத்த முடியாமல் உள்ளது அக்கா அதிக மாணவ‌ மாணவிகள் கிராமத்தில் இருந்து நகர பாடசாலைகளுக்கு நகர்வதால் கிராம பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலையில் உள்ளது அதனால் அரசாங்கமே புதிய கட்டுப்பாடு வித்தித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும் பாடசாலையில் அண்மித்து வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் கிராமத்தில் இருக்கும் பல பாடசாலைகள் இயங்காமல் இருக்கிறது இதன் காரணமாக இங்கே பாடசாலைகள் , மாகாண சபை பாடசாலை , மத்திய அரசு பாடசாலை என பிரிக்கப்பட்டுள்ளது அதில் தற்போது மாகாண சபைக்குள் இருக்கும் சிறு பாடசாலைகல் இயங்கவில்லை  காரணம் பிள்ளைகள் வேற , பெரிய பாடசாலை நோக்கி நகர்வதால் இது பலருக்கு விளங்குவதில்லை இதனால் என்னவோ அதிபர் அவர்கள் சேர்க்க இயலாது என்று சொல்லி இருக்கலாம். 

எனக்கு தெரிந்த ஒரு பாடசாலையில் தரம் 1ற்கு 120 மாணவர்களை சேர்ப்பதற்க்காக அனுப்பிய அப்பிளிகேசன் என்று சொல்கின்ற அனுமதி கோரல் 800 ஐ தாண்டியது என்றால் அது ஒரு தேசிய பாடசாலை மற்ற பாடசாலைகளின் நிலை??  இப்படியிருக்கு நிலமை இங்கு அதிபர் சேர்க்கவில்லை என்றால் அவரிடம் காரணம் கேட்டு பெற்று இருக்க வேண்டும்  
 தரம் 5 மாணவர்கள் அடுத்த பாடசாலைக்கு அதாவது தேசிய பாடசாலைக்கு போக வேண்டும் என்றால் கொலசீப் பாஸ் பண்ணியிருந்தால் இலகுவாக சேர்க்கலாம் அதற்கு சேக்குலர்  உண்டு. இதை அதிபர் தட்டிக்களிக்க முடியாது 

ஊரில் உள்ள பொடியங்களுக்கு தொழிலைக்கொடுங்கள் என்றால் பலருக்கு கமறாவை கொடுத்து செய்தியாளராக்கிவிடுறார்கள் அவர்கள் போடும் செய்திக்கு ஒரு அளவு கணக்கே கிடையாது. 

  

On 1/20/2017 at 5:48 AM, குமாரசாமி said:

அனேகமானோர் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

கடனெடுத்து செய்த உறவுகள் அதிகம்.வட்டிக்கு வாங்கி உதவியவர்கள் இன்னும் அதிகம்.

இன்றும் செய்கின்றார்கள்....செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உங்களுக்கு இங்கு திரிகள் எரிய வேண்டும்.

ஆனால் எமக்கும் என்னைப்போன்றவர்களாலும் அங்கு  அடுப்பு எரிய வேண்டும்......... எரிகின்றது.tw_cookie:

பூவரசு.....அதன் அருமை தெரியுமா உங்களுக்கு.

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 

வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

ஆனால் எல்லோரும் இல்லை  

புதிய சட்டங்கள்  அரசுனால் வந்துள்ளது நிழலி ஒரு வகுப்பறையில் 30 பிள்ளைகள் மாத்திரமே  இருக்க முடியும் அதிக பிள்ளிகளை சேர்ப்பதால் 40 நிமிடத்திற்குள் ஒரு ஆசிரியரால்  எத்தனை பிள்ளைகளை பார்க்க முடியும் அவர்கள் சொப்பிகளை சரி பார்க்கமுடியும், இது ஒவ்வொரு நாளும் நான் காணும் அனுபவம் .

அதிகார துஸ்பிரயோகம்  யார்தான் செய்ய வில்லை இலங்கையில் ?? அதிபர் முதல் அல்லக்கை வரைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, முனிவர் ஜீ said:

 

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 

வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

அவர் செய்பது நல்லவிடயங்கள். அதற்காக மற்றவர்களை கேணைத்தனமாக மதிப்பிட்டு கருத்துக்கள் வைப்பது சரியல்ல....
நீங்கள் கூறும் நற்திட்டங்களை அவர் முன்னெடுப்பாரேயானால் அள்ளிக்கொடுக்க அகிலமெங்கும் ஆட்கள் இருக்கின்றர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

வாழ்த்துக்கள் அக்குழந்தைக்கு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவர்

Link to comment
Share on other sites

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த முகநூல் தகவலை இங்கு இணைத்திருக்கலாமே

 

17 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

 

 

 

இதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அவர் செய்பது நல்லவிடயங்கள். அதற்காக மற்றவர்களை கேணைத்தனமாக மதிப்பிட்டு கருத்துக்கள் வைப்பது சரியல்ல....
நீங்கள் கூறும் நற்திட்டங்களை அவர் முன்னெடுப்பாரேயானால் அள்ளிக்கொடுக்க அகிலமெங்கும் ஆட்கள் இருக்கின்றர்கள்.

நீங்கள் எப்படி விளங்கி கொண்டீர்  என்று எனக்கு தெரியாது அவர் பற்றி  எரிய வேண்டும் என்பது  அந்த பிள்ளைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் என்னவோ  அப்படி இருக்கலாம் அல்லவா .:unsure:

Link to comment
Share on other sites

14 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 

வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

தவறு முனி 
எனக்கும் இந்த திட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.