Jump to content

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்


Recommended Posts

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

IMG_0968.jpg

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து  வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை.

2016 இல்  கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து  வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன்  பெற்று  தரம் ஆறுக்கு பெரிய பாடசாலைக்கு செல்ல போகும் அவாவுடன்  பாடசாலை செல்வதற்கான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு தை மாதம் இரண்டாம் திகதிக்காக காத்திருந்தாள்.

தந்தையும் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற கூலிப் பணத்தில் ஏனைய  இரண்டு பிள்ளைகளுக்கும் பாடசாலைக்குரிய கற்றல் உபகரணங்களை  வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில் பெற்றுக்கொடுத்துள்ளார். கனுசியா தான் பெரிய பள்ளிக் கூடத்திற்கு போகப்போறன் என்ற மகிழ்ச்சியை அயல்வர்களுடனும் பெற்றோர்களுடனும் சதோரர்களிடம் அடிக்கடி வெளிப்படுத்தியே அந்த நாளுக்காக காத்திருந்தாள். சில வேளை தாயுடன் ஏ9 வீதியால் சென்று வரும் போது தான் படிக்கப்போகும் பாடசாலையை காட்டி இதுதான் என்னுடைய பாடசாலை என பெருமிதத்துடனும் பல  தடவைகள் கூறியிருக்கின்றாள்.

விடுமுறை நாட்களில் தரம் ஆறுக்குரிய புதிய புத்தகங்கள் மற்றும் கொப்பிகளுக்கு   ஆசையோடு உறைகள் போட்டு அவற்றில் தனது பெயர் தரம் என்பவற்றையும் எழுதியதோடு பாடசாலையின் பெயரையும் கிளிநொச்சி மத்திய கலலூரி என எழுதி கனவுகளோடு இருந்திருக்கிறாள் கனுசியா.

அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது வழமைக்கு மாறாக கனுசியா நேரத்தோடு எழும்பி குளித்துவிட்டு புதிய சீருடையும் அணிந்து சுவாமி அறைக்குள் சென்று கடவுளை வணங்கி புதிய புத்தக பையை சுமந்தபடி தாயுடன் கிளிநொச்சி மத்திய கல்லூரி நோக்கி வெள்ளை பட்டாம் பூச்சியாய்  பறக்கிறாள். பாடசாலை முதலாம் தவணைக்காக 02-01-2017 இல் ஆரம்பித்தாலும் தரம் ஆறுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நாள் 06-01-2017 ஆக பாடசாலையால் அறிவிக்கப்பட்டிருந்ததால் கனுசியாவும் ஆறாம் திகதி ஆறாம்  ஆண்டில் காலடி வைக்க சென்றிருக்கிறாள்.
IMG_0970.jpg
கனுசியா போன்று பலரும் வந்திருக்கின்றார்கள். அதில் பலர் அவளுடன் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற நண்பர்களும் நண்பிகளும். ஒவ்வாருவராக அழைத்து பாடசாலை நிர்வாகம் அவர்களது விண்ணப்பங்களை பெற்று அனுமதி வழங்கி வகுப்பறைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் செல்லும் போது  சிலர் கனுசியாவை பார்த்து உனக்கும் கதிரை பிடிச்சி வைக்கிறன் கெதியா வாடி என்று அழைப்பும் விட்டிருக்கின்றார்கள். கனுசியாவும் வகுப்புக்குச் செல்லும் ஆவலோடு காத்திருக்கிறாள்.

இப்பொழுது பாடசாலை நிர்வாகம் கனுசியாவின் விண்ணப்பத்தை பரிசீலிக்கிறது. கனுசியா தாயின் அருகில் நிற்கிறாள். ஒரு சில நிமிடங்களில் அதிபர் கூறுகின்றார் இவவுக்கு இங்க அனுமதியில்லை  நீங்கள் வேறு பாடசாலையில் சேருங்கோ என்று.  தாய் ஏன் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் படித்த பிள்ளையை இங்கதானே சேர்க்கவேண்டும் என்கிறார். இல்லை  அப்படி எந்தச்  சட்டமுமில்லை இங்கு இடவசதியும் போதாது அதனைவிட இவவுக்கு தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் 62  புள்ளிகள் இங்கு சேர்ப்பது என்றால் 70 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் அதிபர். கனுசியா எதுவும் அறியாதவளாய் விழிகள் அகல விரிய தாயுக்கும் அதிபருக்கும் இடையே நடக்கும் உரையாடலில் இருவரது முகங்களையும் மாறி மாறி பார்க்கின்றாள்.

தொடர்ந்தும் தாய் இங்கு 27 புள்ளிகள் பெற்ற மகளுடன் படித்த  மாணவர்களையும் சேர்த்துள்ளீர்கள் என சுட்டிக்காட்ட, அவர்கள் எங்கள் பாடசாலையின் சூழலில் உள்ள மாணவர்கள் என அதிபர் பதிலளிக்கின்றார்.  கனுசியாவின் சகோதரியும் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில்  தரம் மூன்றில் கல்வி கற்கின்றார் எனவே  கனுசியாவை இங்கு சேர்த்தால்தான்  பாடசாலைக்கு பிள்ளைகளை ஏற்றி இறக்குவதிலும் வசதியாக இருக்கும் என கனுசியாவின் தாய் தன்னால் இயலுமானவரை காரணங்களையும் கூறிவிட்டார். ஆனால் அதிபர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

கனுசியாவின் தாய் தனது இருக்கையில் இருந்து எழுந்துவெளியே வர தன்னை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை புரிந்துகொண்டவளாய் வெளியேறுகிறாள். தன்னோடு படித்த பள்ளித்தோழிகள் வகுப்பறைக்குள் செல்ல கனுசியா தாயோடு வீதிக்கு வருகிறாள்  வீட்டுகுச் செல்ல.  கனுசியாவின் கனவுகள் உடைந்துபோகின்றன. அவளது ஆசைகள்  அழிக்கபடுகின்றதாய் உணர்கிறாள் காலையில் கடவுளிடம் நடந்த பிரார்த்தனை பொய்யாகிவிட்டது என அறிகிறாள். இப்படி அளவது உணர்வுகள் பலவிதமாய் காணப்படுகிறது. வீடு செல்லும் வரைக்கும் இருவரும் அமைதி. வீட்டைச் சென்றடைந்தும் தாயிடம் ஏன் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை? எப்பொழுது சேர்ப்பார்கள்?  எனக் கேள்விகளை கேட்கின்றாள் தாயும் நடந்தவற்றை பக்குவமாய் சொல்லி திங்கள் கிழமை கல்வித்திணைக்களத்திற்குச் சென்று அனுமதி பெற்று சேர்த்துவிடுகிறேன் கவலைப்படாதே என கூறி சமாதானப்படுகிறார். என்னை விட குறைவான மார்க்ஸ் எடுத்தவர்கள் சேர்கின்றார்கள் ஏன்  என்னை சேர்க்கவில்லை எனத் திரும்பவும் கேள்வி தாயிடம் பதில் இல்லை.

புதிய புத்தகபை, கொப்பிகள், எல்லாம் பக்குவமாய் மேசைகக்கு செல்கிறது. சீருடையை கழற்றும் போது மாத்திரம் கண்கள் பனித்தன என்கிறார்  தாய்.

திங்கள் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு செல்கின்றார்கள் அனுமதி வழங்குமாறு கடிதம்  வழங்கப்படுகிறது. மறுபடியும் பாடசாலைக்கு வருகின்றார்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. மீண்டும் வலயம் செல்கின்றனர் வேறுபாடசாலைகளில் சேர்க்குமாறு கடிதம்  வழங்க்கப்படுகிறது. இதனை தவிர கிராம அலுவலர் கடிதத்தை பெற்றுவருமாறு கூறப்படுகிறது. தாய் அதனையும் பெற்றுக்கொடுகின்றார் இருந்தும் எதுவும் நடக்கவில்லை. மகளுடன் வேறு இரண்டு பாடசாலைகளுக்கு செல்கின்றார்  அனுமதி தருமாறு மன்றாடுகின்றார் ஆனால் அங்கும் எதுவும் நடக்கவில்லை.

இப்படி பதினெட்டு நாட்களாக அழைந்து திரிகின்றார் கனுசியாவை பாடசாலையில் சேர்த்துவிடுவதற்கு ஆனால் எங்கும் எதவும் நடக்கவில்லை. பாடசாலைகளில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெறுகிறது. புதிய புத்தகங்களில் பல பாடங்கள் கற்பிக்கப்பட்டுவிட்;டன. ஆனால் 19-01-2016 வரை கனுசியாவுக்கு எந்தப் பாடசாலையிலும் அனுமதி கிடைக்கவில்லை.

என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்கமாட்டார்களா? நான் இனி படிக்க முடியாதா? பள்ளிக் கூடம் போகாத பிள்ளைகளை பிடித்து வந்து படிக்கச் சொல்கின்றார்கள் நான் பள்ளிக் கூடம் போயும் என்னை ஏன் எடுக்கினம் இல்லை என கேள்விகள் தொடர்கிறது பாவம் பதினொரு வயது சிறுமி பல விதமாய் யோசித்து யோசித்து விரக்தியாய் நிற்கின்றாள். அவளது கேள்விகளுக்கு தாயிடம் இருந்து இப்போது கண்ணீர் மாத்திரமே பதிலாக வருகிறது.

சிறுவர் உரிமைகள், கல்வி உரிமைகள், அடிப்படை உரிமைகள் என எல்லா உரிமைகளும் இருக்கிறது ஆனால் கனுசியாவுக்கு எதுவுமில்லை இதுவரைக்கும்.

http://globaltamilnews.net/archives/14401

Link to comment
Share on other sites

51 minutes ago, நவீனன் said:

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 

இப்படி நடந்ததற்கு என்ன ஆதாரம்? 

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

இப்படி நடந்ததற்கு என்ன ஆதாரம்? 

மீரா இங்கு ஏன் அல்லது ஆதாரம் என்று கேட்டால் பிரச்சனை
பேசாம இது உண்மை எண்டு ஒத்து கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமானால் அங்கிருக்கும் யாழ் உறவுகள் இச் செய்தி உண்மையா என விசாரிக்கலாம். அதன்பின் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கான உதவியைச் செய்யலாம். அவர்களின் படத்தைப்போட்டு செய்தியை சும்மா வெளியிட்டிருக்கலாம். செய்தியை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்வது தவறு. யாராவது செய்தி உண்மையா என்று அறிந்து கூறினால் பள்ளியில் சேர்க்கும் வேலையை நான் செய்யறேன். ஜீவன் சிவா அல்லது முனிவர் ஜீ உதவலாமே சரியான விடயத்தை அறிய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 

அனேகமானோர் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

கடனெடுத்து செய்த உறவுகள் அதிகம்.வட்டிக்கு வாங்கி உதவியவர்கள் இன்னும் அதிகம்.

இன்றும் செய்கின்றார்கள்....செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உங்களுக்கு இங்கு திரிகள் எரிய வேண்டும்.

ஆனால் எமக்கும் என்னைப்போன்றவர்களாலும் அங்கு  அடுப்பு எரிய வேண்டும்......... எரிகின்றது.tw_cookie:

பூவரசு.....அதன் அருமை தெரியுமா உங்களுக்கு.

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

சொல்ல வந்தது கோடி புண்ணியம் கு .சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடசாலை அதிபருக்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதில் இதுவரை இல்லை.

Link to comment
Share on other sites

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

Link to comment
Share on other sites

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன நடந்தது?...எதற்காக ஒரு பாடசாலையும் அந்த சிறுமியை சேர்க்க மாட்டேன் என்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

 

 

வாழ்த்துக்கள்.நீங்கள் படிப்பில் சாதிக்க வாழ்த்துக்கள்.

5 hours ago, நிழலி said:

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

தலைப்பில் சம்பந்தம் இல்லாமல் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.இது தான் எங்களுக்கு (மாகணம்)சில அதிகாரங்கள் கிடைத்தாலும் நடக்கப் போகுது.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உண்மையில் என்ன நடந்தது?...எதற்காக ஒரு பாடசாலையும் அந்த சிறுமியை சேர்க்க மாட்டேன் என்கிறார்கள்?

செல்வாக்கும் இருக்கவேணுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.நீங்கள் படிப்பில் சாதிக்க வாழ்த்துக்கள்.

தலைப்பில் சம்பந்தம் இல்லாமல் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.இது தான் எங்களுக்கு (மாகணம்)சில அதிகாரங்கள் கிடைத்தாலும் நடக்கப் போகுது.

ஏற்கனவே இது நடந்து கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நீங்கள் தந்த லிங்கில் இந்தச்சிறுமி பற்றி எதையும் காணவில்லையே.

Link to comment
Share on other sites

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் அதை லிங்காக தரவில்லை. யாழ் இந்து மகளிர் கல்லூரி உப அதிபரின் முகநூல் தகவலின்படி அந்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள அதே பாடசாலைக்கு திங்கள் முதல்  போகலாம் என்பதே செய்தி.

நான் அந்த தகவலை தந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மன்னித்து கொள்ளுங்கள்...

17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நவீனன் நீங்கள் தந்த லிங்கில் இந்தச்சிறுமி பற்றி எதையும் காணவில்லையே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நவீனன் said:

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் அதை லிங்காக தரவில்லை. யாழ் இந்து மகளிர் கல்லூரி உப அதிபரின் முகநூல் தகவலின்படி அந்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள அதே பாடசாலைக்கு திங்கள் முதல்  போகலாம் என்பதே செய்தி.

நான் அந்த தகவலை தந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மன்னித்து கொள்ளுங்கள்...

 

அந்த முகநூல் தகவலை இங்கு இணைத்திருக்கலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2017 at 3:22 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேண்டுமானால் அங்கிருக்கும் யாழ் உறவுகள் இச் செய்தி உண்மையா என விசாரிக்கலாம். அதன்பின் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கான உதவியைச் செய்யலாம். அவர்களின் படத்தைப்போட்டு செய்தியை சும்மா வெளியிட்டிருக்கலாம். செய்தியை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்வது தவறு. யாராவது செய்தி உண்மையா என்று அறிந்து கூறினால் பள்ளியில் சேர்க்கும் வேலையை நான் செய்யறேன். ஜீவன் சிவா அல்லது முனிவர் ஜீ உதவலாமே சரியான விடயத்தை அறிய.

செய்தி  கிளிநொச்சி என்பதால் என்னால் உறுதி  படுத்த முடியாமல் உள்ளது அக்கா அதிக மாணவ‌ மாணவிகள் கிராமத்தில் இருந்து நகர பாடசாலைகளுக்கு நகர்வதால் கிராம பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலையில் உள்ளது அதனால் அரசாங்கமே புதிய கட்டுப்பாடு வித்தித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும் பாடசாலையில் அண்மித்து வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் கிராமத்தில் இருக்கும் பல பாடசாலைகள் இயங்காமல் இருக்கிறது இதன் காரணமாக இங்கே பாடசாலைகள் , மாகாண சபை பாடசாலை , மத்திய அரசு பாடசாலை என பிரிக்கப்பட்டுள்ளது அதில் தற்போது மாகாண சபைக்குள் இருக்கும் சிறு பாடசாலைகல் இயங்கவில்லை  காரணம் பிள்ளைகள் வேற , பெரிய பாடசாலை நோக்கி நகர்வதால் இது பலருக்கு விளங்குவதில்லை இதனால் என்னவோ அதிபர் அவர்கள் சேர்க்க இயலாது என்று சொல்லி இருக்கலாம். 

எனக்கு தெரிந்த ஒரு பாடசாலையில் தரம் 1ற்கு 120 மாணவர்களை சேர்ப்பதற்க்காக அனுப்பிய அப்பிளிகேசன் என்று சொல்கின்ற அனுமதி கோரல் 800 ஐ தாண்டியது என்றால் அது ஒரு தேசிய பாடசாலை மற்ற பாடசாலைகளின் நிலை??  இப்படியிருக்கு நிலமை இங்கு அதிபர் சேர்க்கவில்லை என்றால் அவரிடம் காரணம் கேட்டு பெற்று இருக்க வேண்டும்  
 தரம் 5 மாணவர்கள் அடுத்த பாடசாலைக்கு அதாவது தேசிய பாடசாலைக்கு போக வேண்டும் என்றால் கொலசீப் பாஸ் பண்ணியிருந்தால் இலகுவாக சேர்க்கலாம் அதற்கு சேக்குலர்  உண்டு. இதை அதிபர் தட்டிக்களிக்க முடியாது 

ஊரில் உள்ள பொடியங்களுக்கு தொழிலைக்கொடுங்கள் என்றால் பலருக்கு கமறாவை கொடுத்து செய்தியாளராக்கிவிடுறார்கள் அவர்கள் போடும் செய்திக்கு ஒரு அளவு கணக்கே கிடையாது. 

  

On 1/20/2017 at 5:48 AM, குமாரசாமி said:

அனேகமானோர் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

கடனெடுத்து செய்த உறவுகள் அதிகம்.வட்டிக்கு வாங்கி உதவியவர்கள் இன்னும் அதிகம்.

இன்றும் செய்கின்றார்கள்....செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உங்களுக்கு இங்கு திரிகள் எரிய வேண்டும்.

ஆனால் எமக்கும் என்னைப்போன்றவர்களாலும் அங்கு  அடுப்பு எரிய வேண்டும்......... எரிகின்றது.tw_cookie:

பூவரசு.....அதன் அருமை தெரியுமா உங்களுக்கு.

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 

வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

ஆனால் எல்லோரும் இல்லை  

புதிய சட்டங்கள்  அரசுனால் வந்துள்ளது நிழலி ஒரு வகுப்பறையில் 30 பிள்ளைகள் மாத்திரமே  இருக்க முடியும் அதிக பிள்ளிகளை சேர்ப்பதால் 40 நிமிடத்திற்குள் ஒரு ஆசிரியரால்  எத்தனை பிள்ளைகளை பார்க்க முடியும் அவர்கள் சொப்பிகளை சரி பார்க்கமுடியும், இது ஒவ்வொரு நாளும் நான் காணும் அனுபவம் .

அதிகார துஸ்பிரயோகம்  யார்தான் செய்ய வில்லை இலங்கையில் ?? அதிபர் முதல் அல்லக்கை வரைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, முனிவர் ஜீ said:

 

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 

வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

அவர் செய்பது நல்லவிடயங்கள். அதற்காக மற்றவர்களை கேணைத்தனமாக மதிப்பிட்டு கருத்துக்கள் வைப்பது சரியல்ல....
நீங்கள் கூறும் நற்திட்டங்களை அவர் முன்னெடுப்பாரேயானால் அள்ளிக்கொடுக்க அகிலமெங்கும் ஆட்கள் இருக்கின்றர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

வாழ்த்துக்கள் அக்குழந்தைக்கு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவர்

Link to comment
Share on other sites

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த முகநூல் தகவலை இங்கு இணைத்திருக்கலாமே

 

17 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

 

 

 

இதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அவர் செய்பது நல்லவிடயங்கள். அதற்காக மற்றவர்களை கேணைத்தனமாக மதிப்பிட்டு கருத்துக்கள் வைப்பது சரியல்ல....
நீங்கள் கூறும் நற்திட்டங்களை அவர் முன்னெடுப்பாரேயானால் அள்ளிக்கொடுக்க அகிலமெங்கும் ஆட்கள் இருக்கின்றர்கள்.

நீங்கள் எப்படி விளங்கி கொண்டீர்  என்று எனக்கு தெரியாது அவர் பற்றி  எரிய வேண்டும் என்பது  அந்த பிள்ளைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் என்னவோ  அப்படி இருக்கலாம் அல்லவா .:unsure:

Link to comment
Share on other sites

14 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 

வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

தவறு முனி 
எனக்கும் இந்த திட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.