Jump to content

மைத்திரிபால மரணிப்பது நிச்சயம் : நடக்காவிட்டால் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் : மீண்டும் அடித்து கூறும் ஜோதிடர் (காணொளி இணைப்பு


Recommended Posts

மைத்திரிபால மரணிப்பது நிச்சயம் : நடக்காவிட்டால் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் : மீண்டும் அடித்து கூறும் ஜோதிடர் (காணொளி இணைப்பு)

 

எனது ஜோதிடத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பது நிச்சயமாகும். எனினும் அவ்வாறு நடக்காவிட்டால் நான் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் என ஜோதிடர் றோஹன விஜயமுனி மீண்டும் தெரிவித்துள்ளார்.

Vijitha-Rohana-Wijemuni-maithripala-shoc

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம்  ஜனவரி 26 ஆம் திகதி உயிரிழந்து விடுவார் என றோஹன விஜயமுனி என்ற ஜோதிடர் கடந்த வருடம் ஆரூடம் கூறியிருந்தார். இவரின் கருத்து கடந்த  வருடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மீண்டும் ஒரு காணொளியை குறித்த ஜோதிடர் வெளியிட்டுள்ளார். 

அக் காணொயிளில் அவர் தெரிவித்துள்ளதாவது,

'தற்போதைய ஜனாதிபதியின் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது என, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று சரியாக மூன்று மாத காலத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தேன். நான் அரசியல் இலாபங்களுக்காக இதனை கூறவில்லை. ஜோதிடத்தின் பிரகாரமே இதனைத் தெரிவித்திருந்தேன். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு அமைச்சு பதவியை வழங்கி அவரே அதனை பறித்துக்கொண்டார். அவருக்கும் எனக்கு எவ்வித உறவும் இல்லை. அவர் என்னுடைய நண்பரும் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்று கூறியிருந்தேன். அதேபோன்று மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தேன்.

 

  மைத்திரிபால வெற்றி பெறுவார் என கூறியதை ஏற்றுக்கொண்ட உங்களுக்கு ஏன் மைத்திரிபால இறந்துவிடுவார் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

என்னுடைய கருத்தை ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.  ஆனால் எனது பேஸ்புக் பக்கத்தில் உள்ள சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறானர்கள் உடனடியாக எனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும். 

ஜனாதிபதி இம்மாதம் 26 ஆம் திகதி இறந்து விடுவார் என கூறியிருந்தேன். அதற்கான காலமும் நெருங்கி வருகின்றது. ஆனால் ஜனாதிபதி மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

எனினும் தற்போது சனிப் பெயர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் படி எதிர் வரும் ஏப்பரல் 20 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோம்பர் 26ஆம் திகதி வரை சனிப்பெயர்ச்சி உச்சத்தில் இருக்கும். 

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோம்பர் 26ஆம் திகதிக்கு முன்னர் மரணிப்பது நிச்சயமாகும். இதனை ஜோதிட அடிப்படையில் மாத்திரமே கூறுகின்றேன்.

எனவே பத்து மாதங்களுக்கு பின்னர் என்ன நடக்கப்போகின்றது என்று காத்திருந்து பாருங்கள். 

நான் ஆருடம் கூறுவதால் எனக்கு யாரும் பரிசுப் பொருட்களை வழங்குவதில்லை.

நான் கூறியது நடக்காவிட்டால் நான் இனி ஜோதிடம் கூறமாட்டேன். எனவே  என்னை திட்டும் நாய்களுக்கு நான் அஞ்சப்போவதும் இல்லை. சிங்கம் எப்போதும் புல் தின்னாது அப்படியானவனே நான்.

யாருக்கும் பயந்தவனும் அல்ல. 10 மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். இந்த மரணம் நடக்கின்றதா இல்லையா என்று. அதன் பின்னர் பார்ப்போம் யார் உண்மையானவர் என்று என தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப....இன்னும் கொஞ்சநாள்த்தான் கிடக்கு...:cool:

Link to comment
Share on other sites

சிங்களவர் மனநிலை அறிந்து பிழைக்கத்தெரிந்த ஜோதிடர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்ப....இன்னும் கொஞ்சநாள்த்தான் கிடக்கு...:cool:

 
 

செத்த வீட்டுக்கு போறதா, இல்லையா எண்டு யோசிக்கிறன். 

நீங்கள் போவியளோ, சாமியண்ணை....?

(இந்த ஆள், ராஜீவுக்கே அடிக்க வெளிக்கிட்டு பிழை விட்டவர்... இப்ப சாத்திரத்தால ஆட்களை முடிக்க நிக்கிறார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

செத்த வீட்டுக்கு போறதா, இல்லையா எண்டு யோசிக்கிறன். 

நீங்கள் போவியளோ, சாமியண்ணை....?

(இந்த ஆள், ராஜீவுக்கே அடிக்க வெளிக்கிட்டு பிழை விட்டவர்... இப்ப சாத்திரத்தால ஆட்களை முடிக்க நிக்கிறார்)

எட்டுச்செலவு வைப்பினமெண்டால் கட்டாயம் போவன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது என்ன‌ என்றால் பெரிய‌வ‌ரே யாழில் இருக்கும் வாத்தியார் என‌க்கு த‌மிழை ஒழுங்காய் தான் சொல்லி தந்த‌வ‌ர்  வாத்தியார் த‌மிழை சொல்லி த‌ரும் போது என்ர‌ நினைவெல்லாம் ப‌ழைய‌ காத‌லின்ட‌ நினைவாக‌ இருந்த‌ ப‌டியால் , வாத்தியார் சொல்லித் தந்ததை நினைவில் வைத்திருக்கவில்லை இதைப் பார்த்த வாத்தியார் இனிஎன்னை கண்காணிப்பார் ஆன‌ ப‌டியால் இனி தமிழில் எழுதுவதில் முதிர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது😁..................................... @வாத்தியார்
    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.