Jump to content

சிறுபான்மை மக்களுக்கு அநீதி தேர்தலுக்கு அவசரம் வேண்டாம் எல்லை நிர்ணயக்குழு அறிக்கை தொடர்பில் மு.கா. த.மு.கூ., ஈ.பி.டி.பி., ந.ம.இ. கூட்டாக வேண்டுகோள்


Recommended Posts

சிறு­பான்மை மக்களுக்கு அநீதி தேர்தலுக்கு அவசரம் வேண்டாம்

 

 

எல்லை நிர்ணயக்குழு அறிக்கை தொடர்பில் மு.கா. த.மு.கூ., ஈ.பி.டி.பி., ந.ம.இ. கூட்­டாக வேண்டுகோள்
(ஆர்.ராம்)

எல்லை நிர்­ணயக்குழுவின் அறிக்கை உள்­ளூராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்­ச­ரி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் உட­ன­டி­யாக வர்த்த­மானி பிர­சு­ரத்தை வெளியிட்டு புதிய முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான செயற்­பா­டா­னது சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கு இழைக்­கப்­படும் பெரும் அநீ­தி­யாகும். அத்­துடன், சிறு மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள்

வெகு­வாக பாதிக்­கப்­ப­டு­கின்ற வகையில் முன்­னெ­டுக்­கப்­படும் ஜன­நா­யக விரோத செயற்­பா­டாகும். ஆகவே அச்­செ­யற்­பாட்டை கைவிட்டு அனைத்து தரப்­பி­ன­ரையும் உள்­ளக்­கிய விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று உட­ன­டி­யாக நடத்­தப்­பட்டு பொது இணக்­கப்­பாடு எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீ முஸ்லிம் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்சி, நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் ஆகியன கூட்­டாக வலி­யு­றுத்­தி­யுள்­ளன.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் ஆகிய அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று நேற்று புதன்­கி­ழமை மு.கா.வின் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமில் நேற்று மாலை 6.30முதல் இரவு 8 மணி வரையில் நடை­பெற்­றி­ருந்­தது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் மு.கா.சார்பில் அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான குழு­வி­னரும், தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்பில் அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ­ க­ணேசன் தலை­மை­யி­லான குழு­வி­னரும், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி சார்பில் அதன் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான குழு­வி­னரும், நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்­கத்தின் சார்பில் அதன் பொதுச்­செ­ய­லாளர் நஜாப் மொஹமட் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது மிக­முக்­கி­ய­மாக அசோக பீரிஸ் தலை­மையில் எல்லை நிர்­ணயக் குழுவின் அறிக்­கை­யா­னது அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ச­ர­அ­வ­ர­மாக உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்தும் நோக்­கி­லான வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­சுரம் வெளியி­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றமை, நடை­பெ­ற­வுள்ள உள்­ளூராட்­சி­மன்ற தேர்­த­லா­னது நடத்­தப்­படும் முறைமை தொடர்­பா­கவும் எழுந்­துள்ள விமர்­ச­னங்கள், சர்ச்­சைகள் குறித்தும் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து கூட்­டாக ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த போதே மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்­கையும் கோரிக்­கையும் விடுத்­தனர். அக்­க­ருத்­துக்கள் வரு­மாறு,

அமைச்சர் ரவூப் ஹக்கீம்  எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் புதிய தேர்தல் முறை­மை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்தும் நோக்­கி­லான பரிந்­து­ரைகள் அமைச்­ச­ரி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளன.  

அத்­தோடு எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்கை சம்­பந்­த­மாக பல்­வேறு விமர்­ச­னங்கள் எமக்­குள்­ளன. அவ்­வா­றான விமர்­ச­னங்­களை கருத்தில் எடுக்­காதும் தேவை­யான சட்ட திருத்­தங்­களைச் செய்­யாதும் அவ­சர அவ­ச­ர­மாக வர்த்­த­மானி பிர­சுரத்தை வெளியி­டு­வ­தற்கு எத்­த­னிப்­ப­தா­னது எமக்கு இழைக்­கப்­படும் மிகப்­பெரும் அநீ­தி­யாகும்.

எல்லை நிர்­ணயக் குழுவின் அறிக்­கையில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள புதிய தேர்தல் முறை­மையின் பிர­காரம் சிறு மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் வெகு­வாக பாதிக்­கின்­றன. ஆகவே அந்த சர்ச்­சை­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்வைக் கண்ட பின்­னரே அவ்­வ­றிக்கை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்க வேண்டும்.

தேர்தல் சட்­டத்தில் 56 இடங்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யி­ருப்­ப­தாக தேர்தல் ஆணைக்­கு­ழுக்­களின் தலைவர் ஏற்­க­னவே சிபார்­சு­களைச் செய்­துள்ளார். குறித்­து­ரைக்­கப்­பட்­டுள்ள பிர­தி­நிதிகள் தெரிவு முறை­மையில் இருக்கும் பாரிய பாதிப்­புக்­களை நாம் ஏற்­க­னவே அவ­ரி­டத்­திலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளோம்.

எனவே சிறு மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள், அனைத்துக் கட்­சித்­த­லை­வர்கள் தீர்க்­க­மான கலந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்டு ஒரு­மித்த கருத்­தையும் பெற்ற பின்­னரே அது சம்­பந்­த­மாக நட­வ­டிக்கை எடுப்­பது தான் சிறந்­ததாகும். தற்­போ­தைய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­காரம் உட­ன­டி­யாக வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­சுரம் செய்­யப்­ப­டு­வது ஜன­நாயக விரோத செயற்­பா­டாகும். அவ்­வா­றான செயற்­பாட்­டிற்கு நாம் கடு­மை­யான கண்­ட­னத்­தையும் தெரி­வித்­துக்­கொள்­கின்றோம் என்றார்.

அமைச்சர் மனோ­ க­ணேசன்

எமக்கு தற்­போது உட­ன­டிப்­பி­ரச்­சி­னை­யொன்று வாசல்­க­தவைத் தட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் உட­ன­டி­யாக நடத்தும் நோக்­கத்தில் எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை அதன் தலைவர் அசோக பீரி­ஸினால் உள்­ளூராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­கின்றோம்.

நீண்­ட­கா­ல­மாக இழுத்­த­டிக்­கப்­பட்ட விடயம் தற்­போது முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­வுடன் அனைத்து விட­யங்­களும் நிறைவு பெற்று தேர்­தலை நடத்­தி­வி­டலாம் எனக்­கொள்ள முடி­யாது. அது தவ­றாகும்.

தேர்தல் சட்­டத்தில் 54இற்கும் மேற்­பட்ட குறை­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மகிந்த தேசப்­பி­ரி­யவே வௌிப்­ப­டை­யாக கூறி­யுள்ளார்.

அது­மட்­டு­மல்­லாது கலப்பு தேர்தல் முறை­மையின் பிர­காரம் 70சத­வீதம் தொகுதி முறை­மை­யிலும் 30சத­வீதம் விகி­தா­சார முறை­மை­யிலும் தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மெனக் கூறப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் தற்­போது நடை­முறை ரீதி­யாக பார்க்­கையில் 79சத­வீதம் தொகுதி முறை­மை­யிலும் 21சத­வீ­தமே விகி­தா­ச­ர­ மு­றை­மையும் கொண்ட கலப்புத் தேர்தல் முறை­மையே வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இது மிகப்­பெரும் அநீ­தி­யாகும்.

உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது தற்­போது 70க்கு 30 சத­வீதம் அதா­வது 70சத­வீதம் தொகுதி முறை­மை­யிலும் 30சத­வீதம் விகி­தா­சார முறைமை எனக் கூறப்­பட்­டாலும் தேர்தல் முறைமை நடை­மு­றையில் கொண்டு வரப்­படும் போது 60க்கு 40 சத­வீதம் அதா­வது 60சத­வீதம் தெகுதி முறை­மை­யிலும் 40சத­வீதம் விகி­தா­சார முறை­மை­யா­கவும் அமையும் என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அவ்­வா­றான உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டாலும் தற்­போ­துள்ள நிலை­மையைப் பார்க்­கின்­ற­போது மிக­மிக மோச­மான நிலை­மையே இருக்­கின்­றது. அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும், தேர்­தல்கள் ஆணை­யா­ளரும் அவ­ச­ரப்­படக் கூடாது என ஆணித்­த­ர­மாக கூற விரும்­பு­கின்றோம்.

ஏனென்றால் இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்­த­வர்­களும் நியா­ய­மான பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்றால் மட்­டுமே உண்­மை­யான ஜன­நா­யகத் தேர்­த­லாக அமையும். வெறு­மனே தேர்­தலை அவ­ச­ர­மாக நடத்­து­வ­தனால் நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலைநாட்டிவிட முடியாது என்பதை கல்வி கற்ற கனவான்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோரை நேரடியாக சந்திப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறைமை சீர்திருத்தம் சம்பந்தமாக சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதிக்கின்ற வகையில் அமைவதனால் அந்த முயற்சியை இடைநிறுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் அனைத்து கட்சிகளிடையேயான கலந்துரையாடல் நடத்தப்பட்டு பொதுவான இணக்கத்திற்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-19#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.