Jump to content

டிஜிட்டல் மறு பதிப்பு: இளம் ரசிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பா?


Recommended Posts

டிஜிட்டல் மறு பதிப்பு: இளம் ரசிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பா?

 

 

காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு நேற்று செவ்வாய்க்கிழமைதமிழகத்தில் உள்ள சில திரைஅரங்குகளில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது.

மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு

 மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு

எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் தொடக்க விழாவையொட்டி, சென்னையில் சில திரையரங்களிலும் மற்றும் கோவையில் சில திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது மறு பதிப்பு செவ்வாயன்று வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில், 1965-இல், பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான மிகப் பெரிய வெற்றித் திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

இத்திரைப்படம் இன்று சிறப்பு திரையிடப்படும் சூழலில், திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்படுவதன் நோக்கம் குறித்து நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறுகையில், ''பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்படுவது வயதானவர்களுக்கு அவர்களின் பழைய நினைவை கிளறுவதாகவும், இளைஞர்களுக்கு பழைய திரைப்படங்களின் பெருமைகளை, சாதனைகளை பார்க்க ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது'' என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ''டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்பட்ட திரைப்படங்களில் 'கர்ணன்' மிக வெற்றிகரமாக ஓடியது. இதற்கு முன்பாக, 2014-இல் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்பட்ட ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படமும் வெற்றி பெற்றது. 'பாசமலர்' திரைப்படம் சரியாக போகவில்லை. 'திருவிளையாடல்' திரைப்படம் சரியான முறையில் வெளியீடு செய்யப்படாததால், அது வெற்றி பெறவில்லை'' என்று தெரிவித்தார்.

மகத்தான வெற்றி பெற்ற 'கர்ணன்' டிஜிட்டல் மறு பதிப்பு

மகத்தான வெற்றி பெற்ற 'கர்ணன்' டிஜிட்டல் மறு பதிப்பு  மகத்தான வெற்றி பெற்ற 'கர்ணன்' டிஜிட்டல் மறு பதிப்பு

டிஜிட்டல் மறு பதிப்புகளுக்கு பெரும் செலவாகாது. ஆனால், எந்த வகை திரைப்படங்களை மறுபதிப்பு செய்தால் மக்களை கவரும் என்று நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஒய். ஜி. மகேந்திரன் குறிப்பிட்டார்

''ஆரம்பத்தில் 'கர்ணன்' திரைப்படம் மறு பதிப்பு செய்யப்பட்ட போது, பலரும் இந்த முயற்சி வெற்றி பெறாது என்று கூறினார்கள். ஆனால், இது வெற்றி பெற்ற பின்னர், பலரும் வியப்பில் ஆழ்ந்தனர், இப்படம் 150 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது'' என்று 'கர்ணன்' திரைப்படம் மறு பதிப்பு செய்யப்பட்டு வெற்றி பெற்றது குறித்து அவர் குறிப்பிட்டார்.

’உத்தம புத்திரன்’, மாறுபட்ட கண்ணோட்டத்தோடு வெளியான ’புதிய பறவை’ ஆகிய திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்படுவது தனது விருப்பம் என்று ஒய். ஜி. மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.

அபிமான நடிகர்களின் திரைப்படங்களுக்கு என்றும் ஆதரவளிக்கும் ரசிகர்கள்  அபிமான நடிகர்களின் திரைப்படங்களுக்கு என்றும் ஆதரவளிக்கும் ரசிகர்கள்

'லாரன்ஸ் ஆஃப் அரேபியா'

'லாரன்ஸ் ஆஃப் அரேபியா' போன்ற பல ஹாலிவுட் திரைப்படங்கள் வெற்றிகரமாக டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளன. பாலிவுட்டிலும் முகல் இ - ஆஸாம் போன்ற திரைப்படங்கள் டிஜிட்டல் மறு பதிப்பு செய்யப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றது.

தமிழில் இன்னமும் பரவலாக டிஜிட்டல் மறு பதிப்பு வெளிவராதது ஏன் என்று திரைப்பட ஆய்வாளர் மற்றும் விமர்சகரான வெற்றி, பிபிசி தமிழோசையிடம் விளக்கினார்.

''பல திரைப்படங்களின் நெகட்டிவ் பதிப்புகள் இங்கு பராமரிக்கப்படுவதில்லை. மற்ற இடங்களில் நெகட்டிவ் பிரிண்ட்கள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. நடிகர் கமல்ஹாசன் போன்றோர் அனைத்து திரைப்படங்களும் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்'' என்று வெற்றி நினைவு கூர்ந்தார்.

டிஜிட்டல் மறு பதிப்பு தொழில்நுட்ப அம்சங்கள்

டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் எவ்வாறு மறு பதிப்பு செய்யப்படுகிறது என்பது குறித்து வெற்றி கூறுகையில், '' பழைய திரைப்படங்களின் இமேஜ் நெகடிவ் (படம்) மற்றும் சவுண்ட் நெகட்டிவ் (ஒலி) ஆகிய இரண்டின் தரமும் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு படம், படமாக தரம் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு படத்திலும் உள்ள சிறிய கீறல்களும் அகற்றப்படும். ஒலியும் அவ்வாறே, ஒவ்வொரு பகுதியாக மேம்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

அண்மையில் வெளியான ’பாட்சா’ திரைப்படத்தின் ஒலி மறு பதிவு செய்யப்பட்டு வெளியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடுமையான தர மேம்படுத்தலுக்கு உள்ளாகும் டிஜிட்டல் மறு பதிப்புகள்  கடுமையான தர மேம்படுத்தலுக்கு உள்ளாகும் டிஜிட்டல் மறு பதிப்புகள்

டிஜிட்டல் மறு பதிப்புக்கு ஆகும் செலவுகள்

திரைப்படங்களை டிஜிட்டல் மறு பதிப்பு செய்வதற்கு ஆகும் செலவுகள் குறித்து குறிப்பிட்ட வெற்றி, ''பழைய திரைப்படத்தின் டிஜிட்டல் மறு பதிப்புக்கு சில லட்சங்கள் தான் செலவாகும். மறு பதிப்பு செய்பவர்கள் மேம்படுத்தும் அம்சங்கள் குறித்து செலவு மாறுபடலாம். ஆனால், சராசரியாக 20- 30 லட்சம் ரூபாய் செலவாகலாம்'' என்று தெரிவித்தார்.

''அண்மையில், பெரு நகரங்களில் பல திரையரங்குகளுடன் கூடிய பன்முக திரையரங்குகள் அதிகரித்துள்ள நிலையில், இத்திரையரங்குகள் தற்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பழைய திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கலாம். டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்படும் பழைய திரைப்படங்களை வெளியிட திரையரங்குகள் முன்வர வேண்டும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டிஜிட்டல் மறு பதிப்பு: இளைய திரைப்பட ரசிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பா? 

டிஜிட்டல் மறு பதிப்பின் சவால்கள்

டிஜிட்டல் மறு பதிப்புகளில் உள்ள சவால்கள் குறித்தும், இதற்கு ஆகும் கால அளவு குறித்தும், திரைப்பட தயாரிப்பளரும், பாஃப்டா திரைப்பட அகாடமியின் நிறுவனருமான தனஞ்ஜெயன் பிபிசி தமிழோசையிடம் உரையாடினார்.

''பழைய திரைப்படங்களின் நெகட்டிவ் பிரிண்ட்கள் (பதிப்பு) கைவசம் இருந்தால் விரிவாக டிஜிட்டல் மறு பதிப்பு செய்து விடலாம். ஆனால், திரைப்படத்தின் பாசிட்டிவ் பிரிண்ட்கள் மட்டும் தான் இருந்தால், அது ஆறு மாதங்கள் கூட ஆகும்'' என்று தனஞ்ஜெயன் குறிப்பிட்டார்.

 

கடுமையான தர மேம்படுத்தலுக்கு உள்ளாகும் டிஜிட்டல் மறு பதிப்புகள்

 

டிஜிட்டல் மறு பதிப்பு ஏன் வேண்டும் ?

''தற்போது ஏறக்குறைய அனைத்து திரையரங்குகளும் டிஜிட்டல் முறையில் தான் திரைப்படங்களை திரையிடுகின்றன. திரையரங்குகள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. அதனால் டிஜிட்டல் முறையில் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அனைத்து பழைய திரைப்படங்களும், டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்தால் மட்டுமே அவற்றை வெளியிட முடியும்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆனால், பழைய திரைப்படங்களின் நெகட்டிவ் பிரிண்ட் அல்லது ஒரு பாசிட்டிவ் பிரிண்ட் கூட இல்லாத சூழலில், அவற்றை டிஜிட்டல் மறு பதிப்பு செய்ய முடியாது என்று தனஞ்ஜெயன் தெரிவித்தார்.

'ரஜினி, கமல் திரைப்படங்கள் டிஜிட்டல் மறு பதிப்பு செய்யப்பட வேண்டும்'

''எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய நடிகர்களின் பல திரைப்படங்கள் டிஜிட்டல் மறு பதிப்பு செய்யப்பட்டுன்ன. இக்காலகட்டத்தில், 'அண்ணாமலை', 'படையப்பா' போன்ற ரஜினிகாந்தின் திரைப்படங்களையும், 'நாயகன்' , 'மைக்கேல் மதன காமராஜன்' போன்ற கமலஹாசனின் திரைப்படங்களையும் மறு பதிப்பு செய்தால் மட்டுமே தான் தற்கால இளைஞர்கள் திரையரங்குகளில் இவற்றை ரசிக்க முடியும். இல்லையெனில், தொலைக்காட்சியிலும், டிவிடியில் தான் பார்க்க முடியும்'' என்று தனஞ்ஜெயன் தெரிவித்தார்.

நல்ல திரைப்படங்கள் என்றும் ரசிகர்களால் திரையரங்குகளில் ரசிக்கப்படுகின்றன நல்ல திரைப்படங்கள் என்றும் ரசிகர்களால் திரையரங்குகளில் ரசிக்கப்படுகின்றன

தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை தொலைக்காட்சியிலும், கணினியிலும் பார்ப்பதை விட திரையரங்குகளில் பார்ப்பதையே திரைப்பட ரசிகர்களும், இளைஞர்களும் பெரிதும் விரும்புகிறார்கள். பழைய திரைப்படங்கள் அதிகளவில் டிஜிட்டல் மறு பதிப்பு செய்யப்படுவது இவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அமையும் என்று திரைப்பட ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

http://www.bbc.com/tamil/india-38648511

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.