Jump to content

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!


Recommended Posts

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!
 
 
தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
இதனால் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.
சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய், பீட்டாவை தடை செய், எங்கள் கலாச்சாரத்தை அழிக்காதே, தமிழ் நாடு தனிநாடாகும் போன்ற கோசங்களை எழுப்பி மாணவர்களும், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
 
இந் நிலையில் தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்களும் இருக்கிறோம் என்று கூறி யாழ் இளைஞர்கள் தன்னெழுச்சியான போராட்டம் ஒன்றிற்கு சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விடுத்துள்ளனர்.
 
''தமிழ் மரபினை காக்கப் போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கவனயீர்ப்பு'' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை நான்கு மணிக்கு யாழ். நல்லூரில் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் தன்னெழுச்சியாக கூடியிருக்கும் இவ் வேளையில், ஈழத் தமிழர்களின் சார்பில் பூரண ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்று திரண்டு நல்லூருக்கு வாருங்கள் என இளைஞர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

http://www.onlineuthayan.com/news/22809

Link to comment
Share on other sites


ஜல்லிகட்டுக்கு ஆதரவு யாழில் ஆர்ப்பாட்டம்
 
18-01-2017 11:27 AM
Comments - 0       Views - 15

article_1484719126-a.jpg

எம்.றொசாந்த்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடாத்தக் கோரியும் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு, சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய முன்றலில், இன்று மாலை 4 மணிக்கு, கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/189910/ஜல-ல-கட-ட-க-க-ஆதரவ-ய-ழ-ல-ஆர-ப-ப-ட-டம-#sthash.JSmvcA3S.dpuf
Link to comment
Share on other sites

யாழில் தமிழகத்திற்காக களமிறங்கியது தமிழினம் ( காணொளி, படங்கள் இணைப்பு )

 

 

( ஆர்.வி.கே.)

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

vvv.jpg

தமிழ் மரபினைக் காக்க போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் கவனயீர்ப்பு என்ற தொனிப்பொருளில் இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

“ தமிழக நண்பர்களு விடாமல் போராடுங்கள் ”, “ எரியும் தமிழகத்திற்கு ஈழத் தமிழர்களின் தீ ”, “ தடை அதை உடை தமிழர்களின் மரபுரிமைக்காக குரல் கொடுப்புாம்” , “கொம்புக்கு கிட்ட வைத்துக்கொள்ளாத வம்பு ”, “ அடங்க மறு அத்து மீறு ” , “ ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் ”, “ நாங்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறோம் நமக்குள் எல்லைகள் கிடையாது”, அடையாளம் எங்கள் முகம் தமிழ் எங்கள் உயிர் ” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16107685_1826499217608937_327472280_o.jp

 

16107928_1826499237608935_1188376780_o.j

 

“ தமிழக நண்பர்களு விடாமல் போராடுங்கள் ”, “ எரியும் தமிழகத்திற்கு ஈழத் தமிழர்களின் தீ ”, “ தடை அதை உடை தமிழர்களின் மரபுரிமைக்காக குரல் கொடுப்புாம்” , “கொம்புக்கு கிட்ட வைத்துக்கொள்ளாத வம்பு ”, “ அடங்க மறு அத்து மீறு ” , “ ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் ”, “ நாங்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறோம் நமக்குள் எல்லைகள் கிடையாது”, அடையாளம் எங்கள் முகம் தமிழ் எங்கள் உயிர் ” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

16108017_1826499294275596_67420579_o.jpg

16121382_1826499017608957_1408194904_o.j

16121392_1826499230942269_553540512_o.jp

16121559_1826498960942296_2019380462_o.j

16121665_1826499134275612_487228923_o.jp

16121817_1826499264275599_1749665421_o.j

16129439_1826498980942294_892192435_o.jp

16130068_1826499310942261_935376243_o.jp

16129779_1826499380942254_1530989646_o.j

16145291_1826499297608929_594463811_o.jp

16145706_1826499207608938_1108385889_o.j

16130026_1826499070942285_42173338_o.jpg

http://www.virakesari.lk/article/15536

Link to comment
Share on other sites

கிழக்கிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது.  இன்’றையதினம் வாழைச்சேனைநகரில் மாலை 4மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

east-jalli.jpg

 

0
 

http://globaltamilnews.net/archives/14325

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்

IMG_1059.jpg

தமிழகத்தில்  ஜல்லிக் கட்டுக்கு உள்ள தடையை நீக்க கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில்  இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞா்கள் ஒன்று சோ்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிற்பகல் நான்கு மணிக்கு கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

இதன் போது வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், மோடி அரசே பேடி அரசே, அழிக்காதே அழிக்காதே தமிழர் பண்பாட்டை  அழிக்காதே, நீ ஒடுக்குவது விளையாட்டை மாத்திரமல்ல, ஜல்லிக் கட்டை நடத்தவிடு இல்லையே தமிழ்நாட்டை பிரித்துவிடு, இந்திய அரசே ஈழத்தில் மனிதர்கள் கொல்லப்பட்ட போது எங்கே இருந்தாய், தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம் இந்திய ராஜபக்சவே நாம் சிந்திய இரத்தம் போதாதா போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பாதாதைகளை தாங்கியவாறும் போரைாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

IMG_1053.jpg IMG_1066.jpgIMG_1060.jpgIMG_1062.jpg

0

http://globaltamilnews.net/archives/14381

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிழக்கில் போராட்டம்.

2121-1024x578.jpg
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் மாலை 4 மணியளவில் ஒன்று கூடியவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
34343-1024x578.jpggfgfgf-1024x578.jpggjgjg-1024x578.jpg
0

http://globaltamilnews.net/archives/14395

Link to comment
Share on other sites

இந்தியா எப்போதுமே தமிழகத்தின் குரலுக்கு செவிசாய்த்ததில்லை! – தீபச்செல்வன்

IMG_1066.jpg
இந்திய அரசு தமிழகத்தை தன்னுடைய மாநிலமாக கருதினால் தமிழக மக்களை தன்னுடைய பிரஜைகளாக கருதினால், தமிழமே வெகுண்டெழுந்து ஜல்லிக் கட்டு தடையை நீக்க கோருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக் கட்டு தடை நீக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில், கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பின்போதே அவ் அமையத்தின் செயலாளர் தீபச்செல்வன் இவ்வாறு குறிப்பிட்டார்
 
இந்தியா எப்போதுமே தமிழகத்தை தன்னுடைய மாநிலமாக கருதியிருக்கவில்லை. தமிழகத்தின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. ஈழத்தில் நாம் அழிக்கப்பட்டபோது, இனக்கொலைப் போரை தடுத்து நிறுத்துமாறு தமிழகமே கோரிய குரலுக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
 
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டு உரிமை, இப்போது தமிழகம் தன்னுடைய பண்பாட்டுக்காக போராடும் குரலுக்கும் செவிசாய்க்காமல் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் பிரிந்துபோகும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தமிழகத்தில் உள்ள உறவுகள் நாங்கள் கொல்லப்படுகின்றபோதும், எங்கள் இனத்தின் விடுதலைக்காகவும்  குரல் கொடுப்பவர்கள், அவர்களுக்காக இந்தக் கவனயீர்ப்பின் மூலம் எங்கள் ஆதரவை, அன்பை, தொப்புள் கொடி உறவை வெளிப்படுத்துகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/14393

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவர் விபத்தில் உயிரிழப்பு

10653519_428832920647320_355727708922053
யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய மாணவன் ஒருவன் கிளிநொச்சியில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.  புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே  முரசுமோட்டை பகுதியில்  எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துஉள்ளார்

16174547_10207825755944487_2180921635909

http://globaltamilnews.net/archives/14418

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாவகச்சேரியிலும் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாவகச்சேரியிலும் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாவகச்சேரியிலும் நாளை மறுதினம்  போராட.டம் நடைபெறவுள்ளதாக எற்பாட்டாளர்கள்  தெரிவித்தனர்  
தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சாவகச்சேரி பஸ் நிலையத்தில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை  9:30 மணியளவில்  மாபெரும் போராட்டதில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர் .
 
நேற்றையதினம் யாழ் நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

இலங்கை: மட்டக்களப்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

  •  

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.

   

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

http://www.bbc.com/tamil/38679120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பல ..! தமிழினின்ட முறை இயற்கை விவசாயம்.... :rolleyes:

டிஸ்கி :

அங்கயும் பீட்டாகாரான் புகுந்திடபோறான் ...! உசார்..!   :unsure:

Link to comment
Share on other sites

ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்து வடக்கு, கிழக்கு, கொழும்பில் ஆர்ப்­பாட்டம்

p7-c28dc853bea3e4da377dcc1824c4994fcc04eaa8.jpg

 

தடையை நீக்­கு­மாறும் வலி­யு­றுத்தல்- 

(கரைச்சி, கல்­குடா நிரு­பர்கள்)

இந்­தி­யாவில் ஜல்­லிக்­கட்டு மீதான தடையை நீக்­கக் கோரி தமிழ்­நாடு எங்கும் பாரி­ய­ள­வி­லான போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டு­வரும் நிலையில் தமி­ழக மக்  க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பகு­தி­களில் நேற்று ஆர்ப்­பாட்­டங் கள் இடம்­பெற்­றுள்­ளன.   

கொழும்பு ஐந்­து­லாம்­புச்­சந்­தியில் நேற்று முற்­பகல் 11.30 மணி­முதல் 12.30 மணி­வரை பெரு­ம­ள­வான  இளை­ஞர்கள் ஒன்­று­கூடி ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இவர்கள் ஜல்­லிக்­கட்டு மீதான தடைக்கு எதி­ரான வாச­கங்கள் எழு­தப்­பட்ட சுலோக அட்­டை­க­ளையும் தாங்­கி­யி­ருந்­தனர்.  

இதேபோல் ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்தும் அதன்­மீ­தான தடை­யினை நீக்­கக்­கோ­ரியும் கிளி­நொச்சி நகரில் நேற்று கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நடத்­தப்­பட்­டது. கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக மாலை 4.00 மணி­ய­ளவில் இந்தப் போராட்டம் நடை­பெற்­றது. இந்தப் போராட்­டத்தில் கலந்­து­கொண்­ட­வர்கள் வேண்டும் வேண்டும் ஜல்­லிக்­கட்டு வேண்டும், மோடி அரசே பேடி அரசே, அழிக்­காதே அழிக்­காதே தமிழர் பண்­பாட்டை அழிக்­காதே, நீ ஒடுக்­கு­வது விளை­யாட்டை மாத்­தி­ர­மல்ல, ஜல்லிக் கட்டை நடத்­த­விடு இல்­லையே தமிழ்­நாட்டை பிரித்­து­விடு, இந்­திய அரசே ஈழத்தில் மனி­தர்கள் கொல்­லப்­பட்ட போது எங்கே இருந்தாய், தமி­ழ­கத்­திற்­காக ஈழம் ஈழத்­திற்­காக தமி­ழகம், இந்­திய ராஜ­பக்­சவே நாம் சிந்­திய இரத்தம் போதாதா போன்ற கோசங்­களை எழுப்­பி­ய­வாறும் பாதா­தை­களை தாங்­கி­ய­வாறும் போராட்­டத்தில் ஈடுப்­பட்­டனா்.

இதே­வேளை கிழக்கில் ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்து வாழைச்­சே­னையில் நேற்று மாலை இளை­ஞர்­க­ளினால் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது.   வாழைச்­சேனை கோற­ளைப்­பற்று பிர­தேச இளை­ஞர்­களால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கண்டப் பேர­ணி­யா­னது கிண்­ணை­யடி சந்­தியில் இருந்து ஆரம்­ப­மாகி வாழைச்­சேனை மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதி வழி­யாக வந்து வாழைச்­சேனை பொலிஸ் நிலைய சந்தி வரை சென்று அங்கு ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­றது. 

இக்­கண்டப் பேர­ணியில் பெரு­ம­ள­வான இளை­ஞர்கள் கலந்து கொண்டு தமி­ழரின் பண்­பாட்டு மர­பினை அழிக்­காதே, தமி­ழரை அடக்­காதே என இந்­திய அர­சுக்கு எதி­ராக பல கோசங்­களை எழுப்­பினர். அத்­தோடு மரபு வழி தமிழ் தேசி­யத்தின் பண்­பாட்டு மர­பினை அழித்து தமி­ழின அடை­யா­ளங்­களை அழிக்க வெறி கொண்டு கொக்­க­ரிக்கும் இந்­திய அரசே உலகத் தமி­ழர்கள் உன் கொட்­டத்தை அடக்க திரண்­டெ­ழுவர் குறித்துக் கொள் என்ற வசனம் பொறிக்­கப்­பட்ட பதா­தை­யுடன் கலந்து கொண்­டனர். 

மேலும் சோழனின் கொடி பறக்கும் சோழியின் குடும்பி அறும், அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழம் அடங்­காது, ஜல்­லிக்­கட்டு எம் உரிமை அள்­ளிக்­கட்டு அரசை, போராட்டம் எம் இனக்­குணம் சீண்­டாதே சித­றுவாய், எமது மொழி எமது பண்­பாடு எமது தனித்­துவம் நாங்கள் தமி­ழர்கள் என பல வாச­கங்கள் அடங்­கிய பதா­தை­களும் கையில் ஏந்தியவாறு கோசங்களுடன் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதேபோல் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், நல்லூர் ஆலயத்திற்கு முன்பாகவும் பெருமளவானோர் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-20#page-1

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.!

Published by Gnanaprabu on 2017-01-20 15:29:22

 

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக நாளை கொழும்பு காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தியாவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. 

இந்நிலையில், தமிழ் மரபினை காக்க உலகளாவிய ரீதியில் வீதிகளில் இறங்கி போராடும் தமிழக உறவுகளுக்காக சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து, நடத்தவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

16115029_1822028238009917_46122941762972

http://www.virakesari.lk/article/15621

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வாழைச்சேனையிலும் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வாழைச்சேனையிலும் போராட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து தமிழ் நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வாழைச்சேனை பகுதியில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 
குறித்த போராட்டம் அப்பகுதி இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எழுக தமிழ் பேரணிக்காக மட்டக்களப்பிற்கு சென்ற தமிழ் மக்கள் பேரவையின் அதரவாளர்களும் பங்குபற்றியிருந்தனர். 
 
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையில்,
 
ஈழத்தமிழர்கள் இங்கு இன்னல்களை அனுபவிக்கும் போதேல்லாம் தமிழ்நாட்டில் நமது சகோதரர்கள் போராட்டங்களை முன்னெடுத்து
தமது ஆதரவை தெரிவித்தனர். இதற்கு நன்றிக்கடனாக அவர்களுக்கு ஆதரவாக நாம் இங்கு போராட்டங்களை நடாத்துகின்றோம் எனவும் தெரிவித்தனர்.
 
இதேவேளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  வடக்கில்  யாழ்ப்பாணம் நல்லூர்,கிளிநொச்சி, மன்னாரிலும்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது. 
16128911_762425030578210_502279620_n.jpg
16128795_762425153911531_1945088109_n.jpg

http://www.onlineuthayan.com/news/22924

Link to comment
Share on other sites

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக இலங்கையின் பல பாகங்களிலும் போராட்டம்

jalli-1.jpg
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு சமாந்திரமாக இலங்கையின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அநேகமான போராட்டங்கள் இன்றைய தினமும் நாளைய தினமும் நடத்தப்பட உள்ளது.

கொழும்பு காலி முகத் திடலில் நாளைய தினம் இவ்வாறான ஓர் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிளிலும் மலையகத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன் எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்பட உள்ளன.
தமிழ் இளைஞர் அமைப்புக்கள் பலவும் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/14546

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2017 at 10:37 PM, நவீனன் said:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவர் விபத்தில் உயிரிழப்பு

யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய மாணவன் ஒருவன் கிளிநொச்சியில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.  புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே  முரசுமோட்டை பகுதியில்  எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துஉள்ளார்

16174547_10207825755944487_2180921635909

http://globaltamilnews.net/archives/14418

ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்கள்!

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில்  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு காலி முகத்திடலில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

dad2.jpg

தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவின் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டு வருகின்றனர்.

adsf2.jpg

asdf.jpg

s.jpg

saf1.jpg

sfd.jpg

http://www.virakesari.lk/article/15640

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டை அனுமதிக்கவேண்டும் என இந்திய பிரதமருக்கு யாழில் இருந்து மகஜர்.

16105676_1827817814143744_32305016136395
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்க கோரி இந்திய பிரதமருக்கு , இந்திய துணை தூதுவர் ஊடாக மகஜர் அனுப்பி வைக்கபட்டு உள்ளது.

வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிங்கம் , அனந்தி சசிதரன் ஆகியோர் இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதரத்தில் துணை தூதுவர் ஏ.நடராஜனை சந்தித்து மகஜரை கையளித்து உள்ளனர்

15873489_1827817860810406_39651732563957

மகஜரை பெற்றுக்கொண்ட துணை தூதுவர் மகஜரை பிரதமருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , ஜல்லிக்கட்டு விடயத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களின் உணர்வினை புரிந்து கொள்கிறேன் இலங்கை தமிழர்களின் உணர்வினை மதிக்கிறேன் என தெரிவித்தார்.

16143287_1827817824143743_85655555234494

 

http://globaltamilnews.net/archives/14563

Link to comment
Share on other sites


சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
 
21-01-2017 12:37 PM
Comments - 0       Views - 20

article_1484983238-2222222222222.jpg

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள்  இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று இன்று முற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிளவானவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்று பிற்பகல் நான்கு மணிக்கு கொழும்பு வௌ்ளவத்தையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

 

- See more at: http://www.tamilmirror.lk/190056/சல-ல-க-கட-ட-க-க-ஆதரவ-த-ர-வ-த-த-க-ழ-ம-ப-ல-ஆர-ப-ப-ட-டம-#sthash.PPUP6LFL.dpuf
Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
2017-01-21 13:35:10

2192216195127_10206965251764244_55660082

பட உதவி : சரத்குமார்


 

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக கொழும்பிலும் இன்று பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

21922Colombo-Galleface-Jallikattu-1.jpg

பட உதவி: கமல் லோகநாதன்



கொழும்பு காலி முகத்திடலில் முற்பகல் 11 மணிமுதல் 12.30 மணிவரை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள்  இந்த கவனயீர்ப்பு  போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

21922_jallikattu-6.jpg

 

21922Colombo-Galleface-Jallikattu-4.jpg

பட உதவி : சரத்குமார்

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21922#sthash.i0XsVtEi.dpuf
Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினரின் வருகையால் சலசலப்பு (வீடியோ இணைப்பு)

 

கொழும்பு - காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்  வருகைத்தந்தமையால் குறித்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் அரசியல் வேண்டாம் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் குறித்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

எவ்வாறாயினும் அரசியலுக்காக தான் வரவில்லையென்றும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துதான் இங்கு வருகைத்தந்ததாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தமையால் ஆர்ப்பாட்டம் வழமைக்கு திரும்பியது.

 

 

 

http://www.virakesari.lk/article/15649

Link to comment
Share on other sites

திருமலையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு
 
21-01-2017 04:48 PM
Comments - 0       Views - 35

article_1484997618-20170121_160319.jpg

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள்  இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டரங்கு முன்பாக இன்று மாலை 04 மணியளவில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இளைஞர்கள்  இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொசங்களை எழுப்பியதடன், தமது ஆதரவையும் தெரிவித்தனர். கலந்துகொண்ட அனைவரும் பல்வேறு பதாதைகள் சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை இளைஞர்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

(படங்கள்: பொன்ஆனந்தம், எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார்)

article_1484997630-20170121_160356.jpgarticle_1484997641-20170121_160409.jpgarticle_1484997654-20170121_161034.jpgarticle_1484997664-20170121_161948.jpgarticle_1484997674-20170121_162117.jpg

article_1484998274-20170121_161655.jpgarticle_1484998283-20170121_161747.jpg

- See more at: http://www.tamilmirror.lk/190068/த-ர-மல-ய-ல-ம-சல-ல-க-கட-ட-க-க-ஆதரவ-#sthash.PrbLiRHf.dpuf
Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பு வெள்ளவத்தையில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது

srilanak-1024x576.jpg

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக  கொழும்பில்  இன்று  சனிக்கிழமை ஆதரவு போராட்டம் இடம்பெற்றுள்ளது..

இன்று  மாலை 4 மணிக்கு  கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

2017-01-21-PHOTO-00000001-1-1024x576.jpg2017-01-21-PHOTO-00000002-1024x576.jpg2017-01-21-PHOTO-00000006-1024x576.jpg2017-01-21-PHOTO-00000007-1024x576.jpg2017-01-21-PHOTO-00000010-1024x576.jpg2017-01-21-PHOTO-00000011-1024x576.jpg2017-01-21-PHOTO-00000012-1024x576.jpg2017-01-21-PHOTO-00000013-1024x576.jpg2017-01-21-PHOTO-00000016-1024x576.jpg2017-01-21-PHOTO-00000017-1024x576.jpg2017-01-21-PHOTO-00000018-1024x576.jpg2017-01-21-PHOTO-00000019-1024x576.jpg2017-01-21-PHOTO-00000009-1024x576.jpg2017-01-21-PHOTO-00000015-1024x576.jpg2017-01-21-PHOTO-00000008-1024x576.jpg2017-01-21-PHOTO-00000014-1024x576.jpg

0

http://globaltamilnews.net/archives/14599

Link to comment
Share on other sites

மன்னாரிலும் ஆதரவு...
 
 

article_1484999980-DSC_0020.JPG

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதியிலும் இன்று (21) மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மீன் விற்பனையாளர் சங்கம் மற்றும் முகநூல் நட்புக்கள் ஆகியோர் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: எஸ்.றொசேரியன் லெம்பேட்)

article_1484999992-DSC_0033.JPGarticle_1485000001-DSC_0036.JPG

- See more at: http://www.tamilmirror.lk/190070/மன-ன-ர-ல-ம-ஆதரவ-#sthash.0tGyOgVO.dpuf
Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டு ஆதரவாக வல்வெட்டிதுறையில் கவனயீர்ப்பு போராட்டம்

Published by Gnanaprabu on 2017-01-22 10:36:03

 

ஜல்லிக்கட்டு விதித்த தடையினை நீக்குமாறு தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்களுக்கு ஆதரவாக நேற்றைய தினம் வல்வெட்டிதுறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

16176546_10206564333301780_304663023_n.j

16215986_10206564333101775_1276856502_n.

16216156_10206564333381782_1648256913_n.

16216368_10206564333061774_594608829_n.j

16237650_10206564333421783_787164790_n.j

http://www.virakesari.lk/article/15663

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.