Jump to content

‘மக்கள் கேப்டனாக’ அம்பயரிடம் ரிவ்யூ கேட்ட தோனி! - வைரல் வீடியோ


Recommended Posts

‘மக்கள் கேப்டனாக’ அம்பயரிடம் ரிவ்யூ கேட்ட தோனி! - வைரல் வீடியோ

இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் மிக முக்கியமானவரான மகேந்திர சிங்  தோனி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து  விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

கேப்டன் பொறுப்பைத் துறந்திருந்தாலும், வார்ம் அப் போட்டி ஒன்றில் இந்திய ஏ அணிக்கு தலைமை தாங்கினார் தோனி. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. செப்டம்பர் 24, 2007-ம் ஆண்டு உலகக்கோப்பையை  தோனி தலைமையிலான இந்திய அணி ஜெயிக்க, உடனடியாக அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த டிராவிட் பதவி விலகினார். இதையடுத்து செப்டம்பர் மாத இறுதியில் ஒருநாள் போட்டிகளுக்கு தோனி கேப்டனாக பதவியேற்றார். அன்று முதல் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த நியூசிலாந்து தொடர் வரை ஒருநாள் போட்டிகளில் இன்னொரு கேப்டனுக்கு கீழ் தோனி விளையாடியதே கிடையாது.

தோனி

இந்நிலையில், ஒவ்வொரு பார்மெட்டுக்கும் ஒரே கேப்டன் என்ற முறை சரிவராது எனச் சொல்லி,  கேப்டன் பதவியை விராட் கோஹ்லிக்கு  விட்டுக்கொடுத்ததால், முதன் முறையாக கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் விளையாட வேண்டிய கட்டாயம் தோனிக்கு ஏற்பட்டது. கடந்த  ஞாயிறு அன்று நடந்த இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி கேப்டனாக பணியைத் தொடங்க, பத்து வருடத்துக்கு பிறகு மீண்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பணியைத் தொடங்கினார் தோனி. 

வழக்கமாக, ஒவ்வொரு ஓவரின் போதும் தோனி வீரர்களை எப்படி ஒருங்கிணைக்கிறார் என்பதை டிவியில் காட்டுவார்கள். அவர் முகத்தையே பார்த்தது வந்தவர்களுக்கு விராட் கோஹ்லி முகத்தை ஒவ்வொரு ஓவருக்கும் காட்டும்போது கொஞ்சம் புதுமையாகத் தான் இருந்திருக்கும். 

ஆட்டத்தின் 27 வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங் பிடித்தார். 27வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மோர்கனின் பேட்டின் முனையில் லேசாக உரசிச் சென்ற பந்து முன்னாள் கேப்டன் தோனி கையில் தஞ்சமடைந்தது. இதையடுத்து அவுட் என  கத்தினார், ஆனால் அம்பயர் நந்தன் அப்பீலை ஏற்றுக்கொள்ள வில்லை. உடனடியாக டி.ஆர்.எஸ் ரிவ்யூ கேட்டார் தோனி. இதைப்பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் ஃபீல்டிங்கின் போது அந்த அணியின் கேப்டன் மட்டும் தான் டி.ஆர்.எஸ் ரிவ்யூ கேட்க முடியும். விராட் கோஹ்லியிடம் கலந்தாலோசிக்காமல்,  ரிவ்யூ கேட்டதை அம்பயர் கண்டுகொள்ளவில்லை, இதனை கவனித்த விராட் கோஹ்லி உடனடியாக ரிவ்யூ கேட்டார். அதில் மோர்கன் அவுட் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. டி.ஆர்.எஸ் ரிவ்யூவை பொறுத்தவரை தோனி சொல்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்போம் என கோஹ்லி  ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

@msdhoni reviews instead of @imVkohli and he's spot on pic.twitter.com/EeshQ2RkF6

— Vinay mani tripathi (@eevinaymani) January 15, 2017

தோனியை கேப்டனாகவே கிட்டத்தட்ட பத்து வருடம் பார்த்து பழகிவிட்ட நிலையில், ரசிகர்களே விராட் கோஹ்லி கேப்டன் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இன்னமும் சிரமப்படும் நிலையில், தோனி அந்த ஒரு நொடி கேப்டனாகவே DRS ரிவ்யூ கேட்டதை விராட் கோஹ்லியும் வரவேற்றுதான் இருப்பார். ரிவ்யூ கேட்டபடி உற்சாகமாக, கோஹ்லி அருகே வரும்போது, தோனியைப் பார்த்து ‘அவுட்தானே?’ என்று சைகையில் கோஹ்லி கேட்க, தன் பாணியில் நம்பிக்கையாக தோனி தலையசைப்பதை, வீடியோவின்  0.13 மற்றும் 0.57 நிமிடங்களில் பார்த்தால் தெரியும்! 

 

எது எப்படியோ, அந்த ஒரு நொடி கேப்டனாக மாறிய  வீடியோ கிளிப்பிங்கிற்கு சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள் தோனி ரசிகர்கள். 

http://www.vikatan.com/news/sports/77953-after-step-down-from-captaincy-dhoni-claimed-drs-review-directly.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.