Jump to content

ஜெ. பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு!- ஜெ.தீபா


Recommended Posts

ஜெ. பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு!- ஜெ.தீபா

Deepa press meet

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த தினமான இன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரின் நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, 'எனக்கு ஆதரவளிக்கும் மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. இளைஞர்கள் மற்றும் மக்களின் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பேன்' என்று பேசியுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/77951-i-will-decide-about-entering-politics-on-jayas-birthday-says-deepa.art

Link to comment
Share on other sites

Tamil_News_large_169236820170117121141_318_219.jpgஅரசியல் பிரவேசம் எப்போது?: தீபா பேட்டி

 

 

 

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, அரசியல் பயணம் குறித்த அடுத்த கட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஜெ., வின் அண்ணன் மகள் தீபா நிருபர்களிடம் கூறினார்.

 

அரசியல் பிரவேசம்:

இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது: ஜெயலலிதா தமிழக மக்களுக்காக உழைத்தவர். ஜெ.,வை இழந்ததால், தமிழக மக்கள் தவிக்கின்றனர். தெய்வமாக இருந்து ஜெயலலிதா மக்களை வழிநடத்த வேண்டும். 1971ல் அதிமுகவை உருவாக்கி மக்களாட்சியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., அவரது மறைவுக்கு அந்த பணியை துவங்கி சாதனை படைத்தவர் ஜெயலலிதா. 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற பலனின்றி மறைந்தார் என்பது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. அதிர்ச்சியில் மக்கள் மீள்வதற்குள் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.

 

அழைத்ததற்கு நன்றி :

நான் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள விரும்புகின்றனர். நான் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த பெண். இதழியல் படித்து பத்திரிகையாளராக பணியாற்றினேன். எனக்கு குடும்பம் என சில பணிகள் உள்ளது. இருப்பினும், என்மீது நம்பிக்கை வைத்து அழைத்ததற்கு நன்றி. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இனி வரும் காலங்களில் தமிழக மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் பணியாற்றுவேன். தமிழகமும், தமிழும் எனது இரு கண்களாக இருக்கும். எனது வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்து ஜெயலலிதாவின் நல்லாசியோடு, அவர்கள் பாதசுவடு வழிநடந்து, மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன்.

 

ஜெ., வின் கனவு :

அதிமுக என்ற ஆலமரத்தின் பசுமை காக்கும் இலைகளாக அதன் உண்மை தொண்டர்கள் உள்ளனர். இன்று முதல் புதிய பயணத்தை துவங்க உள்ளேன். எம்ஜிஆரின் நுாற்றாண்டு பிறந்தநாளின் இன்று வாழ்க்கையின் புதிய அத்தியாத்தை துவங்க உள்ளேன். மக்களின் புன்னகையால், வாழ்ந்து வழிகாட்டிய எம்ஜிஆர் ஜெயலலிதா காட்டிய வழியில்மக்களையும், தமிழகத்தையும் வழிநடத்திட உங்களில் ஒருவராக. உங்களில் ஒருவராக உங்களின் அன்பு சகோதரியாக கேட்டு கொள்கிறேன்.
மக்கள் நலத்திட்டங்கள், மக்களுக்கான பணிகள் தொடர வேண்டும். ஜெயலலிதாவின் கனவை ஒன்று சேர்ந்து இன்று முதல் தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக்கும் நோக்கத்துடன் நற்பணிகளை மேற்கொள்வேன். எம்.ஜி. ஆர் விட்டு சென்ற நல்லாட்சியை அவர்களின் வாரிசான ஜெ.,வின் நல்லாட்சியை தொடர செய்வதே, அதிமுக தொண்டர்களின் நோக்கமாகும்.

இந்த நேரத்தில் எனது உரிமைகளையும் கடமைகளையும் நிலைநாட்டிட பேராதரவு அளித்த தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றி. ஜெ., கனவை நிறைவேற்றும் வகையில் நம் அனைவரின் களப்பணிகள் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் . ஜெ., பிறந்த நாளன்று, அரசியலில் ஈடுபடுவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை வெளியிட உள்ளேன். மக்களின் கருத்தையும், தொண்டர்களின் கருத்தையும் சேகரித்து விட்டு உரிய காலகட்டத்தில் அரசியல் பயணத்தை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவிரவேறு யாரையும் அதிமுக பொதுச்செயலாளராக ஏற்க மாட்டேன். ஜெ., சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மக்களிடம் கேட்க வேண்டும். இதற்காக நான் வரவில்லை. இதுவரை யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1692368

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவை மிஞ்சிய தீபா!

deepa_2a_16438.jpg

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் இருந்தது. 

ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு சசிகலாவை தலைமை ஏற்க வருமாறு அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதையடுத்து டிசம்பர் 28ம் தேதி பொதுக்குழுவில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து அவர் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். அடுத்து சசிகலாவை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் தலைமையை ஏற்காத அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து வருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தக் காலக்கட்டத்தில் போயஸ் கார்டன் இல்லம் முன்பும், அப்போலோ மருத்துவமனை முன்பும் காத்திருந்த தீபாவை கண்டுக் கொள்ளாத அ.தி.மு.க.வினர் இப்போது ஆதரவு தெரிவிப்பதாக சொல்வதுதான் அரசியல்!

ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது கூட்டத்தோடு கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் தீபா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தீபாவிற்கு கொடிப்பிடிக்கத் தொடங்கி உள்ளனர் அதிருப்தி அ.தி.மு.க.வினர். தீபா, அரசியலுக்கு வருவதாக இன்று அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசியல் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளரை சந்தித்த தீபா, ஜெயலலிதாவைப் போலவே ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். நிருபர்களின் கேள்விகளுக்கு அமைதியாக பதிலளித்தார். ஆனால் அந்த பதில்களில் உருப்படியான, தெளிவான தகவல்கள் எதுவுமே இல்லை. பேட்டியின் போது தீபாவின் மேனரிஷம் முழுவதும் ஜெயலலிதாவைப் போல தெரிந்தது. ஜெயலலிதா பேட்டி அளிக்கும் போது அவருக்கு அருகில் யாரும் நிற்க முடியாது. ஆனால் தீபா அருகிலேயே நிருபர்கள் நிற்க முடிந்தது. இதற்கு முன்பு தொண்டர்களை தீபா சந்தித்த போது டென்ஷனாகி வீட்டுற்குள்ளே சென்று விட்டார். ஆனால் இந்த முறை அவரிடம் அந்த டென்ஷன் இல்லை. ஜெயலலிதாவின் ஸ்டைலை சசிகலாவும், தீபாவும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். தீபாவைப் பார்க்கும் போது இளமை கால ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

deepa-_admk_16091.jpg

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அரசியலுக்குள் கால்பதிப்பதாக தெரிவித்த தீபாவுக்கு அரசியல் பாடத்தை கற்றுக் கொடுக்க தனி டீமே களமிறங்கி இருக்கிறது. அந்த டீம், தீபாவிடம் எப்படி தொண்டர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளனர். அதை அப்படியே பின்பற்றி வருகிறாராம் தீபா. ஜெயலலிதாவின் வழியை பின்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார் தீபா. ஜெயலலிதாவின் வழி என்பது சாதாரணமானது இல்லை. அதை பின்பற்ற தனி துணிச்சல் தேவை. எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வண்டியிலிருந்து ஜெயலலிதா தள்ளி விடப்பட்ட பிறகு அ.தி.மு.க.வின் தலைமை பதவிக்கு வர அவரின் உழைப்பு சாதாரணமானது அல்ல. அவரைப் போல இருக்கும் தீபாவும், ஜெயலலிதா ஸ்டைலில் மட்டுமல்ல.... மற்ற செயல்களிலும் அவரைப்போல தனித்துவமாக செயல்பட்டால் மட்டுமே அரசியலில் முத்திரைப் பதிக்க முடியும்.

இதுகுறித்து தீபாவின் ஆதரவாளர் இளையராஜா கூறுகையில், "அம்மாவின் வாரிசான தீபாவின் தலைமையில் செயல்பட நாங்கள் முடிவு எடுத்து விட்டோம். அரசியலுக்கு வருவதாக மட்டுமே தீபா அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்றாலும் இன்றைய சூழ்நிலையில் எம்.ஜி.ஆர்., அம்மா வழிநடத்திய அ.தி.மு.க.வையும், தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. இதனால் தீபா, உடனடியாக மக்களையும், தொண்டர்களையும் சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தீபாவுக்கு அதிகளவில் ஆதரவு கிடைக்கும். காலதாமதமில்லாமல் எம்.ஜி.ஆர்., அம்மாவின் தொண்டர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தீபாவுக்கு உள்ளது. தீபாவை சந்திக்க என்னுடைய தலைமையில் திருவேற்காடு பகுதியிலிருந்து 30 வேன்களில் இன்று தி.நகர் வந்துள்ளோம்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/77983-deepa-follows-the-mannerisms-of-jayalalithaa.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.