Jump to content

அதிகரிக்கும் எதிர்ப்பு; அதிர்ச்சியில் உறையும் சசிகலா தரப்பு!


Recommended Posts

அதிகரிக்கும் எதிர்ப்பு; அதிர்ச்சியில் உறையும் சசிகலா தரப்பு!

சசிகலா

மிழக முதல்வராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.வின் தோழி சசிகலா.

சசிகலா கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றது, கீழ்மட்டத் தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டாலும், தங்களால் ஜெயலலிதா இருந்த இடத்தில் வைத்து, சசிகலாவைப் பார்க்க முடியவில்லை என்று கட்சித் தொண்டர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு தினமும் நூற்றுக்கணக்கானோர் கூடி, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தினமும் தனது வீட்டின் முன் குவியும் தொண்டர்களிடையே உரையாற்றும் தீபா, கட்சியினர் எதிர்பார்க்கும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளான இன்று தனது முடிவை அறிவிக்க இருப்பதாகவும், தனது அரசியல் பிரவேசம் பற்றி தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். சசிகலா தரப்பினர், தீபா வீட்டிற்கு வரும் தொண்டர்கள், கட்சியினரை உளவுத்துறை போலீசார் ரகசியமாக அறிந்து போயஸ் கார்டனுக்கு தகவல் தெரிவித்து வந்தனர். 

தீபா

 

இதுஒருபுறம் இருக்க, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.பி. முனுசாமி, சசிகலா உறவினர்களுக்கு எதிராக முதல்முறையாக கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரன், எம்.ஜி.ஆர் இருந்தபோதே, ஜெயலலிதாவுக்கு, தங்கள் குடும்பம் பாதுகாப்பு அளித்ததாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திவாகரனின் பேச்சைக் கடுமையாகக் கண்டித்துள்ள முனுசாமி, அ.தி.மு.க-வில் அவர் எப்போது இருந்தார்? என்பதை உணர்ந்து, இதுபோன்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்ப்பதுடன், பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கே.பி. முனுசாமியின் கண்டனத்திற்கு, அமைச்சர்கள் ஒ.எஸ். மணியன், எஸ். காமராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேசியிருப்பதுடன், முனுசாமி விலைபோய் விட்டதாகவும், கட்சியை உடைக்கப்பார்க்கிறார் என்பது போலவும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். இதுவரை, கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது, மூத்த தலைவர்கள் மத்தியிலும் சசிகலா எதிர்ப்பு நிலை உருவாகி இருப்பதால், சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை இன்னமும் அடங்குவதற்குள்.. 75 நாட்கள் ஜெ.வுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? அவர் எப்போது மரணம் அடைந்தார்? என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரவிய வண்ணம் உள்ள நிலையில், கட்சிக்குள்ளும் எதிர்ப்பு உருவாகி வருவதால், சசிகலா சற்றே அதிர்ச்சியில் உள்ளார்.

தீபா

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நலப்பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தீபா தெரிவித்து இருப்பதுடன், செய்தியாளர்களையும் இன்று சந்திக்கிறார். அ.தி.மு.க தொண்டர்களின் எதிர்பார்ப்பு போலவே தனது பொதுவாழ்வு அமையும். என்றும் அவர் கூறியிருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தியது, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று தீபா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களை திறந்து வைக்க இருப்பதாகவும், அதன் பின்னர் அ.தி.மு.க தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, தனது எதிர்காலத் திட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார், இதனால், ஊடகத்துறையினரும், செய்தியாளர்களும் தீபா வீட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஜெயலலிதா இடத்தை சசிகலா நிரப்புவார் என அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எனினும், ஒருபுறம் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக எதிர்ப்பை வெளிப்படுத்துவது, ஜெ. அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேசம் என அடுத்தடுத்து தனக்கு எதிரான நிலைப்பாடு முற்றி வருவதால், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தீபாவின் எதிர்காலத் திட்டத்தைப் பொறுத்தே கார்டனின் அடுத்த மூவ் இருக்கும் என்று சசிகலா தரப்புக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/coverstory/77940-sasikala-family-shocked-over-opposition-for-her-leadership.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.