Jump to content

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினம்


Recommended Posts

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினம்

 

 

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினம்

 

 
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று (17) விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கும் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்

இதன்போது தெரிவு செய்யப்பட்ட நூறு வறுமைக்கு உட்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதுடன் இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டு எம்.ஜி.ஆரின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2348&mode=head

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மீகம் தொடங்கி சினிமா வரை புகுந்து விளையாடுறாங்கள் எங்கன்ட பாரதமாதாக்கள்

Link to comment
Share on other sites

எம்.ஜி. ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வு அனுஷ்டிப்பு
எம்.ஜி. ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வு அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணம் எம். ஜி ஆர் நற்பணி மன்றத்தின்  ஏற்பாட்டில் எம்.ஜி. ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வுகள்  இன்று  செவ்வாய்க்கி ழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜி. ஆர் சிலையருகே நடைபெற்றது.
 
ஈழத்து எம். ஜி. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,சிறப்புவிருந்தினராக  இந்திய துணைத்தூரதக ஆலோசகர் ஆர் செல்வம், வடக்கு மாகாண சபை  உறுப்பினர் கே.என். சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் 
 
எம். ஜி. ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேருக்கு  உடுபுடவைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
16144060_837341726404911_1416659403_n.jpg16118711_837341729738244_1470608959_n.jpg16144464_837341723071578_1991727768_n.jpg16144084_837341739738243_1178354630_n.jpg16118689_837341733071577_738259588_n.jpg

http://onlineuthayan.com/news/22770

ஈழத்தில் எங்களை நாங்களே ஆழக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே எம்.ஜி.ஆருக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம்- சிவாஜிலிங்கம்
 
 
ஈழத்தில் எங்களை நாங்களே ஆழக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே எம்.ஜி.ஆருக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம்- சிவாஜிலிங்கம்
அமரர்  எம்.ஜி.ஆர் விரும்பியது போல் ஈழத்தில் எங்களை நாங்களே ஆழக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே ஒரே வழி. எம்.ஜி. ஆரி னுடைய புகழ் என்றும்  நிலைத்திருக்கும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்  தெரிவித்தார்.
 
இன்றைய தினம்  எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார் 
இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
 
அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் கண்டி மாநகரில் பிறந்து பின்னர் பெற்றோருடன் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து சினிமாவில் நடித்து மக்களின் செல்வாக்கை பெற்றிருந்தார். 
 
இவர் இறுதிக் காலம் வரை கொடைவள்ளலாக தனது சொத்துகளை வாரிவழங்கினார். பின்னாளில் தனியொரு கட்சியை ஆரம்பித்தார். பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று தடவைகள் பதவியேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 
 
1983ஆம் ஆண்டு மிகப்பெரிய இனப் படுகொலை இடம்பெற்ற வேளையில் தமிழகத்திற்கு ஈழமக்கள் தஞ்சம்புகுந்த வேளையில் அவர்களை ஆதரித்து  உதவி செய்திருந்தார். 
 
அதேபோல் ஈழவிடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாக தனது சொத்துக்களை அள்ளிக்கொடுத்து பேராதரவு வழங்கினார். அவர் பாரிசவாத நோயினால் ஆட்கொண்ட போதும் தேசியத் தலைவர் பிரபாகரனிற்கு கோடிக்கணக்கான சொத்துக்களை கொடுத்தி ருந்தார். வெலிக்கடைச் சிறையில் வெட்டி கொல்லப்பட்ட தங்கத்துரை, குட்டிமணி  ஆகியோரின் குடும்பத்திற்கும்  வீடுகளை தமிழக  அரசின் சார்பில் வழங்கி வைத்தார்.
 
எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகள் சென்றாலும் இன்றும் அவர் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு  இருக்கிறார். அமரர் எம்.ஜி. ஆர் கூறியதை போல் ஈழத்தில் எங்களை நாங்களே  ஆழக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே ஒரே வழி. எம்.ஜி.ஆரினுடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/22780

யாழில் கொண்டாடப்பட்டதுஎம்.ஜி.ஆரின் 100 ஆவது பிறந்த தினம்

 

 

( ஆர்.வி.கே )

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (எம்.ஜி.ஆர்) 100 ஆவது பிறந்த தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது.

unnamed-_2_.jpg

எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்பாக 100 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன.

unnamed-_1_.jpg

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குஎம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தி அவரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்தார்.

unnamed-_3_.jpg

இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக இந்திய துணைத்தூதுவர் அ.நடராஜன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

unnamed-_4_.jpg

எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தனது சொந்த நிதியில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் வறியமக்கள்மாற்றுத்திறநாளிகள்பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 100க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு உடுபுடவைகள்சிறு தொகைப் பணம் போன்றவற்றை வழங்கி வைத்தார்.

unnamed-_5_.jpg

இன் நிகழ்வில் வர்த்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

unnamed-_6_.jpg

யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் வருடம் தோறும் எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உடுபுடவைகள் வழங்கி வருவதோடு கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையும் இவரது சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

unnamed-_7_.jpg

unnamed-_12_.jpg

unnamed-_10_.jpg

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.