Jump to content

மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’


Recommended Posts


மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’
 

article_1484631710-Eluka-thamil.jpg- ப. தெய்வீகன்

புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது.  

 அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து, தமிழர் தரப்பில் குழப்பத்துடன் கூடிய மௌனம்தான் காணப்படுகிறது.   

அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவுக்குப் பதிலாக அரச தரப்பிலிருந்து எந்தப் பயனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கடந்த வருடம் முழுவதும் கண்டுகொண்ட ஒரே விடயம்.   

இது குறித்து அவ்வப்போது குரல் எழுப்புகின்ற போதெல்லாம் எல்லோரையும் பொறுமை காக்குமாறு கோருகிறது கூட்டமைப்பின் தலைமை.

சிங்கள மக்களே, தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை தராத மைத்திரி அரசாங்கத்துக்கு எதிராகத் தங்களது நம்பிக்கையீனங்களை வெளியிட்டு வருகின்றபோதும், தமிழர் தரப்புத் தொடர்ந்தும் நம்பிக்கையை மட்டும் பேணவேண்டும் என்று சம்பந்தர் கூறிவருகிறார்.   

அந்த வகையில் - தமிழ்க் கூட்டமைப்பினாலும் சிங்களத் தரப்பினாலும் தொடர்ந்தும் ஏமாற்றமடைந்து வருகின்ற தமிழ் மக்கள் பேரவை எனப்படுகின்ற குழு, எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது.   

புதிய வருடத்தில் தமிழ் மக்கள் தங்களது அரசியல் வேட்கை தொடர்பில் என்னவிதமான மனநிலையுடன் உள்ளார்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கு இந்த நிகழ்வு களம் அமைக்கப்போகிறது என்று இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார்கள்.   

‘எழுக தமிழ்’ நிகழ்வு முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டபோது, அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டார்கள்.   

இந்தப் பேரணிகள் உண்மையில் மக்களது உணர்வின் வெளிப்பாடாக நடத்தப்படுபவை. பெருமளவு மக்களின் பங்களிப்பைக் கோரி நிற்பவை. இந்தப் பேரணிகளில் எத்தனை பேர் பங்குகொள்கிறார்கள் என்பதற்கு அப்பால் பங்குகொள்பவர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதிகளாக - அந்த சமூகத்தின் தேவையை முன்வைக்கிறார்கள்.  

அந்தத் தேவையுடன்தான் அந்தச் சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் ஜனநாயக வழியில் வெளிப்படுத்துகிறார்கள்.

அந்த மக்களின் உணர்வுபூர்வமான இந்தக் கோரிக்கையை ஆளும் தரப்புக்கள் நிச்சயம் செவிமடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயக மரபு. அதற்கு எவ்வாறு பதிலளிப்பது, அந்த பதில்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதெல்லாம் அடுத்த கட்டம்.   

அந்த வகையில் பார்க்கப்போனால், இந்த ‘எழுக தமிழ்’ முன்னெடுக்கப்போகின்ற அரசியல் இயங்குதளம் என்ன? அது மக்களிடம் கோரிநிற்கின்ற ஆதரவு எத்தகையது என்பது குறித்து இந்த பத்திப் பேசவிருக்கிறது.  

1948 இல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தோடு இணைந்து கொள்வதற்கு முடிவெடுத்துக் கொண்ட ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவை எதிர்த்துக்கொண்டு தமிழ் காங்கிரஸை விட்டுப்பிரிந்த தந்தை செல்வா, தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து சிங்கள ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மை தேசியவாத மனநிலைக்கு எதிராக போராடிய வரலாறு அனைவரும் அறிந்த விடயம்.   

இங்கே பொன்னம்பலம் அவர்களது அரசியல் செல்நெறியை நிராகரித்த தந்தை செல்வா, தமிழ் மக்களைச் சரியான வழியில் அழைத்துச் செல்வதாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.  

 நம்பிக்கை மிக்க தனது வழியில் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு மக்களுக்காகப் போராடினார். மக்களின் மீதான அரசியல் அழுத்தங்களுக்கு எதிராக அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை வழிப்போராட்டங்களை சிங்கள ஆளும் வர்க்கம் நசுக்க முயன்றது.  

 இரத்தம் சிந்திய நிலையிலும் செல்வாவின் போராட்டம் தொடர்ந்தது. தமிழ்த் தாயகத்திலும் கொழும்பிலும் சிங்கள தேசத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அரசாங்கத்தை தமிழர் தரப்பை நோக்கி இறங்கி வரவைத்தது. பண்டா - செல்வா ஒப்பந்தம் என்றும் டட்லி - செல்வா ஒப்பந்தம் என்றும் இரண்டு உடன்படிக்கைகள்வரை அரசுத்தரப்பை இழுத்துவந்தது.   

அதாவது, பேச்சுமேசை வரைக்கும் சிங்களத் தரப்பினரை இழுத்துவந்து, தமிழர்களின் பிரச்சினைகளை செவிமடுக்க வைக்குமளவுக்கு தந்தை செல்வாவின் போராட்டம் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை மிகுந்ததாக வீரியம் மிக்கதாக - தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நேர்மையுடன் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.   

அந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் தோல்வியில் முடிவடைந்தபோது, ‘கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று சிங்கள தேசத்தின் ஏமாற்றுத் தனத்தையும் வஞ்சகத்தையும் தந்தை செல்வா வெளிப்படுத்தினார்.

தந்தை செல்வாவின் இந்தப் போராட்டமும் தமிழ்மக்களின் அந்தக் காலத்து போராட்ட வடிவமும் இந்தப் புள்ளியுடன் நிறைவுக்கு வந்தது.   

அதன் பின்னர், தந்தை செல்வாவின் அரசியல் செல்நெறியை அடுத்த காலகட்டத்துக்கு ஏற்றவாறும் அடுத்து வந்த சிங்களத் தரப்புக்களுக்கு புரியக்கூடிய வகையிலும் உணர்த்தும் வகையில், தமிழர்களுக்கு உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆயுதமேந்தி போராடுவதற்கு களம் இறங்கினார்கள்.  

விடுதலைப்புலிகள் அமைப்பு உட்பட எத்தனையோ ஆயுதக்குழுக்கள் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கு களமிறங்கி, இடையில் எத்தனையோ காட்சி மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து, இறுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மாத்திரம் கொழும்பில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளோடும் மாறி மாறிப் பேச்சுக்களில் ஈடுபட்டது.   

பெங்களூர் பேச்சுக்கள், டில்லி பேச்சுக்கள், திம்பு பேச்சுக்கள் என்று ஆரம்பித்து 2002 - 2003 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு கட்டப் பேச்சுவரை நடைபெற்று, ஈற்றில் 2006 ஆம் ஆண்டு பேச்சுக்களிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியேறியதுடன், இந்தப் பேச்சுப்படலம் நிறைவுபெற்றது.   

இந்த பேச்சுக்கள், உடன்படிக்கைகள் அனைத்திலும் சிங்கள ஆட்சித்தரப்புக்களை பேச்சு மேசைக்கு அழைத்து வந்து, தமிழ் மக்களது பிரச்சினைகளைப் பேசுவதற்கான வலுவை விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டிருந்தது. 

அவர்கள் எது செய்தாலும் மக்களின் நலன் நோக்கியதாகவே இருக்கும் என்ற இறுக்கமான உறவையும் பற்றுறுதியையும் வளர்த்துக்கொண்டார்கள்.   

அவர்களது போராட்டமும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்து, எத்தனையோ பாடங்களை? எத்தனையோ செய்திகளை? தமிழ்த் தரப்பின் சார்பாக உலகெங்கும் உரத்து சொல்லிவிட்டு அடங்கிவிட்டது.   

தற்போது தமிழ் தரப்பு மீண்டும் அரசியல் வழியில் - அற வழியில் - தனது போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து ஏழு வருடங்களாகி விட்டது.

இந்த ஏழு வருட காலப்பகுதியில் தமிழர்களது அரசியல் சிங்கள தேசத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பாடங்களைவிட, தங்களுக்கு இடையிலான, தமிழ் அரசியல் தரப்புக்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறது என்று கூறலாம்.  

அதன் ஒரு பகுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக பரிணமித்தனர். அதற்கு பிறகும் கூட்டமைப்பில் எஞ்சியிருந்தவர்கள் தற்போது, பிரிந்து செல்லாமல், தமிழ் மக்கள் பேரவை என்ற இன்னொரு விதமான அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர்.   

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் சரி, தமிழ் மக்கள் பேரவையும் சரி, அவை தோற்றம் பெற்ற காலம் முதற்கொண்டு இதுவரை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்?   

அன்று காங்கிரஸை விட்டுப் பிரிந்த செல்வாவுக்குத் தமிழரசுக்கட்சி என்ற அடையாளத்தை கொடுத்த மக்கள் இறுதிவரை அவரோடு இறுக்கமாக நின்றதற்கும், அதன் பின்னர் எத்தனையோ ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்களுக்காக போராடுவதற்காக புறப்பட்டபோதும் அவர்களுக்கு எதிராக எத்தனையோ கசப்பான சம்பவங்களில் விடுதலைப்புலிகள் ஈடுபபட்டபோதும் எல்லாவற்றையும் மீறி, அந்த அமைப்பின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கும் இப்போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் தமிழ் மக்கள் பேரவையினரும் கோரி நிற்கும் மக்கள் ஆதரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?   
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மக்களை தங்களுக்கு பின்னால் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கும் இந்த ‘எழுக தமிழ்’ அமைப்பினர், தமிழ் மக்கள் அவ்வாறு ஒரு முடிவை எடுக்குமளவுக்கு செய்த நம்பிக்கையான காரியங்கள் என்ன?  

சரி, இதுவரை எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இனிச்செய்யப்போவதாக இந்த இரு தரப்பினரிடமும் உள்ள எதிர்கால செயல்திட்டங்கள் என்ன?  

இந்த பின்னணிகளில் வைத்து பார்க்கும்போது, மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ நிகழ்வும் - தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலத் திட்டங்களை அறிவிக்கும் நிகழ்வாகவும் அமையுமா?  

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கும் ‘எழுக தமிழ்’ நிகழ்வு துண்டுப்பிரசுரங்களை மட்டக்களப்பில் முன்னாள் எம்.பி. கஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் ஓடியோடி கொடுத்துக்கொண்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் அவரே பகிர்ந்திருக்கிறார்.   

ஆனால், போர்க்காலத்தின்போது நடைபெற்றது போல, இப்போதும்கூட சர்வதேச சமூகம் சிங்கள தேசத்தைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தமிழ் மக்கள் பேரவைக்கு தெரியாதா? இனியும் அந்த நிலையிலிருந்து இறங்கி வருவதற்கான எந்த சகுனங்களையும் காணவில்லை என்பதுகூட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் தெரியவில்லையா?   

அப்படியானால், இவை எல்லாவற்றையும் துவம்சம் செய்யக்கூடிய சம்பந்தனையும் சுமந்திரனையும் துச்சமென்று தூக்கியெறிந்துவிட்டு முதலமைச்சரின் தலைமையிலான பேரவையின் கீழ் ஒட்டுமொத்த தமிழர் தாயகமும் நம்பிக்கையுடன் அணிவகுத்து நின்று ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பின்னரான அரசியல்’ என்ற யுகத்துக்குள் அழைத்துச் செல்வதற்கு வலுவாக தமிழ் மக்கள் பேரவையிடமுள்ள தந்தை செல்வா காணாத, பிரபாகரன் அறியாத, சம்பந்தனும் சுமந்திரனுக்கும் புரியாத, வழிகாட்டும் வரைபடம் என்ன?

  மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ இதற்கு பதில் கூறுமா? இவை அனைத்தும் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரான கேள்விகள் என்றோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான கேள்விகள் என்றோ கழித்துவிடாமல், மக்களின் பார்வையில் முன்வைக்கப்படுகின்ற கேள்விகளாக உள்வாங்கி ‘எழுக தமிழ்’ பதில் தருமா?    

- See more at: http://www.tamilmirror.lk/189835/மட-டக-களப-ப-எழ-க-தம-ழ-#sthash.PhuiEooM.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.