Jump to content

மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’


Recommended Posts


மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’
 

article_1484631710-Eluka-thamil.jpg- ப. தெய்வீகன்

புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது.  

 அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து, தமிழர் தரப்பில் குழப்பத்துடன் கூடிய மௌனம்தான் காணப்படுகிறது.   

அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவுக்குப் பதிலாக அரச தரப்பிலிருந்து எந்தப் பயனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கடந்த வருடம் முழுவதும் கண்டுகொண்ட ஒரே விடயம்.   

இது குறித்து அவ்வப்போது குரல் எழுப்புகின்ற போதெல்லாம் எல்லோரையும் பொறுமை காக்குமாறு கோருகிறது கூட்டமைப்பின் தலைமை.

சிங்கள மக்களே, தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை தராத மைத்திரி அரசாங்கத்துக்கு எதிராகத் தங்களது நம்பிக்கையீனங்களை வெளியிட்டு வருகின்றபோதும், தமிழர் தரப்புத் தொடர்ந்தும் நம்பிக்கையை மட்டும் பேணவேண்டும் என்று சம்பந்தர் கூறிவருகிறார்.   

அந்த வகையில் - தமிழ்க் கூட்டமைப்பினாலும் சிங்களத் தரப்பினாலும் தொடர்ந்தும் ஏமாற்றமடைந்து வருகின்ற தமிழ் மக்கள் பேரவை எனப்படுகின்ற குழு, எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது.   

புதிய வருடத்தில் தமிழ் மக்கள் தங்களது அரசியல் வேட்கை தொடர்பில் என்னவிதமான மனநிலையுடன் உள்ளார்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கு இந்த நிகழ்வு களம் அமைக்கப்போகிறது என்று இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார்கள்.   

‘எழுக தமிழ்’ நிகழ்வு முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டபோது, அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டார்கள்.   

இந்தப் பேரணிகள் உண்மையில் மக்களது உணர்வின் வெளிப்பாடாக நடத்தப்படுபவை. பெருமளவு மக்களின் பங்களிப்பைக் கோரி நிற்பவை. இந்தப் பேரணிகளில் எத்தனை பேர் பங்குகொள்கிறார்கள் என்பதற்கு அப்பால் பங்குகொள்பவர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதிகளாக - அந்த சமூகத்தின் தேவையை முன்வைக்கிறார்கள்.  

அந்தத் தேவையுடன்தான் அந்தச் சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் ஜனநாயக வழியில் வெளிப்படுத்துகிறார்கள்.

அந்த மக்களின் உணர்வுபூர்வமான இந்தக் கோரிக்கையை ஆளும் தரப்புக்கள் நிச்சயம் செவிமடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயக மரபு. அதற்கு எவ்வாறு பதிலளிப்பது, அந்த பதில்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதெல்லாம் அடுத்த கட்டம்.   

அந்த வகையில் பார்க்கப்போனால், இந்த ‘எழுக தமிழ்’ முன்னெடுக்கப்போகின்ற அரசியல் இயங்குதளம் என்ன? அது மக்களிடம் கோரிநிற்கின்ற ஆதரவு எத்தகையது என்பது குறித்து இந்த பத்திப் பேசவிருக்கிறது.  

1948 இல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தோடு இணைந்து கொள்வதற்கு முடிவெடுத்துக் கொண்ட ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவை எதிர்த்துக்கொண்டு தமிழ் காங்கிரஸை விட்டுப்பிரிந்த தந்தை செல்வா, தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து சிங்கள ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மை தேசியவாத மனநிலைக்கு எதிராக போராடிய வரலாறு அனைவரும் அறிந்த விடயம்.   

இங்கே பொன்னம்பலம் அவர்களது அரசியல் செல்நெறியை நிராகரித்த தந்தை செல்வா, தமிழ் மக்களைச் சரியான வழியில் அழைத்துச் செல்வதாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.  

 நம்பிக்கை மிக்க தனது வழியில் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு மக்களுக்காகப் போராடினார். மக்களின் மீதான அரசியல் அழுத்தங்களுக்கு எதிராக அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை வழிப்போராட்டங்களை சிங்கள ஆளும் வர்க்கம் நசுக்க முயன்றது.  

 இரத்தம் சிந்திய நிலையிலும் செல்வாவின் போராட்டம் தொடர்ந்தது. தமிழ்த் தாயகத்திலும் கொழும்பிலும் சிங்கள தேசத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அரசாங்கத்தை தமிழர் தரப்பை நோக்கி இறங்கி வரவைத்தது. பண்டா - செல்வா ஒப்பந்தம் என்றும் டட்லி - செல்வா ஒப்பந்தம் என்றும் இரண்டு உடன்படிக்கைகள்வரை அரசுத்தரப்பை இழுத்துவந்தது.   

அதாவது, பேச்சுமேசை வரைக்கும் சிங்களத் தரப்பினரை இழுத்துவந்து, தமிழர்களின் பிரச்சினைகளை செவிமடுக்க வைக்குமளவுக்கு தந்தை செல்வாவின் போராட்டம் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை மிகுந்ததாக வீரியம் மிக்கதாக - தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நேர்மையுடன் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.   

அந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் தோல்வியில் முடிவடைந்தபோது, ‘கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று சிங்கள தேசத்தின் ஏமாற்றுத் தனத்தையும் வஞ்சகத்தையும் தந்தை செல்வா வெளிப்படுத்தினார்.

தந்தை செல்வாவின் இந்தப் போராட்டமும் தமிழ்மக்களின் அந்தக் காலத்து போராட்ட வடிவமும் இந்தப் புள்ளியுடன் நிறைவுக்கு வந்தது.   

அதன் பின்னர், தந்தை செல்வாவின் அரசியல் செல்நெறியை அடுத்த காலகட்டத்துக்கு ஏற்றவாறும் அடுத்து வந்த சிங்களத் தரப்புக்களுக்கு புரியக்கூடிய வகையிலும் உணர்த்தும் வகையில், தமிழர்களுக்கு உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆயுதமேந்தி போராடுவதற்கு களம் இறங்கினார்கள்.  

விடுதலைப்புலிகள் அமைப்பு உட்பட எத்தனையோ ஆயுதக்குழுக்கள் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கு களமிறங்கி, இடையில் எத்தனையோ காட்சி மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து, இறுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மாத்திரம் கொழும்பில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளோடும் மாறி மாறிப் பேச்சுக்களில் ஈடுபட்டது.   

பெங்களூர் பேச்சுக்கள், டில்லி பேச்சுக்கள், திம்பு பேச்சுக்கள் என்று ஆரம்பித்து 2002 - 2003 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு கட்டப் பேச்சுவரை நடைபெற்று, ஈற்றில் 2006 ஆம் ஆண்டு பேச்சுக்களிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியேறியதுடன், இந்தப் பேச்சுப்படலம் நிறைவுபெற்றது.   

இந்த பேச்சுக்கள், உடன்படிக்கைகள் அனைத்திலும் சிங்கள ஆட்சித்தரப்புக்களை பேச்சு மேசைக்கு அழைத்து வந்து, தமிழ் மக்களது பிரச்சினைகளைப் பேசுவதற்கான வலுவை விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டிருந்தது. 

அவர்கள் எது செய்தாலும் மக்களின் நலன் நோக்கியதாகவே இருக்கும் என்ற இறுக்கமான உறவையும் பற்றுறுதியையும் வளர்த்துக்கொண்டார்கள்.   

அவர்களது போராட்டமும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்து, எத்தனையோ பாடங்களை? எத்தனையோ செய்திகளை? தமிழ்த் தரப்பின் சார்பாக உலகெங்கும் உரத்து சொல்லிவிட்டு அடங்கிவிட்டது.   

தற்போது தமிழ் தரப்பு மீண்டும் அரசியல் வழியில் - அற வழியில் - தனது போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து ஏழு வருடங்களாகி விட்டது.

இந்த ஏழு வருட காலப்பகுதியில் தமிழர்களது அரசியல் சிங்கள தேசத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பாடங்களைவிட, தங்களுக்கு இடையிலான, தமிழ் அரசியல் தரப்புக்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறது என்று கூறலாம்.  

அதன் ஒரு பகுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக பரிணமித்தனர். அதற்கு பிறகும் கூட்டமைப்பில் எஞ்சியிருந்தவர்கள் தற்போது, பிரிந்து செல்லாமல், தமிழ் மக்கள் பேரவை என்ற இன்னொரு விதமான அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர்.   

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் சரி, தமிழ் மக்கள் பேரவையும் சரி, அவை தோற்றம் பெற்ற காலம் முதற்கொண்டு இதுவரை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்?   

அன்று காங்கிரஸை விட்டுப் பிரிந்த செல்வாவுக்குத் தமிழரசுக்கட்சி என்ற அடையாளத்தை கொடுத்த மக்கள் இறுதிவரை அவரோடு இறுக்கமாக நின்றதற்கும், அதன் பின்னர் எத்தனையோ ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்களுக்காக போராடுவதற்காக புறப்பட்டபோதும் அவர்களுக்கு எதிராக எத்தனையோ கசப்பான சம்பவங்களில் விடுதலைப்புலிகள் ஈடுபபட்டபோதும் எல்லாவற்றையும் மீறி, அந்த அமைப்பின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கும் இப்போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் தமிழ் மக்கள் பேரவையினரும் கோரி நிற்கும் மக்கள் ஆதரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?   
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மக்களை தங்களுக்கு பின்னால் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கும் இந்த ‘எழுக தமிழ்’ அமைப்பினர், தமிழ் மக்கள் அவ்வாறு ஒரு முடிவை எடுக்குமளவுக்கு செய்த நம்பிக்கையான காரியங்கள் என்ன?  

சரி, இதுவரை எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இனிச்செய்யப்போவதாக இந்த இரு தரப்பினரிடமும் உள்ள எதிர்கால செயல்திட்டங்கள் என்ன?  

இந்த பின்னணிகளில் வைத்து பார்க்கும்போது, மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ நிகழ்வும் - தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலத் திட்டங்களை அறிவிக்கும் நிகழ்வாகவும் அமையுமா?  

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கும் ‘எழுக தமிழ்’ நிகழ்வு துண்டுப்பிரசுரங்களை மட்டக்களப்பில் முன்னாள் எம்.பி. கஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் ஓடியோடி கொடுத்துக்கொண்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் அவரே பகிர்ந்திருக்கிறார்.   

ஆனால், போர்க்காலத்தின்போது நடைபெற்றது போல, இப்போதும்கூட சர்வதேச சமூகம் சிங்கள தேசத்தைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தமிழ் மக்கள் பேரவைக்கு தெரியாதா? இனியும் அந்த நிலையிலிருந்து இறங்கி வருவதற்கான எந்த சகுனங்களையும் காணவில்லை என்பதுகூட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் தெரியவில்லையா?   

அப்படியானால், இவை எல்லாவற்றையும் துவம்சம் செய்யக்கூடிய சம்பந்தனையும் சுமந்திரனையும் துச்சமென்று தூக்கியெறிந்துவிட்டு முதலமைச்சரின் தலைமையிலான பேரவையின் கீழ் ஒட்டுமொத்த தமிழர் தாயகமும் நம்பிக்கையுடன் அணிவகுத்து நின்று ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பின்னரான அரசியல்’ என்ற யுகத்துக்குள் அழைத்துச் செல்வதற்கு வலுவாக தமிழ் மக்கள் பேரவையிடமுள்ள தந்தை செல்வா காணாத, பிரபாகரன் அறியாத, சம்பந்தனும் சுமந்திரனுக்கும் புரியாத, வழிகாட்டும் வரைபடம் என்ன?

  மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ இதற்கு பதில் கூறுமா? இவை அனைத்தும் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரான கேள்விகள் என்றோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான கேள்விகள் என்றோ கழித்துவிடாமல், மக்களின் பார்வையில் முன்வைக்கப்படுகின்ற கேள்விகளாக உள்வாங்கி ‘எழுக தமிழ்’ பதில் தருமா?    

- See more at: http://www.tamilmirror.lk/189835/மட-டக-களப-ப-எழ-க-தம-ழ-#sthash.PhuiEooM.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.