Jump to content

லசந்தவின் கொலைக்கு கோத்தாவே பொறுப்பு


Recommended Posts

லசந்­தவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு

 

 

'சண்டே லீடர்' பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம் அளித்­துள்ளார். 

கொலை இடம்­பெற சில தினங்­க­ளுக்கு முன்னர் தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தியே அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து அவர் இவ்­வாறு தமது விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா கல்­கிசை நீதிவான் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார்.

ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை வழக்கு நேற்­றைய தினம் கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்­னி­லையில் நேற்று இடம்­பெற்­றது. இதன் போது லசந்­தவின் கொலை வழக்­குடன் இணைந்த சம்­ப­வ­மான லசந்­தவின் சார­தியை கடத்திச் சென்று மரண அச்­சு­றுத்தல் விடுத்­த­தாக கூறப்­பட்டு கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள இரா­ணுவ புல­னா­யவுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரே­மா­னந்த உட­லா­கம மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

அவர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி யுரான் லிய­னகே மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட தரப்­பான லசந்த விக்­ர­ம­துங்க குடும்­பத்­தினர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எஸ். ரண­கல பிர­சன்­ன­மானார்.

 இந் நிலையில் மன்­றுக்கு மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் முன்­னி­லை­யான விசா­ரணை அதி­கா­ரி­யான சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா, அவ்­வ­றிக்­கையை நீதிவான் மொஹம்மட் மிஹா­லுக்கு சமர்­பித்து பின் வரு­மாறு கருத்­துக்­களை முன் வைத்தார்.

,லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லையின் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட தொலை­பே­சிகள் தொடர்பில் நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதில் அக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய 5 சிம் அட்­டைகள் தொடர்பில் நாம் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினோம். இது தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் அந்த சிம் அட்­டைகள் புறக் கோட்­டையில் உள்ள ஒரு விற்­பனை நிலை­யத்தில் இருந்தே பெறப்­பட்­டுள்­ள­மையை நாம் உறுதி செய்தோம்.

 அத்­துடன்  அந்த சிம் அட்­டை­க­ளுடன் பயன்­ப­டுத்­திய தொலை­பே­சி­க­ளையும் நாம் அடை­யாளம் கண்­டுள்ளோம். பிர­பல தொலை­பேசி இறக்­கு­மதி நிறு­வ­னத்­தினால் இறக்­கு­மதி செய்­யப்ப்ட்டு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள நோக்­கியா 1200 ரக தொலை­பே­சி­களே இக்­கொ­லைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

அந்த தொலை­பே­சி­களை விற்­பனைச் செய்த விற்­பனை நிலை­யத்தை கண்­ட­றிய தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். தற்­போது 50 விற்­பனை நிலை­யங்கள் தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். இது தொடர்பில் இது­வரை 34 பேரிடம் வாக்கு மூலங்­களைப் பதிவு செய்­துள்ளோம்.

அத்­துடன் லசந்­தவின் கொலையின் பின்னர் அவ­ரது கைய­டக்கத் தொலை­பேசி காணாமல் போனது. அதனை சுதத் பெரேரா என்­பவர் திரு­டி­யி­ருந்த நிலையில் கண்­டு­பி­டித்தோம். அவ­ரிடம் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்­றுள்ளோம். 

அவ­ரது கை விரல் ரேகையைப் பெற்று, லசந்­தவின் காரில் இருந்த கொலை­யா­ளி­யி­னு­டை­யது என சந்­தே­கிக்கும் கைவிரல் ரேகை­யுடன் ஒப்­பீடுச் செய்தோம். எனினும் அது பொருந்­த­வில்லை என எமக்கு அறிக்கை கிடைத்­துள்­ளது.

இத­னை­விட ஏற்­க­னவே மன்றின் அனு­ம­தி­யுடன் பெறப்­பட்ட 266 இரா­ணுவ வீரர்­களின் கைவிரல் ரேகை­களை நாம் அந்த காரில் இருந்த ரேகை­யுடன் ஒப்­பீடு செய்தோம். அதில் எதுவும் பொருந்திப் போக­வில்லை என எமக்கு அறிக்கை கிடைத்­தது.

 இந் நிலையில் மேலும் 326 இரா­ணுவ வீரர்­களின் கைவிரல் ரேகை­களை பரி­சீ­லிக்க வேண்­டி­யுள்­ளது.

இத­னை­விட, லசந்த கொலை செய்­யப்­பட்ட பின்னர் அது குறித்த விசா­ர­ணை­களை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவே முதலில் முன்­னெ­டுத்­தது. இதன் போது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்ட இருந்தார். இதன் போது முதலில் 17 இரா­ணுவ புல­னா­ய­வா­ளர்கள் கைது  செய்­யப்­பட்­டனர். 

பின்னர் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். இது தொடர்பில் நாம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்­ட­விடம் விசா­ரணை செய்த போது,  தனது விசா­ர­ணையில் அவர்கள் கைது  செய்­யப்­ப­ட­வில்லை எனவும் அவர்­களை இரா­ணு­வமே அனுப்பி வைத்­த­தா­கவும் கூறினார்.

 இதனைத் தொடர்ந்து நாம் இரா­ணு­வத்­திடம் அது குறித்து விளக்கம் கோரினோம். அதற்கு இரா­ணுவம் பிரதிப் பொலிஸ்  மா அதி­பரின் அறி­வித்­தலை தொடர்ந்தே அந்த 17 பேரையும் அனுப்­பி­ய­தாக குறிப்­பிட்­டனர்.

இதில் இருந்து பயங்­க­ர­வாத புல­னா­யவுப் பிரிவு அப்­போது  செய்த விசா­ரணை ஒரு கண் துடைப்பு வேலை என்­பது புல­னா­கி­றது. இந் நிலையில் நாம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள, லசந்த விக்­ர­ம­துங்­கவின் மக­ளிடம் அங்கு சென்று வாககு மூலம் ஒன்­றினை பதிவு  செய்தோம். அதில், தனது தந்தை இறப்­ப­துக்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்த  விட­யங்­களை அவர் வெளிப்­ப­டுத்­தினார். 

hqdefault.jpg

அப்­போது தனது தந்தை மிக் விமான கொள்­வ­னவு தொடர்பில் தனக்கு ஆபத்து வரலாம் என தெரி­வித்­த­தா­கவும் அவ்­வாறு ஆபத்து ஏற்­படின் அதற்கு அப்­போ­தைய பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற­வேண்டும் என சுட்­டிக்­காட்­டி­ய­தா­கவும் தெரி­வித்தார்.

இத­னை­விட லசந்­தவின் சாரதி டயஸ் கடத்­தப்­பட்­டமை தொடர்பில் நாம்  சந்­தேக நப­ராக உட­லா­க­மவை கைது  செய்தோம். லசந்த கொலைக்கு கோத்தாவே காரணம் என டயஸ் சில இடங்களில் கூறியதனாலேயே அவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக எமது விசாரணைகளில் தெரியவந்தது.  எனவே இவ்விடயத்துக்கும் லசந்தவின் மகளின் வாக்கு மூலத்துக்கும் இடையே வேறுபாடுகள் இல்லை என தெரிவித்தார்.

 அதன் பின்னர் சந்தேக நபர் சார்பிலோ பாதிக்கப்பட்ட தரப்பு சார்பிலோ எந்த கருத்துக்களும் முன் வைக்கப்படாத நிலையில் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிவான் மொஹம்மட் மிஹால் அறிவித்தார்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.