Jump to content

புலி சார்பானவர்களே புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றனர் ;ரத்ன தேரர்


Recommended Posts

புலி சார்­பா­ன­வர்­களே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கின்­றனர் ;ரத்ன தேரர்

 

 

நல்­லாட்சி அர­சாங்கம் சொல் தவ­றி­விட்­டது. அர­சியல் அமைப்பு மூல­மா­கவும் பொரு­ளா­தாரம் மூல­மா­கவும்  நாட்டை துண்­டாடும் பாதையில் அர­சாங்கம் பய­ணிக்­கின்­றது. அர­சாங்­கத்தை சரி­யான பாதைக்கு கொண்­டு­வர  ஒரு தேசிய சபையை உரு­வாக்­குவேன் என தூய்­மை­யான 

நாளைக்­கான அமைப்பின் தலை­வரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். 

ஆட்­சியை கவிழ்க்க முயற்­சிக்­க­வில்லை. ஆனால் அர­சாங்­கத்தின் பயணம் மோச­மாயின் சரி­யான சந்­தர்ப்­பத்தில் மாற்­ற­வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.அத்து­ர­லியே ரத்ன தேரரின் விசேட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடை­பெற்­றது. இதில் கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், 

அர­சாங்கம் மக்­க­ளுக்கு என்ன வாக்­கு­று­தி­களை கொடுத்­ததோ அதை சரி­யாக முன்­னெ­டுக்க வில்லை. மிகவும் மோச­மான பாதை­யினை தெரிவு செய்து பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. குறிப்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் தனது ஆட்சிக் காலத்தில்  செய்­வ­தாக கூறிய வாக்­கு­று­தி­களை மீறி மக்­களின் அதி­ருப்­தியை சம்­பா­திக்கும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக  நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கு­வது தொடர்பில் எமக்கு  பிரச்­சினை இல்லை. ஆனால் இப்­போது இருக்கும் சூழ்­நி­லையில் அர­சியல் குழப்­பங்கள் மற்றும் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வது இல­கு­வான காரியம் அல்ல. 

 

குறிப்­பாக இந்த தேர்­தலை எடுத்­துக்­கொண்டால் பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்கும் தனி அர­சாங்கம் உரு­வாக்க மக்கள் ஆத­ரவு கிடைக்­க­வில்லை. நாட்­டுக்கு தேவை­யான சட்­ட­மூ­லங்­களை அல்­லது உறு­தி­யான தீர்­மா­னங்­களை எடுப்­பதில் பாரிய சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. இன்று  ஸ்திர­மற்ற அர­சாங்கம் இல்­லாது முழு நாடும் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளது. இந்­நி­லையில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்க  முன்னர் பிர­தா­ன­மாக மூன்று கார­ணி­களை நாம் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். 

அதி­காரப் பகிர்வின் மோச­மான நகர்­வுகள் அதி­காரப் பகிர்வு என்­பதை நாம் கருத்தில் கொண்டு செயப்­பட வேண்டும்.    இலங்கை இந்­திய ஒப்­பந்தம் மூலம் இலங்­கைக்கு இந்­தி­யா­வினால் திணிக்­கப்­பட்ட  13ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்பில் சக­ல­ருக்கும் தெரிந்­தி­ருக்கும்.  மாகாண அதி­கா­ரங்­களை பலப்­ப­டுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்ட போது அப்­போதே நாட்டில் மிகப்­பெ­ரிய கிளர்ச்சி உரு­வாக்­கப்­பட்­டது. அர­சியல் ரீதி­யிலும் ஆயுதம் ஏந்­தியும் பாரிய புரட்சி வெடித்­தது. மக்கள் விடு­தலை முன்­னணி எடுத்த இந்த முயற்­சியின் விளை­வாக இந்த நாட்டில் 65ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.  யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­ப­டுவர்.  அதை தடுக்க முடி­யாது. ஆனால் இவ்­வா­றான நிலை­மை­களை தடுத்து உயிர் இழப்­பு­களை தடுத்­தி­ருக்க முடியும் .ஆனால் இலங்கை இந்­திய ஒப்­பந்­ததின் விளை­வாக நாம்  65 ஆயுரம் உயிர்­களை இழந்­த­மையே எமக்கு கிடைத்த பல­னாகும். 

அதேபோல் பாரிய   இழப்பு களுக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. அதன் பின்­னரே இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தை ஏற்­றுக்­கொண்டோம். அப்­போது 13ஆம் திருத்­தத்தை  கொண்­டு­வர சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­யமா அல்­லது பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்ற முடி­யுமா என சர்ச்சை ஏற்­பட்ட நிலையில் இந்த  விவ­கா­ரங்கள் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை அடிப்­ப­டை­யாக கொண்டு தீர்­மா­னிக்­கப்­பட்­டன.  நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையில் தான்  நாட்டின் ஐக்­கியம் தங்­கி­யுள்­ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி   முறைமை நீக்­கப்­பட்டால் நாட்டின் ஐக்­கியம் இல்­லாது போய்­விடும் என அப்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்க இட­ம­ளியோம் எனினும் நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் சர்­வா­தி­காரம் குறைக்­கப்­பட வேண்டும். அநா­வ­சிய அதி­கா­ரங்­களை வழங்கி ஜனா­தி­ப­தியை சர்­வா­தி­கா­ரி­யாக மாற்றும் முறைமை அவ­சியம் இல்லை என நாம் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தெரி­வித்தோம். ஆனால் முழு­மை­யாக ஜனா­தி­பதி முறை­மையை நீக்க வேண்டும் என நாம் தெரி­விக்­க­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூட அவர் நிறை­வேறு ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தாக தெரி­விக்­க­வில்லை. மும்­மொ­ழி­க­ளிலும் அதை தெளி­வாக தெரி­வித்­துள்ளார். நிறை­வேற்று  ஜனா­தி­ப­திக்கு உள்ள பொறுப்பு இன்றும் அவ­ருக்கு உள்­ளது. அதன் மூலம் தான் நாட்டின் ஐக்­கி­யத்தை காப்­பாற்ற முடியும். 

புலி­களை ஆத­ரிப்­ப­வர்­களே அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­கின்­றனர் மேலும் அர­சி­ய­ல­மைப்பை  உரு­வாக்கி நாட்டை முழு­மை­யாக சீர­ழிக்க வேண்டும் என நாம் ஒரு­போதும் குறிப்­பி­ட­வில்லை. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இல்­லாது புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க மாட்டோம் என ஜனா­தி­பதி தெளி­வாக தெரி­வித்­துள்ளார். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு  எனும்­போது நாட்டின் தேசிய கீதம்,தேசியக் கொடி மற்றும் ஐக்­கிய இலங்கை என்ற வார்த்­தைகள் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே அது தொடர்பில்  அப்­போதே ஜனா­தி­பதி தெளி­வாகத் தெரி­வித்­துள்ளார். இப்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் நிய­மிக்­கப்­பட்ட உப குழுக்கள் மூலம் சட்­ட­மூலம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சட்­ட­மூ­லத்தில் முழு­மை­யாக ஐக்­கிய இலங்கை என்ற பதம் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நகர்­வுக்கு நாம் முழு­மை­யாக எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­கின்றோம்.  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு மாறாக எந்த அர­சியல் அமைப்­பையும் கொண்­டு­வர ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு எந்த அதி­கா­ரமும் இல்லை .  

இந்த அர­சி­ய­ல­மைப்பின் மூலம் ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது நாட்டின் ஐக்­கி­யத்தை இல்­லா­தொ­ழிக்கும் நகர்­வாகும்.    கடந்த காலத்தில் புலி­க­ளுக்கு துணை­போன, பயங்­க­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­திய, பயங்­க­ர­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என கூறி­ய­வர்கள் தான் இன்று புதிய அர­சி­ய­ல­மைப்­பையும் உரு­வாக்­கு­கின்­றனர். ஒரு சிறிய குழு­வி­னரே இந்த அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு மக்­களின் கருத்து அவ­சியம் இல்லை. நாட்டின் நிலை­மைகள் அவ­சியம் இல்லை. இவ்­வா­றான ஒரு அர­சி­ய­ல­மைப்பு இப்­போது கொண்­டு­வ­ரப்­ப­டு­வது நாட்டில் அனா­வ­சிய பிரச்­சி­னை­களை உரு­வாக்க வாய்ப்­பாக அமையும். இப்­போது ஏதோ ஒரு வகையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முன்­னெ­டுத்து செல்­லப்­படும் நகர்­வு­களை கூட அழிக்கும் வகையில் இந்த நகர்­வுகள் அமைந்­து­விடும். பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க எவ்­வாறு நாம் முன்­வந்­தோமோ அதேபோல் நாட்டின்  ஸ்திரத் தன்­மையை இல்­லா­தொ­ழிக்கும் இந்த புதிய அர­சியல் அமைப்பை நிறை­வேற்ற நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.  

தேர்தல் முறைமை நீக்­கு­வ­தாக பொய்­களை கூறு­கின்­றனர் தேர்தல் முறை­மையை இல்­லா­தொ­ழித்து மீண்டும் பழைய நிலை­மைக்கு எம்மால் போக முடி­யாது. பழைய முறை­மையில் நல்ல நகர்­வு­களும் இருந்­தன.  அதை­வி­டவும் மோச­மான நிலை­மைகள் காணப்­பட்­டன. ஆகவே  சரி­யான தேர்தல் முறைமை  ஒன்றை உரு­வாக்கி அதன் மூலம் ஆரோக்­கி­ய­மான அர­சியல் நக­வு­களை மேற்­கொள்ள வேண்டும் என தெரி­வித்தோம். கடந்த காலத்தில் தேர்தல் முறைமை மூலம் நடை­பெற்ற ஊழல் மற்றும் சட்­ட­வி­ரோத நகர்­வுகள் அனைத்­தையும் நாம் கவ­னித்தோம். அவற்றை மாற்­று­வ­தாக கூறி­னார்கள்.  ஆனால் இன்­று­வரை  அது தொடர்பில் எந்த முனேற்­றமும் இல்லை. புதிய தேர்தல் முறைமை உரு­வாக்­கப்­பட வேண்டும் என கூறி  அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும்  முன்­னெ­டுத்து  இப்­போது பழைய முறையில் தேர்­தலை நடத்த வேண்டும் என கூறு­கின்­றனர். ஆகவே அதை கார­ண­மாகக் கொண்டு    இப்­போது உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­தவும் காலத்தை கடத்­து­கின்­றனர். ஆகவே புதிய முறையில் உட­ன­டி­யாக தேர்­தலை நடத்த வேண்டும். ஜனா­தி­பதி உட­ன­டி­யாக கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்டும். 

வாக்­கு­று­திகள் நிறை­வேற்றப் பட­வில்லை நாட்டு மக்­க­ளுக்கு என்ன வாக்­கு­று­தி­களை கொடுத்­தோமோ அதை நிறை­வேற்ற வேண்டும். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை உரு­வாக்க வேண்டும் என கூறினோம். அதில் ஒரு­சில ஆணைக்­கு­ழுக்கள்   உரு­வாக்­கப்­பட்­டன.ஆனால் சில முக்­கி­ய­மான ஆணைக்­கு­ழுக்கள் இன்னும் உரு­வாக்­க­பப்­ப­ட­வில்லை. குறிப்­பாக கணக்­காய்­வாளர் ஆணைக்­குழு போன்­றவை அவ­சியம். 19ஆம் திருத்தம்    முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும். அர­சியல் அமைப்பு தொடர்பில் எதிர்க்­கட்­சி­யினர்    உள்­ளிட்ட பலர் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர். மத சார்­பற்ற இராச்­சி­ய­மாக உரு­வாக்­கப்­பட வேண்டும் என கூறு­கின்­றனர்.உண்­மையில் நாம் மத சார்­பான  நாடு அல்ல.எனினும் பௌத்தம் சுட்­டிக்­காட்டப் பட்­டுள்­ளது. ஆனால் நாம் மத சார்பு   நாடு அல்ல. இங்கு சகல மதத்­தி­னரும் சம உரி­மை­யுடன் வாழ­வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பௌத்தம் என சுட்­டிக்­கட்­டப்­பட்­டுள்­ளதால் அது பெரிய முக்­கி­யத்­துவம் இல்லை. அது அவ­சி­யமும் இல்லை. ஆனால் இப்­போது கொண்­டு­வரும் அர­சியல் அமைப்பில் அது சுட்­டிக்­காட்­டப்­பட்டு குழப்­பங்­களை உரு­வாக்­கும்­வ­கையில் அமைந்­துள்­ளது. ஆகவே இவ்­வா­றான மோச­மான உறுப்­பு­ரை­களை உள்­ள­டக்கி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த நாம் இட­ம­ளிக்க மாட்டோம். மாகாண அதி­கா­ரங்கள் பற்றி பேசு­கின்­றனர். 

காணி அதி­காரம் உண்­மையில் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வது அவ­சி­ய­மில்லை. வடக்கு தமக்­கான காணி  அதி­கா­ரத்தை கோரு­கின்­றது. ஆனால் அது வழங்­கப்­பட்டால் அது நாட்டில் வேறு சிக்­கல்­களை உரு­வாக்­கி­விடும். வடக்கை போன்றே மத்­திய மாகாணம் முரண்­பட்டால் வட மாகா­ணத்­திற்கு தண்ணீர் கிடைக்­காது போய்­விடும். மத்­திய மாகாணம் நாட்டின்  இரு­தயம். இவ்­வாறு முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி குழப்­பங்­களை கொண்­டு­வந்தால் இறு­தியில் மக்­க­ளுக்கு குடிக்­கவே தண்ணீர் கிடைக்­காது போய்­விடும். ஆகவே மாகாண முதல்­வர்­க­ளுக்கு ஏற்ற வகையில் மத்­திய அர­சாங்கம் செயற்­பட முடி­யாது. மத்­திய அர­சாங்­கமே காணி அதி­கா­ரங்­களை வைத்­து­கொள்ள வேண்டும். அதேபோல் அனைத்து மக்­களும் சகல பகு­தி­க­ளிலும் வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க வேண்டும். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொரு­ளா­தார கொள்கை மோச­மா­னது தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­ய­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் இணைந்து பல­மான பொரு­ளா­தார கொள்­கையை உரு­வாக்­கு­வார்கள் என நினைத்தோம். ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொரு­ளா­தார நகர்­வுகள் மோச­மா­ன­தாக அமைந்­து­வ­ரு­கின்­றன . இன்று நாடு முழு­மை­யாக சர்­வ­தேச நாடு­க­ளுக்கு விற்­கப்­ப­டு­கின்­றது. எமது நிலத்தை சர்­வ­தேச நாடு­க­ளுக்கு விற்க அர­சாங்­கத்­துக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை.  எமது மக்­களின் நிலங்­களில்  எமது மக்கள் வாழும் பகு­தி­களில் சர்­வ­தேச நாடு­களின் நிறு­வ­னங்­களை உரு­வாக்­கு­வது எம்­மையே பாதிக்கும். அர­சாங்கம் செய்யும் இந்த நகர்­வுகள் மோச­மா­ன­வை­யாகும்.  .அதேபோல் துறை­முக திட்­டங்­களை எடுத்­துக்­கொண்டால் அதிலும் சட்­ட­வி­ரோ­த­மாக அர­சாங்கம் நடந்­து­கொள்­கின்­றது. 

99 வருட குத்­த­கைக்கு துறை­மு­கத்தை வழங்­கு­வது முழு­மை­யாக தடுக்­கப்­பட வேண்டும். அர­சாங்கம் அவ்­வாறு வழங்­கு­மாயின் முழு நாட்டு மக்­க­ளையும் இணைத்து இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக போராட நாம் முன்­வ­ருவோம்.  நாட்டை விற்றும் தனியார் மயப்­ப­டுத்­தியும் தவ­றான பொரு­ளா­தார கொள்­கையை முன்­னெ­டுத்து செல்­கின்­றனர். ஒரு சிலர் நாட்டை விற்கும் பொரு­ளா­தார தீர்­மா­னங்­களை எடுக்­கின்­றனர். இது முழு­மை­யாக எதிர்க்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.  சீனாவும் இந்­தி­யாவும் எமக்கு அவ­சியம்.  அதற்­காக சீனா­விற்கும் இந்­தி­யா­விற்கும் நாட்டை விற்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அர­சாங்கம் அவ்­வாறு செய்யும் நிலையை அதை தடுக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். 

 

தேசிய சபை அவ­சியம் தேசிய சபை ஒன்றை நாம் உரு­வாக்­க­வுள்ளோம். இந்த சபையில் பொரு­ளா­தார வர்த்­தக நிபு­ணர்கள், கல்­வி­யா­ளர்கள், விவ­சா­யிகள்,சட்­டத்­த­ர­ணிகள், ஆசி­ரி­யர்கள் ஆகிய அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து தேசிய வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்க வேண்டும். இது ஒரு மாற்று பாரா­ளு­மன்­ற­மாக செயற்­படும் என என்னால் உறு­தி­யாக குறிப்­பிட முடியும். நாம் எந்தக் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அனைத்து கட்சிகளையும் இணைத்து இந்த நாட்டை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் . அதேபோல் சிவில் அமைப்புகள் மக்களின் பிரதிநிதிகளை இணைத்து ஆனால் அரசியல் சாயம் பூசாத ஒரு தேசிய சபையை உருவாக்க வேண்டும்.

Athuraliye-Rathana-himi.jpg

இப்போது அரசாங்கத்தை வீழ்த்த அவசியம் இல்லை  அதன் மூலம் அரசாங்கத்தை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என எதிபார்க்கின்றேன். அதற்காக நாம் எதிர்க்கட்சி பக்கம் சாயவில்லை. இவர்களின் கொள்கைகள் என்னவென்பது எனக்கு நன்றாகவே தெரியும். மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சிக்கு கொண்டுவரவோ அல்லது அரசாங்கத்தை வீழ்த்தவோ நான் முயற்சிக்கவில்லை. அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கின்றது. அதை சரியான பாதையதில் திருப்ப வேண்டுன். 

அரசாங்கம் பயணிக்கும் பாதை தவறானது ஆனால் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மோசமாக  பயணிக்கும் நிலையில் ஆட்சி மற்றம் ஒன்று தேவைப்படும்  நிலை ஏற்பட்டால்  அதையும் செய்ய நாம் முன்வருவோம். ஆனால் இப்போது அதற்கான அவசியம் இல்லை. அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.  இந்த அரசாங்கத்தை வீழ்த்த ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது அது குறித்து  சிந்திக்கலாம். இப்போது அதற்கான அவசியம் இல்லை. ஆனால் அரசாங்கத்தை நிவர்த்திசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது. 

http://www.virakesari.lk/article/15469

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.