Jump to content

ஆதரவாளர்களுக்கு தொடரும் மிரட்டல்


Recommended Posts

ஆதரவாளர்களுக்கு தொடரும் மிரட்டல்
 
 
 

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால், வருவாய் துறையினர் மூலம், ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tamil_News_large_1691883_318_219.jpg


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான இன்று, அவர் தன் முடிவை அறிவிக்க உள்ளார். தீபாவுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, சசிகலா தரப்பில், பல்வேறு வளைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதில், தீபாவுக்கு ஆதரவு அதிகம் உள்ள மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, ஆதரவாளர்களுக்கு அதிகாரிகள், போலீஸ் வழியாக மிரட்டல் கொடுப்பது துவங்கி உள்ளது. தீபாவுக்கு ஆதரவாக வைக்கப்படும் பேனர்களை, போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் இணைந்து, அகற்றி வருகின்றனர்.
 

தீபாவை முன் நிறுத்தி வருகிறோம்.



இதுகுறித்து, அகில இந்திய அம்மா ஜெ.தீபா பேரவையின் தர்மபுரி மாவட்ட, நல்லம்பள்ளி ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சேகர் கூறியதாவது: ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு மாறாகவும், தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், சிலர் சசிகலாவை, அ.தி.மு.க., பொதுச்செயலராக்கி உள்ளனர். இதற்கு, அ.தி.மு.க., உண்மை விசுவாசிகள் மத்தியில் ஆதரவு இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக, அவரது அண்ணன் மகள் தீபாவை முன் நிறுத்தி வருகிறோம்.

நாளுக்கு நாள் தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதை கண்டு, பொறுத்துக் கொள்ள முடியாத சசி கும்பல், தர்மபுரி மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் தீபா பேரவை நிர்வாகிகள் வைத்து வரும் பேனர்களை, வருவாய்த் துறையினர் மூலம் மிரட்டி அகற்றி வருகின்றனர்.
எங்களை மிரட்டுவதால், அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று போகாது என்பது போல்,தமிழக மக்கள் மத்தியில் இருந்தும்,
அ.தி.மு.க.,வில் இருந்தும் தீபாவை அகற்ற முடியாது என்பதை, சசி கும்பல் விரைவில் தெரிந்து கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.

தீபா பேரவையில் 'மாஜி' எம்.எல்.ஏ.?



தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், தீபாவுக்கு ஆதரவாக களம் இறங்க உள்ளதாக, தகவல் பரவியுள்ளது. தமிழகம் முழுவதும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, அ.தி.மு.க., சார்பில், இன்று முதல் கொண்டாடப்படுகிறது.
மானாமதுரையில், இன்று மாலை, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதற்கான, 'நோட்டீஸ்'களில் பொதுச் செயலர் சசியின் படம் இல்லை. இதனால், அவர் தீபா பேரவைக்கு தாவ இருப்பதாக தகவல் பரவியுள்ளது. அவர் ஒன்றிய செயலராகவும் உள்ளார். குணசேகரனிடம் கேட்ட போது, ''நான் தீபா பேரவைக்கு போவது குறித்து, இன்று தெரியும். மேலிட வழிகாட்டு தல்படி தான், 'நோட்டீஸ்' அச்சடிக்கப்பட்டது,'' என்றார்.
 

ஆதரவாளர்கள்அதிர்ச்சி



நாமக்கல் மாவட்டத்தில், ஆறு தொகுதிகளில், குமாரபாளையம் தொகுதி தவிர, மற்ற தொகுதிகளில், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர்; போஸ்டர்கள் ஒட்டினர்.

 

குமாரபாளையம் தொகுதி, அமைச்சர் தங்கமணியின் சொந்த தொகுதி என்பதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி காத்து வந்தனர். கடந்த, 12ல், ஆவத்திபாளையத்தில், முதன் முறையாக, தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேனர் வைத்தனர். தொடர்ந்து, தொகுதி முழுவதும், தீபாவுக்கு
ஆதரவு தெரிவித்து, பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை பள்ளிபாளையத்தில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, பொதுக் கூட்டம் நடக்கிறது. இதற்காக, பள்ளிபாளை யம் முழுவதும், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
 

பெண்கள் சபதம்


தொகுதி முழுவதும், பல இடங்களில் சசிகலாவுக்கு எதிர்ப்பும், தீபாவுக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தீபாவுக்கு, ஆதரவு அதிகரித்து வருவதால், அமைச்சர் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.'உள்ளாட்சி தேர்தலில், சசிகலாவுக்கு சரியான பாடம் புகட்டுவோம்' என, திருப்பூரில் நடந்த, தீபா பேரவை கூட்டத்தில், பெண்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
திருப்பூரில், அ.தி.மு.க., மகளிர் அணியினர், தீபா பேரவை துவக்குவது குறித்து, நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் கலந்து கொண்ட பெண்கள் கூறுகையில், 'கட்சியை வழிநடத்தும் தகுதி, சசிகலாவுக்கு கிடையாது. ஜெ., இருந்த இடத்தில், சசிகலா இருப்பதை,
தமிழக பெண்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1691883

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.