Jump to content

வாட்டி வதைக்கும் வறட்சி : குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.!


Recommended Posts

வாட்டி வதைக்கும் வறட்சி : குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.!

 

 

நாட்டில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

phone.jpg

தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 9 மாவட்டங்களைச் சேர்ந்த  சுமார் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/15464

Link to comment
Share on other sites

வடக்கு மக்களை வாட்டி வதைக்கும் வரட்­சி­

 

நாடுமுழு­வதும் 150,000 பேர் அவதி, வடக்கில் 35,000 குடும்­பங்கள் பாதிப்பு  
(எம்.எம்.மின்ஹாஜ்,பா.ருத்­ர­குமார்)

நாட்டில் அனைத்துப் பாகங்­க­ளிலும்  ஏற்­பட்­டுள்ள வரட்சி நிலை கார­ண­மாக 45,440 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 50 ஆயி­ரத்­திற்கு அதி­க­மானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது 

வடக்கு மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம், மன்னார் மாவட்­டங்­களே அதி­க­ள­வி­லான பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன.அத்­துடன், வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக அனைத்து நீர்­த்

தேக்­கங்­க­ளிலும் நீர்­மட்­டங்கள் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்­துள்­ளன.

நீர்­த்தேக்­கங்­களில் 27 சத­வீதம் அள­வி­லேயே நீர் இருப்­ப­தாக நீர்ப்­பா­சன

திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

மேலும் நாட்டில் வடக்கு, வட மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில்

கடு­மை­யான குடிநீர்த் தட்­டுப்­பாடு நில

­வு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வரட்­சி­யுடன் கூடிய கால­நிலை கார­ண­மாக யாழ்ப்­பா­ணத்தில்

மாத்­திரம் 24,324 குடும்­பங்­களை சேர்ந்த 85ஆயி­ரத்து 500 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதனை தொடர்ந்து மன்னார் மாவட்­டத்தில் 10,235 குடும்­பங்­களை சேர்ந்த 35 ஆயிரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் அம்­பாந்­தோட்டை மற்றும் மொன­ரா­கலை மாவட்­டங்­க­ளிலும் அதி­க­ள­வி­லான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. வரட்­சி­யினால் யாழ்ப்­பா­ணத்தில் பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை ஒரு இலட்சம் வரைக்கும் நீடிக்­கலாம் என்று எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

மாலை முதல் இரவு நேரங்­களில் குளி­ரான கால­நிலை நில­வு­வ­துடன் பகல் பொழுதில் கடு­மை­யான வெப்­ப­மான நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் நேற்று விடுத்த அறிக்­கையின் பிர­காரம் வரட்­சி­யான கால­நிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்­ப­துடன் கடும் குளி­ரான போக்கு தொடரும் என்று அறி­வித்­துள்­ளது. அத்­துடன் எதிர்­வரும் 20 ஆம் திக­திக்கு பின்னர் தற்­கா­லிக மாற்றம் ஏற்­படும் வாய்ப்பு ஏற்­படும் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

நாட்டில் சுமார் ஒரு­வா­ர­மாக மாலை முதல் அதி­காலை வரை­யான காலப்­ப­கு­தியில் கடும் குளி­ரான கால­நி­லையும் காலை முதல் மாலை வரையில் கடு­மை­யான வெப்­ப­நி­லையும் காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக யாழ்ப்­பாணம், மன்னார், திரு­கோ­ண­மலை மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, பொலன்­ன­றுவை, அநு­ரா­த­புரம், கம்­பஹா, கண்டி, புத்­தளம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்­டங்­களில் இவ்­வா­றான நிலை நில­வு­கின்­றது. தென் மாகா­ணத்தை பொறுத்­த­வ­ரையில் அம்­பாந்­தோட்டை மற்றும் மொன­ரா­கலை மாவட்­டத்தில் மாத்­தி­ரமே அதி­க­மான வரட்சி நில­வு­கின்­றது.

வரட்­சி­யான கால நிலை கார­ண­மாக விவ­சா­யத்­திற்கு பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. வட­மத்­திய , வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் காணப்­படும் குளங்­க­ளிலும் நீர் வற்­றி­யுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக விவ­சாய நிலங்கள் கடும் மோச­மான நிலை­மைக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

மேலும் குடிநீர் தட்­டுப்­பாடு நில­வு­வ­தினால் வடக்கு , வட­மத்­திய மாகா­ணங்­களில் மக்கள் நிலைமை பெரும் அவல நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்­தினால் அனுப்­ப­படும் குடிநீர் பவு­சர்கள் உரிய முறையில் எமக்கு வரு­வ­தில்லை என்று தட்­டுப்­பாடு நிலவும் பிர­தேச வாழ் மக்கள் விச­னங்­களை தெரி­வித்த வண்­ண­முள்­ளனர். பல இடங்­களில் கிணற்று நீரையே மக்கள் பாவ­னைக்கு எடுத்து வரு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

யாழில் அதிக பாதிப்பு

நாட­ளா­விய ரீதியில் அதி­க­ள­வி­லான வரட்சி யாழ்ப்­பா­ணத்­தி­லேயே பதி­வா­கி­யுள்­ளது. இதன்­படி யாழில் 24 ஆயி­ரத்து 324 குடும்­பங்­களை சேர்ந்த 85,500 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­ளனர். மன்னார் மாவட்­டத்தில் 10 ஆயி­ரத்து 235 குடும்­பங்­களை சேர்ந்த 35 ஆயிரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாந்­தோட்­டையில் 3578 குடும்­பங்­களை சேர்ந்த 14 ஆயி­ரத்து 334 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் வடக்கு மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வி­லான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. மேலும் கண்டி, கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­க­ளிலும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. யாழ் மாவட்ட பாதிப்­பு­களின் எண்­ணிக்கை ஒரு இலட்சம் வரைக்கும் அதி­க­ரிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அனர்த்த முகா­மைத்து மத்­திய நிலைய ஊடக பொறுப்­ப­தி­காரி பிரதீப் கொடிப்­பிலி கேச­ரிக்கு குறிப்­பிட்டார்.

நாட்டின் அதிக வெப்­ப­மான கால­நி­லையின் காரணமாக நாச்சான்துவ, ஹூறுலுவ, சேனாநாயக்க சமுத்திரம்,இராஜாங்கனை, திஸ்ஸ வெவ, லுனுகம் வெகர நீர்தேக்கங்களும் மத்திய மாகாண நீர் தேக்கங்களான லக்ஷபான , விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக நிர்பாசன திணைக்களம் தெரிவித்தது.

அதுமாத்திரமின்றி நீர்பாசன திணைக்களத்தின் தகவலின் பிரகாரம் வடமத்திய மாகாண நீர்தேக்கங்களில் 27 சதவீதம்அளவிலேயே நீர் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-17#page-1

Link to comment
Share on other sites

ஆறு இலட்சம் மக்கள் நீரின்றி கடும் தவிப்பு

 

நீர்த் தேக்­கங்­களில் தொடர்ந்தும் குறை­வ­டை­கி­றது நீர்­மட்டம்  
 (எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் நிலவும் வரட்­சி­யுடன் கூடிய கால­நி­லை­ யா­னது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை வாட்டி வதைத்­து­வ­ரு­கின்­றது. வரட்சி நிலை கார­ண­மாக நாடு­பூ­ரா­கவும் 1 இலட்­சத்து 22 ஆயி­ரத்து 156 குடும்­பங்­களை சேர்ந்த 6 இலட்­சத்து 44 ஆயி­ரத்து 377 பேர் வரட்­சி­யில் சிக்கி தவித்து வரு­வ­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது.

நாடு­பூ­ரா­கவும் வரட்சி கார­ண­மாக குடிநீர் தட்­டுப்­பாடும்  விவ­சா­யத் ­து­றையில் பெரும் பாதிப்­பு­களும் ஏற்­பட்­டுள்­ளன. இந்த மோச­மான கால­நி­லை­யினால் கிழக்கு மாகா­ணமே அதிக பாதிப்­பு­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளது. மட்­டக்­க­ளப்பில் மாத்­திரம் 60,401 குடும்­பங்­களை சேர்ந்த 3 இலட்­சத்து 2 ஆயி­ரத்து 5 பேர் அதி­யுச்ச வெப்­பத்­துக்கு முகங்­கொ­டுக்க முடி­யாமல் சிக்கித் தவித்து வரு­கின்­றனர். அத்­துடன் 

 யாழ்ப்­பா­ணத்தில் 27 ,162 குடும்­பங்­களை சேர்ந்த 95 ஆயிரம் பேர் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று களுத்­துறை மாவட்­டத்­திலும் 1 இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். நாட்டில் நிலவும் வரட்சி கார­ண­மாக பொது மக்கள் தமது அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு போது­மான அள­விற்கு நீரை பெற முடி­யாமல் தவித்து வரு­கின்­றனர். குறிப்­பாக வடக்கு,கிழக்கு, வட­மத்­திய, வடமேல், மேல் மாகா­ணங்­களில் பல பிர­தே­சங்­களில் குடிநீர் தட்­டுப்­பாடு நிலவி வரு­கின்­றது.

வடக்கு, கிழக்கு

அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் தக­வல்­களின் பிர­காரம் வரட்­சி­யினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களே அதி­க­ளவில் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன. இதன்­பி­ர­காரம் வடக்கு மாகா­ணத்தை பொறுத்­த­வ­ரையில் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே பெரு­ம­ள­வி­லான மக்கள் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்­கி­ணங்க யாழ்ப்­பா­ணத்தில் 27,162 குடும்­பங்­களை சேர்ந்த 93 ஆயி­ரத்து 917 பேர் குடிநீர் இன்­றியும் விவ­சாயம் செய்­ய­மு­டி­யா­மலும் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு மன்னார் மாவட்­டத்தில் 16,348 குடும்­பங்­களை சேர்ந்த 55 ஆயி­ரத்து 245 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் வவு­னியா, முல்­லை­தீவு, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­க­ளிலும் வரட்சி நிலவி வரு­கின்­றது.

அதே­போன்று நாட்டில் நிலவும் வரட்­சி­யினால் கிழக்கு மாகா­ணத்­திலும் பாரிய பாதிப்பு நிலை­மைகள் பதி­வா­கி­யுள்­ளன. இதன்­பி­ர­காரம் கிழக்கில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமே வரட்­சியின் கோர பிடியில் சிக்கி தவிக்­கின்­றது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 60,401 குடும்­பங்­களை சேர்ந்த 3 இலட்­சத்து 2ஆயி­ரத்து ஐந்து பேர் வரட்­சி­யினால் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். அதே­போன்று திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை மாவட்­டத்­திலும் பாதிப்­புகள் ஏற்­பட்ட வண்­ண­முள்­ளன.

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களில் பெரு­ம­ள­வி­லான பகு­தி­களில் காணப்­படும் வீடு­களின் கட்­ட­மைப்­பினை பார்க்கும் போது அதி­யுச்ச வெப்­ப­நி­லையை சமா­ளிக்க முடி­யாமல் மக்கள் தவித்து வரு­கின்­ற­மையை அறிய முடி­கின்­றது. குடிநீர் வச­திகள் இல்­லாமல் நிலைமை மோச­மாக காணப்­ப­டு­கின்­றது.

ஏனை­ய­மா­வட்­ட­நி­லைமை

அத்­தோடு வரட்­சி­யினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தவிர வட­மத்­திய மாகா­ணத்தின் பொலன்­ன­றுவை , அநூ­ர­தா­புரம் மாவட்­டங்­களில் குளங்கள் வற்­றிப்­போ­யுள்­ளன. மேல் மாகா­ணத்தில் களுத்­துறை மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 18 ஆயி­ரத்து 200 பேர் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். அதே­போன்று கொழும்பு, கம்­பஹா, அம்­பாந்­தோட்டை, மாத்­தறை, காலி,புத்­தளம், குரு­நாகல் ஆகிய மாவட்­டங்­க­ளிலும் அதி­யுச்ச வெப்­ப­நிலை நில­வு­கின்­றது.

குடி­நீர்­தட்­டுப்­பாடு

வரட்­சி­யான கால­நி­லை­யினால் வட­மத்­திய , மத்­திய மாகா­ணங்­க­ளி­லுள்ள இரா­ஜாங்­கனை, திஸ்ஸ வெவ, சேனா­நா­யக்க சமுத்­திரம், பராக்­கி­ரம சமுத்­திரம், நச்­சான்­துவ,ஹூறு­லு­வெவ,லுனுகம் வெகர, ல­க்ஷ­பான, விம­ல­சு­ரேந்­திர ஆகிய நீர்­தேக்­கங்­களில் பெரு­ம­ளவில் நீர் மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது. அதே­போன்று குளங்­களும் வரட்­சி­யினால் வற்­றிப்­போ­யுள்­ளன. இதன்­கா­ர­ண­மாக எதிர்­வரும் காலங்­களில் பெரு­ம­ளவில் குடிநீர் தட்­டுப்­பாடு நிலவும் என்று நீர்ப்­பா­சன திணைக்­களம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

மலை­யகம்

இதே­வேளை ஒரு­புறம் அதி­யுச்ச வெப்­பத்­தினால் வரட்சி ஏற்­பட்­டுள்­ள­துடன், மலை­ய­கத்தில் அதி­யுச்ச குளிர் ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக நுவ­ரே­லியா, பதுளை, மாத்­தளை, கண்டி ,கேகாலை மற்றும் இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்­களில் குளி­ரான கால­நிலை நில­வு­கின்­றது. இதனால் மக்கள் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. அது­மாத்­தி­ர­மின்றி மலை­ய­கத்தின் சில பிர­தே­சங்­களில் பனி பொழியும் என்றும் எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

கால­நிலை

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை எதிர்வரும் 20 ஆம் திகதி நிறைவுக்கு வரும் என்றும் அதன்பின்னர் போதுமான அளவிற்கு மழைவீழச்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை தொடர்பான விசேட நிபுணர் வர்ணசூரிய கேசரிக்கு தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை தாம் உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-18#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.