Jump to content

மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி : வெளிநாட்டவரின் செயலால் பிரதேசத்தில் பரபரப்பு


Recommended Posts

மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி : வெளிநாட்டவரின் செயலால் பிரதேசத்தில் பரபரப்பு

வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதையை வெளிநாட்டவர் ஒருவர் இரவோடு இரவாக மாயம் செய்த சம்பவத்தை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Fdfdfdfdf.jpg

வாகரை வட்டவானில் உள்ள குறித்த வெளிநாட்டவரின் விடுதிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட பொதுமக்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் பிரதான வீதியை ஊடறுத்துச்செல்லும் காணிக்கு அருகில் உள்ள வாகரை பிரதேச சபைக்கான வீதியை குறித்த வெளிநாட்டவர் சேதப்படுத்தி அதனை வேலியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியை வட்டவான், இறால்ஓடை, நாசிவன்தீவு, காயன்கேணி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திவருகின்றனர்.

குறித்த வெளிநாட்டவரினால் சட்ட விரோதமான முறையில் பல்வேறு நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட்டுவரும் போதும் அது தொடர்பில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வட்டவான் கிராமசேவகர், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தார் ஆகியோர் முன்னிலையில் குறித்த வீதி அகற்றுவதற்கு உரிய அதிகாரத்தை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச சபை மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டதா என அலைபேசி ஊடாக குறித்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவ்வாறான எந்தவொரு அனுமதியும் தங்களால் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.

இதேவேளை குறித்த சுற்றுலா விடுதிக்கான ஜேர்மன் வெளிநாட்டவரை பொதுமக்கள் முன்னிலையில் அழைத்து கேட்டபோது அரச அதிகாரிகளின் அனுமதிகள் அனைத்தும் தன்னிடமுள்ளதாக சரளமாக சிங்கள மொழியில் உரையாடினார். குறித்த வீதியை இரவோடு இரவாக பெக்கோ இயந்திம் கொண்டு வீதி இருந்த தடயங்கள் இல்லாமல் அழித்தது மட்டுமின்றி வீதியில் இடப்பட்டுள்ள கிறவல் மண் அனைத்தையும் தனது காணிக்குள் பெரிய ஆளமான குளிகள் வெட்டி அதனுள் நிரப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் பல நூறு மீற்றர் தூரம்வரை வீதியை பெக்கோ இயந்திரம் கொண்டு துண்டம் துண்டமாக வெட்டி பொதுமக்களின் போக்குவரத்தை முற்றாக தடை செய்யும் அத்துமீறிய செயற்பாடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் முடிவில் குறித்த வீதியை தற்போது பாவிக்கலாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் முன்னிலையிலும் அறிவிக்கப்பட்டதுடன் உரிய கடற்கரை வீதி தொடர்பான பிரச்சினையை இன்று திங்கள் கிழமை உரிய அதிகாரிகள் பார்வையிடுவதாகவும் அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.