Jump to content

புதிய அரசியலமைப்பில் மலையக தமிழர்களுக்கும் உரிய இடம் பெற்றுக்கொடுப்போம் என்கிறார் அமைச்சர் மனோ


Recommended Posts

புதிய அரசியலமைப்பில் மலையக தமிழர்களுக்கும் உரிய இடம்

 

பெற்றுக்கொடுப்போம் என்கிறார் அமைச்சர் மனோ
 (மஸ்­கெ­லியா, நுவ­ரெ­லியா நிரு­பர்கள் )

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் மலை­யக தமிழ் மக்­க­ளுக்கு உரிய இடம்பெற்றுக் கொடுக்­கப்­படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய மொழிகள் சமூக மேம்­பாட்டு சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

நுவ­ரெ­லி­யாவில் நேற்று இடம்­பெற்ற தேசிய தைப்­பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து பேசு­கையில், 2016 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்­பெற்ற தைப்­பொங்கல் விழா இந்த ஆண்­டு மலை­ய­கத்தில் இடம்­பெ­று­வது போல, அடுத்த ஆண்டில் கிழக்கு மாகா­ணத்தில் இடம்­பெறும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற வடக்கு, கிழக்கு, மலை­யக மக்கள் வாக்­க­ளித்­ததன் பயனை இன்று அனு­ப­விக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. அவரின் வெற்­றியில் மலை­ய­கத்­துக்கு பாரிய பங்­க­ளிப்பும் இருக்­கின்­றது. அதற்­கு­ரிய அந்­தஸ்து தரப்­பட்டு இன்று தேசிய பொங்கல் விழா மலை­ய­கத்தில் நடை­பெற்­றுள்­ளது. 

மலை­யக மக்­களை ஒரு காலத்தில் யாரும் கண்டு கொள்­ள­வில்லை. இவர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டவர் களாகவே இருந்து வந்­தார்கள். இன்று அந்த நிலைமை இல்லை. அமைச்சர் திகா, நான், அமைச்சர் ராதா ஊடாக உரிய இடம் வழங்­கப்­பட்டு அபி­வி­ருத்திப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மலை­யகம் கிள்ளு கீரை என்று யாரும் எண்­ணி­விடக் கூடாது. மலை­யக மக்­களை யாரும் ஒதுக்கி வைக்­கவும் முடி­யாது. அவர்கள் இலங்கைத் தமி­ழர்கள் என்ற அந்­தஸ்தைப் பெற்­றுள்­ளார்கள். இன்று தமிழ் முற்­போக்கு கூட்­டணி நாக­ரி­க­மா­கவும் நவீ­ன­மா­கவும் அதன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

அந்த வகையில் அமைச்சர் திகாம்­பரம் இந்த ஆண்டில் 10 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றார். அந்த வீடு­க­ளுக்கு அமைச்­ச­ர­வைப்­பத்­தி­ரத்தின் மூலம் உறு­தி­களும் பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வு­ள்ளன. மேலும் மலை­யக பெருந்­தோட்­டங்­களில் இரண்டு மூன்று ஏக்கர் காணி­களை மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளித்து அவர்­களை சிறு தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக ஆக்­கவும் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம்.

மலை­யக இனம் தேசிய இன­மாக ஐக்­கி­யப்­பட்டு வரு­கின்­றது. ஐக்­கியம் என்று சொல்லும் போது அடி­மைத்­தனம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஏனைய இனங்­க­ளுக்கு இணை­யா­க­ செ­யற்­பட்டு வரு­கின்றோம் என­பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாட்டில் புதிய அர­சி­ய­ ய­ல­மைப்பு உரு­வாக்கம் இடம்­பெற்று வரு­கின்­றது. இந்த நேரத்தில் மலை­யக மக்­க­ளுக்கு உரிய இடத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவ­சி­ய­மாகும். அந்தக் குழுவில் நானும் இருப்­பதால் மலையக தமிழ் மக்­க­ளுக்கு உரிய இடத்தை­பெறுக் கொடுப்பேன்.

எமது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முயற்­சியால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை கிடைத்­துள்­ளது.அதன் ஊடாக மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அம்பாந்தோட்டை, வெல்லவாய, போந்தார பகுதிகளில் உள்ளது போல மலையகத்திலும் கைத்தொழில் பேட்டிகளை அமைத்துக் கொடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-16#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.