Jump to content

மறைந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் புனைப்பெயர்களை சசிகலா சூட்டி கொண்ட தால், அ.தி.மு.க.,வினர் கடுப்படைந்துள்ளனர்.


Recommended Posts

 

 

 

மறைந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் புனைப்பெயர்களை சசிகலா சூட்டி கொண்ட தால், அ.தி.மு.க.,வினர் கடுப்படைந்துள்ளனர்.

 

Tamil_News_large_169103120170116004645_318_219.jpg

முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியில், பதவி களில் உள்ள முக்கிய நிர்வாகிகள், அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கும், இதில் உடன்பாடு இல்லை.

இருப்பினும், தங்களது பதவிகளை தக்க வைப் பதற்காகவும், பலமான எதிர்ப்புகள் உருவாகா மல் இருப்பதற்காகவும், பலர் அமைதி காத்து வருகின்றனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக மாறியதில் இருந்து ஜெயலலிதா பாணியில், உடை அலங் காரம், முடி அலங்காரம், பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றை, ஜெ., போலவே சசிகலா மாற்றி யமைத்து வலம் வருகிறார்.இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் பலரும், சசிகலா மீது

கடும் கோபத்தில் உள்ளனர். தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் சசிகலா எதிர்ப்பு பேனர்களை அவர்கள் வைத்து வருகின்றனர். சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும் பேனர் கள் கிழிக்கப்பட்டு வருவது டன், அவற்றின் மீது மாட்டு சாணமும், வீசப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி, ஜெயலலிதா அண்ணன் மகன் தீபா வீட்டு முன் திரண்டு, அவருக்கு, அ.தி.மு.க.,வினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் சற்றும் அசராத சசிகலா, அடுத்த கட்டமாக, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புனைப்பெயர்களை தனக்கும் சூட்டி, வலரும் வரத் துவங்கிஉள்ளார்.
 

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவ தாவது:


அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுடனும், எம்.ஜி.ஆர்., எளிமையாக பழகியவர். அதனால் தான், அவருக்கு, 'புரட்சித் தலைவர்' என்ற புனைப் பெயரை, அனைவரும் சூட்டினர்.அதே பாணி யில், மக்களுக்காக, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

அதனால், அவருக்கு,'புரட்சித் தலைவி' என்ற புனை பெயரை, கட்சியினர் சூட்டினர். சொத்துக் குவிப்பு வழக்கில் பதவி விலகியதால், 'மக்கள் முதல்வர்' என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

தற்போது சசிகலா, இந்த இரண்டு தலைவர்களின்

 

புனைப்பெயர்களை தனக்கும் சூட்டிக் கொண்டுள்ளார். அவரை, 'மக்கள் தலைவி சின்னம்மா' என்று அழைக்க வேண்டும் என, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சி பேனர் மற்றும் போஸ்டர் விளம்பரங்களில், இதே புனைப் பெயரை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., 'டிவி' மற்றும் நாளிதழிலும், இதே போன்ற புனைப்பெயரில் சசிகலாவை குறிப்பிட்டு வருகின்றனர். இது, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா உண்மை விசுவாசிகள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் செல்வாக்கை நிரூபித்துவிட்டு, இந்த புனைப்பெயரை சசிகலா சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை, சமூக வலைதளங் களில் பலரும் பதிவிட துவங்கியுள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1691031

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.