Jump to content

உருவெடுக்கிறது சசிகலாவிற்கு எதிரான அணி


Recommended Posts

உருவெடுக்கிறது சசிகலாவிற்கு எதிரான அணி
 
 
 

அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியிலிருந்து விலகிய, நடிகர் ஆனந்தராஜை, ஜெ., அண்ணன் மகள், தீபா ஆதரவாளர்கள் நேற்று சந்தித்துப் பேசியது, அ.தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

 

Tamil_News_large_169103920170115231022_318_219.jpg

சசிகலாவுக்கு, கட்சி யின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; ஜெ., அண்ணன் மகள் தீபாவை, 'கட்சி தலைமை ஏற்க வேண்டும்' என்றும், வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள், சமூக வலைதளங்களில், தீபாவிற்கு ஆதரவு திரட்டுவதுடன், பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில், சேலம், துாத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட, இவரது ஆதரவாளர்கள், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள, நடிகர் ஆனந்தராஜ் வீட்டின் முன், நேற்று மதியம் குவிந்தனர்.

ஆனந்தராஜை சந்தித்து, 'தீபாவிற்கு ஆதரவு
 

தெரிவிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தொண்டர் கள் வந்திருக்கிறோம். எங்களுடைய நோக்கம், உண்மை விசுவாசிகளை ஒன்றிணைப் பதே. முதற்கட்டமாக, நடிகர் ஆனந்தராஜை அழைக்க வந்திருக்கிறோம்' என, கூறினர்.

மாற்றத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து, திடீரென ஏராளமான இளைஞர்கள் வந்திருக்கின்ற னர். ஆதரவு கேட்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது; அதை ஆலோசனை செய்யும் உரிமை எனக்கிருக்கிறது. மக்களை ஒதுக்கி வைத்து, அரசியல் நடத்த முடியாது. தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தீபா முன்னிலைப்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். ஏழு பேர் இருந்தால், சங்கம் துவங்கலாம்; 200 பேர் இருந்தால், கட்சி துவங்கலாம். மக்கள் ஆர்வம் எதுவாக இருந்தாலும், அது நிச்சயம்நடக்கும்.

அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்ற ரஜினியின் கருத்து குறித்து?

அண்ணனின் வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பது, அண்ணனுக்கு தான் தெரியும்.

தற்போது அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என, நினைக்கிறீரா?

மக்கள் அப்படி தான் பேசி கொள்கின்றனர்.

 

அவர்கள் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கின்றனர்.

தற்போது நடக்கும் ஆட்சி,மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சி தான்; இனி வருகிற ஆட்சி எப்படி இருக்கும், மாற்றம் வருமா, மக்கள் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, செயல் பட வேண்டும்.

கட்சியில் இருந்து விலகி இருக்க காரணம்?

வலி தான் காரணம். ஒரு அடி எடுத்து வைத்தால், கிணறை தாண்டி விடலாம் என நினைத்த போது, அம்மாவின் மரணம் என்னை பாதித்தது; அதனால், சற்று விலகினேன்.

அ.தி.மு.க.,வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என, நினைக்கிறீர்கள்?

கட்சியில் இருந்து விலகி விட்ட காரணத்தால், கருத்து கூறும் உரிமை எனக்கில்லை. ஆனால், விமர்சனம் செய்யும் உரிமை உண்டு. அதற்கான இடமும், நேரமும் இது இல்லை.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1691039

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.