Jump to content

லன்ச் பாக்ஸ் - மதிப்புமிகு மாற்றுக் காதல்!


Recommended Posts

மான்டேஜ் மனசு 19: லன்ச் பாக்ஸ் - மதிப்புமிகு மாற்றுக் காதல்!

 

 
lunch1_3082050f.jpg
 
 
 

அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டுக்கு கிளம்பத் தயாராக இருந்த தருணம் அது.

குணசேகரன்தான் செல்போனில் அழைத்தார்.

''குடும்பஸ்தன் ஆன பிறகு மேன்ஷனையே மறந்திட்டியே டா...''

''அப்படில்லாம் இல்லை பெருசு... ஒருநாள் கண்டிப்பா வர்றேன்.''

''இப்படியே எத்தனை நாளைக்குதான் சமாளிப்ப... இன்னைக்கு ஃப்ரீயா..?''

''ஹ்ம்ம். நீங்க எங்கே இருக்கீங்க?''

அடுத்த அரை மணி நேரத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் குணசேகரனை சந்தித்தேன்.

சம்பளம் போட்ட தினம் என்பதால் குணசேகரன் நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

''செல்லா நோட்டு மேட்டரால டாஸ்மாக்-ல பெரும் பாதிப்பாமே..? நாம ஏதாவது சப்போர்ட் பண்ணலாமா?" என்று கேட்டார்.

அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் க்ரில் சிக்கனுக்கும், பிரியாணிக்கும் எங்கள் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டோம்.

சாப்பிட்டு முடிந்த சமயத்தில்தான் விகடனில் வந்த தமயந்தியின் 'தடயம்' சிறுகதை குறித்து பேசத் தொடங்கினோம்.

''காதலை இவ்வளவு வலியோடவும், அழகாகவும் சொல்ல முடியாது பெருசு. அந்தக் கதையை படிச்சு முடிச்சதும் எனக்கு அழுகை வந்துடுச்சு. தமயந்தி போன் நம்பர் வாங்கி அவங்க கிட்ட பேசணும்னு தோணிக்கிட்டே இருந்தது. ஆனா, அது ஆர்வக்கோளாறாவோ, அதிகப் பிரசிங்கித்தனமாவோ இருக்குமோன்னு விட்டுட்டேன்.''

''உனக்கு அந்த ஃபீல் வந்ததுல்ல. அதுவே போதும். பேசணும்னு அவசியம் இல்லை.''

''நாம என்னவா இருந்தாலும் ஒருத்தரோட அன்புக்குதானே கடைசி வரைக்கும் ஏங்கிக்கிட்டே இருக்கோம். அதை சில சமயங்கள்ல சரியா வெளிப்படுத்திடுறோம். காதலை சொல்லும்போது கூட தயங்கித் தயங்கி அதீத உணர்வுல புரிய வெச்சிடுறோம். ஆனா, பிரியும்போது எந்தக் காரணமும் சொல்லாம நம்ம நிலைமையை புரியவைக்காம விட்டுடுறோம். அது கன்வே ஆகாம கடைசிவரைக்கும் முள்ளாவே உறுத்திக்கிட்டு இருக்கு.''

''காதலிக்கப்பட்ட இதயம், இன்னொரு இதயத்தோட பிரச்சினையை சொல்லாமயே புரிஞ்சுக்கும். சேராத காதலும் அவன்/ அவள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கும்.''

''எல்லா காதலும் இப்படிதான் இருக்குமா?''

''நிச்சயமா. அது மாற்றுக் காதலா இருந்தா கூட!''

''எப்படி சொல்ற?''

''என் வாழ்க்கையே என்னோட செய்தி.''

''பார்றா. பெருசு... மனசுல என்ன காந்தின்னு நினைப்பா உனக்கு.''

''இல்லை சிறுசு. நான் சீரியஸா சொல்றேன்.''

''அக்காகிட்ட சொல்லணும் போல. நீ அடங்கமாட்ட.''

''நான் வேற அக்காவைப் பத்தி சொல்ல வர்றேன்.''

*

அவர் சொன்ன அன்பின் நீட்சியை சொல்வதற்கு முன் அவரைப் பற்றிய சின்ன அறிமுகம்.

குணசேகரன் கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுத்துலகில் இடைவிடாது இயங்கிக்கொண்டிருப்பவர். வலிகளை மட்டுமே எழுத்தில் வடித்து கொண்டாடப் பழகியவர். தோற்றத்துக்கும், எழுத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியாது. ஆனால், மென்மனசுக்காரன். அவனை சாய்க்க கோடரி தேவையில்லை, குண்டூசி போதும்.

அலட்சியப்படுத்துதலும், புறக்கணித்தலுமே இந்த உலகின் உச்ச பட்ச தண்டனை என்று நினைப்பவன். யாரைப் பார்த்தாலும் மாப்ள, வாடா என்று உரிமையோடு அழைப்பான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அன்பு செய்யப் பிறந்தவன்.

ஃபேஸ்புக் அவன் நட்பின் சாளரங்களை திறந்து வைத்தது. அந்த டெக்னாலஜிக்குள் தன்னை மூழ்கடித்துக்கொண்டான். கண்ணுக்கு முன் இருக்கும் யாரிடமும் பேசாமல், சாப்பிட்டியா என்று கேட்காமல், நலம் விசாரிக்காமல் இருக்கும் குணசேகரன்தான் செல்போனில் மணிக்கணக்கில் பேசுகிறான், முகநூலில் முகம் தெரியாத நபரோடு நள்ளிரவு தாண்டியும் சாட் செய்கிறான் என்று அவதூறுகள் பரப்பப்படுவதுண்டு.

அப்படிப்பட்ட குணசேகரனுக்கு 46-வது வயதில் காதல் வந்தது. அது குணசேகரனுக்கே ஆச்சரியத்தைத் தந்தது.

குணசேகரனின் முகநூல் தோழி ஒருவர் தொடர்ந்து அவரின் கவிதைகளை வாசித்து வந்தார். ஒருநாள் குணசேகரனின் கவிதை வருத்தவடுக்களையே சுமந்து வந்ததை உணர்ந்து, சாட் செய்தார்.

குணசேகரனுடன் முகநூலில் நண்பராகி ஓரிரு மாதங்களில் இந்த சாட் கான்வெர்சேஷன் ஏற்பட்டது.

*

''வணக்கம். நான் சித்ரா."

"நல்லா இருக்கீங்களா?''

''வணக்கம். நல்லா இருக்கேன்..."

"நீங்க...''

''உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா....''

''சொல்லுங்க..''.

''எப்பவுமே ஏன் கஷ்டம், அழுகை, வலி, பைத்தியம், மரணம்னு மட்டுமே உங்க கவிதைகள் இருக்கு.''

''தெரியலை... நிறைய பேர் இதை சொல்லி இருக்காங்க.''

''அவ்ளோ பிரச்சினைகளை நீங்க சந்திச்சு இருக்கீங்களோன்னு நினைச்சேன். ஆனா, நான் நிறைய முறை கஷ்டப்பட்டபோது என் பிரச்சினைகளுக்காக கலங்கி நிக்கும்போது உங்க கவிதைகள் ஆறுதலா இருந்திருக்கு.''

''மகிழ்ச்சி...''

''உண்மையைச் சொல்லுங்க... உங்களோட வலிகளைத்தானே நீங்க வார்த்தைகள் மூலமா கவிதைகயாக்குறீங்க.''

''இல்லை. அந்த வலிகள் என்னோடது இல்லை. ஆனா, எனக்கு வலிகள் பிடிக்கும். அதனால அப்படி எழுதுறேன்.''

''உங்ககிட்ட பேசுனதுல ரொம்ப சந்தோஷம். உங்க புத்தகங்கள் எந்த பதிப்பகத்துல கிடைக்கும்? ''

''முகவரி அனுப்புறேன். சென்னையில எல்லா புத்தகக் கடைகள்லயும் கிடைக்கும்.''

''நான் திருவண்ணாமலை...''

''வம்சியில கிடைக்க வாய்ப்பிருக்கு...''

''நன்றி... ''

*

சில நாட்களுக்குப் பிறகு சித்ரா சாட்டிங்கில்...

''எப்படி இருக்கீங்க....''

.......................

10 நிமிடங்கள் கழித்து குணசேகரனின் பதில்..

''நலம்...........''

''நான் போனவாரம் சென்னை வந்தேன்.''

''ஓ.....''

''உங்களைப் பார்க்க முடியலைன்னு ஒரே வருத்தமாப் போச்சு...''

''என்னை எதுக்குப் பார்க்கணும்?''

''உங்க புக்ஸ் படிச்சேன். தயாளன், சந்திரன், வில்சன், சத்தியமூர்த்தின்னு நிறைய மனிதர்கள் கதை.''

''அதுக்குள்ளே படிச்சிட்டீங்களா?''

''உங்க கதைகள் படிக்கும்போது எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. என்னோட கவலைகளை மறக்க அது பயன்படுது.''

''நல்லது...''

குணசேகரனுக்கு இதற்கு மேல் இந்த உரையாடலைத் தொடர்வது சரியாகப்படவில்லை. லைக் போட்டு உரைக்குத் திரையிட்டான்.

*

அடுத்த நாள்...

''நீங்கதானே அந்த சத்தியமூர்த்தி. உங்க கதையையே எழுதிட்டீங்களா?''

''இல்லை..''

''சும்மா சொல்லாதீங்க. விஸ்காம், சினிமா ஆர்வம் எல்லாம் ஒத்துப்போகுதே.''

''இல்லை..''

''அப்போ இதுக்கு முன்னே என்ன படிச்சீங்க. எங்கே இருந்தீங்க..''

''அவசியம் தெரிஞ்சுக்கணுமா?''

''ஆமாம்.. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். இப்படி ஒரு எழுத்தாளர் என் ஃப்ரெண்ட்டா இருக்கிறது எனக்குதானே பெருமை. உங்களைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்க ஆசை. ''

படித்தது, பிடித்தது, வேலைக்கு சேர்ந்தது, எழுத வைத்தது என எல்லாம் பகிர்ந்தான். மனைவி, குழந்தைகளைப் பற்றியும் சொன்னான். சித்ராவும் சொல்ல ஆரம்பித்தாள்.

''எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ரெண்டு பசங்க. பொண்ணு இல்லை. என்னை மாதிரி ஒரு பொறப்பு வேணாம்னு கடவுளுக்கே தெரிஞ்சிருக்கு பாருங்களேன். ஆனா, அது நல்லதுக்குதான்.''

''ஏன் எப்பவும் விரக்தியாவே பேசுறீங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை?''

''பிரச்சினை எதுவும் இல்லை. ஆனா, வாழ்க்கையில எந்த பிடிப்பும் இல்லை.''

''புரியலை''

''மாமியார் கொடுமை, புருஷனோட பிரச்சினைன்னு எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. என் தோழி, தங்கச்சி, சித்தின்னு 3 பேர் வாழ்க்கையில நிறைய பாதிப்புகள். அதைக் கண்கூடா பார்த்ததால அதையும் என்னோட பிரச்சினையாவே பார்க்கத் தோணுது. தள்ளி நின்னு பார்க்க முடியலை. அதனால சராசரிப் பெண்ணா என்னால இருக்க முடியலை. நான் நிறைய படிக்கணும், எழுதணும். என் வலிகளை எழுத்துல தீர்க்கணும்னு ஆசை. அதுல மட்டும்தான் என்னால ஆசுவாசம் அடைய முடியும்னு நம்புறேன். ஆனா, இங்கே அதுக்கான வாய்ப்பு இல்லை. புருஷன் நல்லா பார்த்துக்கிட்டாலும் அவர் மேல பெரிய காதல் இல்லை. இதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.''

''புரியுது...''

''என் உணர்வைப் புரிந்துகொண்டதுக்காக நன்றி.''

.........

10 நாட்கள் கழித்து...

''என்னாச்சு.. ஃபேஸ்புக் பக்கம் ஆளையே காணோம்.''

''கொஞ்சம் உடம்பு சரியில்லை... அதான்.. லீவ்ல ஊருக்குப் போயிருந்தேன்.''

''தினம் தினம் உங்க சாட்டிங்காக காத்துக்கிட்டு இருந்தேன். உங்க மெசேஜ் பார்க்காம என்னால் இருக்க முடியலை.''

''இது சரியா, தப்பான்னு கூட தெரியலை. ஆனா, பிடிச்சிருக்கு...''

''நான் என்ன சொல்றதுன்னு தெரியலை சித்ரா..''

''நீங்க எதுவும் சொல்ல வேணாம். என்னை அவாய்ட் பண்ணாம பேசுனா போதும்.''

''சின்ன விபத்து நடந்துச்சு. தலையில காயம் பட்டதால என்னால ஆபிஸ் வர முடியலை. லீவ் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போய்ட்டேன்.''

''இப்போ எப்படி இருக்கு. பரவாயில்லை. இன்னும் கட்டு பிரிக்கலை....''

''எப்போ பிரிப்பீங்க?''

''2 நாள்ல...''

''டேக் கேர்''

''நன்றி...''

 

*

அடுத்த 2 நாட்களுக்குப் பிறகு சித்ரா சாட்டிங்கில்...

''உங்க போட்டோவை நான் ஃபேஸ்புக்ல பார்த்திருக்கேன். புக்ல சின்ன பாஸ்போர்ட் சைஸ்ல பார்த்திருக்கேன். ஆனா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லையே. என் முகத்தைக் கூட பார்க்கணும்னு தோணலையா...''

குணசேகரனும் பதில் தருகிறான்.

''ஃபேஸ்புக்ல உங்க ஃபோட்டோ இல்லை. அதனால உங்களுக்கு ஃபோட்டோ போடுறது பிடிக்காதுன்னு நினைச்சேன்.''

''இப்போ இன்பாக்ஸ்ல அனுப்பவா?''

''உங்க விருப்பம்''

''அனுப்புறேன்''

''கிடைச்சதா? எப்படி இருக்கு?''

''நல்லா இருக்கு...''

''அது பழசு....''.

''புதுசு இதோ...''

''என்ன மொட்டை. வேண்டுதலா''

''ஆமாம். என் குணா நல்லா ஆகணும்னு வேண்டிக்கிட்டு அடிச்ச மொட்டை.''

குணசேகரன் அதிர்ந்து போனான்.

''எனக்காகவா ஏன் இப்படி. இதெல்லாம் ரொம்ப அதிகம்னு தோணலையா உங்களுக்கு...''

''இல்லை. தப்புன்னு தோணலை. அதிகம்னு கூட தோணலை. இதை சொல்லணும்னு தோணுச்சு. மத்தபடி உன் மேல உயிரா இருக்கேன்னு சொல்றதுக்காக நான் இதைப் பண்ணலை.

உங்களைப் பிடிச்சிருக்கு. உங்க மேல அன்பு செலுத்துற ஒரு உயிர் இருக்குன்னு தெரிவிச்சுக்குறேன். அவ்ளோதான்....''

''இந்த அன்பை அப்படியே என்னால திருப்பிக் கொடுக்க முடியாது. ''

''நான் அதை எதிர்பார்க்கலை...''

''அடுத்த வெள்ளிக்கிழமை கே.கே.நகர் வர்றேன். சந்திக்கலாமா?''

''பார்க்கலாம்''

.......

அந்த வெள்ளிக்கிழமையில் குணசேகரன் சித்ராவை சந்திக்கவில்லை. சந்திப்பை குணா தவிர்த்ததும் சித்ரா மனமொடிந்துபோனாள்.

ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்து விரல்களில் கோபத்தைக் கொட்டினாள்.

''நான் ஒண்ணும் உங்க கூட வாழப் போறேன்னு பெட்டி படுக்கையோட வந்துடலை. உங்களைப் பார்க்கணும்னு துடிச்சது உண்மைதான். ஆனா, எந்த காலத்துலயும் அப்படி ஒரு விஷயம் நமக்குள்ள நடக்காது. எந்த மன உளைச்சலும் இல்லாம தெம்பா இருங்க. எப்பவும் உங்க முன்னாடி வந்து நின்னுட மாட்டேன்.''

இப்படி மெசேஜ் செய்துவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறினாள்.

........

குணசேகரனால் பதிலளிக்க முடியவில்லை.

இரு நாட்கள் கழித்து மன்னிப்பு கேட்டான்.

இப்போதும் அவர்கள் சாட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

.........

குணசேகரன் நடந்ததைச் சொன்னதும் சித்ரா மீது இனம் புரியாத மரியாதை ஏற்பட்டது. இப்படி எத்தனை சித்ராக்கள், குணசேகரன்கள் இருப்பார்கள் என்ற கேள்வியுடன் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

குணசேகரன் எனக்கு இர்ஃபான் கானாகவே தெரிந்தார். மாற்றுக் காதலை கண்ணியமாக சொன்ன விதத்தில் 'லன்ச் பாக்ஸ்' மிக முக்கியமான படம். சர்வதேச திரைப்பட விழாக்கள், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் என பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், முகம் பார்க்காமல் மனதால் அலைவரிசை பொருந்திப் போன காதலைப் பதிவு செய்த விதம் என்னை வெகுவாக ஈர்த்தது.

lunch_box_3082049a.jpg

மும்பையில் அரசு அலுவலகத்தில் அக்கவுண்டட் ஆக பணிபுரிகிறார் சாஜன் ஃபெர்னாண்டஸ் (இர்ஃபான்கான்) இன்னும் சில நாட்களில் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் சாஜன் மனைவியை இழந்தவர். தனி நபராக இறுக்கத்துடன், அதிகம் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று கறாராக இருப்பவர். உணவு விடுதியிலிருந்து அலுவலகத்துக்கு டப்பா வாலாக்கள் மூலம் வரும் உணவை சாப்பிடுகிறார்.

ஒருநாள் மிக சுவையான உணவை சாப்பிடும் சாஜன், உணவு விடுதிக்கே சென்று சமையல் செய்ததைப் பாராட்டுகிறார். ஆனால், அந்த உணவு இலா (நிம்ரத் கவுர்) எனும் 30 வயது இளம் பெண், தன் கணவனுக்காக சமைத்துக் கொடுத்தது.

அந்த உணவு டப்பா வாலாக்கள் மூலம் தவறாக சாஜன் கைக்கு சென்று சேர்கிறது. இதை அறியாத இலா, அன்று மாலை டிபன் கேரியர் காலியாக இருப்பதைக் கண்டு, தான் சமையலில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகக் கருதுகிறாள். கணவன் வீட்டுக்கு வந்ததும் சமையல் எப்படி இருந்தது என்று ஆர்வமாய்க் கேட்கிறாள்.

காலிஃபிளவர் நன்றாக இருந்தது என்று கணவன் சொன்னதும், தன் சமையலை வேறு ஒருவர் சாப்பிட்டதாகத் தெரிந்துகொள்கிறாள். மேல்வீட்டு ஆன்ட்டியின் ஆலோசனைப்படி, முகம் தெரியாத அந்த நபருக்காக ஒரு கடிதம் எழுதி மறுநாள் டிபன் கேரியருடன் அனுப்புகிறாள். அதில், மிச்சம் வைக்காமல் காலியாக வைத்தமைக்கு நன்றி என்று எழுதியிருப்பதைப் படிக்கும் சாஜன் இன்று உணவில் உப்பு அதிகம் என்று எழுதுகிறார்.

அப்போது வேலைக்கு புதிதாக சேருகிறார் ஷேக் (நவாஸுதின் சித்திக்) அவருக்கு வேலை கற்றுக்கொடுக்கும் பொறுப்பு சாஜனுக்கு தரப்படுகிறது. சாஜன் பணி ஓய்வுக்குப் பிறகு அவர் இடத்தை ஷேக் நிரப்புவார் என்பது நிர்வாகத்தின் திட்டம்.

ஆனால், ஷேக் கேட்கும்போதெல்லாம் லன்ச் முடிந்து 4.45-க்கு வா என்று சொல்லும் சாஜன் அவருக்கு வேலை சொல்லித்தராமல், தட்டிக்கழிக்கிறார். ஒரு கட்டத்தில் ஷேக் அனாதை என தன்னிலை விளக்கம் கொடுத்து கலங்க, ஒவ்வொரு வேலையாக சாஜன் தருகிறார்.

சாஜன் - இலா கடிதப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடிதங்கள் மூலம் சாஜன் கொஞ்சம் கொஞ்சம் மாறுகிறார்.

ஷேக் அலுவலகத்தில் செய்த கணிதத் தவறுக்கு நான் தான் காரணம் என்று அலுவலகப் பழியை சாஜன் தன் மீது போட்டுக்கொள்கிறார். அந்த அளவுக்கு அன்புக்குரியவராக மாறுகிறார்.

கடிதங்கள் மூலம் சாஜன் தன் மனைவி குறித்து எழுதுகிறார். அந்தக் கால பாடல், படங்கள் என திரும்பத் திரும்பப் பார்ப்பது எந்த விதத்திலும் சுவாரஸ்யம் இல்லை. ஆனால், அதையே விரும்பிச் செய்யாவிட்டாலும் திரும்பத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்.

இலா தன் கணவனுக்கு இன்னொரு பெண் மீது காதல் இருப்பதாகவும், சட்டையில் இருக்கும் சென்ட் வாசம் மூலம் கண்டுபிடித்ததாகவும் கடிதம் எழுதுகிறாள். இருவரின் நட்பும் பலமாகிறது.

பணம் அதிகம் தேவைப்படாத பூடான் நாட்டுக்கு தன் குழந்தையுடன் செல்ல முடிவெடுத்திருப்பதாக இலா எழுதுகிறாள். நானும் உங்களுடன் வரலாமா என்று சாஜன் கேட்கிறார்.

ஒருநாள் இருவரும் சந்திப்பது என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், அன்றைய நாளில் தான் வயதானவர் என்ற தோற்றம் சாஜனுக்கு ஏற்படுகிறது. அதனால் இலாவை சந்திக்க வேண்டாம் என்று நினைக்கிறார். பேசிக்கொண்டபடி அந்த உணவகத்தில் இலா காத்திருக்கிறாள். சாஜன் அங்கு வந்து ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு இலாவை கவனிக்கிறார். பிறகு, இலாவிடம் பேசாமல், அருகில் செல்லாமல், தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் வீட்டுக்குத் திரும்புகிறார்.

மறுநாள் இலாவின் டிபன் கேரியர் வழக்கம் போல் வருகிறது. ஆனால், அது காலியாக இருக்கிறது. கோபத்தில் இலா இப்படி செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்த சாஜன் பதில் கடிதத்தில் உணவகம் வந்ததை எழுதுகிறார். மேலும், தாத்தாவின் வாடை எனக்கு வந்துவிட்டதை உணர்வதாக குறிப்பிடுகிறார்.

நாசிக் செல்ல முடிவெடுத்து ரயில் ஏறுகிறார். அதிலும் விருப்பமில்லாமல் வீடு திரும்புகிறார். உணவு சரியாக சென்று சேரவில்லை என்று டப்பா வாலாக்களிடம் புகார் கூறுகிறார் இலா. அப்படி நடக்க வாய்ப்பேயில்லை என்று மறுக்கிறார் தொழிலாளி. அவரிடம் தன் டிபன் கேரியர் எந்த அலுவலகத்துக்கு செல்கிறது என்று கேட்டு, முகவரி தேடி பயணிக்கிறார் இலா. அங்கு சாஜன் இல்லை. அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டதாகவும், நாசிக் சென்றதாகவும் ஷேக் கூறுகிறார்.

விரைவில் நாசிக் வருவேன் என்று இலா மனதில் நினைத்துக்கொள்கிறார். டப்பா வாலாக்கள் உதவியுடன் இலாவின் இருப்பிடத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார் சாஜன்.

இலாவின் நம்பிக்கையில் காதலின் உன்னதம் உயர்ந்து நிற்கிறது. கடைசியில் இலாவின் நிலை என்ன? அவர் வார்த்தைகளிலேயே தெரிந்துகொள்ளலாம்.

''நீங்க நாசிக் போய் சேர்ந்திருப்பீர்கள். காலையில் எழுத்து தேநீர் தயாரித்திருப்பீர்கள். அதற்குப் பிறகு, ஒருவேளை காலை 'வாக்கிங்' சென்றிருப்பீர்கள். நான் இன்று காலையில் எழுந்தேன். என்னுடைய நகைகளை விற்றுவிட்டேன். வளையல்கள், தாலி போன்றவை. நிறைய இல்லை. ஆனால், நம்முடைய ஒரு ரூபாய் பூடானில் ஐந்து ரூபாய்க்கு சமமாம். அதனால் கொஞ்சகாலத்தை ஓட்டிவிடலாம். அதற்குப் பிறகு, பார்த்துகொள்ளலாம். இன்று யஷ்வி ஸ்கூலில் இருந்து வருவதற்குள் எங்களுடைய பொருட்களையெல்லாம் 'பேக்' செய்துவிட்டிருப்பேன். மதியம் வண்டிக்குப் புறப்பட்டுவிடுவோம்.

ஒருவேளை, இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு அனுப்பலாம். உங்களுடைய புதிய தபால்காரர் அதை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கவும் செய்யலாம். அல்லது ஒருவேளை இந்தக் கடிதத்தை நான் என்னிடமே வைத்துகொண்டிருக்க வேண்டும். பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் படிக்க வேண்டும். நான் எங்கயோ படித்திருக்கிறேன். சில சமயங்களில் தவறான ரயில்கூட சரியான இடத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கும் என்று. பார்க்கலாம்'' என்கிறார்.

தவறான ரயில் கூட சரியான இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கலாம் என்று ஷேக் சாஜனிடம் சொல்வது, கணவன் இறந்ததும் அவரால் பட்ட கஷ்டம் அதிகம் என அதிருப்தியை வெளிப்படுத்திய இலாவின் தாய், சடலத்துக்கு அருகில் பசிக்கிறது என சொல்வதாக வாழ்க்கையின் போக்குகளை நிதர்சனங்களாக கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர் ரித்தேஷ் பத்ரா.

இரண்டாவது குழந்தை குறித்து யோசிக்கவில்லையா என இலாவிடம் சாஜன் கேட்பது, இலா அடுத்த குழந்தைக்கான ஆவலை கணவனிடன் வெளிப்படுத்துவது, கணவன் அதற்கு அலட்சியமாய் பதில் சொல்வது என உறவின் உண்மை நிலையை சரியாகக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் கவனத்துக்குரியது.

படத்தில் சாஜன் - இலாவும் சேர்வதில்லை. மனதால் சேர்ந்துவிட்ட அந்த காதலர்கள் நிஜத்தில் சேராதது பெரிய குறையாகவும் தெரியவில்லை. சேர்ந்தால்தான் காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

*

குணசேகரன் - சித்ரா சந்திப்பு சமீபத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. அன்பு அவர்களுக்குள் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது...

"என்னதான் இருந்தாலும் இதை முன்னே நகர்த்துவது காம்ப்ளிகேட்டட் ஆச்சே?" என்று மிகவும் கேஷுவலாக கேட்டதற்கு, குணசேகரன் ரொம்ப சீரியஸான முகத்துடன் சொன்னது:

"நானே அறியாமல் என்னிடம் பதுங்கியிருந்த தேடலும் தேவையும்தான் சித்ராவிடம் இணைத்தது. ஆதாய நோக்கத்தை இரு தரப்பிலுமே உதாசினப்படுத்தி, நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் அன்பையும் அரவணைப்பையும் பரிமாறிக்கொள்ளும் பட்சத்தில் பாதகங்களைத் தவிர்க்க முடியும்."

*

இலாக்களும் சித்ராக்களும் மாற்றுக் காதலை நாடுவது, மனதளவிலான வெறுமை சார்ந்த உளவியல் காரணமாக இருக்கலாம். ஆனால், இவர்கள் செய்தித்தாள்களின் விற்பனைப் பண்டமாக மாறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களின் பரஸ்பர நம்பிக்கையும், தெளிவான சிந்தனையுடன் சூழல்களை அணுகும் போக்கும்தான் துணைபுரிகிறது.

அதேபோல் இலாக்கள், சித்ராக்கள், சாஜன்கள், குணசேகரன்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இலாக்கள், சித்ராக்கள், சாஜன்கள், குணசேகரன்களாலும் அல்லது அவர்களின் மனநிலையில் சிந்திக்க முற்படுபவர்களால் மட்டுமே சாத்தியம்!

- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-19-லன்ச்-பாக்ஸ்-மதிப்புமிகு-மாற்றுக்-காதல்/article9352905.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.