Jump to content

தீபாவுக்கு குவியும் பொங்கல் வாழ்த்து, அதிர்ச்சியில் சசிகலா...


Recommended Posts

தீபாவுக்கு குவியும் பொங்கல் வாழ்த்து, அதிர்ச்சியில் சசிகலா...

தீபா

 

லைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லி  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே போகிறது.


வாசலில் தோரணம் கட்டியும், வீட்டில் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தும் பொங்கல் நாளில் களை கட்டியது தீபாவின் வீடு.  தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஜனவரி 14-ஆம் தேதி மாலை அவர் வீட்டுமுன் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது.


'தீபாம்மா பொட்டு வைப்பதில்லை என்ற கருத்தை இனி யாரும் சொல்ல முடியாது... அதோ பாருங்க பொட்டு வைத்து தீபாம்மா, அம்மா மாதிரியே கையைக் காட்டிக்கிட்டு வர்றாங்க' என்று நெகிழ்கின்றனர் ஆதரவாளர்கள்.  சென்னை மாநகராட்சி சேர்மன் மற்றும் எழும்பூர்  அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மகியன்பன், பெரம்பூர் தொகுதி முன்னாள் பகுதிச் செயலாளர் எஸ்.எம்.மாரிமுத்து, திரு.வி.க.நகர் முன்னாள் இளைஞரணி பகுதிச் செயலாளர் எபிநேசன், ஆர்.கே.நகர். சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலசுப்பிரமணி போன்ற சென்னையின் முக்கிய நிர்வாகிகள் தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லி வந்திருக்கிறார்கள்.
இன்னொருபுறம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ஆம் தேதியன்று சென்னையில் பகுதி வாரியாக பொதுக் கூட்டம் நடத்தும்படி அ.தி.மு.க தலைமையிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போயுள்ளது. தலைமையின் உத்தரவுப்படி வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா,  பகுதிச் செயலாளர்களைக் கூப்பிட்டு கூட்டத்தை நடத்தும்படி சொல்லியிருக்கிறார்.
 ஆனால், எழும்பூர்  அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மகியன்பன்  "அப்படியெல்லாம் எனக்கு எந்த எண்ணமும் கிடையாது நான் கூட்ட ஏற்பாடுகளை செய்ய மாட்டேன்" என்று சொல்லி விட்டாராம்.
எழும்பூர் பகுதிக் கழக ஏற்பாட்டில் நடக்கும் கூட்டத்தில் மனோபாலா பேசுகிறார் என்று  போஸ்டர் அச்சடிக்கும் வேலைகளும் நடந்து விட்டது. இந்த நிலையில்தான், "கூட்டம் போடுவதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம், கூட்ட ஏற்பாட்டில் என் பெயரையும் போட வேண்டாம்" என்று பாலகங்காவிடம்  மகியன்பன் சொல்லியிருக்கிறார்.
ஜனவரி 17 அன்று  எழும்பூரில் நடக்கிற கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற உறுதியோடு பொங்கலன்று  தீபாவையும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து விட்டு மகியன்பன்  திரும்பியிருக்கிறார்.
 "பாலகங்காவை  மீறி, கூட்டத்தைப் புறக்கணித்ததோடு, தீபாவை பார்த்து பொங்கல் வாழ்த்து சொல்லி  விட்டு வந்ததாக  சொல்கிறார்களே?" என்று மகியன்பனிடம் கேட்டதும்,  "நீங்க கேள்விப்பட்ட அத்தனை தகவல்களும் உண்மைதான்... நாங்கள் தீபாம்மாவை பார்த்து விட்டுத்தான் வந்தோம்" என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
மகியன்பனுடன்  வந்திருந்தவர்கள், "சென்னை மாவட்டமே  இரண்டொரு நாளில் காலியாகி விடப் போகிறது பாருங்கள்... இனி தீபாம்மாதான் கட்சியின் எதிர்காலம். இப்போது  சென்னையில் உள்ள 15 பகுதிச் செயலாளர்களில் ஒருவர் வந்திருக்கிறார்... அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும்" என்றனர். தீபாவுக்கு ஆதரவு பெருகி வருவதை அடுத்து சசிகலா வட்டாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் வெளியான ஜூனியர் விகடன் இதழ் சர்வேயில் தீபாவுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிவந்துள்ளது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கும் சசிகலா, தனது ஆதரவை அதிகரிப்பதற்கான வழிகளை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் டூர் போவது உள்ளிட்ட திட்டங்களை அவர் கைவசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/77846-sasikala-shocks-as-party-member-support-for-deepa-rises.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

தீபாவுக்கு குவியும் பொங்கல் வாழ்த்து, அதிர்ச்சியில் சசிகலா...

தீபா

 

இந்த பாடிக்கு இருமல் காய்ச்சல் வந்தால் .... எந்த ஆசுபத்திரி கொண்டுபோறது ?
உள்ளூரில் உள்ள ஆசுபத்திரிகளில் கிறேன் வசதி எல்லாம் இருக்கா ?

Link to comment
Share on other sites

'நல்ல முடிவை அறிவிப்பேன்' - தீபா பேச்சு

deepa

சென்னை, தி.நகர் வீட்டின் முன்பு குவிந்திருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபா பேசினார். அதில், 'உங்கள் அனைவரிடமும் ஆலோசனை கேட்கப்படும். நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் என் பணிகள் தொடரும். அனைவரின் கருத்துகளுக்கு பின் நல்ல முடிவை அறிவிப்பேன்' என்றார் தீபா.

http://www.vikatan.com/news/tamilnadu/77853-deepa-speaks-to-her-supporters.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.